* சிந்தனைக்கவிதை !!!!
>> Saturday, June 6, 2009
- உலகம் என்பது உருண்டைதான் சற்று உருட்டித்தான் பார்ப்போமே !!!
நிழல் தேடாதே
உன் நிழலில்
ஒருஊரையே நிற்கவை !
முட்களில்
மோதிக்கிழியாதவனுக்குப்
பூக்களைத்
தடவும்தகுதி கிடையாது !
மகிழ்ச்சியாய்ச்
சிரிகவலைகளைப்
பிய்த்துக்காற்று
மண்டலத்திற்குஅப்பால் வீசு !
எதைக்
கண்டும்பிரமிக்கா
தேபிரமிப்பைப்போல்
ஒருபின்னடைவே கிடையாது !
தோல்வி
என்பதுசிந்திக்கத்
தெரியாதவனின்
சித்தாந்தம் !
நிலாவைத்
தொட்டதுமூன்று
தோல்விகளுக்குப்பிறகுதான் !
நீ
எழுந்தால்
ஒருஎட்டு வந்து பார்க்காதவன்
நீ
விழுந்தால்
விழுந்துவிழுந்து விசாரிப்பான் கவனி !
இளைஞனே
இரைப்பையையும்
நம்பிக்கையையும்
காலியாக விடாதே !
நடக்குமா
என்றகேள்வி-உன்
நம்பிக்கைக்
கோபுரத்தின்
அத்திவாரத்தில்விழுந்த கடப்பாறை !
உலகை
உலுக்கி உலுக்கி
எடுத்தவனெல்லாம்
துவக்கத்தில்
ஒருதூசுப்படலமாக இருந்தவன்தான் !
0 comments:
Post a Comment