தாயே !!!!
>> Sunday, September 20, 2009
என்ன பிழை செய்தோம் ,?
பணம் என்ற காகிதத்தால் தினம் ,
மனம் நொந்து வாழ்கிறோம் !
கடன் இன்னும் இருப்பதால் ஏனோ,
மீண்டும் பணம் தேட நினைக்கிறோம் .
நம்மை அறியாமல்
வழிந்தோடும் கண்ணீர் துளிகளை
துடைத்ததுக் கொள்கிறோம்., ஆனால் ,
அறிந்தே உருவாகும் ஆசைகளை மட்டும்
ஏனோ துடைக்க மறக்கிறோம் .?
வாழ்வதாய் எண்ணி
வாழ்க்கையின் முகவரியை
தொலைத்துக் கொண்டு இருக்கிறோம் ,
பணத்தின் முகவரி
கிடைத்ததுவிட்டதாக எண்ணி .,
நாம் இழந்த வஸந்தம்தான் கிடைத்திடுமோ ?
பணத்தால் அடைந்த காயம்தான் ஆரிடுமோ ! ???????????
1 comments:
super but kastama erukku.
Post a Comment