>

Archives

திப்பு சுல்தான் !!!

>> Saturday, September 19, 2009


மைசூர் மன்னராக இருந்த திப்பு சுல்தான் பெங்களூர் மாவட்டம் தேவனஹள்ளி பகுதியில் பிறந்தார் . அவர் பிறந்த வருடம் குறித்து இரு வேறு தகவல்கள் கூறப்படுகிறது . எனினும் , மைசூர் மன்னர் ஹைதர் அலி , அவரது 2 - வது மனைவி வாதிமா என்ற பெற்றோருக்கு 1750ம் ஆண்டு நவம்பர் 10 ம் தேதி திப்பு சுல்தான் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் .




மைசூர் புலி என்றழைக்கப்பட்ட திப்பு சுல்தான் தன் தந்தை மரணத்துக்குப் பின்னர் 1782 ம் ஆண்டு மைசூரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் .


திப்பு சுல்தான் ஆட்சி காலத்தில்தான் காவிரியின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டப்பட்டது . லால் பாக் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணி ஹைதர் அலி காலத்தில் தொடங்கியது . ஆனால் , அதை நிறைவு செய்யும் முன்பு அவர் இறந்து விட்டார் . இதையடுத்து லால் பாக் பூங்காவை திப்பு சுல்தான் கட்டி முடித்தார் .


திப்பு சுல்தான் கண்டு பிடித்த போர் ஆயுதமான ராக்கெட்தான் உலகின் முதல் போர் ராக்கெட் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார் . போர் வீரர் மட்டுமின்றி சிறந்த கவிஞர் என்றும் போற்றப்பட்டார் .


ஹைதர் அலி மன்னராக இருந்த போது ஆங்கிலேயர்கள் மைசூர் மீது படையெடுத்தனர் . அப்போது , போரில் தந்தைக்கு உதவியாக திகழ்ந்து திப்பு சுல்தான் வெற்றி தேடித்தந்தார் .


ஆனால் , திப்பு சுல்தான் ஆட்சியில் மீண்டும் ஆங்கிலேயர்கள் போர் தொடுத்தனர் . 3 வது மற்றும் 4 வது போரில் ஆங்கிலேயர் மற்றும் அதன் கூடுப்படைகளிடம் தோல்வியை திப்பு சுலதான் தழுவினார் . மைசூரின் ஆட்சி தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டணத்தில் 1799 ம் ஆண்டு மே மாதம் 4 ம் தேதி ஆங்கிலேயருக்கு எதிரான போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார் .



0 comments:

தரம்

திப்பு சுல்தான் !!!


மைசூர் மன்னராக இருந்த திப்பு சுல்தான் பெங்களூர் மாவட்டம் தேவனஹள்ளி பகுதியில் பிறந்தார் . அவர் பிறந்த வருடம் குறித்து இரு வேறு தகவல்கள் கூறப்படுகிறது . எனினும் , மைசூர் மன்னர் ஹைதர் அலி , அவரது 2 - வது மனைவி வாதிமா என்ற பெற்றோருக்கு 1750ம் ஆண்டு நவம்பர் 10 ம் தேதி திப்பு சுல்தான் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் .



மைசூர் புலி என்றழைக்கப்பட்ட திப்பு சுல்தான் தன் தந்தை மரணத்துக்குப் பின்னர் 1782 ம் ஆண்டு மைசூரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் .


திப்பு சுல்தான் ஆட்சி காலத்தில்தான் காவிரியின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டப்பட்டது . லால் பாக் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணி ஹைதர் அலி காலத்தில் தொடங்கியது . ஆனால் , அதை நிறைவு செய்யும் முன்பு அவர் இறந்து விட்டார் . இதையடுத்து லால் பாக் பூங்காவை திப்பு சுல்தான் கட்டி முடித்தார் .


திப்பு சுல்தான் கண்டு பிடித்த போர் ஆயுதமான ராக்கெட்தான் உலகின் முதல் போர் ராக்கெட் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார் . போர் வீரர் மட்டுமின்றி சிறந்த கவிஞர் என்றும் போற்றப்பட்டார் .


ஹைதர் அலி மன்னராக இருந்த போது ஆங்கிலேயர்கள் மைசூர் மீது படையெடுத்தனர் . அப்போது , போரில் தந்தைக்கு உதவியாக திகழ்ந்து திப்பு சுல்தான் வெற்றி தேடித்தந்தார் .


ஆனால் , திப்பு சுல்தான் ஆட்சியில் மீண்டும் ஆங்கிலேயர்கள் போர் தொடுத்தனர் . 3 வது மற்றும் 4 வது போரில் ஆங்கிலேயர் மற்றும் அதன் கூடுப்படைகளிடம் தோல்வியை திப்பு சுலதான் தழுவினார் . மைசூரின் ஆட்சி தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டணத்தில் 1799 ம் ஆண்டு மே மாதம் 4 ம் தேதி ஆங்கிலேயருக்கு எதிரான போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார் .


0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP