>

Archives

டைட்டானிக் சாதனையை பின்னுக்குத் தள்ளும் அவதார் திரைப்படம் !!!

>> Monday, December 28, 2009


அவதார் ஹாலிவுட்டில் மட்டும் அல்லாது உலகத்தின் அனைத்து ஒட்டுமொத்த திரை உலகத்தையும் மீண்டும் தான் பக்கம் திருப்பி இருக்கிறது ., என்பது அனைவரும் அறிந்த உண்மை .


கடந்த 18ம் தேதி வெளியாகி உலகத்தின் அனைத்து திரை அரங்குகளிலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் பிரமிப்பில் ஆழ்த்திக்கொண்டு இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான் என்றாலும் .

இந்த அவதார் முப்பரிமான திரைப்படம் வசூழிலும் இதுவரை உலகத்தின் எந்த திரைப்படங்களும் செய்யாத ஒரு புதிய சாதனையை நிகழ்த்தி மீண்டும் ரசிகர்களுக்கு ஒரு புதிய பிரமிப்பை கொடுத்துக்கொண்டு இருப்பதாக ஹாலிவுட் வட்டார செய்திகள் கூறுகின்றன .




எத்தனையோ ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னும் உலக மக்கள் அனைவரின் இதயங்களில் ஒரு அழியா இடம் பிடித்த ஒரே படம் டைட்டானிக் என்பது நாம் அனைவரும் அறிந்ததே . அந்த படத்தை உருவாக்கி உலகத்தின் அத்தனை உயரிய விருதுகளையும் , வரலாற்று சுவடுகளில் இன்னும் வசூழில் முதல் இடத்தை பிடித்துக்கொண்டு இருக்கும் ஒரே திரைப்படம் டைட்டானிக் என்ற பெருமைக்கு சொந்தக்காரருமான ஜேம்ஸ் கேமரூன் என்பது தான் இந்த அவதார் படத்தின் பரபரப்புகளுக்கு முக்கியக் காரணம். இருக்காதா ? டைட்டானிக் என்ற கப்பலை கவிழ்த்தே திரைப்படத்தை உலகெங்கும் ஓடவிட்டவராச்சே.

இவருடைய புதிய டெக்னாலஜியைப் பற்றிக் கேள்விப்பட்டு வியந்து, நேரில் போய் அசந்த இயக்குனர்களின் பட்டியலில் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கும் ஒருவர். ஜூராசிக் பார்க்கில் டைனோசர்களை அலற விட்டவரையே அலற வைத்து விட்டதாம் ஜேம்ஸின் டெக்னிக்ஸ். மற்ற படங்களில் உள்ளது போல தனியே நடிகர்களை நடிக்க வைத்து பின்னர் கிராபிக்ஸ் காட்சியில் இணைக்காமல், கிராபிக்ஸ் காட்சியை கம்ப்யூட்டரில் இணையாக ஓடவிட்டு அதற்குத் தக்கபடி நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார். இந்த விர்ச்சுவல் கேமரா டெக்னிக் ஒரு முப்பரிமாண மாய உலகை கன கட்சிதமாய் படம் பிடித்திருக்கிறதாம்.



நடிகர்களின் முக அசைவுகளை “த வால்யம்” எனும் கருவி மூலம் துல்லியமாகப் படம் பிடித்து, அதை கம்யூட்டர் இமேஜ்களுக்கு இறக்குமதி செய்திருக்கிறார். இதன் மூலம் டிஜிடல் உருவங்கள் அச்சு அசலாக மனித அசைவுகளைப் பிரதிபலிக்கும் !



 அப்படி எடுக்கப்பட்ட அவதார் படத்தில் எது நிஜம் எது கிராபிக்ஸ் என தெரியாமல் ரசிகர்கள் குழம்பப் போவது சர்வ நிச்சயம். உண்மையில் வெறும் 35 சதவீதம் காட்சிகள் தான் இதில் உண்மையானவை. மிச்சம் 65 சதவீதமும் கம்ப்யூட்டர் காட்டும் மாயாஜாலம் தான் என்கிறார் ஜேம்ஸ்.


டைட்டானிக் படத்துக்கு இசையமைத்த ஜேம்ஸ் ஹார்னரையே செண்டிமெண்டாக இந்தப் படத்துக்கும் இசையமைக்க வைத்திருக்கிறார். ஒரு புதிய உலகம். ஒரு புதிய இசை. மிக மிகப் புதுமையாக வந்திருக்கிறது என பூரிக்கிறது யூனிட். பிரமிப்பூட்டும் ஒரு கிராபிக்ஸ் கலக்கலில் இதமான காதல் இழையோடினால் அது நிச்சயம் வெற்றி பெறும். அந்த பார்முலா தான் டைட்டானிக்கிற்கு மிரட்டல் வெற்றியைக் கொடுத்தது. அதே பார்முலா தான் அவதாரையும் சூப்பர் டுப்பர் ஹிட்டாக்கும் என்கிறார் ஜேம்ஸ் ஹார்னர்.

டைட்டானிக் திரைப்படம் உலகெங்கும் சுமார் 1.8 பில்லியன் டாலர்கள் சம்பாதித்துக் கொடுத்தது.


இந்தப் படம் அதை விட அதிக அளவில் சம்பாதிக்கும் என்கின்றனர் தயாரிப்பாளர்கள். காரணம் இந்தப் படத்தின் 3D டெக்னாலஜி ரசிகர்களைத் தியேட்டருக்கு கட்டாயப்படுத்தி வரவைக்குமாம். இந்தப் படத்தில் ஹீரோவான தன் மூலம் ஜென்ம சாபல்யமே பெற்றுவிட்டது போல் புல்லரிக்கிறார் 33 வயதான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சேம் வொர்த்திங்டன்.


அவதார் திரைப்படத்தின் பெயரிலும் அவதாரின் நீல நிறத்திலும் இந்தியப் பாதிப்பு தெளிவாகவே தெரிகிறது. அவதாரின் வர்ணம் சிவபெருமானின் நீல நிறத்திலிருந்து ஜேம்ஸ் எடுத்துக் கொண்டது என்கின்றனர் விமர்சகர்கள்.


இந்த படத்தை பற்றி அவர் கூறுகையில் . நான் அவதார் படத்தை பற்றி அதிகமாக சொல்லப்போவது இல்லை .



