என் தோழி, என் காதலி !!!!
>> Thursday, July 30, 2009
சட்டத்தைப் போலவே
நானும் இருட்டாகத் தான் உள்ளேன்…
இருண்ட உன் நினைவுகளோடு.
தவறான கருத்தையே
கண்ணில் கட்டிக்கொண்டு
உன் காதல் தராசில்
எடை போட்டால் குறைவாகத் தானே இருப்பேன்
உன் நினைவுகளில்.
சாலையோரப் பூக்கள் தான்
எத்தனை பாக்கியம் செய்தவை?
நிலைகுத்திய உன் பார்வை நிர்ணயிக்கப் படுவது
அவற்றின் மேல் தானே
இப்போதெல்லாம் உன் பார்வைக்கு –
நான் தீண்டத் தகாதவனாகிவிட்டேனே
நீ அனுப்பிய கடிதத்தில்
குத்தப்பட்ட முத்திரையால் சிதைந்தவை
உன் எழுத்துக்கள் மட்டுமல்ல
என் இதயமும் தான்
உன் நினைவுகளோடு கரைந்து கொண்டிருப்பது
நான் மட்டுமல்ல
என் பேனாவும் தான்
காலம் கடந்த பின் காதல் பிறந்தால்…
என்னை வேறெங்கும் தேடாதே…
உன் மன மூட்டையின்….
உன் மன மூட்டையின்….
எங்கேனும் சிறு இருட்டு மூலையில்
ஒடுங்கிப் படுத்திருக்கும் என் நினைவுகள்
உன்னைச் சுமந்துகொண்டு…
அப்பொழுதும் நான்…
நத்தையைப் போலவே…
உன் நினைவுகளை –
என் மனக்கூட்டினில்
சுமந்து கொண்டிருப்பேன்.
1 comments:
சங்கர்,
உங்களின் பதிவுகள் எல்லாம் நன்றாக உள்ளது..என் ப்ளாக்கில் தங்களின் வருகைக்கு நன்றி..அடிக்கடி வாருங்கள்..
அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com
Post a Comment