>

சில கவிதைகளும் நிறைய புலம்பல்களும்... !!!!!!!

>> Saturday, May 9, 2009




















ஒவ்வொரு தொடரலிலும்வழி தப்புகிறேன்
மின்னலின்
ஒளியுமிழ்ந்து
நீலங்களின் பின் மறைகிறாய்
எந்நொடியிலும் முகம் தொடலாம்
ரகசியங்கள் கரைந்தமுதல்மழைத்துளி...



தொடர்ச்சியாய் உனது பின்னால் அலைந்து கொண்டிருக்கும் என்னிருப்பு இரவுகளில் ஆசுவாசமானதாகவும், விடியல்களில் புத்துணர்வுகளாகவும், பின் மதியங்களில் கசப்புகளாகவும், மாலையில் வெறுப்புகளாகவும், பொழுதிற்கொன்றாய் வடிவம் கொள்கின்றது.மழை பிடித்துக்கொண்ட மாலையில்,வீடு திரும்ப தாயின் வருகையினுக்காய் காத்திருக்கும் பள்ளிச் சிறுவனின் எதிர்பார்ப்புகளோடு, எவருமற்ற இவ்விடத்தில் அமர்ந்து, உதிர்ந்த புங்கம் பூக்களை மழைநீர் அடித்துப்போகும் காட்சியை சலனமில்லாது பார்த்தபடியிருக்கிறேன்.பூமியணைத்த மழையின் கரங்களையொத்து, உன் வளைக்கைகள் இடறும் கத கதப்பான அவ்வணைப்பை நினைவில் தருவித்து, குளிரும் இவ்வுடலை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறேன்.குடை கொண்டு வரும் யாரோக்கள் யார்யாரையோக்களை அணைத்தபடி அவ்வப்போது கடந்து செல்கின்றனர்.எனக்கான முறைக்கு இன்னும் சிறிது காலமாகலாம்.அவநம்பிக்கைகளின் மொத்த உருவம் நான்.சந்தேகித்தலின் கூரிய நகங்களையும் துவேசங்களின் வலிமையான பற்களையும் ஒருமித்து வளர்த்திருந்தேன்.உனது புன்னகைகளின் மூலம் ஒவ்வொன்றாய் காணாமல் போகச் செய்தாய்.லாவகமான விலகலில் நீல வானில் ஒளிழ்ந்து மறையும் மின்னல்களைக் கண்முன் கொண்டுவந்தாய்.இரகசியங்களின் மொத்த விருப்பிடம் நீ!.புதிர்களின் பின்னலைந்து தோற்கும் ஒவ்வொரு முறையும், இன்னுமதிகமாய் புன்னகைகளையும், புதிர்களையும், உருவாக்கிக் கொண்டு போனாய்.எலிவேட்டைக்காரனின் இசைக்கு மயங்கிய எலியென, உன் வசீகரம் நிரம்பி வழியும் தெருக்களெங்கிலும், உன் இசையினை உள்ளுக்குள் நிரப்பியபடி பின் தொடர்கிறேன்.மங்கிய மாலைகளில் காணாமல் போகும் அவ்விசையை இரவெங்கிலும் நகரத்தின் முடுக்குகளில் தேடியலைந்து பித்தம் கொண்டேன்.இதுவரை கேட்டிராத, இதுவரை சந்தித்திராத, இதுவரை உணர்ந்திராத, இதுவரை அறிந்திராத, எத்தனையோக்களின் பிம்பங்கள் உனது நிழல்களின் தடங்களில் மிக மெளனமாய் படர்ந்திருந்தன.எனக்குத் தெரிந்த அத்தனை மொழிகளையும் துணைக்கழைத்தேன்.நானறிந்த அத்தனை வழிகளும் சுழல் வடிவங்களாகி, துவங்கிய இடத்தினுக்கே மீண்டும் கொண்டு வந்து சோர்ந்தன.எதைக் கொண்டும் நெருங்க முடியாத அபூர்வ மலர்களை, உனது கிளைகள் பிரசவித்திருந்தன.தெரிந்த பறவைகளிடம் சிறகுகள் வாங்கி பறக்கத் துவங்கினேன் அஃதொரு திரும்பவியலா இடங்களில் என்னைத் தொலைத்து, தன்னையுதிர்த்திக் கொண்டது.செடிகளின் துளிர்த்தல்களை மனதில் வாங்கி இதோ இவ்வார்த்தைகளை இறைத்துக் கொண்டிருக்கிறேன். எதைக்கொண்டும் சமன் செய்துவிடா முடியா என் துயரங்களைப் போலவே எவ்வடிவம் கொண்டும் உன்னிடம் சேர இயலவில்லை.ஆனால் உன்னிடம் தோற்றுப்போவது குறித்து எனக்கு எவ்வித வருத்தமுமில்லை.உன்னை வசப்படுத்தாமை குறித்து மகிழ்வே.உனக்கான உயரங்களை விழிகள் விரியப் பார்க்கும் சிறுவனாய் இருந்துவிட்டுப்போகிறேன்.மூடப்பட்ட நுழைவுகளின் முன்புகைகளின் பின்னால்உனக்கான மலர்களைமறைத்துவைத்தபடிகாத்திருக்கிறேன்ஒரே நேரத்தில் நிகழலாம்இரு திறப்புகள்