சின்ன வயதிலிருந்தே நான் படிக்கும் எல்லா அறிவியல் புனைக் கதைகளும் என்னை ஏதோ ஒரு வகையில் பாதிக்கும். அப்படிப் படித்த எல்லா கதைகளையும் கலந்து கட்டி நான் உருவாக்கிய ஸ்பெஷல் கதை தான் அவதார், என்கிறார் ஜேம்ஸ் கேமரூன். இந்தக் கதையை அவர் எழுதியது 1994ல். டைட்டானிக்கை சுடச் சுடக் கவிழ்த்த கையோடு 1997லேயே அவதாரை கையில் எடுத்தார். 100 மில்லியன் பட்ஜெட்டில் படத்தைத் தயாராக்க வேண்டும் என்பது அவருடைய திட்டம். முழுக்க முழுக்க கம்ப்யூட்டரில் நடிகர்களை வடிவமைத்து சினிமா எடுக்க வேண்டும், டெக்னாலஜியைக் கொண்டு மிரட்ட வேண்டும் என பல திட்டங்கள் வைத்திருந்தார். ஆனால் என்ன அவர் நினைப்பதைச் செய்ய அப்போது டெக்னாலஜி ஒத்துழைக்கவில்லையாம்.


அவதார் என்னுடைய கனவுப் படம் என்கிறார் சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கும் 55 வயதான ஜேம்ஸ் கேமரூன்.



இந்தப் படம் ஹிட்டானால் நிச்சயம் இதன் இதன் இரண்டாம் மூன்றாம் பாகங்களை எடுப்பேன் என புன்னகைக்கிறார். ஏற்கனவே டெர்மினேட்டர் படத்தை எடுத்து அதை ஹிட்டாக்கி, இரண்டாம் பாகம் எடுத்து சூப்பர் ஹிட்டாக்கிய அனுபவம் அவருக்கு உண்டு . இந்த உலகத்தை மீண்டும் பிரமிப்பில் ஆழ்த்துவதற்காக பனிரெண்டு ஆண்டுகள் காத்திருந்து நான் உருவாக்கி உள்ள படம்தான் அவதார் . என்று அவர் இப்படத்தைப் பற்றி கூறிய ஒரு சில வார்த்தைகலே இந்த படத்தை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவலை அதிகமாக தூண்டி உள்ளது .

டெக்னாலஜியில் ஹாலிவுட்டையே இன்னொரு தளத்துக்கு இந்தப் படம் எடுத்துச் செல்லும் என்கிறார்கள். 20யத் சென்சுரி ஃபாக்ஸ் வெளியிடப் போகும் இந்தப் படத்தைத் தயாரித்திருப்பது லைட்ஸ் ஸ்ட்ரோம் எண்டர்டெயின்மெண்ட். செலவைப் பற்றிக் கவலைப்படாமல் சுமார் 600 மில்லியன் டாலர்களை இந்தப் படத்தில் வாரி இறைத்திருக்கிறார்கள். டைட்டானிக், ஏலியன்ஸ், டெர்மினேட்டர் 2 போன்ற மிரட்டலான படங்களைத் தயாரித்ததும் இவர்கள் தான்என்பது குறிப்பிடத்தக்கது .



சினிமாவை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதிலேயே இந்தப் படம் புரட்சி செய்யும். வீட்டில் இருப்பவர்களை 3D தியேட்டர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் இழுத்து வரும். இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் ஒரு புதிய உலகத்துக்குள் போகாமல் வெளியே வந்த அனுபவம் இருக்கவே இருக்காது என அடித்துச் சொல்கிறார் ஜேம்ஸ். அவதார் படத்தைப் பார்த்த வெகு சிலரும் இன்னும் வியப்பிலிருந்து வெளியே வரவில்லையாம்.


உலகத்தின் ஒட்டு மொத்த ரசிகர்களின் தூக்கத்தையும் கலவாடிச் சென்ற இந்தப் படத்தின் கதை தான் என்ன ?


22ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பூமியிலுள்ள எரிபொருள் உட்பட கணிய வளங்கள் யாவும் தீர்ந்து விடுவதன் காரணமாக விண்வெளியில் இருக்கும் பண்டோரா எனும் கிரகத்தை முற்றுகையிட வேண்டிய தேவைக்கு மனிதர்கள் தள்ளப்படுகிறார்கள். கதையின் நாயகன் ஜேக் ஒரு கடற்படை வீரர். போரில் காயமடைந்து இடுப்புக்குக் கீழே உடல் செயல் இழந்த நிலையில் இருக்கிறார்.

அவர் மீண்டும் எழும்பி நடந்து பண்டோராவுக்குப் போகும் வாய்ப்பு வருகிறது. பண்டோரா ஒரு தனி கிரகம். அசத்தலான அந்தக் கிரகத்தில் பிரமிப்பையும், பயத்தையும் ஊட்டும் பல விதமான ஜீவராசிகள் வாழ்கின்றன. அங்கே நவி எனும் மனிதர்களும் வசிக்கிறார்கள். 10 அடி உயரம், நீளமான வால், நீல நிற தோல், பெரிய காது, சப்பை மூக்கு என வியக்க வைக்கும் உருவம் அவர்களுக்கு. இவர்கள் முழு வளர்ச்சியடையாதவர்கள் என மனிதர்கள் நினைக்கிறான்.

உண்மையில் நவிகள் மனிதர்களை விட அதி பயங்கர சக்திகளுடன் இருக்கிறார்கள்.


அந்த கிரகத்தில் உள்ள மாபெரும் சிக்கல், அங்கே மனிதனால் சுவாசிக்க முடியாது என்பது. அந்தக் கிரகத்துக்குப் போக வேண்டுமென்றால் நவிகளைப் போல ஆய்வுக் கூடத்தில் மனிதர்களை உருவாக்க வேண்டும். அப்படி மனிதர்களின் டி.என்.ஏயைக் கொண்டு உருவாக்கப்படும் நவி போன்ற நீல மனிதர்கள் தான் அவதார் என்பவர்கள்.

 ஊனமுற்ற ஜேக் தனது அவதார் உருவத்தின் மூலமாக பண்டோராவுக்குள் நுழைகிறார். கிரகத்தின் அழகில் மெய் மறக்கிறார். கூடவே அங்குள்ள ஒரு நவி பெண்ணுடன் காதலிலும் சிக்கிக் கொள்கிறார்.

பண்டோராவில் மனிதர்களின் தலையிடலை நவிகள் விரும்பவில்லை. இப்போது ஜேக் தன் இனமான மனிதர்களுக்கும், தன் காதலியின் இனமான நவிகளுக்கும் இடையே சிக்கிக் கொள்கிறார். அவர் எந்தப் பக்கம் சாய்கிறார், அதன் விளைவுகள் என்னென்ன என்பதுதான் கதை .


இந்தப் படம் இந்தியாவில் மட்டும் 1600 பிரிண்டுகளுடன், தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகிறது.


ரூ.1350 கோடி செலவில் தயாராகியுள்ள இந்த அவதார், இதுவரை உலகில் வெளியான அனைத்து கிராபிக்ஸ் படங்களையும் மறக்க செய்துவிடும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று 'டைம்' பத்திரிகை பாராட்டியுள்ளது.


இந்தப் படத்துக்காக தனி கிரகம் ஒன்றையே உருவாக்கினார்களாம் கேமரூன் மற்றும் குழுவினர். அதில் வித்தியாசமான விலங்குகள், மரங்கள் போன்ற தோற்றங்களை உருவாக்கி அவற்றைத்தான் முப்பரிமாணத்தில் அவதாரமடுக்க வைத்துள்ளனர்.


மெர்குரிப் பூக்கள் போல் ஒளிரும் தாவரங்கள், பூக்கள், மரங்கள், நடைபாதைகள் இரவு நேரங்களில் ஒளிர்வதும், மாறுபட்ட உயிரின வகைகள் எந்திரத் தனமாக இல்லாமல் எதார்த்தமாக அனைத்தும் நிகழ்வதுபோலவே வடிவமைத்து இருக்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் .பெரும்பகுதி லாஸ்ஏஞ்சல்ஸ் மற்றும் நியூசிலாந்து நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

 FUSION DIGITAL 3D CAMERA என்ற புதிய கேமராவை உருவாக்கி அந்த விசேஷ கேமராவால்தான் ''அவதார்'' படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளனர் .உயிரற்ற பொருட்களையும், அசைவுகளுடன் உயிரோட்டமாகக் காட்டும் புதிய தொழில்நுட்பத்தின் துணையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டெக்னிஷியன்கள் கூறுகையில் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் பிரமிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக படத்தின் மொத்தக் குழுக்களும் இரண்டு மாதங்கள்  அடர்ந்த கட்டுப்பகுதியில் முகாம் அமைத்து தங்கி ,


அங்கு தினம்தோரும் நடைபெறும் இயற்கை மாற்றம் , அதனால் ஏற்படும் பதிப்புகள் என்று ஒவ்வொன்றையும் உணர்வுப்பூர்வமாக ஆராய்ந்த பிறகே இந்த படத்தை முப்பரிமான முறையில் அமைக்கத் தொடங்கியதாக கூறுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களே .



தமிழில் நேரடியாக வெளியாகும் முதல் ஹாலிவுட் முப்பரிமாண படம் என்ற பெருமையைப் பெறுகிறது அவதார். என்பது குறிப்பிடத்தக்கது .



அமெரிக்காவில் 17-ம் தேதி நள்ளிரவு நடந்த பிரிமியர் காட்சி மூலம் மட்டுமே 6.5மில்லியன் டாலர் வசூலித்தது அவதார். அடுத்த நாள் 18-ம் தேதி மட்டும் வட அமெரிக்கா-கனடாவில் 42 மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனைப் படைத்தது.


சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையும் சேர்த்து மொத்தம் 96 மில்லியன் டாலர்கள் அமெரிக்காவில் மட்டுமே வசூலாகிவிட்டது. என்றும் ஹாலிவுட் இணையதளம் தெரிவித்துள்ளது.



உலகின் பிற பகுதிகளில் கிடைத்த வசூலையும் சேர்த்து, முதல்வார இறுதியில், மூன்றே நாளில் அவதார் 463 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது முதல் மாத முடிவில் இந்தத் தொகை 2058 மில்லியன் டாலர்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப் பாடுவதாக ஹாலிவுட் இணையதளம் தெரிவித்துள்ளது . இன்னும் ரிலீசாக நாடுகளில் கிடைக்கும் வருமானம் இதில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




வெளியான முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் அவதார் வசூலித்திருப்பது 463 மில்லியன் டாலர்கள். இதுவரை எந்த ஹாலிவுட் படமும் செய்திராத வரலாற்று சாதனை . அவதார் படம் வசூழில் இனி வரும் நாட்களில் டைட்டானிக் படத்தின் வசூல் சாதனையை பின்னுக்குத் தள்ளும் என்று ஹாலிவுட் வட்டாரங்கள் தெருவிக்கின்றன .



நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னோட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னோட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .


அப்படியே ஓட்டும் போட்டுவிட்டு போங்க



18 comments:

சி. கருணாகரசு December 28, 2009 at 9:21 PM  

மிக அசத்தலான ஒரு விமர்சனமுங்க .... உங்க விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டது. .... இடையே ஒரு படம் ஈழப்போரினால் பாதிக்கப்பட்ட படம் போல் உள்ளது அது என்ன?
தொடர்ந்து எழுதுங்கோ. நன்றி.

shanthi December 28, 2009 at 10:35 PM  

சங்கர் உங்களின் ஒவ்வொரு பதிவும் ஒரு பிரமிப்பை ஏற்பத்துகிறது .
அதிலும் இந்த பதிவு மிகவும் வித்தியாசமாக உள்ளது அருமை .

sajuna December 28, 2009 at 10:44 PM  

hi,
avatar padathai patri kelvi padden.
but inthe alavuku intrest varale.
nijema athule yenna irukunu paarkanumnu aavelaa iruku.
shankar realy gud job..
u r great. keep it up...
n engge support always with u..
take care.. keep in touch...

Anonymous December 28, 2009 at 11:19 PM  

நடிகர்களின் முக அசைவுகளை “த வால்யம்"வழக்கம்போல சங்கர் இந்த அவதார் படத்தையும் நல்ல விமர்சனம் கொடுத்திருக்கிறார்...படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் தூண்டுகிறார். நடிகர்களின் முக அசைவுகளை “த வால்யம்" போன்ற புதிய சொற்க்கலையும் நம்மளையும் அறிய செய்கிறார்...விஜய்.

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் ...... December 28, 2009 at 11:24 PM  

நண்பர்கள் ,

சி. கருணாகரசு !
shanthi !
sajuna !

அனைவரும் எனது தளத்திற்கு வருகை தந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி ! நன்றி ! நன்றி !

உங்களின் கருத்துக்கள் என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது . இது போன்ற சிறந்த கருத்துக்களை மறக்காமல் எனது ஒவ்வொரு பதிவுகளுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன் .

நீங்கள் எழுதும் பின்னொட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .

குறை இருந்தால் என்னிடம் !

நிறை இருந்தால் நண்பர்களிடம் !


என்றும் உங்கள் அன்பிற்கினிய
சங்கர்

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் ...... December 28, 2009 at 11:36 PM  

நண்பர்,
விஜய் அவர்களின் வருகைக்கு மிக்க நன்றி.......

உங்களின் ஒவ்வொரு பின்னோட்டமும் இன்னும் பல சிறந்த படைப்புகளை கொடுக்க எனக்கு ஒரு புதிய
சிந்தனைக்கு வழிவகுத்து செல்கிறது . நன்றிகள் நண்பரே .
தொடர்ந்து இதுபோன்ற கருத்துகளை பதிவுசெய்யுங்கள் .,.

குறை இருந்தால் என்னிடம் !
நிறை இருந்தால் நண்பர்களிடம் !

என்றும் உங்கள் அன்பிற்கினிய,
சங்கர்

GUNA December 28, 2009 at 11:46 PM  

Wow Really Super post shankar .
ithuvarai theriyatha visayankal .piramippu mikuntha patankal anaithum super .

abdul rahman December 29, 2009 at 1:18 AM  

அன்புள்ள சங்கர் அவர்களுக்கு உங்களுடைய அவதார் படைப்பு ரொம்ப அருமை .நான் படம் பார்த்துவிட்டேன் .கதை சொன்ன விதம் கதையின் களம் புதியது .நான் புதிய வாசகன் .மீண்டும் வருவேன் .தொடரட்டும் உங்கள் படைப்புக்கள் .

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் ...... December 29, 2009 at 1:52 AM  

நண்பர்கள் ,

குணா !
அப்துல் ரகுமான் !!

இருவரும் எனது தளத்திற்கு வருகை தந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி ! நன்றி ! நன்றி !

உங்களின் கருத்துக்கள் என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது . இது போன்ற சிறந்த கருத்துக்களை மறக்காமல் எனது ஒவ்வொரு பதிவுகளுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன் .

ponnakk December 29, 2009 at 2:11 AM  

எப்பொழுதும் நண்பர் சங்கரின் விமர்ஷ்சனம் என்பது வார பத்திரிக்கயில் வரும் விமர்சனம்போன்றதொரு தோற்றத்தையையே கொடுக்கிறது..ஒரு ப்ளாக்கரில் வருவதைப்போன்று இருக்காது...அந்த விமர்சனம் எதோ கிளிப்பிங்க்ஸ் பார்ப்பதைப்போல ஒரு எண்ணத்தை உண்ட்டாக்குவதோடு அல்லாமல் இவரின் விமர்சனத்துக்காகவாது படம் பார்த்தாலென்ன என்று தோன்றுகிறது...எப்படி அப்படி கோர்வையாக விமரிசிக்கிறீர்கள்..

barathi December 29, 2009 at 2:14 AM  

Avatar film ennum nan parkavillai.kelvipatirukken.anal interest ellamal erunthen.ungalin vimarsanathai paditha piragu parkkum avalai thoondiyathu.migavum arumai.padaipugal thodara valthukkal shankar.

பிரசாத் December 29, 2009 at 2:43 AM  

நல்ல விமர்சனம் சங்கர். வசூலிற்குப் வசூழ் என தட்டச்சி இருக்கிறீர்கள். விமர்சனப்படுத்திய விதம் அழகு. பார்க்காதவரை பார்க்கத் தூண்டும். பார்த்தவர்களை மீன்டும் நினைக்கத் தூண்டும் விமர்சனம்.

calis December 29, 2009 at 3:27 AM  

வாழ்த்துக்களோடு உங்களுக்கு என் வந்தனங்கள். நான் கலீஸ்... யாழ்ப்பாணத்திலிருந்து. தங்கள் பதிவு மிக அற்புதம். அழகாய் செதுக்கிய அவதார் போலவே தங்கள் பார்வையும் சாலச்சிறந்தது. வளர்க தங்கள் பதிவுகள். பார்வையிடக் காத்திருக்கும் அன்பு நண்பன்.

கலீஸ்.. யாழ்ப்பாணம்.

kalai December 29, 2009 at 3:40 AM  

சங்கர் அவர்களுக்கு வணக்கம் ,,,,,,

உங்களின் மற்றும் படைப்புகளின் ரசிகை.... பணி துளி சங்கரின் வளை குடிலுக்கு வருவது என்றாள்,,,,,,,
என்னுள் ஒரே ஒரு பனித்துளி தீண்டிவிட்டு போனால் எப்பிடி என் உடம்பு சிலிர்க்குமோ அது போல் உணர்கிறேன் . ஒவ்வொரு நாளும் உங்களின் படைப்பு மிகவும் புதிதாக இருக்கிறது. உங்களின் ஒவ்வொரு புதிய முயற்சிக்கும் என்னுடய தலை குனிந்த பாராட்டுகள். அவதார் திரைப்படத்தின் விமர்சன்ம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்த மாதுரி செய்திகள் எல்லாம் உங்களுக்கு எப்படி கிடைக்கிறது அது மாதுரி சார்லி சாபிலின் வாழ்க்கை வரலாறு , கவிதைகள் எல்லாம் அருமையாக இருக்கிறது . இந்த மாதுரி விமர்சனத்தால் ஒரு நாளைக்கு பாருங்க நடிகர் சங்கமே வந்து உங்களுக்கு எதிரியாக மாறலாம் . ஏனென்றால் உங்களின் விமர்சனம் படித்தவர்கள் யாரும் திரை அரங்குகளில் படம் பார்க்க போக மாட்டார்கள் . உங்களின் வளை குடிலுக்கு வந்தவர்களுக்கு முழு படம் பார்த்த மாதுரி உணர்வு இருக்கும் ....

பி.ஏ.ஷேக் தாவூத் December 29, 2009 at 3:45 AM  

Anbu Shankar,
Piramippaaka irukkinrathu. Ovvoru visayathaiyum patri eppadi ivlo information collect pannureengannu. unga ovvoru pathivilum neraya thakavalkalai sekaritthu pathivil eluthuringa. Athu enakku mikavum pidittha visayam. Irandu naalaikku oru pathivaavathu eluthureenga.Athuvum aacharyam thaan (Kannu vachitteno). thodarnthu eluthunga nanbaa.

param December 30, 2009 at 8:25 PM  

படத்தை பார்த்து விட்டு உங்கள் விமர்சனத்தை விமர்சிக்கிறேன்.இப்போதைக்கு வரும் புத்தாண்டு உங்களின் வித்தியாசமான பதிவுகளினால் இன்னும் மென்மேலும் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள்.

அன்புடன் மலிக்கா December 30, 2009 at 10:39 PM  

மிக அசத்தலான ஒரு விமர்சனம்
சூப்பர்.

தாங்களின் எழுத்துபணி தொடர வாழ்த்துக்கள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்...

http://niroodai.blogspot.com/

ஹாலிவுட் பாலா January 3, 2010 at 7:25 AM  

”'த வால்யூம்’ என்ற டெக்னாலஜி“, “600 மில்லியன் பட்ஜெட்” போல சில தகவல் பிழைகள் இருந்தாலும்... அழகா தொகுத்திருக்கீங்க. :) :)

சரியான தகவல் வேண்டும்னா......

‘வால்யூம்’ = மோஷன் கேப்சர் ஸ்டுடியோ.

‘பட்ஜட்’ = $237 மில்லியன் ப்ரொடக்‌ஷன் + $150 மில்லியன் மார்க்கெட்டிங் = $487 மில்லியன்.
===

புத்தாண்டு வாழ்த்துகள்! :) :)

தரம்

டைட்டானிக் சாதனையை பின்னுக்குத் தள்ளும் அவதார் திரைப்படம் !!!


அவதார் ஹாலிவுட்டில் மட்டும் அல்லாது உலகத்தின் அனைத்து ஒட்டுமொத்த திரை உலகத்தையும் மீண்டும் தான் பக்கம் திருப்பி இருக்கிறது ., என்பது அனைவரும் அறிந்த உண்மை .


கடந்த 18ம் தேதி வெளியாகி உலகத்தின் அனைத்து திரை அரங்குகளிலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் பிரமிப்பில் ஆழ்த்திக்கொண்டு இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான் என்றாலும் .

இந்த அவதார் முப்பரிமான திரைப்படம் வசூழிலும் இதுவரை உலகத்தின் எந்த திரைப்படங்களும் செய்யாத ஒரு புதிய சாதனையை நிகழ்த்தி மீண்டும் ரசிகர்களுக்கு ஒரு புதிய பிரமிப்பை கொடுத்துக்கொண்டு இருப்பதாக ஹாலிவுட் வட்டார செய்திகள் கூறுகின்றன .




எத்தனையோ ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னும் உலக மக்கள் அனைவரின் இதயங்களில் ஒரு அழியா இடம் பிடித்த ஒரே படம் டைட்டானிக் என்பது நாம் அனைவரும் அறிந்ததே . அந்த படத்தை உருவாக்கி உலகத்தின் அத்தனை உயரிய விருதுகளையும் , வரலாற்று சுவடுகளில் இன்னும் வசூழில் முதல் இடத்தை பிடித்துக்கொண்டு இருக்கும் ஒரே திரைப்படம் டைட்டானிக் என்ற பெருமைக்கு சொந்தக்காரருமான ஜேம்ஸ் கேமரூன் என்பது தான் இந்த அவதார் படத்தின் பரபரப்புகளுக்கு முக்கியக் காரணம். இருக்காதா ? டைட்டானிக் என்ற கப்பலை கவிழ்த்தே திரைப்படத்தை உலகெங்கும் ஓடவிட்டவராச்சே.

இவருடைய புதிய டெக்னாலஜியைப் பற்றிக் கேள்விப்பட்டு வியந்து, நேரில் போய் அசந்த இயக்குனர்களின் பட்டியலில் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கும் ஒருவர். ஜூராசிக் பார்க்கில் டைனோசர்களை அலற விட்டவரையே அலற வைத்து விட்டதாம் ஜேம்ஸின் டெக்னிக்ஸ். மற்ற படங்களில் உள்ளது போல தனியே நடிகர்களை நடிக்க வைத்து பின்னர் கிராபிக்ஸ் காட்சியில் இணைக்காமல், கிராபிக்ஸ் காட்சியை கம்ப்யூட்டரில் இணையாக ஓடவிட்டு அதற்குத் தக்கபடி நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார். இந்த விர்ச்சுவல் கேமரா டெக்னிக் ஒரு முப்பரிமாண மாய உலகை கன கட்சிதமாய் படம் பிடித்திருக்கிறதாம்.



நடிகர்களின் முக அசைவுகளை “த வால்யம்” எனும் கருவி மூலம் துல்லியமாகப் படம் பிடித்து, அதை கம்யூட்டர் இமேஜ்களுக்கு இறக்குமதி செய்திருக்கிறார். இதன் மூலம் டிஜிடல் உருவங்கள் அச்சு அசலாக மனித அசைவுகளைப் பிரதிபலிக்கும் !



 அப்படி எடுக்கப்பட்ட அவதார் படத்தில் எது நிஜம் எது கிராபிக்ஸ் என தெரியாமல் ரசிகர்கள் குழம்பப் போவது சர்வ நிச்சயம். உண்மையில் வெறும் 35 சதவீதம் காட்சிகள் தான் இதில் உண்மையானவை. மிச்சம் 65 சதவீதமும் கம்ப்யூட்டர் காட்டும் மாயாஜாலம் தான் என்கிறார் ஜேம்ஸ்.


டைட்டானிக் படத்துக்கு இசையமைத்த ஜேம்ஸ் ஹார்னரையே செண்டிமெண்டாக இந்தப் படத்துக்கும் இசையமைக்க வைத்திருக்கிறார். ஒரு புதிய உலகம். ஒரு புதிய இசை. மிக மிகப் புதுமையாக வந்திருக்கிறது என பூரிக்கிறது யூனிட். பிரமிப்பூட்டும் ஒரு கிராபிக்ஸ் கலக்கலில் இதமான காதல் இழையோடினால் அது நிச்சயம் வெற்றி பெறும். அந்த பார்முலா தான் டைட்டானிக்கிற்கு மிரட்டல் வெற்றியைக் கொடுத்தது. அதே பார்முலா தான் அவதாரையும் சூப்பர் டுப்பர் ஹிட்டாக்கும் என்கிறார் ஜேம்ஸ் ஹார்னர்.

டைட்டானிக் திரைப்படம் உலகெங்கும் சுமார் 1.8 பில்லியன் டாலர்கள் சம்பாதித்துக் கொடுத்தது.


இந்தப் படம் அதை விட அதிக அளவில் சம்பாதிக்கும் என்கின்றனர் தயாரிப்பாளர்கள். காரணம் இந்தப் படத்தின் 3D டெக்னாலஜி ரசிகர்களைத் தியேட்டருக்கு கட்டாயப்படுத்தி வரவைக்குமாம். இந்தப் படத்தில் ஹீரோவான தன் மூலம் ஜென்ம சாபல்யமே பெற்றுவிட்டது போல் புல்லரிக்கிறார் 33 வயதான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சேம் வொர்த்திங்டன்.


அவதார் திரைப்படத்தின் பெயரிலும் அவதாரின் நீல நிறத்திலும் இந்தியப் பாதிப்பு தெளிவாகவே தெரிகிறது. அவதாரின் வர்ணம் சிவபெருமானின் நீல நிறத்திலிருந்து ஜேம்ஸ் எடுத்துக் கொண்டது என்கின்றனர் விமர்சகர்கள்.


இந்த படத்தை பற்றி அவர் கூறுகையில் . நான் அவதார் படத்தை பற்றி அதிகமாக சொல்லப்போவது இல்லை .



சின்ன வயதிலிருந்தே நான் படிக்கும் எல்லா அறிவியல் புனைக் கதைகளும் என்னை ஏதோ ஒரு வகையில் பாதிக்கும். அப்படிப் படித்த எல்லா கதைகளையும் கலந்து கட்டி நான் உருவாக்கிய ஸ்பெஷல் கதை தான் அவதார், என்கிறார் ஜேம்ஸ் கேமரூன். இந்தக் கதையை அவர் எழுதியது 1994ல். டைட்டானிக்கை சுடச் சுடக் கவிழ்த்த கையோடு 1997லேயே அவதாரை கையில் எடுத்தார். 100 மில்லியன் பட்ஜெட்டில் படத்தைத் தயாராக்க வேண்டும் என்பது அவருடைய திட்டம். முழுக்க முழுக்க கம்ப்யூட்டரில் நடிகர்களை வடிவமைத்து சினிமா எடுக்க வேண்டும், டெக்னாலஜியைக் கொண்டு மிரட்ட வேண்டும் என பல திட்டங்கள் வைத்திருந்தார். ஆனால் என்ன அவர் நினைப்பதைச் செய்ய அப்போது டெக்னாலஜி ஒத்துழைக்கவில்லையாம்.


அவதார் என்னுடைய கனவுப் படம் என்கிறார் சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கும் 55 வயதான ஜேம்ஸ் கேமரூன்.



இந்தப் படம் ஹிட்டானால் நிச்சயம் இதன் இதன் இரண்டாம் மூன்றாம் பாகங்களை எடுப்பேன் என புன்னகைக்கிறார். ஏற்கனவே டெர்மினேட்டர் படத்தை எடுத்து அதை ஹிட்டாக்கி, இரண்டாம் பாகம் எடுத்து சூப்பர் ஹிட்டாக்கிய அனுபவம் அவருக்கு உண்டு . இந்த உலகத்தை மீண்டும் பிரமிப்பில் ஆழ்த்துவதற்காக பனிரெண்டு ஆண்டுகள் காத்திருந்து நான் உருவாக்கி உள்ள படம்தான் அவதார் . என்று அவர் இப்படத்தைப் பற்றி கூறிய ஒரு சில வார்த்தைகலே இந்த படத்தை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவலை அதிகமாக தூண்டி உள்ளது .

டெக்னாலஜியில் ஹாலிவுட்டையே இன்னொரு தளத்துக்கு இந்தப் படம் எடுத்துச் செல்லும் என்கிறார்கள். 20யத் சென்சுரி ஃபாக்ஸ் வெளியிடப் போகும் இந்தப் படத்தைத் தயாரித்திருப்பது லைட்ஸ் ஸ்ட்ரோம் எண்டர்டெயின்மெண்ட். செலவைப் பற்றிக் கவலைப்படாமல் சுமார் 600 மில்லியன் டாலர்களை இந்தப் படத்தில் வாரி இறைத்திருக்கிறார்கள். டைட்டானிக், ஏலியன்ஸ், டெர்மினேட்டர் 2 போன்ற மிரட்டலான படங்களைத் தயாரித்ததும் இவர்கள் தான்என்பது குறிப்பிடத்தக்கது .



சினிமாவை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதிலேயே இந்தப் படம் புரட்சி செய்யும். வீட்டில் இருப்பவர்களை 3D தியேட்டர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் இழுத்து வரும். இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் ஒரு புதிய உலகத்துக்குள் போகாமல் வெளியே வந்த அனுபவம் இருக்கவே இருக்காது என அடித்துச் சொல்கிறார் ஜேம்ஸ். அவதார் படத்தைப் பார்த்த வெகு சிலரும் இன்னும் வியப்பிலிருந்து வெளியே வரவில்லையாம்.


உலகத்தின் ஒட்டு மொத்த ரசிகர்களின் தூக்கத்தையும் கலவாடிச் சென்ற இந்தப் படத்தின் கதை தான் என்ன ?


22ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பூமியிலுள்ள எரிபொருள் உட்பட கணிய வளங்கள் யாவும் தீர்ந்து விடுவதன் காரணமாக விண்வெளியில் இருக்கும் பண்டோரா எனும் கிரகத்தை முற்றுகையிட வேண்டிய தேவைக்கு மனிதர்கள் தள்ளப்படுகிறார்கள். கதையின் நாயகன் ஜேக் ஒரு கடற்படை வீரர். போரில் காயமடைந்து இடுப்புக்குக் கீழே உடல் செயல் இழந்த நிலையில் இருக்கிறார்.

அவர் மீண்டும் எழும்பி நடந்து பண்டோராவுக்குப் போகும் வாய்ப்பு வருகிறது. பண்டோரா ஒரு தனி கிரகம். அசத்தலான அந்தக் கிரகத்தில் பிரமிப்பையும், பயத்தையும் ஊட்டும் பல விதமான ஜீவராசிகள் வாழ்கின்றன. அங்கே நவி எனும் மனிதர்களும் வசிக்கிறார்கள். 10 அடி உயரம், நீளமான வால், நீல நிற தோல், பெரிய காது, சப்பை மூக்கு என வியக்க வைக்கும் உருவம் அவர்களுக்கு. இவர்கள் முழு வளர்ச்சியடையாதவர்கள் என மனிதர்கள் நினைக்கிறான்.

உண்மையில் நவிகள் மனிதர்களை விட அதி பயங்கர சக்திகளுடன் இருக்கிறார்கள்.


அந்த கிரகத்தில் உள்ள மாபெரும் சிக்கல், அங்கே மனிதனால் சுவாசிக்க முடியாது என்பது. அந்தக் கிரகத்துக்குப் போக வேண்டுமென்றால் நவிகளைப் போல ஆய்வுக் கூடத்தில் மனிதர்களை உருவாக்க வேண்டும். அப்படி மனிதர்களின் டி.என்.ஏயைக் கொண்டு உருவாக்கப்படும் நவி போன்ற நீல மனிதர்கள் தான் அவதார் என்பவர்கள்.

 ஊனமுற்ற ஜேக் தனது அவதார் உருவத்தின் மூலமாக பண்டோராவுக்குள் நுழைகிறார். கிரகத்தின் அழகில் மெய் மறக்கிறார். கூடவே அங்குள்ள ஒரு நவி பெண்ணுடன் காதலிலும் சிக்கிக் கொள்கிறார்.

பண்டோராவில் மனிதர்களின் தலையிடலை நவிகள் விரும்பவில்லை. இப்போது ஜேக் தன் இனமான மனிதர்களுக்கும், தன் காதலியின் இனமான நவிகளுக்கும் இடையே சிக்கிக் கொள்கிறார். அவர் எந்தப் பக்கம் சாய்கிறார், அதன் விளைவுகள் என்னென்ன என்பதுதான் கதை .


