ரூ. 17 கோடி மதிப்புள்ள டொலர்கள் குளிர் காய்வதற்காக தீக்கிரை !!!
>> Wednesday, November 11, 2009
கொலம்பியாவை நடுங்கச் செய்த கடத்தல் கும்பல் தலைவன், பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக காட்டில் தங்கியிருந்தபோது தனது மகள் குளிர் காய்வதற்காக ரூ.17 கோடி மதிப்புள்ள டொலர் நோட்டுக்களை எரித்தது தெரிய வந்துள்ளது.
கொலம்பியாவைச் சேர்ந்த போதைக் கடத்தல் மன்னன் பப்லோ எஸ்கோபர்.
1980களில் ஆரம்பித்த அட்டகாசம் 1993 வரை நீடித்தது.
இவர் தனது கும்பலுடன் இணைந்து ஆயிரக்கணக்கானோரை கொலை செய்து கொள்ளையடித்து, போதைவஸ்து வியாபாரம் நடத்தி, கடத்தல் தொழிலில் ஈடுபட்டு கிடைத்த பணத்தில் அடுக்குமாடி விடுதிகள், விமானங்கள், தனியார் வனவிலங்கு பூங்கா நடத்தி பணம் சம்பாதித்துள்ளார். போர்ப்ஸ் பத்திரிகை இவரை 1989ஆம் ஆண்டின் 7ஆவது மிகப் பெரிய உலக பணக்காரர் என்று அறிவித்தது.
இவரது தொல்லைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வந்ததால், அமெரிக்க தொழில்நுட்ப உதவியுடன் கொலம்பிய பாதுகாப்பு படைகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கின.
பாதுகாப்பு படைகளின் தேடுதல் வேட்டையின்போது சில நாட்கள் காடுகளில் பதுங்கியபோது மகளின் குளிரைப் போக்க ரூ. 17 கோடி மதிப்புள்ள டொலர் நோட்டுகளை இரவு முழுவதும் எஸ்கோபர் எரித்தது இப்போது தெரியவந்துள்ளது.
http://wwwrasigancom.blogspot.com/
2 comments:
Ada kadavule appadiyaa visayam .
Eppadiththaan ippadiyellaam mssage kudukkiringa Really super shankar .
Post a Comment