>

Archives

கத்தியில் ஆன்மீகம் !!!

>> Thursday, December 17, 2009




அஞ்சவேண்டாம்! துன்பங்கள் நிறைந்ததுதான் மனிதப்பிறவி. எனவே எதையும் தாங்கிக் கொண்டு வாழ்வதே சிறந்தது. இறைவனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே துன்பங்களைப் பொறுமையாகச் சகித்துக் கொள்ளுங்கள். இறைவனாக இருந்தாலும் மனித வடிவில் வரும்போது மனம், உடல் தரும் துன்பங்களை ஏற்றே ஆகவேண்டும். அவதார புருஷர்கள், அருளாளர்கள், துறவிகள் எல்லோருமே துன்பங்களை அனுபவிக்கிறார்கள். யாரும் விதிவிலக்கல்ல. (அன்னை சாரதாதேவி).





ஒரு முறை அமெரிக்கா செல்ல தீர்மானித்த விவேகானந்தர் , அன்னை சாரதாதேவியை வணங்கி ஆசி கேட்டார் .


" அறையில் இருக்கும் கத்தியை எடுத்து தா " என்றார் அன்னை .

" என்ன இது ?' என்று யோசித்தபடியே , விவேகானந்தரும் கத்தியை எடுத்துக் கொடுத்தார் .

கத்தியை வாங்கிய அன்னை , " உனக்கு ஆன்மிக போதனை செய்ய தகுதி இருக்கிறது . தாராளமாக அமெரிக்கா சென்று வா !" என்று ஆசிர்வதித்தார் .

' அம்மா கத்தி அளித்ததை வைத்து ஆன்மிகதகுதியை எப்படி அறிந்துகொண்டீர்கள் ?' என்று விவேகானந்தர் கேட்டதற்கு அன்னை அளித்த பதில் :

" கத்தியின் கூர்மையான பகுதியை உன் கையில் பிடித்துக்கொண்டு , கைப்பிடி பகுதியை என்னிடம் நீட்டினாய்... . இது அடுத்தவருக்கு காயமேற்படக்கூடாது என்று உனக்குள் நிறைந்திருக்கும் ஆன்மிக உணர்வை வெளிப்படுத்துகிறது !" என்றார் அன்னை .


நம்மைப் பற்றியே முதலில் நினைத்துக் கொள்ளும் சுயநலம் தான் மிகப்பெரிய பாவமாகும். ”நான் தான் முதலில் சாப்பிடவேண்டும், நான் தான் மற்றவர்களைவிட அதிக செல்வம் பெற்றவனாக இருக்க வேண்டும், எல்லாவற்றையும் நானே வைத்திருக்க வேண்டும்” என்றும், மற்றவர்களுக்கு முன்பு நான் தான் சொர்க்கம் போகவேண்டும், மற்றவர்களுக்குக் கிடைப்பதற்கு முன்பு நான் முக்தியை அடைய வேண்டும் என்றும் நினைப்பவன்தான் பாவத்துக்குரிய சுயநலவாதியாவான்.



ஒவ்வொருவனும் கட்டளையிடவே விரும்புகிறான். கீழ்ப்படிவதற்கு ஒருவரும் தயாராக இல்லை. முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக்கொள். பின்னர் கட்டளையிடும் பதவி உனக்குத் தானாக வந்து சேரும். எப்போதும் முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள்.
நமது இரத்தத்தில் ஒரு பயங்கரமான நோயும் சேர்ந்து
ஒடிக்கொண்டிருக்கிறது. அதாவது எதை எடுத்தாலும் எள்ளி நகையாடுவது, சிரத்தையில்லாமல் இருப்பது போன்றவையாகும்.
இந்த நோய்களை ஒழித்துக் கட்டுங்கள். வலிமையுடன் சிரத்தை உடையவர்களாக இருங்கள். மற்றவை அனைத்தும் தாமாக நிச்சயம் வந்து சேரும். (சுவாமி விவேகானந்தர்)

நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னோட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னோட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .


அப்படியே ஓட்டும் போட்டுவிட்டு போங்க



1 comments:

param December 20, 2009 at 3:10 AM  

அருமையான பதிவு சங்கர். ஒவ்வொரு நாளும் என்ன பதிவு இட்டிருக்கிரீகள் என்று பார்த்து விட்டுதான் அடுத்த வேலை எனக்கு.

தரம்

கத்தியில் ஆன்மீகம் !!!




அஞ்சவேண்டாம்! துன்பங்கள் நிறைந்ததுதான் மனிதப்பிறவி. எனவே எதையும் தாங்கிக் கொண்டு வாழ்வதே சிறந்தது. இறைவனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே துன்பங்களைப் பொறுமையாகச் சகித்துக் கொள்ளுங்கள். இறைவனாக இருந்தாலும் மனித வடிவில் வரும்போது மனம், உடல் தரும் துன்பங்களை ஏற்றே ஆகவேண்டும். அவதார புருஷர்கள், அருளாளர்கள், துறவிகள் எல்லோருமே துன்பங்களை அனுபவிக்கிறார்கள். யாரும் விதிவிலக்கல்ல. (அன்னை சாரதாதேவி).





ஒரு முறை அமெரிக்கா செல்ல தீர்மானித்த விவேகானந்தர் , அன்னை சாரதாதேவியை வணங்கி ஆசி கேட்டார் .


" அறையில் இருக்கும் கத்தியை எடுத்து தா " என்றார் அன்னை .

" என்ன இது ?' என்று யோசித்தபடியே , விவேகானந்தரும் கத்தியை எடுத்துக் கொடுத்தார் .

கத்தியை வாங்கிய அன்னை , " உனக்கு ஆன்மிக போதனை செய்ய தகுதி இருக்கிறது . தாராளமாக அமெரிக்கா சென்று வா !" என்று ஆசிர்வதித்தார் .

' அம்மா கத்தி அளித்ததை வைத்து ஆன்மிகதகுதியை எப்படி அறிந்துகொண்டீர்கள் ?' என்று விவேகானந்தர் கேட்டதற்கு அன்னை அளித்த பதில் :

" கத்தியின் கூர்மையான பகுதியை உன் கையில் பிடித்துக்கொண்டு , கைப்பிடி பகுதியை என்னிடம் நீட்டினாய்... . இது அடுத்தவருக்கு காயமேற்படக்கூடாது என்று உனக்குள் நிறைந்திருக்கும் ஆன்மிக உணர்வை வெளிப்படுத்துகிறது !" என்றார் அன்னை .


நம்மைப் பற்றியே முதலில் நினைத்துக் கொள்ளும் சுயநலம் தான் மிகப்பெரிய பாவமாகும். ”நான் தான் முதலில் சாப்பிடவேண்டும், நான் தான் மற்றவர்களைவிட அதிக செல்வம் பெற்றவனாக இருக்க வேண்டும், எல்லாவற்றையும் நானே வைத்திருக்க வேண்டும்” என்றும், மற்றவர்களுக்கு முன்பு நான் தான் சொர்க்கம் போகவேண்டும், மற்றவர்களுக்குக் கிடைப்பதற்கு முன்பு நான் முக்தியை அடைய வேண்டும் என்றும் நினைப்பவன்தான் பாவத்துக்குரிய சுயநலவாதியாவான்.



ஒவ்வொருவனும் கட்டளையிடவே விரும்புகிறான். கீழ்ப்படிவதற்கு ஒருவரும் தயாராக இல்லை. முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக்கொள். பின்னர் கட்டளையிடும் பதவி உனக்குத் தானாக வந்து சேரும். எப்போதும் முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள்.
நமது இரத்தத்தில் ஒரு பயங்கரமான நோயும் சேர்ந்து
ஒடிக்கொண்டிருக்கிறது. அதாவது எதை எடுத்தாலும் எள்ளி நகையாடுவது, சிரத்தையில்லாமல் இருப்பது போன்றவையாகும்.
இந்த நோய்களை ஒழித்துக் கட்டுங்கள். வலிமையுடன் சிரத்தை உடையவர்களாக இருங்கள். மற்றவை அனைத்தும் தாமாக நிச்சயம் வந்து சேரும். (சுவாமி விவேகானந்தர்)

நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னோட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னோட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .


அப்படியே ஓட்டும் போட்டுவிட்டு போங்க

1 comments:

param said...

அருமையான பதிவு சங்கர். ஒவ்வொரு நாளும் என்ன பதிவு இட்டிருக்கிரீகள் என்று பார்த்து விட்டுதான் அடுத்த வேலை எனக்கு.

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP