சுட்டெரிக்கும் தனிமை...
>> Monday, August 10, 2009
தோட்டத்து செடிகளில் கூட...
முட்கள் மட்டுமே பூக்கிறது...
சிரித்த தருணங்களும் கூட...
இந்த கணம் நினைக்கையில்...
கண்ணீரின் பின்னணியில் தெரிகிறது..
மங்கலாக....
தனிமையின் வெறுமை...
சிறு நிழலென தொடங்கி...
பின்னிரவின் இருளென பரவுகிறது..
மின்விசிறியின் சத்தம் மட்டும் துணையாய் கொண்டு...
விழித்தபடியே கழிக்கும் இரவுகள்...
ஓங்கி ஒலிக்கும் நிசப்தத்தின் அதிர்வினில்...
அரண்டு போகிறது மனம்....
சுட்டெரிக்கும் தார் சாலையென நீள்கிறது தனிமை...
எண்ணங்களை எழுதும் முன்னே எரிந்து போகிறது காகிதமும்...
எழுத்தில் வடிக்காத வார்த்தைகளை
உலர்ந்த உதட்டின் வழியே கசிய விடுகிறேன்...
காற்றில் கரைந்த வார்த்தைகள் எல்லாம்...
என்றேனும் ஒரு நாள்...
உங்களில் யாருக்கேனும் கிடைக்க கூடும்...
வானவில் மூலமோ.... வான்மழை மூலமோ...
1 comments:
sorry friend all lines are very super
Post a Comment