>

Archives

பசுமை மாறாத கல்லூரி நினைவுகள்..இறுதி.. !!!

>> Thursday, September 3, 2009








ஆட்டோகிராஃப் படத்தில் சேரன்,ஸ்நேகாவிடம் பேசுவாரே..










“சக்கர டப்பா எங்கடா திவ்யா..










அப்படில்லாம் இல்லப்பா..”














அதுபோல அநியாயத்துக்கு நெகிழ்ச்சியாக ஒருவருக்கொருவர் அவ்வப்பொழுது பேச வைக்கும் பருவம் இறுதி வருடம்.














எதிர்காலம் பற்றிய பயமும், ஏதாவது செய்துவிடவேண்டும் என்ற துடிப்பும் சற்று மேலெழும் வருடம்.










‘குரூப் ஸ்டெடி’.. என்ற ஒன்றை எவன் கண்டுபிடித்தானோ அவன் வாழ்க. செட்டில் எவனாவது ஒருவன் வீட்டில் இரவு கூடுவது. ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை பஸ்ஸ்டாண்டிற்கோ, பாய் கடைக்கோ டீ சாப்பிட.. அதில், நல்லா சாப்பிடக்கூடிய கோஷ்டி மீந்து போன பூரி,வடை என எதுவாக இருந்தாலும் எடுத்து ‘அட்டியலை’போடுவார்கள்.














அக்கம் பக்கத்தில் ஏதாவது ஒருவீட்டில் திடீரென லைட் எறிந்து அணைந்தால் பசங்க முகம் பிரகாசமாகி,புருவ உயர்த்துதல்கள்,புன்முறுவல்கள் நடக்கும்.










இப்படி, ஒருமணிக்கொரு டீ, பெண்களைப் பற்றிய பேச்சு என எல்லாம் நடக்கும் குரூப்பாக.. படிப்பதைத் தவிர..










மறுநாள் காலையில் பரபரப்பாக வீட்டிற்கு கிளம்பும் போது, “மாப்ள இந்நிக்கி எப்படியும் நைட்டு, பேசாம முடிக்கப் பார்க்கணும்டா” என சொல்லிவிட்டு கிளம்புவார்கள்... தினமும்.














அதுவரை ‘அப்பன்’ என்றும் ‘பெரிசு’ என்று அழைக்கப்பட்டவர் ‘அப்பா பாவம்டா’ என்ற ஃபீலிங் வர எத்தனிக்கும் தருணங்களில் புத்தகங்கள் கைஏறும்..














தினமும் ஏதாவது பொய் சொல்லி அம்மாவிடம் காசு வாங்கி வந்த நாட்களுக்கு பிராயச்சித்தமாக, ‘எப்படியும் வேலைக்குப் போய் சம்பாதிச்சுக் கொட்டணும் மாப்ள’ என்ற வெறி,வேலைக்குச் செல்லவேண்டிய திரி கிள்ளும்.














‘எப்பொழுதும்’ சேர்ந்தே இருந்த நட்பு வட்டம் இனி ‘எப்பொழுதோ’ தான் கூடும் என்ற எண்ணம் வரும்.. அப்பொழுது தெரியாது ‘எப்பொழுதுமே’ இனி இது போல கூடப்போவதில்லை என்பது.






இப்படி அத்தனை விதமான சேரன் மேட்டர்கள் நடந்தாலும் அதை எல்லாம் தாண்டி,சீனியர் என்ற கித்தாப்பில் வேறு டிப்பார்ட்மெண்ட்களுடன் சண்டையும்,சத்தாய்ப்புகளும் நடந்துகொண்டுதான் இருக்கும்.






WELCOME PARTY.. அதாவது முதல்வருட பசங்களுக்கு மூன்றாம் வருட மாணவர்கள் வைக்க வேண்டும்..






இது ‘பாலையா’ ஒரு படத்தில் ‘வரகுணா’என்று சொல்வாரே.. அதாவது ஏதாவது ஒன்று வேண்டும் என்றால் அதற்கு முன் போடப்படும் பிட்.. இந்த வெல்கம் பார்ட்டி ‘வரகுணா’, வேறெதற்கும் அல்ல.. நல்ல செழுமையான ஃபேர்வெல் பார்ட்டிக்கு.. அதை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் நடத்த வேண்டும்..






கூத்தும் ஊத்தும் தான்.. 52வது தடவையாக “ஹம் ஆப்க்கே ஹெய்ன் ஹெளன்” படத்திற்கு.. அத்தனை பாடல்களுக்கும் ஆல்கஹால் விசில் பறக்கும்..






அன்று ஹாஸ்டல் மாணவர்கள் அலப்பறை இன்னும் அதிகமாக இருக்கும்.. வண்டி வைத்திருக்கும் மாணவர்கள் அங்குதான் டேரா.. கடை கன்னிக்கு போய் ஹெல்ப் பண்ணுவார்கள்.. நாக்கை தொங்கப்போட்டு...






“கோழி என்ன விலைண்ணே..”






அவர் என்ன விலை சொன்னாலும் ஜூனியர் மாணவன் முன்னர் தம் பெருமையை நிலைநாட்ட.. “ என்னண்ணே கோழிய கேட்டா யானைய சொல்ற.. செரி செரி..பார்த்து அறுத்து வை.. காலைல மட்டன் ஃப்ரெஷ்ஷா இருக்கணும் ஆமா”






இங்கிலீஷ் தவ்வும்..நம்மாளுக்கு செத்தா எல்லாமே ‘மட்டன்’ தான்..






பார்ட்டி நடக்கும் இரவு.. போதையின் உச்சத்தில்.. மூன்று வருடம் வாங்கிய திட்டுக்கள் மொத்தமும் திரட்டி,அறிவுறையாக மாற்றி.. அகப்பட்ட ஜூனியர்களிடம்.. அரிஸ்டாட்டில் ரேஞ்சில்.. அவில்த்து விடுவார்கள்..






“என்னா.. அண்ணே சொல்றது புரிஞ்சிச்சா... எதுனாலும் நம்ம காலேஜ்தான்..


எதுன்னாலும்...”






“......”






“சொல்லுங்கடா.. எதுன்னாலும்..”






“ நம்ம காலேஜ்தாண்ணே”






“ஜாரிகள பார்த்தமா, சைன போட்டமா,டைவா குடுத்தமான்னு இருக்கணும்..லவ் பண்ணி அசிங்கப்படுத்தக்கூடாது.. லவ் ப..ண்..ணி..”






“அசிங்கப் படுத்துக் கூடாது..”






“அதேதான்.. எதாவது உங்களுக்கு பிரச்சனைன்னு வெய்யி.. ஒரு குரல்..ஒரே குரல்தான் அண்ணே எங்க இருந்தாலும் வருவேன் உங்களுக்கு.. டேய் பிடிங்கடா..பிடிங்கடா..” என போதையில் வீரவசனம் பேசிக்கொண்டே விழுந்து விடுவார்கள் அண்ணன்கள்..






இரண்டாம் வருட ஜூனியர்களும் மூன்றாம் வருடம் அடி எடுத்து வைக்கப்போகும் எண்ணத்தில் மிகவும் அன்பாக இருப்பது போல் பொறுத்துக்கொள்வார்கள்..






அவ்வளவுதான் அந்த பார்ட்டி முடிந்துவிட்டதுமே பிரிவு எண்ணமும் அதற்கு அடுத்த கட்டங்களும்.. தானாக நடந்தேறிவிடும்.. கொஞ்சம் அதிக பொறுப்பும் அதிர்ஷ்டமும் உள்ள மாணவர்கள் பாஸாகி, போன ஜென்மத்தில் பாவம் செய்திருந்தால் உயர்கல்விக்கும் அதிக பாவம் செய்திருந்தால் வேலைக்கும்,பாவம் மட்டுமே செய்திருந்தால் திருமணமும்..இப்படி ஏதாவது ஒன்றில் ஐக்கியமாகி,






மூன்று வருடங்கள் எப்பொழுதும் கூடவே இருந்த நண்பனை எப்பொழுதாவது எங்காவது பார்க்க நேர்ந்தால்.. “அடையாளமே தெரியலைங்களே.. வெயிட் போட்டீங்க.. ” என்ற ரீதியில்..














ச்சே..அட போங்கப்பா..................