இந்தப் படம் இந்தியாவில் மட்டும் 1600 பிரிண்டுகளுடன், தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகிறது.


ரூ.1350 கோடி செலவில் தயாராகியுள்ள இந்த அவதார், இதுவரை உலகில் வெளியான அனைத்து கிராபிக்ஸ் படங்களையும் மறக்க செய்துவிடும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று 'டைம்' பத்திரிகை பாராட்டியுள்ளது.


இந்தப் படத்துக்காக தனி கிரகம் ஒன்றையே உருவாக்கினார்களாம் கேமரூன் மற்றும் குழுவினர். அதில் வித்தியாசமான விலங்குகள், மரங்கள் போன்ற தோற்றங்களை உருவாக்கி அவற்றைத்தான் முப்பரிமாணத்தில் அவதாரமடுக்க வைத்துள்ளனர்.


மெர்குரிப் பூக்கள் போல் ஒளிரும் தாவரங்கள், பூக்கள், மரங்கள், நடைபாதைகள் இரவு நேரங்களில் ஒளிர்வதும், மாறுபட்ட உயிரின வகைகள் எந்திரத் தனமாக இல்லாமல் எதார்த்தமாக அனைத்தும் நிகழ்வதுபோலவே வடிவமைத்து இருக்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் .பெரும்பகுதி லாஸ்ஏஞ்சல்ஸ் மற்றும் நியூசிலாந்து நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

 FUSION DIGITAL 3D CAMERA என்ற புதிய கேமராவை உருவாக்கி அந்த விசேஷ கேமராவால்தான் ''அவதார்'' படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளனர் .உயிரற்ற பொருட்களையும், அசைவுகளுடன் உயிரோட்டமாகக் காட்டும் புதிய தொழில்நுட்பத்தின் துணையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டெக்னிஷியன்கள் கூறுகையில் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் பிரமிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக படத்தின் மொத்தக் குழுக்களும் இரண்டு மாதங்கள்  அடர்ந்த கட்டுப்பகுதியில் முகாம் அமைத்து தங்கி ,


அங்கு தினம்தோரும் நடைபெறும் இயற்கை மாற்றம் , அதனால் ஏற்படும் பதிப்புகள் என்று ஒவ்வொன்றையும் உணர்வுப்பூர்வமாக ஆராய்ந்த பிறகே இந்த படத்தை முப்பரிமான முறையில் அமைக்கத் தொடங்கியதாக கூறுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களே .



தமிழில் நேரடியாக வெளியாகும் முதல் ஹாலிவுட் முப்பரிமாண படம் என்ற பெருமையைப் பெறுகிறது அவதார். என்பது குறிப்பிடத்தக்கது .



அமெரிக்காவில் 17-ம் தேதி நள்ளிரவு நடந்த பிரிமியர் காட்சி மூலம் மட்டுமே 6.5மில்லியன் டாலர் வசூலித்தது அவதார். அடுத்த நாள் 18-ம் தேதி மட்டும் வட அமெரிக்கா-கனடாவில் 42 மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனைப் படைத்தது.


சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையும் சேர்த்து மொத்தம் 96 மில்லியன் டாலர்கள் அமெரிக்காவில் மட்டுமே வசூலாகிவிட்டது. என்றும் ஹாலிவுட் இணையதளம் தெரிவித்துள்ளது.



உலகின் பிற பகுதிகளில் கிடைத்த வசூலையும் சேர்த்து, முதல்வார இறுதியில், மூன்றே நாளில் அவதார் 463 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது முதல் மாத முடிவில் இந்தத் தொகை 2058 மில்லியன் டாலர்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப் பாடுவதாக ஹாலிவுட் இணையதளம் தெரிவித்துள்ளது . இன்னும் ரிலீசாக நாடுகளில் கிடைக்கும் வருமானம் இதில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




வெளியான முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் அவதார் வசூலித்திருப்பது 463 மில்லியன் டாலர்கள். இதுவரை எந்த ஹாலிவுட் படமும் செய்திராத வரலாற்று சாதனை . அவதார் படம் வசூழில் இனி வரும் நாட்களில் டைட்டானிக் படத்தின் வசூல் சாதனையை பின்னுக்குத் தள்ளும் என்று ஹாலிவுட் வட்டாரங்கள் தெருவிக்கின்றன .



நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னோட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னோட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .


அப்படியே ஓட்டும் போட்டுவிட்டு போங்க


18 comments:

சி. கருணாகரசு said...

மிக அசத்தலான ஒரு விமர்சனமுங்க .... உங்க விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டது. .... இடையே ஒரு படம் ஈழப்போரினால் பாதிக்கப்பட்ட படம் போல் உள்ளது அது என்ன?
தொடர்ந்து எழுதுங்கோ. நன்றி.

shanthi said...

சங்கர் உங்களின் ஒவ்வொரு பதிவும் ஒரு பிரமிப்பை ஏற்பத்துகிறது .
அதிலும் இந்த பதிவு மிகவும் வித்தியாசமாக உள்ளது அருமை .

sajuna said...

hi,
avatar padathai patri kelvi padden.
but inthe alavuku intrest varale.
nijema athule yenna irukunu paarkanumnu aavelaa iruku.
shankar realy gud job..
u r great. keep it up...
n engge support always with u..
take care.. keep in touch...

Anonymous said...

நடிகர்களின் முக அசைவுகளை “த வால்யம்"வழக்கம்போல சங்கர் இந்த அவதார் படத்தையும் நல்ல விமர்சனம் கொடுத்திருக்கிறார்...படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் தூண்டுகிறார். நடிகர்களின் முக அசைவுகளை “த வால்யம்" போன்ற புதிய சொற்க்கலையும் நம்மளையும் அறிய செய்கிறார்...விஜய்.

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் ...... said...

நண்பர்கள் ,

சி. கருணாகரசு !
shanthi !
sajuna !

அனைவரும் எனது தளத்திற்கு வருகை தந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி ! நன்றி ! நன்றி !

உங்களின் கருத்துக்கள் என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது . இது போன்ற சிறந்த கருத்துக்களை மறக்காமல் எனது ஒவ்வொரு பதிவுகளுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன் .

நீங்கள் எழுதும் பின்னொட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .

குறை இருந்தால் என்னிடம் !

நிறை இருந்தால் நண்பர்களிடம் !


என்றும் உங்கள் அன்பிற்கினிய
சங்கர்

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் ...... said...

நண்பர்,
விஜய் அவர்களின் வருகைக்கு மிக்க நன்றி.......

உங்களின் ஒவ்வொரு பின்னோட்டமும் இன்னும் பல சிறந்த படைப்புகளை கொடுக்க எனக்கு ஒரு புதிய
சிந்தனைக்கு வழிவகுத்து செல்கிறது . நன்றிகள் நண்பரே .
தொடர்ந்து இதுபோன்ற கருத்துகளை பதிவுசெய்யுங்கள் .,.

குறை இருந்தால் என்னிடம் !
நிறை இருந்தால் நண்பர்களிடம் !

என்றும் உங்கள் அன்பிற்கினிய,
சங்கர்

GUNA said...

Wow Really Super post shankar .
ithuvarai theriyatha visayankal .piramippu mikuntha patankal anaithum super .

abdul rahman said...

அன்புள்ள சங்கர் அவர்களுக்கு உங்களுடைய அவதார் படைப்பு ரொம்ப அருமை .நான் படம் பார்த்துவிட்டேன் .கதை சொன்ன விதம் கதையின் களம் புதியது .நான் புதிய வாசகன் .மீண்டும் வருவேன் .தொடரட்டும் உங்கள் படைப்புக்கள் .

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் ...... said...

நண்பர்கள் ,

குணா !
அப்துல் ரகுமான் !!

இருவரும் எனது தளத்திற்கு வருகை தந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி ! நன்றி ! நன்றி !

உங்களின் கருத்துக்கள் என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது . இது போன்ற சிறந்த கருத்துக்களை மறக்காமல் எனது ஒவ்வொரு பதிவுகளுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன் .

ponnakk said...

எப்பொழுதும் நண்பர் சங்கரின் விமர்ஷ்சனம் என்பது வார பத்திரிக்கயில் வரும் விமர்சனம்போன்றதொரு தோற்றத்தையையே கொடுக்கிறது..ஒரு ப்ளாக்கரில் வருவதைப்போன்று இருக்காது...அந்த விமர்சனம் எதோ கிளிப்பிங்க்ஸ் பார்ப்பதைப்போல ஒரு எண்ணத்தை உண்ட்டாக்குவதோடு அல்லாமல் இவரின் விமர்சனத்துக்காகவாது படம் பார்த்தாலென்ன என்று தோன்றுகிறது...எப்படி அப்படி கோர்வையாக விமரிசிக்கிறீர்கள்..

barathi said...

Avatar film ennum nan parkavillai.kelvipatirukken.anal interest ellamal erunthen.ungalin vimarsanathai paditha piragu parkkum avalai thoondiyathu.migavum arumai.padaipugal thodara valthukkal shankar.

பிரசாத் said...

நல்ல விமர்சனம் சங்கர். வசூலிற்குப் வசூழ் என தட்டச்சி இருக்கிறீர்கள். விமர்சனப்படுத்திய விதம் அழகு. பார்க்காதவரை பார்க்கத் தூண்டும். பார்த்தவர்களை மீன்டும் நினைக்கத் தூண்டும் விமர்சனம்.

calis said...

வாழ்த்துக்களோடு உங்களுக்கு என் வந்தனங்கள். நான் கலீஸ்... யாழ்ப்பாணத்திலிருந்து. தங்கள் பதிவு மிக அற்புதம். அழகாய் செதுக்கிய அவதார் போலவே தங்கள் பார்வையும் சாலச்சிறந்தது. வளர்க தங்கள் பதிவுகள். பார்வையிடக் காத்திருக்கும் அன்பு நண்பன்.

கலீஸ்.. யாழ்ப்பாணம்.

kalai said...

சங்கர் அவர்களுக்கு வணக்கம் ,,,,,,

உங்களின் மற்றும் படைப்புகளின் ரசிகை.... பணி துளி சங்கரின் வளை குடிலுக்கு வருவது என்றாள்,,,,,,,
என்னுள் ஒரே ஒரு பனித்துளி தீண்டிவிட்டு போனால் எப்பிடி என் உடம்பு சிலிர்க்குமோ அது போல் உணர்கிறேன் . ஒவ்வொரு நாளும் உங்களின் படைப்பு மிகவும் புதிதாக இருக்கிறது. உங்களின் ஒவ்வொரு புதிய முயற்சிக்கும் என்னுடய தலை குனிந்த பாராட்டுகள். அவதார் திரைப்படத்தின் விமர்சன்ம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்த மாதுரி செய்திகள் எல்லாம் உங்களுக்கு எப்படி கிடைக்கிறது அது மாதுரி சார்லி சாபிலின் வாழ்க்கை வரலாறு , கவிதைகள் எல்லாம் அருமையாக இருக்கிறது . இந்த மாதுரி விமர்சனத்தால் ஒரு நாளைக்கு பாருங்க நடிகர் சங்கமே வந்து உங்களுக்கு எதிரியாக மாறலாம் . ஏனென்றால் உங்களின் விமர்சனம் படித்தவர்கள் யாரும் திரை அரங்குகளில் படம் பார்க்க போக மாட்டார்கள் . உங்களின் வளை குடிலுக்கு வந்தவர்களுக்கு முழு படம் பார்த்த மாதுரி உணர்வு இருக்கும் ....

பி.ஏ.ஷேக் தாவூத் said...

Anbu Shankar,
Piramippaaka irukkinrathu. Ovvoru visayathaiyum patri eppadi ivlo information collect pannureengannu. unga ovvoru pathivilum neraya thakavalkalai sekaritthu pathivil eluthuringa. Athu enakku mikavum pidittha visayam. Irandu naalaikku oru pathivaavathu eluthureenga.Athuvum aacharyam thaan (Kannu vachitteno). thodarnthu eluthunga nanbaa.

param said...

படத்தை பார்த்து விட்டு உங்கள் விமர்சனத்தை விமர்சிக்கிறேன்.இப்போதைக்கு வரும் புத்தாண்டு உங்களின் வித்தியாசமான பதிவுகளினால் இன்னும் மென்மேலும் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள்.

அன்புடன் மலிக்கா said...

மிக அசத்தலான ஒரு விமர்சனம்
சூப்பர்.

தாங்களின் எழுத்துபணி தொடர வாழ்த்துக்கள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்...

http://niroodai.blogspot.com/

ஹாலிவுட் பாலா said...

”'த வால்யூம்’ என்ற டெக்னாலஜி“, “600 மில்லியன் பட்ஜெட்” போல சில தகவல் பிழைகள் இருந்தாலும்... அழகா தொகுத்திருக்கீங்க. :) :)

சரியான தகவல் வேண்டும்னா......

‘வால்யூம்’ = மோஷன் கேப்சர் ஸ்டுடியோ.

‘பட்ஜட்’ = $237 மில்லியன் ப்ரொடக்‌ஷன் + $150 மில்லியன் மார்க்கெட்டிங் = $487 மில்லியன்.
===

புத்தாண்டு வாழ்த்துகள்! :) :)

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP