ராம் ( நிழலினை நிஜமும் பிரிந்திடுமா ) !!!
>> Monday, September 7, 2009
நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவறை உனக்கும் பாரமா அம்மா
மீண்டும் என்னை ஒருமுறை சுமப்பாயம்மா...
லாஹில்லா லாஹி லல்லல்லாலல்லா லாஹில்லா லாஹி லல்லல்லால்லா (லாஹில்லா..)
(நிழலினை நிஜமும் பிரிந்திடுமா)
நடமாடும் சவமாய் நானிங்கே இருக்க
விதிசெய்த சதியா தெரியலம்மா
கடல்துப்பும் அலையும் கடலில்தான் சேரும்
அதுபோல என்னையும் சேர்த்துக்கம்மா
உன்பிள்ளை என்று ஊர்சொல்லும் போது
எனக்கே நான் யாரோ என்றாகிப் போனேன்
ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா
மொத்த பூமி எனக்கேதான் சொந்தமம்மா
பத்துமாசம் உள்ளிருந்தேன் பக்குவமா
பூமிக்குநான் வந்ததென்ன குத்தமம்மா ...
லாஹில்லா லாஹி லல்லல்லாலல்லா லாஹில்லா லாஹி லல்லல்லால்லா
லாஹில்லா லாஹி லலல்லலா லாஹில்லா லாஹி ஏ ஏ லாஹி
திசையெல்லாம் எனக்கு இருளாகிக் கிடக்கு
எங்கேயோ பயணம் தொடருதம்மா
என்னோட மனசும் பழுதாகிப்போச்சு
சரிசெய்ய வழியும் தெரியலம்மா
சூரியன் உடைஞ்சா பகலில்ல அம்மா
ஆகாயம் மறைஞ்சா அகிலமே சும்மா
என்னைச் சுத்தி என்னென்னமோ நடக்குதம்மா
கண்டதெல்லாம் கனவாகிப் போயிடுமா
தூக்கத்திலே உன்னநானும் தொலைச்சேனம்மா...
தேடித்தர தெய்வம் வந்து உதவிடுமா
0 comments:
Post a Comment