0 comments:

தரம்

பசுமை மாறாத கல்லூரி நினைவுகள்..இறுதி.. !!!








ஆட்டோகிராஃப் படத்தில் சேரன்,ஸ்நேகாவிடம் பேசுவாரே..










“சக்கர டப்பா எங்கடா திவ்யா..










அப்படில்லாம் இல்லப்பா..”














அதுபோல அநியாயத்துக்கு நெகிழ்ச்சியாக ஒருவருக்கொருவர் அவ்வப்பொழுது பேச வைக்கும் பருவம் இறுதி வருடம்.














எதிர்காலம் பற்றிய பயமும், ஏதாவது செய்துவிடவேண்டும் என்ற துடிப்பும் சற்று மேலெழும் வருடம்.










‘குரூப் ஸ்டெடி’.. என்ற ஒன்றை எவன் கண்டுபிடித்தானோ அவன் வாழ்க. செட்டில் எவனாவது ஒருவன் வீட்டில் இரவு கூடுவது. ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை பஸ்ஸ்டாண்டிற்கோ, பாய் கடைக்கோ டீ சாப்பிட.. அதில், நல்லா சாப்பிடக்கூடிய கோஷ்டி மீந்து போன பூரி,வடை என எதுவாக இருந்தாலும் எடுத்து ‘அட்டியலை’போடுவார்கள்.














அக்கம் பக்கத்தில் ஏதாவது ஒருவீட்டில் திடீரென லைட் எறிந்து அணைந்தால் பசங்க முகம் பிரகாசமாகி,புருவ உயர்த்துதல்கள்,புன்முறுவல்கள் நடக்கும்.










இப்படி, ஒருமணிக்கொரு டீ, பெண்களைப் பற்றிய பேச்சு என எல்லாம் நடக்கும் குரூப்பாக.. படிப்பதைத் தவிர..










மறுநாள் காலையில் பரபரப்பாக வீட்டிற்கு கிளம்பும் போது, “மாப்ள இந்நிக்கி எப்படியும் நைட்டு, பேசாம முடிக்கப் பார்க்கணும்டா” என சொல்லிவிட்டு கிளம்புவார்கள்... தினமும்.














அதுவரை ‘அப்பன்’ என்றும் ‘பெரிசு’ என்று அழைக்கப்பட்டவர் ‘அப்பா பாவம்டா’ என்ற ஃபீலிங் வர எத்தனிக்கும் தருணங்களில் புத்தகங்கள் கைஏறும்..














தினமும் ஏதாவது பொய் சொல்லி அம்மாவிடம் காசு வாங்கி வந்த நாட்களுக்கு பிராயச்சித்தமாக, ‘எப்படியும் வேலைக்குப் போய் சம்பாதிச்சுக் கொட்டணும் மாப்ள’ என்ற வெறி,வேலைக்குச் செல்லவேண்டிய திரி கிள்ளும்.














‘எப்பொழுதும்’ சேர்ந்தே இருந்த நட்பு வட்டம் இனி ‘எப்பொழுதோ’ தான் கூடும் என்ற எண்ணம் வரும்.. அப்பொழுது தெரியாது ‘எப்பொழுதுமே’ இனி இது போல கூடப்போவதில்லை என்பது.






இப்படி அத்தனை விதமான சேரன் மேட்டர்கள் நடந்தாலும் அதை எல்லாம் தாண்டி,சீனியர் என்ற கித்தாப்பில் வேறு டிப்பார்ட்மெண்ட்களுடன் சண்டையும்,சத்தாய்ப்புகளும் நடந்துகொண்டுதான் இருக்கும்.






WELCOME PARTY.. அதாவது முதல்வருட பசங்களுக்கு மூன்றாம் வருட மாணவர்கள் வைக்க வேண்டும்..






இது ‘பாலையா’ ஒரு படத்தில் ‘வரகுணா’என்று சொல்வாரே.. அதாவது ஏதாவது ஒன்று வேண்டும் என்றால் அதற்கு முன் போடப்படும் பிட்.. இந்த வெல்கம் பார்ட்டி ‘வரகுணா’, வேறெதற்கும் அல்ல.. நல்ல செழுமையான ஃபேர்வெல் பார்ட்டிக்கு.. அதை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் நடத்த வேண்டும்..






