இங்கும் சில கிறுக்கல்கள் !!!!
>> Thursday, June 11, 2009
வாழ்க்கைஓர் அமுத மழை
நனைந்து பார்
அதன்
சுகம் புரியும் உனக்கு.
* * * * *
நீ வரும்வரை
என்னை
எவரும் கவனிப்பதில்லை
உன்னோடு இருக்கையில்
கவனிக்காததென்று எதுவும் இல்லை
அதற்காகவாவது
உன்னோடு கூட வரலாம் நான்
* * * * *
காதலை விட காதலர்களே
உனை
அதிகமாய்
நினைவு படுத்துகிறார்கள்
* * * *
நீவாசிக்கிறாயோ இல்லையோ உன்னால்
பலர்
வாசிக்கிறார்கள்என்
கவிதைகளை
* * * *
தயவு செய்து சிரித்துவிடாதே
கலைந்து கிடக்கும்
என் எழுத்துக்கள்
இன்னும் கலைந்துவிடும்
* * * *
யாரிடமும்
சொல்லாதே
உனக்கு மட்டும் ஒர் ரகஸ்யம்.
நேற்று இரவு என் கனவில்
நீ...
******
ஒரு நொடி
மரணத்தை விட...
உன்னல்
ஒவ்வொரு நிமிடமும்
சாகடிக்க படுவதை விரும்புகிறேன்...
*******
நண்பனாக பழக இனிமையானவன் ,........
தனிமையில் இதயம்,.......
காலங்களின் நெற்றியில் பொட்டு வைக்கிறேன்,.! -
ஆம் என்னுயிரைப் பிழிந்து கவிதை வடிக்கிறேன்,.!
- என் கவிதைகளின் உயிர் நீ
உனது தேடல் நான்
* * * * *
காற்றில்
உன்
துப்பட்டாவின் ஒரு முனை
கவிதை எழுதுகிறது....
மறு முனை ஓவியம் வரைகிறது.....
கவிதைக்கும் ஓவியதிற்கும்
நடுவிலேயே நடந்து செல்கிறாய்
நீ
* * * * *
மனிதர்கள் யாருமற்ற
கோள் ஒன்றிற்கு சென்றுவிடலாமா
என்று கேட்டாய்
இப்பொழுது பூமியில்
நம்மைத் தவிர வேறு
யார் இருக்கிறார்கள் என்றேன்....
* * * * *
உன் இதயக்
குளத்தில் கல்லெறிந்தவர்கள்
பலராக இருக்கலாம்!
ஆனால்
இதயத்தையே எறிந்தவன்
நான் மட்டும் தான்!s
* * * * *
நிறைவேறாக் காதலால்
நாம் விடும் வெப்பப் பெருமூச்சு
வான்வெளியில் கலக்கட்டும்.
வெற்றிகண்ட காதலர்களின்
குளிர் சுவாசங்களால்
அது பெருமழையாகி
பூமியாவது செழிக்கட்டும் நம்மால்!
* * * * *
கவிதை - தபால் துறைக்கு அனுப்ப படாத கடிதம் !
காதல் கவிதை - ஏச்சில் தபால் தலை ஒட்டப்படாமல்
வெறும் ஏச்சம் மட்டும் இருக்கும் கடிதம் !!
* * * * *
உன் பெயரை
நீ
உச்சரிக்கும் போது
மெய் எழுத்துக்களும்
உயிர் கொண்டது !
உயிர் மெய் எழுத்துக்களும்
வாழத் தொடங்கியது...!!
* * * * *
என் கோபங்கள்
எப்பொழுதுமே
நீ
செய்யும் தவறுகளுக்காக அல்ல...
உன்
சமாதான பேச்சுகளுக்கும்
கெஞ்சல் வார்த்தைகளுக்கும்
தான்
* * * * *
இருபத்தி நான்கு மணி நேரமும்
இரவுபகலாய் இருந்தாலும்
வாழ்வதற்கு நான் தயார்,
அத்தனை இரவுகளிலும்
கனவுகளில் நீ
வருவதாய் இருந்தால்...
* * * * *
வாழ்க்கையின் ரகசியம் புகைபோல்
நம்முள் கசிந்து கொண்டிருக்கிறது
நறுமணமாய் உணருபவன் துன்பத்திற்காய்
கவலைப்படுவதில்லை துர்மணமாய் உணருபவன்
இன்பத்தையும் அனுபவிப்பதில்லை
ஆனால்
மணங்களின் கலவையாய்
கசிந்து கொண்டேயிருக்கிறது ரகசியம்
* * * * *
வரும் வழியோரம்
இதழ்
விரித்தாய் சிறு பூவாய்..
மயங்கி விட்டேனடி
அன்பே
மது உண்ட
சிறு வண்டாய்
உன் மடியில்
0 comments:
Post a Comment