கால வித்தியாசம் !!!
>> Thursday, June 25, 2009
ஓடை நீரில் மீன்கள் பின்னால்ஓடித் திரிந்த்த(து) ஒரு காலம்கோடை மணலில் கால்கள் வெந்துகுழைந்து போனதும் ஒரு காலம்
ஈசாப் நீதிக் கதைகளுக் குள்ளேஇதயம் கரைந்தது ஒரு காலம்பேசா திருக்கும் பிரபஞ்சமே ஒருபுத்தகமானதும் ஒரு காலம்
சில்லிப் பூக்களில் தேனைத் தேடித்துள்ளித் திரிந்தது ஒரு காலம்எல்லாம் இருந்தும் நேரமில்லாமல்எட்டித் தள்ளுவ தொருகாலம்
ஆகயத்தைத் தொட்டுப் பிடிக்கும்ஆர்ப்பாட்டங்கள் ஒரு காலம்ஆகாயத்தை நெஞ்சுக்குள்ளேஅழைத்துக் கொண்டதும் ஒரு காலம்
பண்ந்தான் உந்தன் எஜமான் என்றுபதறித் திரிந்தது ஒரு காலம்பணந்தான் உந்தன் சேவகன் என்றுபாடங் கண்டதும் ஒரு காலம்
அதுவோ இதுவோ எதுவோ என்றேஆசை வளர்த்ததும் ஒரு காலம்இதற்குத் தான இவ்வள வென்றேஇடுப்பைப் பிடித்ததும் ஒரு காலம்
காதல் இன்றேல் சாதல் என்றேகவிதை சொன்னதும் ஒரு காலம்காதல் என்பது ச்ந்தர்ப்பம்தான்கண்டு தெளிந்ததும் ஒரு காலம்
சொல்லிச் சொல்லி உணவு சமைத்துத்தொப்பை வளர்த்தடும் ஒரு காலம்மில்லிகிராமில் உணவை அளந்துமென்று முடிப்பதும் ஒரு காலம்
தன்னை வெல்ல ஆளில்லை என்றேதருக்கித் திரிவதும் ஒரு காலம்சின்னக் குழயில் காற்றைச் செலுத்திஜீவன் வளர்ப்பதும் ஒரு காலம்
பூமி தனக்கே சொந்தம் என்றுபுலம்பித் திரிவதும் ஒரு காலம்பூமிக்கே நீ சொந்தம் என்றுபுரிந்து தெளிவதும் ஒரு காலம்
ஈசாப் நீதிக் கதைகளுக் குள்ளேஇதயம் கரைந்தது ஒரு காலம்பேசா திருக்கும் பிரபஞ்சமே ஒருபுத்தகமானதும் ஒரு காலம்
சில்லிப் பூக்களில் தேனைத் தேடித்துள்ளித் திரிந்தது ஒரு காலம்எல்லாம் இருந்தும் நேரமில்லாமல்எட்டித் தள்ளுவ தொருகாலம்
ஆகயத்தைத் தொட்டுப் பிடிக்கும்ஆர்ப்பாட்டங்கள் ஒரு காலம்ஆகாயத்தை நெஞ்சுக்குள்ளேஅழைத்துக் கொண்டதும் ஒரு காலம்
பண்ந்தான் உந்தன் எஜமான் என்றுபதறித் திரிந்தது ஒரு காலம்பணந்தான் உந்தன் சேவகன் என்றுபாடங் கண்டதும் ஒரு காலம்
அதுவோ இதுவோ எதுவோ என்றேஆசை வளர்த்ததும் ஒரு காலம்இதற்குத் தான இவ்வள வென்றேஇடுப்பைப் பிடித்ததும் ஒரு காலம்
காதல் இன்றேல் சாதல் என்றேகவிதை சொன்னதும் ஒரு காலம்காதல் என்பது ச்ந்தர்ப்பம்தான்கண்டு தெளிந்ததும் ஒரு காலம்
சொல்லிச் சொல்லி உணவு சமைத்துத்தொப்பை வளர்த்தடும் ஒரு காலம்மில்லிகிராமில் உணவை அளந்துமென்று முடிப்பதும் ஒரு காலம்
தன்னை வெல்ல ஆளில்லை என்றேதருக்கித் திரிவதும் ஒரு காலம்சின்னக் குழயில் காற்றைச் செலுத்திஜீவன் வளர்ப்பதும் ஒரு காலம்
பூமி தனக்கே சொந்தம் என்றுபுலம்பித் திரிவதும் ஒரு காலம்பூமிக்கே நீ சொந்தம் என்றுபுரிந்து தெளிவதும் ஒரு காலம்
0 comments:
Post a Comment