கூத்தும் ஊத்தும் தான்.. 52வது தடவையாக “ஹம் ஆப்க்கே ஹெய்ன் ஹெளன்” படத்திற்கு.. அத்தனை பாடல்களுக்கும் ஆல்கஹால் விசில் பறக்கும்..






அன்று ஹாஸ்டல் மாணவர்கள் அலப்பறை இன்னும் அதிகமாக இருக்கும்.. வண்டி வைத்திருக்கும் மாணவர்கள் அங்குதான் டேரா.. கடை கன்னிக்கு போய் ஹெல்ப் பண்ணுவார்கள்.. நாக்கை தொங்கப்போட்டு...






“கோழி என்ன விலைண்ணே..”






அவர் என்ன விலை சொன்னாலும் ஜூனியர் மாணவன் முன்னர் தம் பெருமையை நிலைநாட்ட.. “ என்னண்ணே கோழிய கேட்டா யானைய சொல்ற.. செரி செரி..பார்த்து அறுத்து வை.. காலைல மட்டன் ஃப்ரெஷ்ஷா இருக்கணும் ஆமா”






இங்கிலீஷ் தவ்வும்..நம்மாளுக்கு செத்தா எல்லாமே ‘மட்டன்’ தான்..






பார்ட்டி நடக்கும் இரவு.. போதையின் உச்சத்தில்.. மூன்று வருடம் வாங்கிய திட்டுக்கள் மொத்தமும் திரட்டி,அறிவுறையாக மாற்றி.. அகப்பட்ட ஜூனியர்களிடம்.. அரிஸ்டாட்டில் ரேஞ்சில்.. அவில்த்து விடுவார்கள்..






“என்னா.. அண்ணே சொல்றது புரிஞ்சிச்சா... எதுனாலும் நம்ம காலேஜ்தான்..


எதுன்னாலும்...”






“......”






“சொல்லுங்கடா.. எதுன்னாலும்..”






“ நம்ம காலேஜ்தாண்ணே”






“ஜாரிகள பார்த்தமா, சைன போட்டமா,டைவா குடுத்தமான்னு இருக்கணும்..லவ் பண்ணி அசிங்கப்படுத்தக்கூடாது.. லவ் ப..ண்..ணி..”






“அசிங்கப் படுத்துக் கூடாது..”






“அதேதான்.. எதாவது உங்களுக்கு பிரச்சனைன்னு வெய்யி.. ஒரு குரல்..ஒரே குரல்தான் அண்ணே எங்க இருந்தாலும் வருவேன் உங்களுக்கு.. டேய் பிடிங்கடா..பிடிங்கடா..” என போதையில் வீரவசனம் பேசிக்கொண்டே விழுந்து விடுவார்கள் அண்ணன்கள்..






இரண்டாம் வருட ஜூனியர்களும் மூன்றாம் வருடம் அடி எடுத்து வைக்கப்போகும் எண்ணத்தில் மிகவும் அன்பாக இருப்பது போல் பொறுத்துக்கொள்வார்கள்..






அவ்வளவுதான் அந்த பார்ட்டி முடிந்துவிட்டதுமே பிரிவு எண்ணமும் அதற்கு அடுத்த கட்டங்களும்.. தானாக நடந்தேறிவிடும்.. கொஞ்சம் அதிக பொறுப்பும் அதிர்ஷ்டமும் உள்ள மாணவர்கள் பாஸாகி, போன ஜென்மத்தில் பாவம் செய்திருந்தால் உயர்கல்விக்கும் அதிக பாவம் செய்திருந்தால் வேலைக்கும்,பாவம் மட்டுமே செய்திருந்தால் திருமணமும்..இப்படி ஏதாவது ஒன்றில் ஐக்கியமாகி,






மூன்று வருடங்கள் எப்பொழுதும் கூடவே இருந்த நண்பனை எப்பொழுதாவது எங்காவது பார்க்க நேர்ந்தால்.. “அடையாளமே தெரியலைங்களே.. வெயிட் போட்டீங்க.. ” என்ற ரீதியில்..














ச்சே..அட போங்கப்பா..................

0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP