மூளையின் அடுக்குகள் !!!
>> Monday, September 14, 2009
பரிணாம வளர்ச்சியை பார்த்தாமானால் மூளைப்பகுதி மூன்று அடுக்குகளால் கட்டப்பட்டுள்ளது.
முதல் பகுதி ஆர்க்கிபாலியம் என்று அழைக்கப்படுகின்றது. ஊர்வன வகை விலங்களிடத்தும் இப்பகுதி உண்டு. இந்த பகுதி தன்னை தானே காத்துக் கொள்ளும் இயல்பை உயிர்களிடத்து உருவாக்குவதில் பங்கேற்கிறது
இரண்டாம் பகுதிதான் லிம்பிக் பகுதி. இது பாலுட்டிகளிடத்து உண்டு. இது செக்ஸ், தாபம், நெகிழ்வு, காதல், பரிவு போன்ற பல வகை உணர்வுகளுக்கும் காரணமான பகுதியாக உள்ளது.
இந்த பகுதி ஆராயும் சிந்தனைகளை தூண்டுவதில்லை.நேரும் சம்பவங்களை இந்த பகுதியில் சேமிக்கப்பட்ட நினைவுகளோடு ஒப்பீடு செய்து அதனோடு பொருந்துவதை கண்டு உடனே முடிவு செய்ய தூண்டுகின்றது.
உதாரணத்திற்கு சில
ஒரு பெண் திரும்பி சிரித்தால் அது ்காதல் என்ற தமிழ் சினிமா கதாநாயகனின் உணர்வு.
தனக்கு ஒரு மோதிரம் வித்தைக்காரர் கொடுத்தவுடன் உறவுக்கு ஒன்று கேட்டு வயதை மறந்து பஞ்சுமிட்டாய் கண்ட குழந்தை போல் பேசுவது
பழுதை கண்டு பாம்பென அரண்டு ஒடுவது
நடிகருக்கு கட்அவுட் வைப்பது
மூளையின் மூன்றாம் பகுதி முக்கியமானது. இது குரங்களிடத்தும், மனிதரிடத்தும் உண்டு. இதன் பெயர் நியோகார்டெக்ஸ். இந்த பரிமாண வளர்ச்சி லிம்பிக் பகுதியின் வளர்ச்சிக்கு அடுத்த நிலையில் நிகழ்ந்தது. நியோகார்டெக்ஸ் மனிதரிடத்து மூளையின் அளவில் 90 சதவீதமாக உள்ளது. குரங்குகளிடத்து இதன் அளவு குறைவு. சில நபர்கள் இதனை முழுமையாக பயன்படுத்தா பொழுதும் இது நிச்சயம் அவர்களிடத்து உண்டு.
இந்த பகுதிதான் ஆராயும் தன்மையை உண்டாக்குகிறது. இதன் ்மூலம் அமையும் செயல்கள் லிம்பிக் பகுதியின் முடிவுகளை மாற்றி அதன் காரணங்களை ஆராய சொல்கின்றது. உணர்ச்சிகளின் விளிம்பில் பிரச்சனையில் மறுகாமல் அலசி பார்க்க உதவுதலின் அவசியம் பரிணாமத்ததில இருக்க போய் இந்த பகுதி உருவாகி இருக்கிறது.
இந்த பகுதியின் உதாரணங்கள் சில
அந்த பெண் என்னை பார்த்து சிரித்தால் அதன் அர்த்தம் தேடக் கூடாது. திரும்ப சிரித்தால் போதும் என நிஜவாழ்வில் முடிவெடுப்பது
நடிப்பு பிடித்திருந்தால் படம் பார்த்து பொழுதை போக்கி விட்டு கட்அவுட் பின்னால் அலையாமல் வீட்டுக்கு செல்லும் போது
கையூட்டு வாங்கும் போது
கோவில் சன்னதியில் வெளியில் விட்ட செருப்பை நினைக்கையில்
0 comments:
Post a Comment