எந்த ஒன்று தொடர்ச்சியாய் இப்படி அலைக்கழிக்கிறது?எதை நோக்கிய நகர்வுகள் என்னுடையது?இந்தக் காத்திருப்புகளின் மீது போர்த்தியிருக்கும் இயலாமைகளின் விசும்பல்களை எதைக் கொண்டு மறைக்க?.எந்த ஒன்றின் பின் தொடரும் இருண்மை இது?பாலை மணலில் தங்க ஊசியைத் தேடியலைகிறேன். எங்காவது ஒளிந்திருக்கலாம் ஊசியின் சாயல்களில் ஒரு இழை.நகர்வுகளுக்கான,வெற்றியின் சாயல்களுக்கான விலைகள் மிகவும் அதிகமானவை.அவை தரும் அயர்ச்சியும் அலைவும் தாங்கொணா வலி தருபவை.வெறுமைகளடர்ந்த இந்த இரவினில் நம்பிக்கைகளின் வெளிச்சப் புள்ளியாய் எங்காவதிருக்கலாம் என்னை நிரப்பித் தூங்கும் இன்னொரு உயிர்.குளத்தினை மூட விரையும்ஆகாயத் தாமரையெனஎன் நேசங்கள் பரவுவதைநீ மிகையென்றும் போலியென்றும் தவிர்த்துப்போகா தேநீரினடியில் பற்றுதலுக்காய் அலைந்து கொண்டிருக்கின்றன என் மிக மெல்லிய வேர்கள்.



இயலாமைகளின் உச்சங்கள்வன்மங்களின் தாழினைத் திறக்கின்றனவலிந்து திறக்கப்பட்ட மதுக்குப்பியின் நுரைப்புகளெனபொங்கிப் படர்கிறது திசையெங்கும் விந்துநகரமெங்கிலும் விழித்திருக்கும் ஆண்குறிகள் சபிக்கலாம்இந்த இரவைஇந்தத் தனிமையைஇந்தக் காமத்தைஇந்தக் கடவுளர்களை



0 comments:

தரம்

சில கவிதைகளும் நிறைய புலம்பல்களும்... !!!!!!!




















ஒவ்வொரு தொடரலிலும்வழி தப்புகிறேன்
மின்னலின்
ஒளியுமிழ்ந்து
நீலங்களின் பின் மறைகிறாய்
எந்நொடியிலும் முகம் தொடலாம்
ரகசியங்கள் கரைந்தமுதல்மழைத்துளி...



தொடர்ச்சியாய் உனது பின்னால் அலைந்து கொண்டிருக்கும் என்னிருப்பு இரவுகளில் ஆசுவாசமானதாகவும், விடியல்களில் புத்துணர்வுகளாகவும், பின் மதியங்களில் கசப்புகளாகவும், மாலையில் வெறுப்புகளாகவும், பொழுதிற்கொன்றாய் வடிவம் கொள்கின்றது.மழை பிடித்துக்கொண்ட மாலையில்,வீடு திரும்ப தாயின் வருகையினுக்காய் காத்திருக்கும் பள்ளிச் சிறுவனின் எதிர்பார்ப்புகளோடு, எவருமற்ற இவ்விடத்தில் அமர்ந்து, உதிர்ந்த புங்கம் பூக்களை மழைநீர் அடித்துப்போகும் காட்சியை சலனமில்லாது பார்த்தபடியிருக்கிறேன்.பூமியணைத்த மழையின் கரங்களையொத்து, உன் வளைக்கைகள் இடறும் கத கதப்பான அவ்வணைப்பை நினைவில் தருவித்து, குளிரும் இவ்வுடலை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறேன்.குடை கொண்டு வரும் யாரோக்கள் யார்யாரையோக்களை அணைத்தபடி அவ்வப்போது கடந்து செல்கின்றனர்.எனக்கான முறைக்கு இன்னும் சிறிது காலமாகலாம்.அவநம்பிக்கைகளின் மொத்த உருவம் நான்.சந்தேகித்தலின் கூரிய நகங்களையும் துவேசங்களின் வலிமையான பற்களையும் ஒருமித்து வளர்த்திருந்தேன்.உனது புன்னகைகளின் மூலம் ஒவ்வொன்றாய் காணாமல் போகச் செய்தாய்.லாவகமான விலகலில் நீல வானில் ஒளிழ்ந்து மறையும் மின்னல்களைக் கண்முன் கொண்டுவந்தாய்.இரகசியங்களின் மொத்த விருப்பிடம் நீ!.புதிர்களின் பின்னலைந்து தோற்கும் ஒவ்வொரு முறையும், இன்னுமதிகமாய் புன்னகைகளையும், புதிர்களையும், உருவாக்கிக் கொண்டு போனாய்.எலிவேட்டைக்காரனின் இசைக்கு மயங்கிய எலியென, உன் வசீகரம் நிரம்பி வழியும் தெருக்களெங்கிலும், உன் இசையினை உள்ளுக்குள் நிரப்பியபடி பின் தொடர்கிறேன்.மங்கிய மாலைகளில் காணாமல் போகும் அவ்விசையை இரவெங்கிலும் நகரத்தின் முடுக்குகளில் தேடியலைந்து பித்தம் கொண்டேன்.இதுவரை கேட்டிராத, இதுவரை சந்தித்திராத, இதுவரை உணர்ந்திராத, இதுவரை அறிந்திராத, எத்தனையோக்களின் பிம்பங்கள் உனது நிழல்களின் தடங்களில் மிக மெளனமாய் படர்ந்திருந்தன.எனக்குத் தெரிந்த அத்தனை மொழிகளையும் துணைக்கழைத்தேன்.நானறிந்த அத்தனை வழிகளும் சுழல் வடிவங்களாகி, துவங்கிய இடத்தினுக்கே மீண்டும் கொண்டு வந்து சோர்ந்தன.எதைக் கொண்டும் நெருங்க முடியாத அபூர்வ மலர்களை, உனது கிளைகள் பிரசவித்திருந்தன.தெரிந்த பறவைகளிடம் சிறகுகள் வாங்கி பறக்கத் துவங்கினேன் அஃதொரு திரும்பவியலா இடங்களில் என்னைத் தொலைத்து, தன்னையுதிர்த்திக் கொண்டது.செடிகளின் துளிர்த்தல்களை மனதில் வாங்கி இதோ இவ்வார்த்தைகளை இறைத்துக் கொண்டிருக்கிறேன். எதைக்கொண்டும் சமன் செய்துவிடா முடியா என் துயரங்களைப் போலவே எவ்வடிவம் கொண்டும் உன்னிடம் சேர இயலவில்லை.ஆனால் உன்னிடம் தோற்றுப்போவது குறித்து எனக்கு எவ்வித வருத்தமுமில்லை.உன்னை வசப்படுத்தாமை குறித்து மகிழ்வே.உனக்கான உயரங்களை விழிகள் விரியப் பார்க்கும் சிறுவனாய் இருந்துவிட்டுப்போகிறேன்.மூடப்பட்ட நுழைவுகளின் முன்புகைகளின் பின்னால்உனக்கான மலர்களைமறைத்துவைத்தபடிகாத்திருக்கிறேன்ஒரே நேரத்தில் நிகழலாம்இரு திறப்புகள்

எந்த ஒன்று தொடர்ச்சியாய் இப்படி அலைக்கழிக்கிறது?எதை நோக்கிய நகர்வுகள் என்னுடையது?இந்தக் காத்திருப்புகளின் மீது போர்த்தியிருக்கும் இயலாமைகளின் விசும்பல்களை எதைக் கொண்டு மறைக்க?.எந்த ஒன்றின் பின் தொடரும் இருண்மை இது?பாலை மணலில் தங்க ஊசியைத் தேடியலைகிறேன். எங்காவது ஒளிந்திருக்கலாம் ஊசியின் சாயல்களில் ஒரு இழை.நகர்வுகளுக்கான,வெற்றியின் சாயல்களுக்கான விலைகள் மிகவும் அதிகமானவை.அவை தரும் அயர்ச்சியும் அலைவும் தாங்கொணா வலி தருபவை.வெறுமைகளடர்ந்த இந்த இரவினில் நம்பிக்கைகளின் வெளிச்சப் புள்ளியாய் எங்காவதிருக்கலாம் என்னை நிரப்பித் தூங்கும் இன்னொரு உயிர்.குளத்தினை மூட விரையும்ஆகாயத் தாமரையெனஎன் நேசங்கள் பரவுவதைநீ மிகையென்றும் போலியென்றும் தவிர்த்துப்போகா தேநீரினடியில் பற்றுதலுக்காய் அலைந்து கொண்டிருக்கின்றன என் மிக மெல்லிய வேர்கள்.



இயலாமைகளின் உச்சங்கள்வன்மங்களின் தாழினைத் திறக்கின்றனவலிந்து திறக்கப்பட்ட மதுக்குப்பியின் நுரைப்புகளெனபொங்கிப் படர்கிறது திசையெங்கும் விந்துநகரமெங்கிலும் விழித்திருக்கும் ஆண்குறிகள் சபிக்கலாம்இந்த இரவைஇந்தத் தனிமையைஇந்தக் காமத்தைஇந்தக் கடவுளர்களை

0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP