>

Archives

பெண்களின் 14 ஆண்டு கால 33 சதவீத இடஒதுக்கீடு கனவு நனவாகியுள்ளது !!!

>> Tuesday, March 9, 2010

பெண்களின்  14 ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது.லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா நேற்று ராஜ்யசபாவில்


 அமோக ஆதரவுடன் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 186 எம்.பி.,க்களும், எதிர்ப்பாக ஒரே ஒரு எம்.பி.,யும் ஓட்டளித்தனர். மூன்றில் இரண்டு பங்கிற்கு மேலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். மசோதா நிறைவேறியதன் மூலம், 14 ஆண்டு கால கனவு >>>>

Read more...

மறக்காத மகளிர் தினமும் மறுக்கப்படும் மகளிர் உரிமைகளும் !!!

>> Sunday, March 7, 2010

அனைவரும் அறிந்தது என்றாலும் இதை மீண்டும் மீண்டும் ஞாபகப் படுத்துவது என் கடமையாக நினைக்கிறேன் . ஒவ்வொரு ஆண்டும் மறக்காமல் மகளிர் தினம் மட்டுமே கொண்டாடப்படுகிறது .ஆனால் மகளிர் உரிமைகள் மட்டும் மறக்காமல் மறுக்கப்படுகின்றன .
 உலக அரங்கில் பெண்கள் செய்யும் ஒவ்வொரு சாதனைகளையும் அதனால் அடையும் நன்மைகளையும் மட்டும் எண்ணத்தில் கொண்டு தலை நிமிர்ந்து நடைபோட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நாடும் அதே பெண்கள் தங்களின் உரிமைக்காக போராடும்பொழுது மட்டும் தலை குனிந்துக்கொள்வது எதற்கென்றுதான் தெரியவில்லை .
 உலக மகளிர் தினம் தோற்றம் , இன்று உலகில் எல்லா அட்டூழியங்களையும், அநாகரிக செயலில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் என்ற நகரத்தில் 1909ஆம் ஆண்டுமுதல் பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஏனென்றால் ஓர் தொழிற்சாலையில் வேலைபார்த்த பெண்கள் தங்களுடைய உரிமைகளை கேட்டு போராடிய போது அன்றைய அமெரிக்காஅரசால் கடுமையாக நடத்தப்பட்டார்கள். அதை நினைவுறுத்தும் முகமாக ஜ.நா. சபையால்1975ஆம் ஆண்டு ''மார்ச் 8"" உலகமகளிர் தினம் என்று அறிவிக்கப்பட்டு இன்றும்தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கிட்டத்தட்ட 50 கோடி பெண்கள் வாழும் நாடு இது. கல்வியிலும், திறமையிலும் ஆணுக்கு இங்கே சளைத்தவரில்லை பெண்கள். 2003 கணக்குப்படி அந்த 50 கோடி பெண்களில் பாதிப்பேர் படித்தவர்கள். 48.3% பெண்கள் கல்வியறிவு பெற்றவர்கள் என்பதும், அதில் 28% பேர் வேலையில் இருப்பவர்கள் என்பதும் பெண்ணின் பெருமைக்கு சான்று.

ஒட்டுமொத்தமாக மட்டுமல்ல, ஆறு கோடியை தாண்டிய தமிழகத்தின் ஜனத்தொகையிலும் பெண்களுக்கு பாதியிடம். அதிலே படித்தவர்கள் மட்டும் ஒரு கோடியே 77 லட்சம் பேர் என்பதும் பெண்களின் வளர்ச்சிக்கு ஆதாரம். இப்படி வளர்ச்சிப் பட்டியலில் போதிய இடம் பிடித்துவிட்ட பெண்களுக்கு இன்னுமா பிரச்னை?

இந்த கேள்விக்கு இந்த புள்ளிவிவரங்களே பொருத்தமான பதில்.

* ஒவ்வொரு 3 நிமிடங்களில் பெண்ணுக்கு எதிரான ஒரு குற்றம் பதிவாகிறது.

* ஒவ்வொரு 9 நிமிடங்களில் ஒரு பெண், கணவனாலோ அல்லது அவனது உறவினராலோ கொடுமைப்படுத்தப்படுகிறாள்.

* ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியில் ஒரு பெண் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறாள்.

* ஒவ்வொரு 53 நிமிடங்களில் பெண்ணுக்கு எதிரான ஒரு பாலியல் கொடுமை அரங்கேறுகிறது.

* ஒவ்வொரு 29 நிமிடங்களில் ஒரு கற்பழிப்பு சம்பவம் நடக்கிறது.

* ஒவ்வொரு 77 நிமிடங்களில் ஒரு வரதட்சணை மரணம் நிகழ்கிறது.

எனவே ஒரு பக்கம் வளர்ச்சி; மறுபக்கம் அதிர்ச்சி என்ற நிலையிலேதான் இன்றைய இந்தியப் பெண்களின் வாழ்க்கைப் பயணமும் தொடர்கிறது. கருவிலே தொடங்கிய கொடுமை, கல்யாணம் ஆன பின்னும் விடாமல் விரட்டுவதால் தான் பெண்களை பாதுகாக்க குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், 2005ல் கொண்டு வர வேண்டிய கட்டாயம் வந்தது. இந்த சட்டம் வந்த பிறகும் குற்றம் குறையவில்லை. 2006 நவம்பர் முதல் 2007 ஜூலை வரையிலான காலகட்டத்தில் மட்டும் 7,913 வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் 2006 அக்டோபரில் தான் இந்த சட்டத்தின் கீழ் முதல் வழக்கே வருகிறது. 2008 மே நிலவரப்படி 712 புகார்கள். அதில் தீர்வு காணப்பட்டவை 179 என்கிறது தமிழக புள்ளிவிவரம்.
 கருவிலே ஆணா, பெண்ணா என அறியும் முறை, குழந்தை திருமணம், கட்டாயக் கல்யாணம், கவுரவக் கொலை, வரதட்ணை பலி, குடும்ப வன்முறை மற்றும் பாலியல் பலாத்காரம்... பெண்களுக்கு எதிரான குற்றங்களை இப்படி வகைப்படுத்துகிறது பிரக்ஞா என்ற ஒரு அமைப்பு.
பெண் சிசுக் கொலை, கருவிலே கண்டுபிடித்து அழிப்பு என பெண் குழந்தைகள் ஒழிப்பிற்கு பல வழிமுறைகள். கள்ளிப்பால் கொலைகளை ஒழித்தால், அடுத்ததாக கருவில் இனம் கண்டுபிடிக்கும் கருவிகள் வந்தன. விஞ்ஞான வளர்ச்சியின் கண்டுபிடிப்பு கூட பெண்ணை கொல்லும் கருவிகளாகத்தான் உருமாறின. இந்த வகையில் மட்டும் இந்தியாவில் ஒரு கோடி பெண்களின் பிறப்பு தடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் அதிர்ச்சி தராமல் இருக்குமா?

சற்று பினோக்கி செல்வோம் ,

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கானகங்களில் சுற்றிக்கொண்டிருந்த குரங்கினங்களில் ஒன்று மனித இனமாகப் பரிணமித்த போது தோன்றிய முதல் மனித உயிர் ஆணல்ல, அது ஒரு பெண். ஆம்! அவள் தான் நமது மூதாய் என்று அறிவியல் உறுதியாகச் சொல்கிறது. நாகரிகம் தோன்றாத அந்தக் காலத்தில் வேட்டையாடிக் கொண்டு குகைகளில் மனித இனம் வாழ ஆரம்பித்தது. இந்த ஆதிப் பொதுவுடமைச் சமுதாயத்தில் பெண்ணே தலைமைப் பாத்திரம் வகித்தாள்; பெண்ணே வேட்டைக்குத் தலைமைத் தாங்கினாள்; பெண்ணே சமுதாயத்தை இயக்கினாள். படைத்து காத்து ரட்சிப்பது கடவுளல்ல, பெண் தான் என்பது அந்த காட்டுமிராண்டி மனிதர்களுக்கு தெரிந்திருந்தது.

காலங்கள் சென்றன, ஆரம்ப கால நாகரிகங்கள் உருவாகின. மனித அறிவின் வளர்ச்சியால் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வாழ் முறைகள் பெரும் மாற்றத்துக்குள்ளாயின. உற்பத்தியில் ஈடுபட்டு ஓரிடத்தில் நிலையாக வாழ ஆரம்பித்த மனித இனத்தில் தனியுடமைத் தோன்றிற்று, தற்கால குடும்ப முறையும் உருப்பெற்றது. இப்போது தலைமைப் பாத்திரம் பெண்களிடமிருந்து ஆணுக்கு மாறியிருந்தது. எனினும் பெண்கள் சமுதாயத்தில் அனைத்து நிலையிலும் பங்கு பெற்றனர். உலகின் முதல் விஞ்ஞானியானாலும், முதல் விவசாயி ஆனாலும் அல்லது உலகின் முதல் கவிஞர் ஆனாலும் சரி- அவர்கள் பெண்களாகவே இருந்தனர்.

அரசுகளும், மத நிறுவனங்களும் வளர்ச்சியடைந்த பின்னர் நிலை மாறியது. எங்கும் ஆண்களின் அதிகாரம் நிலைநாட்டப்பட்டது. பெண்ணினம் அடிமைப்படுத்தப்பட்டது, அனைத்து சட்டங்களும் கருத்தியல்களும் ஆண்களின் அதிகாரத்தை நிலை நிறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டன. அரசியல், சமுதாய, பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து பெண்கள் விலக்கி வைக்கப் பட்டனர். பெண்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு வீட்டுக்குள் முடக்கப்பட்டனர். இத்தடைகளை மீறி சிலர் உயர் நிலையை அடைந்தாலும் அவர்கள் விதிவிலக்குகளே. மனித இனத்தின் சரிபாதியான பெண்கள் இரண்டாந்திர குடிமக்கள் ஆக்கப்பட்டனர். இப்படியாக பல நூற்றாண்டுகள் கடந்தன.

ஐரோப்பிய கண்டத்தில் நிலவிய நிலவுடமை சமூக அமைப்பு அறிவியல் கண்டுபிடிப்புகளாலும் புதிய கடல்வழி கண்டுபிடிப்புகளாலும் மாற்றம் அடைந்தது. புதிய உற்பத்தி முறையுடன் முதலாளித்துவம் தோற்றம் பெற்றது. முதலாளித்துவ உற்பத்தி முறையில் தேவைபட்ட அதிக மனித உழைப்பை ஈடுகட்டவும், உழைப்புச் சுரண்டலின் மூலம் முதலாளிகளின் லாபத்தை அதிகரித்துக்கொள்ளும் பொருட்டும் தொழில்துறை உற்பத்தியில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு புறத்தில் இச்சுரண்டல் பெண்களுக்கு எதிராக இருந்தாலும் அன்றைய இறுகிய சமூக அமைப்பில் ஒரு தளர்ச்சியை/நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஐரோப்பிய மறுமலர்ச்சி சிந்தனைகளால் 15,16,17ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் பெரும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன, மனித உரிமைகள் பற்றிய சிந்தனை எழுச்சிப்பெற்றது.

பெண்களும் தம் தாழ்நிலைக்கு எதிராக, உரிமைக்கு குரல் கொடுக்க ஆரம்பித்தனர். கி.பி.1789ல் சுதந்திரம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற உரிமை முழக்கங்களுடன் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ், வெர்செயில்ஸ் ஆகிய நகரங்களில் பெண்கள் கிளர்ச்சியில் இறங்கினர். இந்தப் போராட்டமானது லூயி மன்னரின் அரசாட்சியையே முடிவுக்குக் கொண்டு வந்தது. அமெரிக்க சுதந்திரப் போரிலும் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருந்தனர். ஆனாலும், பெண்களின் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனினும் இப்போராட்டம் பல நாடுகளில் உள்ள பெண்களுக்கும் நம்பிக்கையையும் உரிமை வேட்கையையும் விதைத்தது.
 மேரி வோல்ஸ்டன் கிராப்ட்(1759-1797) என்ற பெண்ணுரிமைப் போராளி எழுதிய The Vindication Of the Rights of Women என்னும் புத்தகமும் ஜான் ஸ்டூவர்ட் மில்(1806-1873) என்னும் ஆங்கிலேய சிந்தனையாளர் எழுதிய The Subjection of Women என்னும் புத்தகமும் பெண்ணிய சிந்தனையில் புதிய அலையை உருவாக்கின.
 தொடர்ச்சியான பிரச்சாரத்தின் காரணமாக விழிப்புற்ற பெண்களால் இத்தாலி, அமெரிக்கா, பிரஷ்யா, கிரீஸ், ஆஸ்திரியா, டென்மார்க் என பல நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்தன. பிரஷ்யவில் பெண்களின் முழக்கத்தை கண்டு அஞ்சிய அரசன் 1848, மார்ச் 19ஆம் தேதியன்று பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் அரசவை ஆலோசனைக் குழுக்களில் பெண்களுக்கு பிதிநிதித்துவம் தரவும் ஒப்புக்கொண்டான். ஆனால் அதுவும் நிறைவேற்றப்படவில்லை.

1840ஆம் ஆண்டு லண்டன் மாநகரில் அகில உலக அடிமை ஒழிப்பு மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் உறுப்பினர்களாக பெண்களை சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் வெகுண்டெழுந்த பெண்ணுரிமை போராளிகள் 1848ல் நியூயார்க்கில் உள்ள செனீகா ஃபால்ஸ் என்னும் ஊரில் நடந்த மாநாட்டில் பெண்களின் உரிமை பிரகடனத்தை (Declaration of the Rights of Women) வெளியிட்டனர். இது பெண்ணுரிமை போராட்டங்களில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

அதில் ‘ஆண்களும் பெண்களும் இயற்கையில் சமமானவர்களாகவே படைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் மாற்றமுடியாத உரிமைகளைக் கடவுளின் மூலம் பெற்றுள்ளனர். இவ்வுரிமைகளுள், வாழ்விற்கும், சுதந்திரத்திற்கும், மகிழ்ச்சியுடன் இருப்பதற்கும் தேவையான உரிமைகளைப் பெறவே அரசாங்கம் என்னும் அமைப்பு ஆளப்படுபவர்களின் அனுமதியுடன் நிறுவப்பட்டுள்ளது..... இதுவரை அரசாங்கம் செய்த கொடுமைகளைப் பெண்கள் பொறுமையோடு அனுபவித்திருக்கின்றனர். இப்பொழுது அவர்கள் தங்களுக்குச் சம உரிமை கோரிப் போராட வேண்டியது அவசியமாகிறது.....பெண்ணின் வாழ்வெல்லைகள் விரிவாக்கப்பட வேண்டும். பெண் ஓட்டுரிமை பெறவேண்டும். மனித சம உரிமை எல்லா இன மக்களுக்கும் ஒரே விதமான திறமைகளும் பொறுப்புகளும் உள்ளன என்பதை அடிப்படையாகக் கொண்டது. பெண் ஆணுக்கு சமமான உரிமைகளையும் கடமைகளையும் பெறவேண்டும். இதற்கு எதிரானவை எல்லாம் மனிதனுக்கு எதிரானவை என்றும் தீர்மானிக்கிறோம். இந்த வெற்றியை ஆணும் பெண்ணும் சேர்ந்து உழைத்துப் பெற்று இருவரும் எல்லா நிலைகளிலும் பங்கு பெற வேண்டுமெனத் தீர்மானிக்கின்றோம்.’ என பிரகடனம் செய்தனர்.

1857ல் பருத்தி நூற்பாலைகளிலும், ஆடை உற்பத்தியிலும் ஈடுபடுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள், மோசமான பணிச் சூழல், மிகக்குறைந்த கூலி, தொழில் உரிமையாளர்களின் ஒடுக்குமுறை ஆகியவற்றை எதிர்த்து அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டமும் அரசாங்கத்தால் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டது.

அமெரிக்க நாட்டில் 1908ல் குறைந்த வேலை நேரம், நியாயமான கூலி, வாக்குரிமை ஆகியவற்றைக் கேட்டு மீண்டும் பெண்களின் போராட்டம் வெடித்தது. இது உலகமெங்கும் பெண்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. டென்மார்க்கின் கோபன் ஹேகன் நகரில் 1910ல் ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியின் பெண்கள் பிரிவு தலைவரான கிளார ஜெட்கின் தலைமையில் கூடிய பெண்கள் மாநாடு சர்வதேச மகளிர் அமைப்பைத் தோற்றுவித்தது. பெண்களுக்கு வாழ்வின் எல்லா தளத்திலும் சம உரிமைகள், பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை உலகத்தின் செவியில் ஓங்கி ஒலித்திடவும் தமது உரிமைகள் குறித்து பெண்களுக்கு நாடு, தேச எல்லைகள் கடந்து விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தவும் தமது ஒற்றுமையை காட்டும் விதமாக சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் போராளிகள் மனதில் உதித்தது.

அதன் விளைவாக 1911, மார்ச் 19ஆம் தேதியன்று ஜெர்மனி, டென்மார்க், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. ரஷியாவில் 1913ல் முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் கூடிய சர்வதேச மகளிர் பிரதிநிதிகள், ஆண்டு தோறும் மார்ச் 8ஆம் தேதியன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று தீர்மானித்தனர்.
 1917ல் மகளிர் தினத்தன்று ரஷிய ஜார் மன்னனுக்கு எதிராக உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில் தமது வாக்குரிமைக்காகவும், உணவுக்காகவும் போராட்டத்தில் இறங்கினர் 90,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும். இதில் வெற்றியும் பெற்றனர். இந்தப் போராட்டமே ரஷிய புரட்சிக்கு ஆரம்பமாகும். அடுத்த எட்டு மாதங்களில் ரஷிய புரட்சி வெற்றி பெற்றது. புதிதாக மலர்ந்த சோசலிஷ சோவியத் யூனியனில் பெண்களுக்கு முழுமையான வாக்குரிமை அளிக்கப்பட்டது. அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கேற்பு உறுதி செய்யப்பட்டது.

பல அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் படிப் படியாக வாக்குரிமைகள் பெண்களுக்கு வழங்கப்பட்டன.

உலகமெங்கும் தொடர்ந்து நடந்தப் போராட்டங்களின் பயனால் பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தமது உரிமைகளை மீட்க ஆரம்பித்துள்ளனர்.

மேற்கத்திய கல்வியின் விளைவாக இந்திய சமூகத்திலும் பெரும் விழிப்புணர்வு எற்பட்டது. ராஜாராம் மோகன் ராய், கேசவ சந்திர சென், மகாதேவ கோவிந்த ரானடே, ஈஸ்வர சந்திர வித்யாசாகர், பண்டித ரமாபாய், மகாத்மா பூலே முத்துலட்சுமி ரெட்டி போன்ற பல சிந்தனையாளர்களும் இந்திய பெண்களின் விடுதலைக்கு அளப்பரிய பங்காற்றியுள்ளனர். காந்தியடிகளும் பெண்களின் பங்கேற்பை பெரிதும் வலியுறுத்தியுள்ளார். அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளைப் பெற சட்டரீதியான அங்கீகாரத்துக்காகப் போராடினார் அண்ணல் அம்பேத்கர். முழுமையான பெண் விடுதலைக்கு இன்றும் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறன தந்தை பெரியாரின் சிந்தனைகளும் போராட்டங்களும்.

பெண்களின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு சம உரிமையை அங்கீகரித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை 1975ஆம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக அறிவித்து விழிப்புணர்வு பணிகளை முடுக்கிவிட்டது. 1960களில் எழுச்சி பெற்ற தீவிர பெண்ணிய சிந்தனைகளும் பெண்களுக்கான உரிமை போராட்டங்களுக்கு உத்வேகமளித்து வருகிறது.

பெண்களின் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. உலக அளவில் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துகளின் அளவு மொத்த மதிப்பில் 2 % க்கும் குறைவு; கருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்களின் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு பத்து லட்சம்; இந்தியாவில் ஒரு லட்சம் குழந்தைகள் பிறந்தால் 450 பெண் குழந்தைகள் கொல்லப்படுகின்றன; தலித் பெண்களில் எழுத்தறிவு பெற்றோர் வெறும் 7 % மட்டுமே; உலகம் முழுவதும் வீட்டிலிருக்கும் அதாவது சும்மா தமது வீட்டு வேலைகளை செய்யும் பெண்களின் பணியின் மதிப்பு அதாவது ஆண்டுக்கு 11 ட்ரில்லியன் டாலர்கள். இந்தப் புள்ளிவிவரங்கள் சொல்லும் செய்தி என்ன? நாம் பெண்கள் முன்னேற்றத்தில் நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது என்பதுதான்.

இன்று பெண்களின் நிலை
 பெண்கள் விஷயத்திலான பாகுபாடு குழந்தைப் பருவத்தில் தொடங்கி விடுகிறது. பள்ளி, உணவு, உடை, மருத்துவம் போன்ற விஷயங்களில் ஆண் குழந்தைகளுக்கு தரும் முக்கியத்துவம் பெண் குழந்தைக்கு இல்லை. வளர்ந்து விட்ட பிறகும், அவளது விருப்பத்திற்கு மதிப்பில்லை. அவளது உணர்வு, உள்ளம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் திருமணம் பேசப்படுகிறது. புகுந்த வீட்டில் பிரச்னை என்கிறபோது, ‘அட்ஜஸ்ட் பண்ணிப் போ’ என்ற அறிவுரை மட்டுமே தாய் வீட்டில் இருந்து கிடைக்கிறது. ‘கணவன் சாப்பாடு போடலியா? அட்ஜஸ்ட் பண்ணு, அடிக்கிறானா? அட்ஜஸ்ட் பண்ணு’... இப்படியே அமுக்கப்படுவதால், ‘எல்லாம் என் தலையெழுத்து’ என்று முடங்கிக் கொள்ளும் முடிவுக்கு வந்து விடுகின்றனர். இதெல்லாம் தலைவிதி அல்ல; அவளை பாதிக்கிற வன்முறை என்பதை என்றைக்கு உணரத் தொடங்குகிறாளோ அன்றைக்கு பெண்ணினத்திற்கு முழு விடியல் பிறக்கும் என்கிறார்.

47% பெண்களுக்கு கட்டாய கல்யாணம்

18 வயதுக்கு முன்பு பெண்களுக்குத் திருமணம் செய்வதை குழந்தைத் திருமணம் என்கிறது யுனிசெஃப் அமைப்பு. இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18, ஆண்களுக்கு 21. இதை மீறி சட்டப்படி சிறுவர்களாக உள்ளவர்களுக்கு, விருப்பத்துக்கு மாறாக கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. குடும்ப கவுரவத்துக்காகவும், குடும்பங்களின் ஒற்றுமைக்காகவும், வியாபார லாபங்களுக்காகவும் கட்டாயத் திருமணங்கள் நடக்கின்றன.

உலக அளவில் தெற்காசியப் பகுதியில்தான் அதிக அளவில் கட்டாயத் திருமணங்கள் நடக்கின்றன. கடந்த ஆண்டில் யுனிசெஃப் கணக்கெடுப்பின்படி, இந்தப் பகுதியில் 20&24 வயதுள்ள பெண்களில் 49 சதவீதம் பேருக்கு அவர்களின் 18 வயதுக்கு முன்பே திருமணம் நடந்துள்ளது. இந்தியாவில் இது 47 சதவீதம், அதுவும் கிராமப் பகுதிகளில் 56 சதவீதம்.

உலக அளவிலான கட்டாயத் திருமணங்களில், 40 சதவீதம் இந்தியாவில்தான் நடக்கின்றன. அதில் 10 சதவீத மணமகன்களுக்கு வயது ரொம்ப கம்மி.

இந்திய அளவில் 2005ல் 122 கட்டாயத் திருமணங்கள். 2006ல் 99, 2007ல் 96 பதிவாகியுள்ளன.

வரதட்சணை பலி உ.பி.யில் அதிகம்

புதிதாக திருமணமான பெண்களின் மரணங்களுக்கு, பெரும்பாலும் வரதட்சணை தான் காரணம். 97ம் ஆண்டில் 6,006 ஆக இருந்த வரதட்சணை சாவுகளின் எண்ணிக்கை, 2007ல் 8,093 ஆனது. கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் கொடுமை குறித்த வழக்குகள் 97ம் ஆண்டில் 36,592. இது 2007ல் 75,930 ஆக அதிகரித்தது.

நாட்டிலேயே அதிக அளவாக, உத்தரப்பிரதேசத்தில் 25.7 சதவீதம் வரதட்சணை மரணங்கள் நடப்பதாகவும், அதையடுத்து பீகாரில் 14.5 சதவீதம் நிகழ்வதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கலப்புத் திருமணம் - கவுரவக் கொலை

தனிப்பட்ட விருப்பத்தின்படி நண்பரையோ காதலரையோ கணவரையோ ஒரு பெண் தேடிக்கொள்ளும்போதும், குடும்பத்தினர் திணிக்கும் மாப்பிள்ளையை ஏற்க மறுக்கும்போதும், பெண்கள் மீது குடும்பத்தினர் தாக்குதலை நடத்துகிறார்கள். அது மரணத்தில் முடியும் எனத் தெரிந்தே நடத்தப்படுகிறது. வெறும் வறட்டு கவுரவத்துக்காக நிகழும் மரணங்கள்.

குடும்ப கவுரவத்தை மீறி, சாதி கடந்து திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் இந்த Ôகவுரவக் கொலை’க்கு இலக்கு ஆகியுள்ளனர். அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கம் நடத்திய ஒரு ஆய்வில், அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் மட்டும் நாட்டின் 10 சதவீத Ôகவுரவ கொலைÕகள் நிகழ்கின்றன என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் 60 சம்பவங்கள் நடந்துள்ளன.

பாலியல் பலாத்காரம் 733% அதிகரிப்பு

பாலியல் பலாத்காரம் அதிகரித்து வரும் குற்றம். பதிவான விவரங்களின்படி 1971ம் ஆண்டிலிருந்து 733 சதவீதம் அதிகரித்துள்ளது. 1997ல் 15,330 வழக்குகள். 2007ல் 20737 ஆக அதிகரித்தது. இதில் மத்திய பிரதேசத்திற்கு முதலிடம்.

இந்தியாவில் பாலியல் பலாத்காரக் குற்றவாளிகளில் 92.5 சதவீதம் பேர், பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தெரிந்த நபர்களாகவே இருக்கின்றனர். கொடுமைக்கு உள்ளாக்கப்படுவோரில் 9.5 சதவீதம் 15 வயதுக்கும் குறைவான சிறுமிகள். பாதிக்கப்பட்ட மற்றவர்களில் 15&18 வயதினர் 15.2 சதவீதம் பேர். இரண்டில் மூன்று பங்கினர் 18க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதினர் என்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

குற்றம் 2003 2004 2005 2006 2007
பாலியல் பலாத்காரம் 15847 18233 18359 19348 20737
கடத்தல் 13296 15578 15750 17414 20416
விபச்சாரத்திற்கு கடத்தல் 5510 5748 5908 4541 3568
வரதட்சணை பலி 6208 7026 6787 7618 8093
சித்ரவதை செய்தல் 50703 58121 58319 63128 75930
பாலியல் தொந்தரவு 32939 34567 34175 36617 38794
பாலியல் வன்முறை 12325 10001 9984 9966 10950
வரதட்சணை கொடுமை 2684 3592 3204 4504 5623
மொத்தம் 139512 152866 152486 166136 184051

தமிழகத்தில்...

குற்றம் 2007 2008 2009
பாலியல் பலாத்காரம் 523 573 596
வரதட்சணை பலி 208 207 194
பாலியல் தொல்லை 1558 1705 1242
பாலியல் வன்முறை 875 974 501
சித்ரவதை செய்தல் 1976 1648 1460
கடத்தல் 1097 1155 1133
வரதட்சணை கொடுமை 368 262 207

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் எண்ணிக்கை விவரம்:

2003 4952
2004 4833
 2005 5064
2006 3789
2007 6605
2008 6524
2009 5333

சாதி, இன, மத, மொழி ஒடுக்கு முறைகளை விடக் கொடியதும் அதிகம் பேரை பாதிப்பதும் இந்த பெண்களின் மீதான ஒடுக்குமுறை தான். மனிதர்கள் என்ற அளவில் சுய மரியாதை, சமூக மதிப்புடன் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு சுதந்திரம் பெற்று ஆண்களுக்கு நிகரான சம உரிமைகளுடன் சமமான வாழ்வு பெறும் போதுதான் மனித சமுதாயம் உயர்வடையும். இதற்கு உத்வேகமளிக்கக் கூடிய நாளாக சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ஆம் நாள் விளங்குகிறது.

“பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது” - தந்தை பெரியார் .

 அனைவருக்கும் என் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் !


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மனம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

Read more...

திடீர் திருப்பம் உண்மை இல்லை நித்தியானந்தர் வீடியோ மூலம் விளக்கம் வெளியீடு !!!

உண்மை இல்லை என மறுக்கிறார் நித்தியானந்தர் ; ஆதரவு கதவும் திறக்கிறதாம்; வீடியோ மூலம் விளக்கம் வெளியீடு


தம் மீது வேண்டும் என்றே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நான் எந்த தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை. தவறான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆணித்தரமான ஆதாரங்களை திரட்டி வருகிறேன் என்றும் இதனை நான் மக்கள் முன் திறந்து வைக்கிறேன் என்றும் செக்ஸ் புகாரில் சிக்கிய நித்தியானந்தர் வீடியோ மூலம் செய்தி அனுப்பியுள்ளார். இவ்வளவு அவதூறு இருந்தும் இவருக்கு உலகம் முழுவதும் இருந்து பெரும் அளவில் ஆதரவு குவிந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நடிகை ரஞ்சிதாவுடன் இவர் இணைந்திருந்த காட்சிகள் டி.வி.,யில் ஒளிபரப்பான விஷயம் நாடு முழுவதும் உள்ள இவர்களது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர் எங்கே இருக்கிறார் என இரு மாநில போலீசார் இவரை >>>>

Read more...

நித்யானந்ததுடன் பிரபல பாலிவுட் நடிகை வீடியோ காட்சி !!!

>> Friday, March 5, 2010


 1 .நித்யானந்ததுடன் பிரபல பாலிவுட் நடிகை வீடியோ காட்சி தற்போது இண்டெர்நெட்டில் வெளியிட இருப்பதாக தகவல்  !!!


2 .ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட்

Read more...

கல்வி சேவைக்கு காலணி துடைக்கும் சமூக சேவகர் !!!

ஏழை மாணவர்களின் கல்வி சேவைக்காக காலணி துடைக்கும் சமூக சேவகரை பேரூராட்சி தலைவர், டி.எஸ்.பி., ஆகியோர் பாராட்டி கவுரவித்தனர். சென்னை பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். பட்டதாரியான இவர், இதே பகுதியில் அன்னை தெரசா மழலை பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். ஏழை மாணவர்களுக்கு சிறந்த கல்வி சேவையை வழங்கவேண்டும் என்ற உயரிய நோக்குடன் இக்கல்வி மையத்தை நடத்தி வருகிறார். >>>>

Read more...

நித்யானந்தாவின் லீலைகள் நடிகைகள் பட்டியல் நீள்கிறது !!!

>> Thursday, March 4, 2010

பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்த சாமியார் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொதிப்படைந்த பக்தர்கள், பல நகரங்களிலும் உள்ள அவரது ஆசிரமங்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பல இடங்களில் நித்யானந்தரின் உருவப் படங்களை செருப்பால் அடித்து கொளுத்தினர்.>>>>

Read more...

பரபரப்பு மீண்டும் விமானம் மோதியது !!!

>> Wednesday, March 3, 2010

வானில் பறந்த 4 கிரண் ரக விமானங்கள் குட்டிகரணம் அடித்து சாகசம் செய்தன. அப்போது, அதில் ஒரு விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து
தலைகீழாக கீழே பாய்ந்தது. சாகச நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.விமானத்தை கட்டுப்படுத்த விமானியும், . >>>>



 




இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ....

Read more...

நடிகை ரஞ்சிதாவுடன் காம லீலைகள் புதிய பூகம்பம் இன்னும் பல புகைப்படங்கள் சிக்கியது !!!

என்ன கொடுமை ஸார் இது ! .இப்பதாய்யா தெரியுது கடவுள் எதற்கு தலைமறைவாக இருக்கார் என்று !


இங்கே சொடக்கவும்

Read more...

பிரபல நடிகையுடன் சுவாமி நித்தியானந்தா செக்ஸ் லீலை புகைப்படங்கள் !!!

என்ன கொடுமை ஸார் இது ! .இப்பதாய்யா தெரியுது கடவுள் எதற்கு தலைமறைவாக இருக்கார் என்று !
இங்கே சொடக்கவும்

Read more...

நான் ரசித்த உண்டியல் பணம் !!!

>> Sunday, February 28, 2010

தன் மகனை அழைத்த தந்தை, "நாம் இருவருமே இனிமேல் தவறு செய்யக் கூடாது. யார் எந்தத் தவறு செய்தாலும் அதற்கு அபராதமாக இந்த உண்டியலில் ஒரு ரூபாய் போட வேண்டும். அப்படிச் சேரும் தொகையைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட வேண்டும்" என்றார்.

மகனும் இதற்கு ஒப்புக் கொண்டான்.


அவரின் திட்டம் அப்படியே நடந்தது. திடீரென்று அவர் உடல்நிலை மோசம் ஆயிற்று. உண்டியலில் இருந்த பணத்தை எல்லாம் பிள்ளையார் கோயிலுக்குத் தந்துவிட்டு மருத்துவ மனைவில் சேர்ந்தார்.

மகனைப் பார்த்து, "நான் இல்லாத போதும் இந்தப் பழக்கத்தை விட்டு விடாதே. ஒரு தவறுக்கு ஒரு ரூபாய் உண்டியலில் போட்டுவிடு" என்றார்.

மருத்துவ மனையில் மூன்று மாதம் தங்கிய அவர் வீடு திரும்பினார். உண்டியலைத் திறந்து பார்த்தார். அதில் ஒரே ஒரு ரூபாய் தான் இருந்தது.

மகிழ்ச்சி அடைந்த அவர் தன் மகனை அழைத்தார்.

"இந்த மூன்று மாதத்தில் ஒரே ஒரு தவறு தான் செய்தாயா?" என்று கேட்டார்.

"இல்லை அப்பா! உண்டியலில் முந்நூறு ரூபாய் பணம் சேர்ந்தது" என்றான் அவன்.

"அந்தப் பணத்தைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட்டாயா?" என்று கேட்டார் அவர்.

"அப்பா! உண்டியலைத் திறந்து அந்தப் பணத்தை நானே எடுத்துக் கொண்டேன். அந்தத் தவறுக்காக நீங்கள் சொன்னபடி ஒரு ரூபாயை உண்டியலில் போட்டு விட்டேன்" என்றான் அந்த கெட்டிக்கார மகன்.


ஏலே மக்கா இப்படியெல்லாம் கோபத்தோட பார்க்கக்கூடாது . இப்ப யார் யாரெல்லாம்  உண்டியல் பணத்தை திருடுனீங்க. யார் யாரெல்லாம்  உண்டியலையே திருடுனீங்க என்று மறுமொழியில்  சொல்லிட்டு போங்கல .  .
 
ஏய் , ஏய் ,ஏய், ஏய் ராஸ்க்கல் என்ன இது சின்னபுள்ளத்தனமாவுல இருக்கு பதிவ படிச்சுட்டு ஓட்டு போடாம போனா எப்படி ஒழுங்கா இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் இல்லைனா அழுதுடுவேன் ஆமா ..........

Read more...

சூரியன் யாருக்கு சொந்தம் !!!

>> Wednesday, February 24, 2010

பக்கம் பக்கமா எழுதினா யாரும் பார்க்காமலே போய்விடுகிறார்கள் .அதனால் இன்னைக்கு குட்டியா ஒரு பதிவு எழுதலாம் என்று தோன்றியது .அதற்குத்தான் இப்படி ஒரு பதிவு . பலருக்கு தெரிந்த சில நிகழ்வுகளும் , செய்திகளும் சிலருக்கு தெரிவதில்லை . இதைவிட சென்று அடைவதில்லை என்றுதான்  சொல்லவேண்டும் . சரி அதுபோல் நாமும் அப்படியே இருந்தால் எப்படி அதுதான் தெரிந்த விசயம் என்றாலும் மீண்டும் எழுதுவோம் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளக் கூடும் அல்லவா . இனி விசயத்திற்கு வருகிறேன் .
ஒரு பேருந்து நிறுத்தத்தின் அருகில் இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள் . நான் ஒருவேலையாக  அந்த சாலையை கடந்து போய்க்கொண்டிருந்தேன் . திடீர் என்று அவர்கள் இருவருக்கும் சண்டை வந்துவிட்டது . எனக்கு ஒரே குழப்பம் இப்பொழுதுதான் இருவரும் நன்றாக பேசிக்கொண்டிருந்தார்கள் . திடீர் என்று என்னாகி இருக்கும் என்று. சரி அவர்களிடமே கேட்டுவிடலாம் என்று இருவரையும் சமாதானப்படுத்தி கேட்டேன் என்ன விசயம் எதற்காக சண்டை அடித்துகொள்கிறீர்கள் என்று . அப்பறம்தான் விசயம் தெரிந்தது அவர்களின் சண்டைக்கு காரணம் சூரியன் யாருக்கு சொந்தமென்பதில் என்று . என்னடா சூரியனுக்கும் இவர்கள் சண்டைக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்க நினைப்பதுபோலவே நானும் அவர்களிடமே கேட்டேன் என்னவென்று . அதற்கு அதில் ஒருவன் சொன்னான் சூரியன் எங்க கன்னியாகுமரி கடலில் இருந்துதான் வருகிறது முதலில் நாங்கள்தான் பார்க்கிறோம் . அதனால் எங்களுக்குத்தான் முதல் சொந்தம் என்றான் . அப்பொழுதே எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது .அவசரப்பட்டு சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டோமோ என்று .சரி மாட்டியாது மாட்டிக்கொண்டோம் . அடுத்தவன் என்ன சொல்கிறான் என்று அதையும் கேட்டுவிடுவோம் என்று தோன்றியது . அவனிடம் கேட்டேன் அதர்க்கு அந்த அறிவாளி சூரியன் வருவதும் மறைவதும்தான் உங்க கன்னியாகுமரி கடலில் இருந்துதான் அது மறைந்ததற்கு பின்பு தினமும் இரவு எங்க ஊரில்தான் உறங்குகிறது .அதனால் எங்களுக்குத்தான் அதிக சொந்தம் என்றான் . அப்பொழுதே எனக்கு தோன்றிய சிறிய சந்தேகம் தெளிவாகிப்போனது .அப்பறம் அவனுங்க ரெண்டுபேரும் சேர்ந்து ஒரே நேரத்தில் என்னிடம் கேட்டார்கள் நீங்களே சொல்லுங்க ஸார் எனக்குத்தானே சொந்தம் என்று ??????????? . அப்பறம் என்னங்க எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்குறான்டா? இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிவிட்டு. வாட மாப்ள அடுத்த தெருவுக்கு போவோம் என்று போய்ட்டாங்க .அன்னைக்கு முடிவு பண்ணினேன் . சூரியன் என்ற வார்த்தையைக்கூட வாசிக்கக்கூடாது என்று . ஆனால் பாருங்க இப்ப அந்த சூரியன் பற்றியே பதிவு போடவேண்டிய நிலை வந்துவிட்டது .
நமது நாட்டில் சூரிய உதயத்தை முதலில் காண்பவர்கள் அருணாச்சலப்பிரதேச மக்கள் தான். நமது நாட்டின் கிழக்கு விளிம்பில் அமைந்துள்ள அருணாச்சலப் பிரதேசம், 97 டிகிரி தீர்க்க கோட்டில் அமைந்துள்ள மாநிலம் ஆகும். மேற்கு விளிம்பில் குஜராத் அமைந்துள்ளது. அதாவது 68 டிகிரி தீர்க்க கோட்டில் அமைந்துள்ளது.இந்த இரு மாநிலங்களுக்கு இடைப்பட்ட 29 தீர்க்க கோடுகளை கடக்க சூரியன் 1 மணி 56 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றது.

என்னைப்போல் நீங்க யாரும் மாட்டிக்கொள்ள கூடாது பாருங்க அதுக்குத்தான் இந்த தகவல் . சரி இனி உங்க கருத்துக்களை மறக்காமல் மறுமொழியில சொல்லலாம் .



யார் அங்கே! ராஸ்க்கல் என்ன இது சின்னபுள்ளத்தனமாவுல இருக்கு பதிவ படிச்சுட்டு ஓட்டு போடாம போனா எப்படி ஒழுங்கா இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் இல்லைனா அழுதுடுவேன் ஆமா ..........

Read more...

தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் !!!

>> Sunday, February 21, 2010

இன்றைய நிலையில் அறிவியலின் வளர்ச்சி ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சாதனைகளை சாதாரணமாக நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம் . இந்த அறிவியலின் அதிசயங்களையும் பிணுக்குத் தள்ளும் இயற்கையின் இயல்பான சில நிகழ்வுகளும் அவ்வப்பொழுது யாரும் எதிர்பாராமலே நடந்துவிடுகிறது . அந்த வகையில் ஒரு புதிய அதிசய நிகழ்வு விரைவில் வர இருக்கிறது இதுநாள் வரை தங்கம் , வைரம், வெ‌‌ள்‌ளி என்று பல நகைகளை நம்மை அழகுபபடுத்துவதற்காக பயன்படுத்தி வந்தோம் . ஆனால் இப்பொழுது அந்த அபரணங்களுக்கு விடுமுறைக்கொடுக்கும் தூரம் மிக அருகில் வந்துவிட்டது .

த‌ங்க‌‌ம், வெ‌‌ள்‌ளி, வைர நகைகளை இ‌னி மற‌ந்து விடு‌‌ங்க‌ள். விரைவில் வெளியாகவிருக்கும் பு‌‌திய வகை ஆபரண‌ங்க‌ள் உ‌ங்களை மேலு‌ம்

ஜொ‌லி‌க்க வை‌க்கும் அதிசய நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது . ஆம். தா‌ய்‌ப்பா‌லி‌‌ல் இரு‌ந்து நெக்லஸ், பிரேஸ்லெட் என்று 70 வகையான ஆபரணங்களை தயாரிக்க முடியும் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது .

ல‌ண்ட‌னி‌ல் உ‌ள்ள நகை தயா‌‌ரி‌க்கு‌ம் குழு ஒன்று, தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்களை தயாரிக்கும் வித்தைகளை செய்து காண்பித்துள்ளது.

இந்த சாதனையின் முதல் முதல் தயாரிப்பாக இ‌ந்தக் குழு 'பா‌ல் நெ‌க்ல‌ஸ்'-களை‌த் தயா‌ரி‌‌த்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளனர் . இதை அடுத்து அந்த குழுவின் அறிக்கையில் .

‌பிரே‌ஸ்ல‌ெ‌ட் மற்றும் 70 பிறவகை ஆபரணங்களையும் இ‌ந்த ஆ‌ண்டு இறு‌திக்குள் தயாரிக்க இரு‌ப்பதாக அக்குழுவினர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

தா‌ய்‌ப்பாலுடன் ‌‌வி‌னிகரைச் சேர்த்து (அ‌சி‌‌ட்டி‌க் அ‌மில‌ம்) ந‌ன்கு கொ‌‌தி‌க்க வை‌ப்பத‌ன் மூல‌ம் பா‌லி‌ல் உ‌ள்ள கே‌சி‌ன் புர‌த‌ம், இ‌ந்த கலவையை

‌பிளா‌ஸ்டி‌க் போ‌ன்று மா‌ற்றி விடுகிறது. ‌பி‌ன்ன‌ர் அதில் வண்ணம் பூசி (பெயிண்ட்) நாம் விரும்பும் வடிவில் அல்லது அச்சுகளில் ஊற்றி ஆபரணங்களாக மாற்றுகிறார்களாம்.

பிளாஸ்டிக் போன்ற தன்மை கொண்டிருப்பதால், அழ‌கிய வடி‌வி‌ல் நகைகளாக மா‌ற்‌றி விடுகிறார்களாம்.


தாய்ப்பாலை உபயோகித்து `குழந்தைகளின் தலை' போன்ற வடிவிலான நெக்லஸில் அணியக்கூடிய பதக்கம் (டாலர்) ஒன்றையும், தாய்ப்பாலுடன் உலோகத்தைச் சேர்த்து பிரேஸ்லெட் ஒன்றையும் பிரான்ஸ் நாட்டு நகை வடிவமைப்பாளர்கள் ஏற்கனவே உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இ‌துபோ‌ன்ற நகை வடிவமை‌ப்பை அவ‌ர்க‌ள் "பா‌ல் மு‌த்து‌" (milk pearl), எ‌ன்று கு‌றி‌ப்‌பிடு‌கி‌றார்கள். இந்த முறையில் உருவாக்கப்பட்ட ஆபரணங்களை செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் கண்காட்சியில் அவர்கள் வைக்க உள்ளார்களாம்.

என்றாலும், தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் உருவாக்கம், வர்த்தகரீதியில் இன்னமும் செயல்படுத்தப்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்று சொல்லலாம்.



ஒரு வழியா பதிவு போட்டாச்சு . ஏலே மக்கா அடுத்து நீங்கதான் . பதிவு பிடித்து இருந்தாலும் , இல்லாவிட்டாலும் உங்க கருத்துக்களை மறக்காமல் மறுமொழியில் சொல்லிட்டுப்போங்கல .


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

Read more...

உலக அரங்கில் லஞ்சமாய் இந்தியா !!!

>> Wednesday, February 17, 2010

சாதனைகள் பல செய்தும் இன்னும் உலக அரங்கில் சரிந்த நிலையில் நம் நாடு ஏன் இருக்கிறது என்று எப்பொழுதாவது நாம் சிந்தித்தது உண்டா . நமது வேலைகளை நாம் பார்ப்பதற்கே நேரம் இல்லை நமக்கு எதற்கு இந்த தேவையற்ற வேலை என்று பலரும் சலித்துகொள்வதும் உண்டு . ஆனால் இந்த சரிவுக்கு முக்கிய காரணம் நாம்தான் . என்னடா இவன் இப்படி ஒரு குண்டை தூக்கிப்போடுகிறானே என்று என்ன வேண்டாம் .இதுதான் உண்மை .
அணுகுண்டு வைத்திருக்கிறோம், ஆஸ்கர் விருது பெற்றுள்ளோம், ஆண்டுக்கு ஏழெட்டு சதவீத பொருளாதார வளர்ச்சி காண்கிறோம், ஐந்து வருடத்துக்கு ஒரு தடவை தேர்தல் நடத்தி அதிசயிக்க வைக்கிறோம்.. ஆனாலும் ‘இந்தியா லஞ்ச ஊழலில் திளைக்கும் நாடு என்றுதான் உலகமும் பார்க்கிறது. இந்த அவமானம் நம்மை விட்டு போவேனா என்கிறது. உலக அளவில் 180 நாடுகளில் நடத்திய ஆய்வில் இந்தியா 84வது இடத்தில் இருக்கிறதாம். ஓட்டப் பந்தயத்தில் அத்தனாவது இடத்தில் வந்தால் வேடிக்கை பார்க்கக்கூட எவரும் மிச்சமிருக்க மாட்டார்கள்.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த ஆய்வை நடத்துகிறது. சென்ற ஆண்டு நமக்கு 85ம் இடம். அதற்கு முன்னால் 72. நாடாளுமன்ற வாக்கெடுப்பில் கத்தை கத்தையாக கரன்சி நோட்டுகள் கைமாறிய விவகாரத்தால் தடாலென்று 13 படி சறுக்கினோம். அரசு துறைகளில் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வேலைகள் எப்படி முடித்துக் கொடுக்கப்படுகிறது என்பதை அளவுகோலாக வைத்து ஆய்வு நடத்தப்படுகிறது. அதில் மொத்தம் 13 குறியீடுகள். அதிகாரிகளின் நேர்மை ஒரு குறியீடு. லஞ்சம் வாங்காமல் வேலையை முடித்து தருவதாக ஆய்வில் பங்கேற்ற அனைவரும் தெரிவித்தால் முழு மதிப்பெண் போடப்படும். இந்த விஷயத்தில் இந்தியா பெற்றுள்ளது 10க்கு 3.4 மட்டுமே. பக்கத்தில் உள்ள குட்டி நாடு பூடான் 5 மார்க் வாங்கியுள்ளது. தனியார் துறை ஊழல்கள் இந்த கணக்கில் வராது. உலகிலேயே லஞ்சம் குறைந்த நாடு நியூசிலாந்து. அடுத்து டென்மார்க், அப்புறம் சிங்கப்பூர். இம்மூன்றும் 9க்கு மேல் பெற்றுள்ளன. இந்தியாவில் லஞ்சம் தலைவிரித்து ஆடும் துறைகளில் முதன்மையானது காவல் துறை.
லஞ்சம் குறைந்தது பள்ளிக் கல்வித் துறை. ஊழல் மிகுந்த மாநிலம் என்ற பெருமையை பெறுவது பீகார். அடுத்து வருவது காஷ்மீர், மத்திய பிரதேசம். அரசுப் பணிகளை கணினி மயமாக்கியதால் லஞ்சம் பெரிய அளவில் குறைந்துவிடவில்லை என்று அகமதாபாத் IIM நடத்திய ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. ஏனென்றால் அந்த கணினிகளை கையாள்வது மனிதர்கள். அவர்களுக்கு பதில் ரோபோக்களை நியமித்து அரசு எந்திரத்தை உண்மையிலேயே எந்திரமாக்கினால் இந்தியாவும் அதிக மதிப்பெண் பெற வாய்ப்பு இருக்கிறது..

நமது உரிமைகளையே பெறுவதற்கு லஞ்சம் கொடுக்கும் அளவில் ஒரு நாடு சீரழிந்திருந்தால் அப்போது நம் உரிமையைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுப்பது சில வேளை நிர்ப்பந்தமாகி விடுகிறது. இது போன்ற நிலையை அடைவோர் தங்களின் உரிமையைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்தால் அது மன்னிக்கப்படும்.

நமது முன்னால் குடியரசு தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் ஒரு முறை மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நடந்த உரையாடல் நினைவிற்கு வருகிறது
அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளில் ஒரு அறிவியல் புரட்சி ஏற்படும். அப்போது பயோ டெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி, நானோ டெக்னாலஜி ஆகியவை சேர்ந்து ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்தக் காலத்தில் லஞ்சம், பெருமளவு பெருகி விட்டது. எந்த அளவுக்கு எனில் சில ஊழியர்களுக்கு அவர்களுடைய ஊதியத்தை விடக் கூடுதல் வருமானமாக லஞ்சம் ஆகிவிட்டது. அதுமட்டுமல்ல பல கம்பெனிகளுடைய வரவு, செலவு கணக்கு (பட்ஜெட்)களில் பல்வேறு (மறைமுகமான) பெயர்களில் லஞ்சம் கொடுக்கல், வாங்கல்கள் பதிவு செய்யப்படுகிறது. பெரும்பாலான கொடுக்கல், வாங்கல்கள் எப்படி மாறி விட்டன என்றால் அவை ஆரம்பமாவதும் லஞ்சம் மூலமாகத்தான் முடிவதும் லஞ்சம் மூலமாகத்தான். அதனால் ஏழைகள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகின்றனர். இதனால் (மனிதர்களிடம் ஒப்படைக்கப்பட்ட) பல்வேறு பொறுப்புகள் பாழாகி விட்டன. தொழிலாளிகள் கெட்டுப் போவதற்கும் அதனால் முதலாளிகள் நஷ்டம் அடைவதற்கும் இதுதான் காரணம். அது மட்டுமல்ல லஞ்சம் கொடுப்பவருக்குத் தான் வேலை சிறப்பாக முடித்துக் கொடுக்கப்படுகிறது. எவர் லஞ்சம் கொடுக்கவில்லையோ அவருடைய வேலை சிறப்பாக முடித்துக் கொடுக்கப்படுவதில்லை. அல்லது அவருடைய வேலை தாமதப்படுத்தப்படுகிறது.

நமது நாட்டை லஞ்சம் இல்லாத நாடாக உருவாக்க முடியும். நமது நாட்டில் 100 கோடி பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 20 கோடி வீட்டில் இருப்பார்கள். அப்படி என்றால் ஒரு வீட்டில் 5 பேர் இருப்பார்கள். அனைத்து வீட்டிலும் லஞ்சம் வாங்குபவர்கள் இருக்க முடியாது. 50 சதவீதம் அதாவது 10 கோடி வீட்டில் லஞ்சம் வாங்கும் தாயோ அல்லது தந்தையோ அல்லது வீட்டில் உள்ள யாராவது ஒருவர் ஊழலில் மாட்டிக் கொண்டு இருப்பார்கள்.
துரதிர்ஷ்டவசமாக அப்படிப்பட்டவர்கள் உங்கள் வீட்டில் இருந்தால் தாய் அல்லது தந்தையிடம் லஞ்சம் வாங்காதீர்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? (மாணவர்கள் முடியும் என்றனர்). முடியும். வெரிகுட்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை பார்த்து கேட்கிறேன். நீங்கள் நல்லவராக இருப்பீர்கள். துரதிர்ஷ்டவசமாக உங்களது குழந்தை வந்து அப்பா லஞ்சம் வாங்காதீர்கள் என்று சொன்னால் நீங்கள் கேட்பீர்களா? (கூட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் கேட்போம் என்றனர்) கேட்பீர்கள். அப்படியானால் இன்னும் 5 ஆண்டுகளில் லஞ்சம் இல்லாத இந்தியா மலரும்.

ஒவ்வொரு குடிமகனும் லட்சிய சிகரத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளோடு இருக்க வேண்டும். பள்ளிப்படிப்பு படிக்கும் மாணவர்களாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்க வேண்டும்.

வந்திருக்கும் மாணவர்களில் எத்தனை பேர் அரசியல் தலைவர்களாக வர விரும்புகிறீர்கள்? கையை உயர்த்துங்கள். (7 மாணவ- மாணவிகள் கையை உயர்த்தினர்) உயர்த்தியவர்களில் 3 பேர் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். ஏன் அரசியல் தலைவராக ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? என்று அவர் கேட்டார்.

அதற்கு பதில் அளித்த மாணவிகளில் ஒருவர், "குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்க முடியாமல் கஷ்டப்படும் சிறுவர்களை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அரசியல் தலைவராக ஆகவேண்டும் என்று விரும்புவதாக'' பதில் அளித்தார்.

அந்த மாணவியை பார்த்து உனக்கு 100 மார்க் என்று ஜனாதிபதி அப்துல் கலாம் கூறி பாராட்டு தெரிவித்தார்.

எப்பொழுதோ பார்த்த இந்தியன் படத்தில் சொல்லும் ஒரு கருத்து இப்பொழுது எனக்கு ஞாபகம் வருகிறது . வெளி  நாடுகளில் நான் லஞ்சம் யாரும் வாங்கவில்லை என்று சொல்லவில்லை . வாங்குகிறார்கள் . அவர்கள் எல்லோரும் தங்கள் பணியை மீருவதற்கு லஞ்சம் வாங்குகிறார்கள் . ஆனால் நமோ நமது பணிகளை செய்வதற்கு லஞ்சம் வாங்குக்கிறோம் .இதுதான் நூற்றுக்கு நூறு உண்மை .அதனால்தான் இன்னும் அடிப்படை தேவைகளுக்குக் கூட கை ஏந்தும் நிலை நமது நாட்டில் . இந்த நிலை இன்னும் நீடித்தால் உலக அரங்கில் நமது நாடு மக்கள் தொகையில் முதல் இடம் பிடிக்கிறதோ இல்லையோ அதற்கு முன்பாக லஞ்சத்தில் முதல் இடம் பிடித்துவிடும் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்றாகிப்போகலாம் .

ஒரு வழியா பதிவு போட்டாச்சு . ஏலே மக்கா அடுத்து நீங்கதான் . பதிவு பிடித்து இருந்தாலும் , இல்லாவிட்டாலும் உங்க கருத்துக்களை மறக்காமல் மறுமொழியில் சொல்லிட்டுப்போங்கல .

இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........
 
 
 

Read more...

சின்ன பய சின்ன பொன்ன காதலிச்சா !!!

>> Saturday, February 13, 2010


  சில மாதங்களுக்கு முன்பு நண்பர் அறிவுமதி எழுதிய காதலை பற்றிய சில விசயங்கள் என்னை மிகவும் கவர்ந்தது சரி அதைப் பற்றி நானும் ஒரு பதிவு எழுத வேண்டும் என்று வெகு நாட்களாக ஆசைதான் இதோ ஒரு கவிதையுடன் தொடங்குகிறேன் . ஏலே இதை கவிதை என்று நாங்க சொல்லணும் என்று சொல்றது நல்லாவே கேக்குது மக்கா பிடித்து இருந்தாலும் இல்லாட்டியும் எப்பவும் வழக்கமா பண்றது போல உங்க விருப்பத்திற்கு உங்க கோபத்தை மறுமொழியில காட்டலாம்கோ .

மீண்டும் ஒரு ரோஜாவை
கொல்ல விருப்பம் இல்லை
.ஒவ்வொரு வருடமும் உனக்காக
எழுதி எழுதி கொடுக்காமல் மறைத்த
கடிதத்தில் உள்ள வார்த்தைகளுக்கு எல்லாம்
கண்டிப்பாக வயதாகி இருக்கக்கூடும் .

உனக்கா என்று சொல்லி சொல்லி
வாங்கிய ரோஜா பூக்களின் மரணத்திற்கு
எல்லாம் நம்
காதலும் ஒரு காரணம்தான் .

நேற்று
உன் அனுமதி இன்றி காதலித்தேன் ஆனந்தம்.
ஆனால்
இன்றும் உன் அனுமதி இன்றியே காதலிக்கிறேன்
சற்று வருத்தம் .
நாளையும் உன் அனுமதி இன்றியே காதலிப்பேனோ ?
சற்று பயம் .
நாளை மறுநாள் உன் அனுமதி பெற முயற்சித்து
நீ மறுத்துவிட்டால் இதைவிட வேதனை
வேறு ஒன்றும் இல்லை .
உன் அனுமதி இன்றியே காதலித்துக்கொண்டிருக்கிறேன்
உன் அனுமதி பெற முயற்சித்து தோற்றவானாய்

இனியும் அந்த அவல நிலை வேண்டாம் .
இதோ இன்று காதலர் தினம்
என் அன்னைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை .
பாதி தூக்கம் தொலைத்து
பாதி ஏக்கம் நிரப்பி
பாதி பல் துளக்கி
பாதி குளித்தும் குளிக்காமல்
 பாதி உணவு உண்டும் உண்ணாமல்
பாதி தலை வாரியும் வாராமல்
பாதி ஆடை அணிந்தும் அணியாமல்
பாதி புத்தகம் எடுத்தும் எடுக்காமல்
இப்படி அவசர அவசரமாக கிளம்பிக்கொண்டு இருக்கிறேன்
பேருந்து நிறுத்துமிடம் நோக்கி .

அன்னை சொன்னாள்
இன்னும் உன் பேருந்து வர நேரம் உள்ளது .
எதற்கு இவளவு அவசரம் என்று !
எப்படி சொல்வேன் ? அவள் வந்து வெகுநேரமாகிவிட்டதை
அன்னையாகிய உன்னிடம்
.காதல் – கொடுப்பதன்று. எடுப்பதன்று. ஈர்த்துக் கவிழ்ப்பதன்று. மடக்குதல் அன்று. மடங்குதல் அன்று. எதிர்பார்த்த வெறியில்… எதிர்பாராத சொடுக்கில் கிடத்துதல் அன்று. இரக்கத்தில் கசிந்து இருளில் தேங்குதல் அன்று.

என் பேனாவிலும்
மை உண்டு
நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…
நீ இன்னும்
எழுதிக் கொண்டிருக்கிறாய்.

தேடல்கள்… தம் காத்திருத்தலின் தற்செயல் நிமிடத்தில் திகைத்துச் சந்தித்து… உள்திரும்பித் திருப்தியுறுவது. இரு ஞாபகங்கள் விரும்பி, ஒற்றை மறதிக்குள் அமிழ்வது.

அதை அறிய மனசு பூத்திருக்க வேண்டும். நிலா… மொட்டின் மீது வழிந்து விடுகிறது. பூதான் விந்துவாய் வாங்கிக் கொள்கிறது. காதலை வாங்கிக் கொள்ள எத்தனை பேருக்கு வாய்க்கிறது? காதலால் வாழ்ந்துகொள்ள எத்தனை பேருக்கு நேர்மை இருக்கிறது?

அது ஆணுக்கும் பெண்ணுக்குமாக நிகழ்வதா? ஆணுக்குள் இருக்கிற பெண்ணுக்கும் பெண்ணுக்குள் இருக்கிற ஆணுக்குமாக… எதிரெதிர் கண்ணாடிக்குள் நீளும் தொடர் பதிவுகளாய் நிகழ்வது.

அஃறிணையில் உயிரோட்டமாக இருக்கிற அது… உயர்திணையில் வெறும் உடலோட்டமாகி விடுகிறது. கற்பிதங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிற சமூக விலங்குகளுக்குக் கூண்டின் கூரைதானே வானம்! வானமற்றுப் போன வாழ்வில் சிறகுகளின் பாடல்கள் ஏது?

இந்தப் பிறவியில் சேர முடியாவிட்டால் என்ன… அடுத்தப் பிறவியில் சேர்ந்து வாழ்வோம் என்பதுவும்…உடல்களால் இணையாவிட்டால் என்ன… உயிர்களால் இணைந்து வாழ்வோம் என்பதுவும் ஏமாற்று. பொய்!

அது உடல் கடந்து நடப்பதா? உடல்களால் நடப்பது. சம அதிர்வுகளாலான மின்சேர்க்கை அது.
உடல்தொட்டதும் காதலை இழந்துவிடுகிறவர்கள் அதிகம். காதலைத் தொட்டு உடலை அடைபவர்கள் குறைவு – மிக மிக குறைவு.

ஸ்பரிசமும்…புணர்தலும் காதலின் நெருங்கிய மொழிகள். அவற்றைப் பேசாதே எனச் சொல்லும் தத்துவங்கள் யாவும் பொய் பேசும். வாழ்வின் வழிகள் முறித்துக் குளிர்காய்கிற எந்தச் சடங்கும் காதலைச் சிதைக்கும். பொருந்த நெருங்கும் முழுமைக்குள் சந்தேகங்கள் திணித்துச் சிரமம் செய்யும்.

அதனால்தான்… அடிமைச் சமூக அமைப்பில் வரலாற்று வழிநெடுக வாழ்ந்து பழகிவிட்ட நமக்கு, வாழ்க்கை மட்டுமல்லாது காதலும் போராட்டமாகிவிட்டது. அடுத்தவர்களிடமிருக்கிற நம்மை மீட்பதும்…நமக்குள் இருக்கிற அடுத்தவர்களை வெளியேற்றுவதுமான சிக்கல்கள் நிறைந்த போராட்டமிது!

இத்தகைய நெருடல்கள் நிறைந்த வாழ்வில்… காதலைச் சந்தித்ததாக யாரேனும் கூறினால் நம்ப மாட்டேன்! காதலிகளைச் சந்தித்திருக்கலாம். காதலன்களைச் சந்தித்திருக்கலாம். காதலை மட்டும் சந்தித்திருக்கவே முடியாது!

சூழ்ந்தார் துயரங்களை வீழ்த்தி எழாத எவருக்குள்ளும் காதல் எழாது – எழ முடியாது. காதலைப் போல ஒன்று எழலாம். அதுவே காதல் ஆகாது.

காதலென்பது என்ன… இழந்துவிட்டு வருந்துவதா? பிரிந்துகொண்டு அழுவதா? இல்லை…இல்லை.. ‘காதல்… காதல்… காதல்… காதல் போயின் சாதல்… சாதல்… சாதல்…’ சொன்ன பாரதியின் காதல் என்ன ஆனது? அவனது தொகுப்பில் பதினாறு விருத்தங்கள் ஆனது. ஆனாலும் சொல்கிறேன்…அவனது பிள்ளைக் காதல்தான் அவனைப் பிரபஞ்ச காதலனாக்கியது. அந்தத் தனிமனிதனை அதுதான் சமூக மனிதனாக்கியது. அதுதான் அவனிலிருஎந்து எழுந்து இன்னும் நித்திய நெருப்பாக நின்று எரிகிறது. அவனது போராட்ட உணர்வுக்குள் ஒன்பது வயதுச் சிறுமி ஒருத்தி ஊடுருவியிருக்கிறாள் என்கிற உண்மையை உணர்ந்தவர்களுக்குத் தான் தெரியும் – காதலின் பெருமை!

என்னை
எல்லோருக்கும்
பிடித்திருக்கிறது.
அவனையும்
எல்லோருக்கும்
பிடித்திருக்கிறது.
எங்களைத்தான்
யாருக்குமே
பிடிக்கவில்லை

மற்றபடி இங்கே காதல் கடிதங்கள் எழுதிக் கொள்பவர்களையும்… பரிசுப் பொருட்களை மற்றிக் கொள்பவர்களையும்.. எச்சில் இனிப்புகளை ருசிபார்ப்பவர்களையுமா காதலர்கள் என்கிறீர்கள்?

ஸ்கூட்டரில் அணைத்துப் போவதையும்… திரையரங்குகளில் உரசிப் படம் பார்ப்பதையும்…கடற்கரை இருளில் மடியில் படுத்துக் கிடப்பதையும் காதல் என்று நம்பச் சொல்கிறீர்கள்?

காதலின் எல்லை திருமணம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளவும் உரத்துச் சொல்லவும் இங்கே எத்தனை பேருக்குத் தெம்பு இருக்கிறது? தம் காதலை வெற்றி கொள்ளவும் தம் பிள்ளைகளின் காதலுக்கு வரவேற்புச் சொல்லவும் இங்கே எத்தனை பேருக்குப் பக்குவம் இருக்கிறது?

அதற்குக் காரணம் அவர்களல்ல; நீங்களுமல்ல. நானுமல்ல. குற்றமற்ற விலங்குகளை நமக்குள் நாமே வளர்த்துப் பழக நாட்கள் இன்னும் நமக்கு அமையவில்லை. நமது மனம் என்பது தொலைதூரத் தலைமுறைகளைத் தாண்டிய வேட்டைக் கால வாழ்வியற் கருத்துருவாக்கங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கற்பிக்கப்பட்ட மனோபாவங்களுக்குள் வாழப்பழகிவிட்டதனாலேயேயே, காதல் செய்தலும் மிகப்பெரிய சமூக குற்றமென நமக்குள்ளாகவே ஒருவன் எழுந்து நம்மை எச்சரிக்கிறான்.

காதல் குற்றமா? சமூக குற்றமா? நமக்குள் இருக்கிற புற மிருகங்களையும் அக மிருகங்களையும் உசுப்பிவிட்டு கடித்துக் குதற்ச்சொல்லி ரத்தம் ரசிப்பவனே அப்படிச் சொல்வான். சமூகச் சூழல்களின் சிலந்தி இழைகளிலிருந்து விடுபட்டு… வாழ்வின் இயல்புத் தளத்தில் இயற்கையின் இயக்கமாகிவிடச் சம்மதிக்கிற எவனும், அதனை அப்படி சொல்ல சம்மதிக்க மாட்டான்!

நாம் பிளந்து கிடக்கும் பிரபஞ்ச பிசிறுகள். காதலில் இணைகிற ஆணும் பெண்ணும் பிரபஞ்ச இயக்கத்தின் ஆணி வேருக்குள் நெகிழ்ந்து இறங்குகிறார்கள். அது இருவரின் முழுமையடைதல் இல்லை. முழுமைக்கான அடுக்குகளின் ஒழுங்கமைவில் அது ஒரு பகுதி.

இருட்டிக் கொண்டு வருகிற ஏதோ ஒரு மழைக்காலத்தில்… பாறையின் மீது வந்து ஒரு பெண் படுக்கிறாள் என்பது…அந்தப் பாறையிலிருந்து என்றோ தெறித்துச் சிதறிய ஒரு பகுதி மீண்டும் வந்து அதே இடத்தில் பொருந்துவதாக அர்த்தம். அந்தப் பெண்மீது அவலது அந்தக் கணத்தின் முழுச்சம்மதத்தில்…அவளது ஆண் கவிழ்ந்து இயங்கப் போகிறான் என்கிறபோது அவர்கலள் மட்டுமல்ல… அவர்களைச் சுமந்துள்ள பாறையும் சூழ்ந்துள்ள செடிகளூம்…செடிகளில் அமர்ந்துள்ள வண்ணத்துப் பூச்சிகளும் கூட அவர்களோடு சேர்ந்து இயங்கப் போகின்றன என்று அர்த்தம். காதலின் மையத்தில் குனிந்து முகம் பார்க்கிற எவரும் உலகச் சுழற்சியின் ஏதோ ஓர் ஒழுங்கின்மையைச் சரிசெய்கிறவர்களாகவே இருப்பார்கள்.

மேல் இமைகளில்
நீ இருக்கிறாய்.
கீழ் இமைகளில்
நான் இருக்கிறேன்.
இந்தக் கண்கள் கொஞ்சம்
உறங்கி விட்டாலென்ன?

வாழ்வின் இடையில் வந்து இடையில் போய்விடுகிற தற்காலிக அதிர்வு அல்ல அது. ஆயுளைக் கடந்தும் உடல்மாறிக்கொள்கிற நிரந்தர அதிர்வு.

காமத்துக்கான முன் ஒத்திகையாக அதனைக் கருதுகிறவர்களூக்கே அது தற்காலிகம். உடல்களால் காமம் பேசிமுடித்த திருப்தியில் உயிர்களால் காதல் பேச முடிகிறவர்களூக்கு மட்டுமே அது நிரந்தரம். அப்படிப் பேசிப் பழகப் பயிற்சி வேண்டும்.

எவரும் எவருக்கும் நன்றி சொல்ல நினைக்காத தருணங்களால் பேச வேண்டும், அதனை. உதடுகளின் மெல்லிய அதிர்வுகள் சாட்சியாக… ஈரத்தில் நனைந்த விழிகள் சாட்சியாக… அக்குளில் பூக்கும் வியர்வையின் வாசம் சாட்சியாக…ஏன் கூச்சங்கழிந்த நிர்வாணம் சாட்சியாக… இழையும் பெருமூச்சுக்களால் பேச வேண்டும் அதனை. பேசப் பேசப் பேசத் தெவிட்டாத பேச்சு அது. பேசியிருக்கீர்களா நீங்கள்?

நான் பேசியிருக்கிறேன். ஆணாக இருந்தல்ல. பெண்ணாக இருந்துதான் பேசியிருக்கிறேன். என்ன சிரிக்கிறீர்கள்? பெண்ணாகித்தான் பேசமுடியும். அதனை!

பெண்ணாகத் தெரியாத எந்த ஆணுக்கும் காதலின் தரிசனம் வாய்க்குமென்று நான் நம்பவில்லை. ஆயிரம் பெண்களுக்குரிய தாய்மையைத் தன் இதயத்துக்குள் ஏற்றுக்கொள்கிற ஆண்தான், ஒரு பெண்ணின் இதயத்துக்குள் இடம்பெறுகிற அருகதையுள்ளவனாகிறான்.

இருவராய் இணைந்து இருக்கையில் கூடத் தனிமையாய் இருக்கிற சுந்தந்திர சுகத்தை ஒரு பெண்ணுக்கு எவன் தருகிறானோ, அவண்தான் ஆண் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறான்!

அழகியக் கூண்டு செய்து… அதற்குள் அடக்கி வைத்து… ‘இது என் பறவை.. இது எனக்கு… எனக்கு மட்டுமே’ என்று எந்தப் பெண்ணையும் சொல்ல எந்த ஆணும் வெட்கப் படவேண்டும். விரும்பி வந்து ஒரு பறவை எவ்விதம் அமர்ந்ததோ அவ்விதமே விரும்பியவண்ணம் அது பறந்து செல்லுதலுக்கும் சிரமமற்றபடி கிளையாக இருக்கச் சம்மதித்தலே அணுக்கு அழகு.

உரிமை கொண்டாடுதல் அன்று உரிமை தருதலே காதல். தருதல் என்ற சொல்லுக்குள்ளும் ஓர் ஆதிக்கத்தனம் தெரிகிறதே! தருவதற்கு ஆண் யார்? தருதலும் பெறுதலுமற்ற கருனைப் பெருவெளியில் சிறகுச் சிக்கலின்றிப் பறத்தலே காதல்!

முழுவிடுதலையைச் சுவாசித்துப் பூப்பதுதான் காதல். எந்தச் சிறைக்குள்ளும்… எந்த விலங்குக்குள்ளும்… அடைபட்டு கட்டுப்பட்டு இருக்க சம்மதிக்காது அது.

என்னைச் செதுக்கியது பெண்மை. என்னில் சிற்பமானது காதல். எனக்குள் எல்லாமும் அதுதான். எல்லாமும் கற்றுத் தந்ததும் அதுதான்!

பூவைப் பறித்துவிடாமல் அதன் செடியிலேயே பார்த்து ரசிக்க… கைகளின் முடிப்பிசிறுகளில் சிக்கி நகரும் எறும்பை நசுக்கிவிடாமல் மெல்ல எடுத்து ஊதிவிட…அசையும் ஊதுவத்திப் புகையில் இசை கேட்க… பயணங்களூடே உடைக்கப்படும் பாறைகள் பார்த்து அழ… இறந்து கிடக்கும் வண்ணத்துப் பூசியை எடுத்துப் போய் அடக்கம் செய்ய… போக்குவரத்து மிகுந்த சாலையில் கிடந்து நசுங்கும் ஏதோ ஒரு குழந்தையின் ஒற்றைச் செருப்பைத் தவித்து எடுத்து ஓரமாய் வைக்க… அதுதான்… ஆம் … அதுதான் எனக்குக் கற்றுத் தந்தது. காதல் கற்றுத் தரும். காதல் எல்லாம் தரும். காதலியுங்கள். புரிந்துகொள்வதை அதிகம் பேசலாம். உணர்ந்து கொள்வதை?

அணுஅணுவாய்
சாவதற்கு
வாழ்வதற்கு
முடிவெடுத்துவிட்ட பிறகு
காதல்
சரியான வழிதான்.

ஏலே மக்கா என்ன ஒன்னும் புரியலையோ ? ஏலே இது காதாலிச்சா தாம்லா புரியும் .சும்மா நூலு விட்ட இது புரியாதுல .

இப்ப பாருங்க நம்ம வாத்தியாரு சொல்லித் தந்தத சொன்ன புரியுதானு பாருங்க இதுவும் புரியலைன அதற்கு நான் ஒன்றும் பண்ண இயலாது சாமியோ !
நீங்க சொல்லவேண்டியதை மறக்காமல் மறுமொழியில் சொல்லுங்க .

சம்பரதாயம் சட்டை பிடித்தாலும்
உறவுகள் உயிர் பிழிந்தாலும்
விழித்து பார்க்கையில் உன் தெருக்கள்
களவு போயிருந்தாலும்
ஒரே ஆணியில் இருவரும் சிக்கன
சிலுவையில் அறயபட்டாலும்
நீ நேசிக்கும் அவனோ அவளோ
உன்னை நீசிக்க மறந்தாலும்
காதலித்து பார்
சொர்க்கம் நரகம் இரண்டில்
ஒன்றே இங்கேயே நிச்சயம்
காதலித்து பார்


அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள் !



இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........





Read more...

அறிவுக்கு விருந்து !!!

>> Tuesday, February 9, 2010

இன்னைக்கு என்ன எழுதலாம் எப்ப பார்த்தாலும் ஒரே கதையும் , கவிதையும் , கட்டுரையுமா எழுதி எழுதி நிரப்பியாகிவிட்டது . சரி இன்னைக்கு ஏதாவது சில அறிய நிகழ்வுகளைப் பற்றி எழுதி அறிவுக்கு விருந்து என்று சொல்லி அனைவரையும் அசத்திட வேண்டியதுதான் . அறிவுக்கு விருந்தா அது எங்கடா உன்னிடம் இருக்குனு நீங்க சொல்றது எனக்கு கேக்குது மக்கா . பதிவுனு சொல்லி மொக்க போடுறதும் . மொக்கைனு சொல்லி பதிவு போடுறதும் இப்ப சகசம்தானங்க .எது எப்படியோ இது அப்படி இல்லை எப்படினு கேக்குறீங்களா அது அப்படிதாங்க . சரி வாங்க விசயத்திற்கு வருவோம் .


507 காரட் எடையுள்ள உலகிலேயே பெரிய வைரம் , தென்னாப்பிரிக்க வைரச் சுரங்கத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது .


செல்போனில் சிம் கார்டு பிளாஸ்டிக் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம் . ஆனால் , அதுவல்ல . தாவரங்களிலிருந்து கிடைக்கும் செலுலோஸ் என்பதிலிருந்து தயாரிக்கப்படுகிறது சிம்கார்டு .


உயிர் என்றால் என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு , அமெரிக்கத் தொலைக்காட்சியில் ஒருவர் வேடிக்கையாக அது காமத்தால் தொற்றிக்கொண்ட நோய் ( ' life is a sexually transmitted disease ' ) என்றார் .


வேகமாகப் போக விரும்பினால் , தனியாகப் பயணம் செய் . தொலை தூரம் போக விரும்பினால் துணையுடன் பயணம் செய் ' என்பது ஆப்பிரிக்காவில் பிரபலமாகச் சொல்லப்படும் வாக்கியம் .


எந்த விளையாட்டுக்கும் இல்லாத தனிச்சிறப்பு படகுப் போட்டிக்கு உண்டு . பின்பக்கமாகத் திரும்பி


வெற்றிக்கோட்டைத் தொடும் ஒரே விளையாட்டு இது மட்டும்தான் .


சங்கரா பரணம் ராகத்தில் , ' ஜனகணமன ' பாடலுக்கு இசை அமைத்தவர் நேதாஜியின் படையில் பணியாற்றிய கேப்டன் ராக்சிங்


மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறந்த கானகப் பகுதிக்கு ' மௌனப் பள்ளத்தாக்கு ' என்று பெயர் .


மனைவி விருப்பம் இல்லாத நேரத்தில் கட்டாயப் படுத்தி உறவுகொள்வது ( மேரிட்டல் ரேப் ) , மனைவியைக் கணவனும் அவனது உற்றாரும் கொடுமைப்படுத்துவது ( டொமஸ்டிக் வயலென்ஸ்.) எனப்படும் .


பறவைகளுக்கு ( வாத்து , அன்னம் , நெருப்புக் கோழி தவிர்த்து ) ஆண்குறி கிடையாது . க்ளோயேகா ( cloaca ) என்கிற ' சமச்சீர் பகுதி ' யினால் தேய்த்துக்கொள்ள வேண்டியதுதான்


இரவில் தூங்கும்போது படுக்கையில் சிறு நீர் கழிக்கும் பழக்கத்தை ஆங்கிலத்தில் Nocturnal Enuresis என்று குறிப்பிடுவோம் . இந்தப் பழக்கத்துக்குப் பெண் குழந்தைகளைவிட அதிகம் ஆளாவது ஆண் குழந்தைகள்தான்


எல்லா வகை ரத்தத்துடனும் சேரும் ரத்த வகை ' ஓ ' பாஸிட்டிவ் .

நட்சத்திரங்களின் இடத்தை வைத்தே பழங்காலங்களில் திசைகளை கண்டுபிடிப்பார்கள் . சந்திராயன் விண்கலத்தில் அதை போன்ற ஒரு செயலையே ' ஸ்டார் சென்சார் ' செய்து வந்தது . நட்சத்திர கூட்டங்களை நோக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்த சென்சார்கள் . அதை வைத்தே விண்கலம் நோக்கியிருக்கும் திசை , நிலவின் தளத்தில் இருந்து விண்கலம் உள்ள உயரம் , விண்கலம் நிலை நிறுத்தப்பட்டுள்ள கோணம் போன்ற தகவல்களை துல்லியமாக கணித்து தரும் .

" ஐன்ஸ்டீன் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது ...."
" ' ரிலேட்டிவிட்டி தியரி ' என்று சொல்வேன் என்று நினைத்தீர்களா ? அதுதான் இல்லை . காந்தியின் பெயர்தான் ஞாபகத்துக்கு வருகிறது . காந்தியைப் பற்றி ஐன்ஸ்டீன் சொன்ன புகழ்பெற்ற ஸ்டேட்மென்ட் இது :


' இன்னும் 50 ஆண்டுகள் கழித்து ரத்தமும் சதையும் கொண்ட இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் ! ".


பொதுவாகவே நல்ல பெட்ரோலானது எங்கு சிந்தினாலும் சிறிது நேரத்தில் சிந்திய சுவடு தெரியாமல் மாயமாகி விடும் . கலப்பட பெட்ரோல் மட்டுமே சிந்திய இடத்தில் சிறிய வரைபடம் போன்று அதன் எல்லைக் கோட்டை விட்டுச் செல்லும் .


நமது உள்ளங்கையில் ஒரு சதுர அங்குலத்திற்கு 3000 வியர்வைச் சுரப்பிகள் உள்ளனவாம் .


அறிஞர் ' வால் ' என்பவர் பல ஆய்வுகளை மேற்கொண்டு , பாம்புக்கு கேட்கும் திறன் இல்லை , செவி இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளார் .


பாம்பைக் கண்டால் பயப்படுவதற்கு அறிவியல் பெயர் ஒபிடி போபியா .


'வெள்ளெழுத்து ' என்ற குறைபாடு 40 வயதானால் கட்டாயம் எல்லோருக்கும் வரும் . இது ஒரு நோய் அல்ல . முதுமை தொடக்கத்தின் அடையாளம் . இதை ' சாளேஸ்வரம் ' என்றும் அழைப்பர் .


ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 113 டன் எடையுள்ள மழை நீர் பொழிவதையே ஓர் அங்குலம் என்பர் . .


குழந்தை பிறக்கும் போது அதன் இதயம் ஒரு நிமிடத்திற்கு 140 முறை துடிக்கும் . முயலின் இதயம் ஒரு நிமிடத்திற்கு 150 முறையும் , குதிரையின் இதயம் 38 முறையும் , சுண்டெலியின் இதயம் 200 முறையும் , நாயின் இதயம் 118 முறையும் , ஆட்டின் இதயம் 60- லிருந்து 78 முறையும் , யானையின் இதயம் 48 முறையும் துடிக்குமாம் .


அப்பாடா ஒரு வழியாக பதிவு போட்டாச்சு .அப்றம் என்ன மக்கா அதுதான் விருந்து முடிந்துவிட்டததுல இனி அப்படியே வரிசையா வந்து மொய் எழுதிட்டு போங்க . நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன் . மக்கா இனி நீங்க சொல்லவேண்டியதை சொல்லலாம் .



இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

Read more...

நீங்கள் இதயம் உள்ளவரா ? இதோ நிரூபிக்க ஒரு அறிய வாய்ப்பு !!!

>> Monday, February 8, 2010

அனைத்து வலை உலக நண்பர்களுக்கும் எனது வணக்கம் . நேற்று இரவு எப்பொழுதும்போல் நண்பர்களின் பதிவுகளை வாசித்துகொண்டிருந்தேன் . அப்பொழுது நண்பர் Butterfly சூரியா அவர்களின் புதிய பதிவான '' மைத்ரிக்கு உதவுங்கள்'' என்ற ஒரு அறிவிப்பு பதிவை வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது . என்னடா தலைப்பே சற்று வித்தியாசமாக உள்ளதே என்ற ஆவலுடன் வலைக்குள் நுழைந்தேன் . மொத்த பதிவையும் வாசித்து முடித்த பிறகு உணர்ந்தேன் கடவுள் மனித உருவங்களில் இருக்கிறார் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்றுதான் என்று . நல்ல மனநிலையும் அனைத்து சிறப்புக்களை கொண்ட ஒரு குழந்தையை நாம் சிறந்த முறையில் பாதுகாத்து , கல்வி கற்பித்து , அவர்களை பராமரிப்பது என்பதே சற்று கடினமான விசயமாக இருக்கும் இன்றைய சூழ்நிலையில் . மன வளர்ச்சியில் குன்றிய 300 குழந்தைகளை சிறப்பாக பேணி பாதுகாத்து வளர்த்து வருகிறார்கள் என்றால் சற்று வியப்பிற்குறிய நிகழ்வுதான் .

'' உள்ளம் நல்ல இருந்தா ஊனம் ஒன்றும் குறையில்லே
உள்ளம் ஊனப் பட்டா உடம்பிருந்தும் பயனில்லை. ''


என்ற கவிஞர் வைரமுத்துவின் வரிகள் இன்று ஞாபகத்திற்கு வருகிறது .


நேற்று பக்கம் பக்கமாக எழுதிய பதிவுகள் இன்று ஞாபகத்தில் இல்லை. ஆனால் எங்கயோ ஊமையாக முடங்கிக் கிடக்கும் பல மன நலம் குன்றிய குழந்தைகளின் திறமைகளுக்கு உயிருட்டும் வகையில் அமையும் இதுபோன்ற சிறந்த பதிவுகள் என்றும் ஞாபகத்தில் இருக்கும் என்ற நம்பிக்கையில் நண்பர் அவர்களின் Butterfly சூரியா அவர்களின் '' மைத்ரிக்கு உதவுங்கள் '' என்ற அதே பதிவை எந்த மாற்றமும் செய்யாமல் இங்கு தந்து இருக்கிறேன் . நண்பர்களே நீங்களும் வாசித்து விட்டு உங்களால் இயன்ற உதவிகளை வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் .


நம் நாட்டில் ஏறக்குறைய 3 கோடி மக்கள் மனவளர்ச்சி குன்றியோர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இவர்களுள் ஐந்து சதவிகிதத்தினர்தான் தேவையான கல்வி, பயிற்ச்சி மற்றும் வசதிகள் பெற்றிருப்பதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

பயன் வேண்டுவோருக்கும் பயன் பெறுவோருக்கும் இடையே உள்ள இவ்வளவு பெரிய இடைவெளியை சிறிதேனும் குறைக்கும் நோக்கத்துடன் மனவள்ர்ச்சி குன்றியோரின் பெற்றோர்களால் 1994ல் சென்னையில் துவங்கப்பட்ட சேவை நிறுவனம் தான் “மைத்ரி”

மூன்றே குழந்தைகளுடன் துவங்கப்பட்ட மையம் இன்று 300 குழந்தைகளை பயிற்றுவிக்கும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. சென்னையில் பெரம்பூர், தாம்பரம், மேற்கு மாம்பலம், கொளத்தூர், கே.கே. நகர், உள்ளகரம் ஆகிய 6 இடங்களில் 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடனும் திறன் ஊக்க வல்லுநர்களுடனும் {Occupational & Physico Therapists} பணி புரிகிறார்கள்.

மனவள்ர்ச்சி குன்றியிருந்தாலும் இவர்களிடம் உள்ள சில திறமைகளை கண்டெடுத்து, வளர்த்து அவர்கள் தங்களுக்கும் பிறர்க்கும் பயனுள்ள வாழ்க்கை வாழ வழிகாட்டும் மைத்ரி, நலன் விரும்பும் பெற்றொரும், நல்மனமுள்ள பல்ரின் ஆதரவோடு தற்போது வளர்ந்து வருகிறது.

வளர்ச்சியடைந்த அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அரசு பள்ளிகளிலேயே இம்மாதிரி சிறப்புக் குழந்தைகளின் கல்விக்கும் இடம் ஒதுக்கி உதவுகிறார்கள். நம் நாட்டில் இது போன்ற சமூக நிறுவனங்களால் மட்டுமே செய்ய இயலுகிறது. இதற்கு தேவையான உதவிகளுக்கும் சமூகத்திடம்தான் பெற்று செயல்படவும் முடிகிறது.

இலாப நோக்கில்லாமல் அன்பளிப்புகளால் மட்டுமே நடக்கும் நிறுவனம் என்பதை கடந்த சில மாதங்களாக நானும் இணைந்து பணியாற்றுவதால் நன்கறிவேன். இந்நிறுவனத்தின் கூட்டங்களில் கலந்து கொண்டு என்னால் இயன்ற சிறு உதவிகளையும் செய்து வருகிறேன். அதனால் வலைப்பூவிலும் அதிகம் நேரம் ஒதுக்க முடியவில்லை.

இன்னும் பல பள்ளிகளை தொடங்கவும் இருக்கும் பள்ளிகளை மேம்படுத்தவும் இவர்கள் ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.
சென்னை நேரு உள்விளையாட்டஙகில் (பிப் - 28 ஞாயிறு மாலை 6.05 pm) நடைபெற இருக்கும் இக்கலை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்குவதன் மூலம் நீங்களும் ஒரு சிறு பங்களிப்பை செய்ய முடியும்.

ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக்கவும்.

நிதியுதவி செய்ய விரும்பும் வெளியூர் / வெளிநாடு நண்பர்கள் இங்கே செலுத்தலாம்.

இன்றைய சமுதாய ஓட்டத்தில் இது போன்ற பணிகளி நம்மால் முழு நேரமும் ஈடுபட முடியுமாதென்பது ஒப்பு கொள்ள வேண்டியதே எனினும் இதை முழுமூச்சுடன் முனையும் இவர்களுக்கு தோள் கொடுக்கவும் இயன்ற உதவியை செய்யவும் வாருங்கள் என சக பதிவர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடனும் உரிமையுடனும் வேண்டுகிறேன்.

இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

Read more...

தரம்

பெண்களின் 14 ஆண்டு கால 33 சதவீத இடஒதுக்கீடு கனவு நனவாகியுள்ளது !!!

பெண்களின்  14 ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது.லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா நேற்று ராஜ்யசபாவில்

 அமோக ஆதரவுடன் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 186 எம்.பி.,க்களும், எதிர்ப்பாக ஒரே ஒரு எம்.பி.,யும் ஓட்டளித்தனர். மூன்றில் இரண்டு பங்கிற்கு மேலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். மசோதா நிறைவேறியதன் மூலம், 14 ஆண்டு கால கனவு >>>>

மறக்காத மகளிர் தினமும் மறுக்கப்படும் மகளிர் உரிமைகளும் !!!

அனைவரும் அறிந்தது என்றாலும் இதை மீண்டும் மீண்டும் ஞாபகப் படுத்துவது என் கடமையாக நினைக்கிறேன் . ஒவ்வொரு ஆண்டும் மறக்காமல் மகளிர் தினம் மட்டுமே கொண்டாடப்படுகிறது .ஆனால் மகளிர் உரிமைகள் மட்டும் மறக்காமல் மறுக்கப்படுகின்றன .
 உலக அரங்கில் பெண்கள் செய்யும் ஒவ்வொரு சாதனைகளையும் அதனால் அடையும் நன்மைகளையும் மட்டும் எண்ணத்தில் கொண்டு தலை நிமிர்ந்து நடைபோட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நாடும் அதே பெண்கள் தங்களின் உரிமைக்காக போராடும்பொழுது மட்டும் தலை குனிந்துக்கொள்வது எதற்கென்றுதான் தெரியவில்லை .
 உலக மகளிர் தினம் தோற்றம் , இன்று உலகில் எல்லா அட்டூழியங்களையும், அநாகரிக செயலில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் என்ற நகரத்தில் 1909ஆம் ஆண்டுமுதல் பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஏனென்றால் ஓர் தொழிற்சாலையில் வேலைபார்த்த பெண்கள் தங்களுடைய உரிமைகளை கேட்டு போராடிய போது அன்றைய அமெரிக்காஅரசால் கடுமையாக நடத்தப்பட்டார்கள். அதை நினைவுறுத்தும் முகமாக ஜ.நா. சபையால்1975ஆம் ஆண்டு ''மார்ச் 8"" உலகமகளிர் தினம் என்று அறிவிக்கப்பட்டு இன்றும்தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கிட்டத்தட்ட 50 கோடி பெண்கள் வாழும் நாடு இது. கல்வியிலும், திறமையிலும் ஆணுக்கு இங்கே சளைத்தவரில்லை பெண்கள். 2003 கணக்குப்படி அந்த 50 கோடி பெண்களில் பாதிப்பேர் படித்தவர்கள். 48.3% பெண்கள் கல்வியறிவு பெற்றவர்கள் என்பதும், அதில் 28% பேர் வேலையில் இருப்பவர்கள் என்பதும் பெண்ணின் பெருமைக்கு சான்று.

ஒட்டுமொத்தமாக மட்டுமல்ல, ஆறு கோடியை தாண்டிய தமிழகத்தின் ஜனத்தொகையிலும் பெண்களுக்கு பாதியிடம். அதிலே படித்தவர்கள் மட்டும் ஒரு கோடியே 77 லட்சம் பேர் என்பதும் பெண்களின் வளர்ச்சிக்கு ஆதாரம். இப்படி வளர்ச்சிப் பட்டியலில் போதிய இடம் பிடித்துவிட்ட பெண்களுக்கு இன்னுமா பிரச்னை?

இந்த கேள்விக்கு இந்த புள்ளிவிவரங்களே பொருத்தமான பதில்.

* ஒவ்வொரு 3 நிமிடங்களில் பெண்ணுக்கு எதிரான ஒரு குற்றம் பதிவாகிறது.

* ஒவ்வொரு 9 நிமிடங்களில் ஒரு பெண், கணவனாலோ அல்லது அவனது உறவினராலோ கொடுமைப்படுத்தப்படுகிறாள்.

* ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியில் ஒரு பெண் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறாள்.

* ஒவ்வொரு 53 நிமிடங்களில் பெண்ணுக்கு எதிரான ஒரு பாலியல் கொடுமை அரங்கேறுகிறது.

* ஒவ்வொரு 29 நிமிடங்களில் ஒரு கற்பழிப்பு சம்பவம் நடக்கிறது.

* ஒவ்வொரு 77 நிமிடங்களில் ஒரு வரதட்சணை மரணம் நிகழ்கிறது.

எனவே ஒரு பக்கம் வளர்ச்சி; மறுபக்கம் அதிர்ச்சி என்ற நிலையிலேதான் இன்றைய இந்தியப் பெண்களின் வாழ்க்கைப் பயணமும் தொடர்கிறது. கருவிலே தொடங்கிய கொடுமை, கல்யாணம் ஆன பின்னும் விடாமல் விரட்டுவதால் தான் பெண்களை பாதுகாக்க குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், 2005ல் கொண்டு வர வேண்டிய கட்டாயம் வந்தது. இந்த சட்டம் வந்த பிறகும் குற்றம் குறையவில்லை. 2006 நவம்பர் முதல் 2007 ஜூலை வரையிலான காலகட்டத்தில் மட்டும் 7,913 வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் 2006 அக்டோபரில் தான் இந்த சட்டத்தின் கீழ் முதல் வழக்கே வருகிறது. 2008 மே நிலவரப்படி 712 புகார்கள். அதில் தீர்வு காணப்பட்டவை 179 என்கிறது தமிழக புள்ளிவிவரம்.
 கருவிலே ஆணா, பெண்ணா என அறியும் முறை, குழந்தை திருமணம், கட்டாயக் கல்யாணம், கவுரவக் கொலை, வரதட்ணை பலி, குடும்ப வன்முறை மற்றும் பாலியல் பலாத்காரம்... பெண்களுக்கு எதிரான குற்றங்களை இப்படி வகைப்படுத்துகிறது பிரக்ஞா என்ற ஒரு அமைப்பு.
பெண் சிசுக் கொலை, கருவிலே கண்டுபிடித்து அழிப்பு என பெண் குழந்தைகள் ஒழிப்பிற்கு பல வழிமுறைகள். கள்ளிப்பால் கொலைகளை ஒழித்தால், அடுத்ததாக கருவில் இனம் கண்டுபிடிக்கும் கருவிகள் வந்தன. விஞ்ஞான வளர்ச்சியின் கண்டுபிடிப்பு கூட பெண்ணை கொல்லும் கருவிகளாகத்தான் உருமாறின. இந்த வகையில் மட்டும் இந்தியாவில் ஒரு கோடி பெண்களின் பிறப்பு தடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் அதிர்ச்சி தராமல் இருக்குமா?

சற்று பினோக்கி செல்வோம் ,

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கானகங்களில் சுற்றிக்கொண்டிருந்த குரங்கினங்களில் ஒன்று மனித இனமாகப் பரிணமித்த போது தோன்றிய முதல் மனித உயிர் ஆணல்ல, அது ஒரு பெண். ஆம்! அவள் தான் நமது மூதாய் என்று அறிவியல் உறுதியாகச் சொல்கிறது. நாகரிகம் தோன்றாத அந்தக் காலத்தில் வேட்டையாடிக் கொண்டு குகைகளில் மனித இனம் வாழ ஆரம்பித்தது. இந்த ஆதிப் பொதுவுடமைச் சமுதாயத்தில் பெண்ணே தலைமைப் பாத்திரம் வகித்தாள்; பெண்ணே வேட்டைக்குத் தலைமைத் தாங்கினாள்; பெண்ணே சமுதாயத்தை இயக்கினாள். படைத்து காத்து ரட்சிப்பது கடவுளல்ல, பெண் தான் என்பது அந்த காட்டுமிராண்டி மனிதர்களுக்கு தெரிந்திருந்தது.

காலங்கள் சென்றன, ஆரம்ப கால நாகரிகங்கள் உருவாகின. மனித அறிவின் வளர்ச்சியால் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வாழ் முறைகள் பெரும் மாற்றத்துக்குள்ளாயின. உற்பத்தியில் ஈடுபட்டு ஓரிடத்தில் நிலையாக வாழ ஆரம்பித்த மனித இனத்தில் தனியுடமைத் தோன்றிற்று, தற்கால குடும்ப முறையும் உருப்பெற்றது. இப்போது தலைமைப் பாத்திரம் பெண்களிடமிருந்து ஆணுக்கு மாறியிருந்தது. எனினும் பெண்கள் சமுதாயத்தில் அனைத்து நிலையிலும் பங்கு பெற்றனர். உலகின் முதல் விஞ்ஞானியானாலும், முதல் விவசாயி ஆனாலும் அல்லது உலகின் முதல் கவிஞர் ஆனாலும் சரி- அவர்கள் பெண்களாகவே இருந்தனர்.

அரசுகளும், மத நிறுவனங்களும் வளர்ச்சியடைந்த பின்னர் நிலை மாறியது. எங்கும் ஆண்களின் அதிகாரம் நிலைநாட்டப்பட்டது. பெண்ணினம் அடிமைப்படுத்தப்பட்டது, அனைத்து சட்டங்களும் கருத்தியல்களும் ஆண்களின் அதிகாரத்தை நிலை நிறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டன. அரசியல், சமுதாய, பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து பெண்கள் விலக்கி வைக்கப் பட்டனர். பெண்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு வீட்டுக்குள் முடக்கப்பட்டனர். இத்தடைகளை மீறி சிலர் உயர் நிலையை அடைந்தாலும் அவர்கள் விதிவிலக்குகளே. மனித இனத்தின் சரிபாதியான பெண்கள் இரண்டாந்திர குடிமக்கள் ஆக்கப்பட்டனர். இப்படியாக பல நூற்றாண்டுகள் கடந்தன.

ஐரோப்பிய கண்டத்தில் நிலவிய நிலவுடமை சமூக அமைப்பு அறிவியல் கண்டுபிடிப்புகளாலும் புதிய கடல்வழி கண்டுபிடிப்புகளாலும் மாற்றம் அடைந்தது. புதிய உற்பத்தி முறையுடன் முதலாளித்துவம் தோற்றம் பெற்றது. முதலாளித்துவ உற்பத்தி முறையில் தேவைபட்ட அதிக மனித உழைப்பை ஈடுகட்டவும், உழைப்புச் சுரண்டலின் மூலம் முதலாளிகளின் லாபத்தை அதிகரித்துக்கொள்ளும் பொருட்டும் தொழில்துறை உற்பத்தியில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு புறத்தில் இச்சுரண்டல் பெண்களுக்கு எதிராக இருந்தாலும் அன்றைய இறுகிய சமூக அமைப்பில் ஒரு தளர்ச்சியை/நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஐரோப்பிய மறுமலர்ச்சி சிந்தனைகளால் 15,16,17ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் பெரும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன, மனித உரிமைகள் பற்றிய சிந்தனை எழுச்சிப்பெற்றது.

பெண்களும் தம் தாழ்நிலைக்கு எதிராக, உரிமைக்கு குரல் கொடுக்க ஆரம்பித்தனர். கி.பி.1789ல் சுதந்திரம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற உரிமை முழக்கங்களுடன் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ், வெர்செயில்ஸ் ஆகிய நகரங்களில் பெண்கள் கிளர்ச்சியில் இறங்கினர். இந்தப் போராட்டமானது லூயி மன்னரின் அரசாட்சியையே முடிவுக்குக் கொண்டு வந்தது. அமெரிக்க சுதந்திரப் போரிலும் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருந்தனர். ஆனாலும், பெண்களின் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனினும் இப்போராட்டம் பல நாடுகளில் உள்ள பெண்களுக்கும் நம்பிக்கையையும் உரிமை வேட்கையையும் விதைத்தது.
 மேரி வோல்ஸ்டன் கிராப்ட்(1759-1797) என்ற பெண்ணுரிமைப் போராளி எழுதிய The Vindication Of the Rights of Women என்னும் புத்தகமும் ஜான் ஸ்டூவர்ட் மில்(1806-1873) என்னும் ஆங்கிலேய சிந்தனையாளர் எழுதிய The Subjection of Women என்னும் புத்தகமும் பெண்ணிய சிந்தனையில் புதிய அலையை உருவாக்கின.
 தொடர்ச்சியான பிரச்சாரத்தின் காரணமாக விழிப்புற்ற பெண்களால் இத்தாலி, அமெரிக்கா, பிரஷ்யா, கிரீஸ், ஆஸ்திரியா, டென்மார்க் என பல நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்தன. பிரஷ்யவில் பெண்களின் முழக்கத்தை கண்டு அஞ்சிய அரசன் 1848, மார்ச் 19ஆம் தேதியன்று பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் அரசவை ஆலோசனைக் குழுக்களில் பெண்களுக்கு பிதிநிதித்துவம் தரவும் ஒப்புக்கொண்டான். ஆனால் அதுவும் நிறைவேற்றப்படவில்லை.

1840ஆம் ஆண்டு லண்டன் மாநகரில் அகில உலக அடிமை ஒழிப்பு மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் உறுப்பினர்களாக பெண்களை சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் வெகுண்டெழுந்த பெண்ணுரிமை போராளிகள் 1848ல் நியூயார்க்கில் உள்ள செனீகா ஃபால்ஸ் என்னும் ஊரில் நடந்த மாநாட்டில் பெண்களின் உரிமை பிரகடனத்தை (Declaration of the Rights of Women) வெளியிட்டனர். இது பெண்ணுரிமை போராட்டங்களில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

அதில் ‘ஆண்களும் பெண்களும் இயற்கையில் சமமானவர்களாகவே படைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் மாற்றமுடியாத உரிமைகளைக் கடவுளின் மூலம் பெற்றுள்ளனர். இவ்வுரிமைகளுள், வாழ்விற்கும், சுதந்திரத்திற்கும், மகிழ்ச்சியுடன் இருப்பதற்கும் தேவையான உரிமைகளைப் பெறவே அரசாங்கம் என்னும் அமைப்பு ஆளப்படுபவர்களின் அனுமதியுடன் நிறுவப்பட்டுள்ளது..... இதுவரை அரசாங்கம் செய்த கொடுமைகளைப் பெண்கள் பொறுமையோடு அனுபவித்திருக்கின்றனர். இப்பொழுது அவர்கள் தங்களுக்குச் சம உரிமை கோரிப் போராட வேண்டியது அவசியமாகிறது.....பெண்ணின் வாழ்வெல்லைகள் விரிவாக்கப்பட வேண்டும். பெண் ஓட்டுரிமை பெறவேண்டும். மனித சம உரிமை எல்லா இன மக்களுக்கும் ஒரே விதமான திறமைகளும் பொறுப்புகளும் உள்ளன என்பதை அடிப்படையாகக் கொண்டது. பெண் ஆணுக்கு சமமான உரிமைகளையும் கடமைகளையும் பெறவேண்டும். இதற்கு எதிரானவை எல்லாம் மனிதனுக்கு எதிரானவை என்றும் தீர்மானிக்கிறோம். இந்த வெற்றியை ஆணும் பெண்ணும் சேர்ந்து உழைத்துப் பெற்று இருவரும் எல்லா நிலைகளிலும் பங்கு பெற வேண்டுமெனத் தீர்மானிக்கின்றோம்.’ என பிரகடனம் செய்தனர்.

1857ல் பருத்தி நூற்பாலைகளிலும், ஆடை உற்பத்தியிலும் ஈடுபடுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள், மோசமான பணிச் சூழல், மிகக்குறைந்த கூலி, தொழில் உரிமையாளர்களின் ஒடுக்குமுறை ஆகியவற்றை எதிர்த்து அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டமும் அரசாங்கத்தால் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டது.

அமெரிக்க நாட்டில் 1908ல் குறைந்த வேலை நேரம், நியாயமான கூலி, வாக்குரிமை ஆகியவற்றைக் கேட்டு மீண்டும் பெண்களின் போராட்டம் வெடித்தது. இது உலகமெங்கும் பெண்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. டென்மார்க்கின் கோபன் ஹேகன் நகரில் 1910ல் ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியின் பெண்கள் பிரிவு தலைவரான கிளார ஜெட்கின் தலைமையில் கூடிய பெண்கள் மாநாடு சர்வதேச மகளிர் அமைப்பைத் தோற்றுவித்தது. பெண்களுக்கு வாழ்வின் எல்லா தளத்திலும் சம உரிமைகள், பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை உலகத்தின் செவியில் ஓங்கி ஒலித்திடவும் தமது உரிமைகள் குறித்து பெண்களுக்கு நாடு, தேச எல்லைகள் கடந்து விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தவும் தமது ஒற்றுமையை காட்டும் விதமாக சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் போராளிகள் மனதில் உதித்தது.

அதன் விளைவாக 1911, மார்ச் 19ஆம் தேதியன்று ஜெர்மனி, டென்மார்க், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. ரஷியாவில் 1913ல் முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் கூடிய சர்வதேச மகளிர் பிரதிநிதிகள், ஆண்டு தோறும் மார்ச் 8ஆம் தேதியன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று தீர்மானித்தனர்.
 1917ல் மகளிர் தினத்தன்று ரஷிய ஜார் மன்னனுக்கு எதிராக உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில் தமது வாக்குரிமைக்காகவும், உணவுக்காகவும் போராட்டத்தில் இறங்கினர் 90,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும். இதில் வெற்றியும் பெற்றனர். இந்தப் போராட்டமே ரஷிய புரட்சிக்கு ஆரம்பமாகும். அடுத்த எட்டு மாதங்களில் ரஷிய புரட்சி வெற்றி பெற்றது. புதிதாக மலர்ந்த சோசலிஷ சோவியத் யூனியனில் பெண்களுக்கு முழுமையான வாக்குரிமை அளிக்கப்பட்டது. அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கேற்பு உறுதி செய்யப்பட்டது.

பல அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் படிப் படியாக வாக்குரிமைகள் பெண்களுக்கு வழங்கப்பட்டன.

உலகமெங்கும் தொடர்ந்து நடந்தப் போராட்டங்களின் பயனால் பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தமது உரிமைகளை மீட்க ஆரம்பித்துள்ளனர்.

மேற்கத்திய கல்வியின் விளைவாக இந்திய சமூகத்திலும் பெரும் விழிப்புணர்வு எற்பட்டது. ராஜாராம் மோகன் ராய், கேசவ சந்திர சென், மகாதேவ கோவிந்த ரானடே, ஈஸ்வர சந்திர வித்யாசாகர், பண்டித ரமாபாய், மகாத்மா பூலே முத்துலட்சுமி ரெட்டி போன்ற பல சிந்தனையாளர்களும் இந்திய பெண்களின் விடுதலைக்கு அளப்பரிய பங்காற்றியுள்ளனர். காந்தியடிகளும் பெண்களின் பங்கேற்பை பெரிதும் வலியுறுத்தியுள்ளார். அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளைப் பெற சட்டரீதியான அங்கீகாரத்துக்காகப் போராடினார் அண்ணல் அம்பேத்கர். முழுமையான பெண் விடுதலைக்கு இன்றும் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறன தந்தை பெரியாரின் சிந்தனைகளும் போராட்டங்களும்.

பெண்களின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு சம உரிமையை அங்கீகரித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை 1975ஆம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக அறிவித்து விழிப்புணர்வு பணிகளை முடுக்கிவிட்டது. 1960களில் எழுச்சி பெற்ற தீவிர பெண்ணிய சிந்தனைகளும் பெண்களுக்கான உரிமை போராட்டங்களுக்கு உத்வேகமளித்து வருகிறது.

பெண்களின் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. உலக அளவில் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துகளின் அளவு மொத்த மதிப்பில் 2 % க்கும் குறைவு; கருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்களின் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு பத்து லட்சம்; இந்தியாவில் ஒரு லட்சம் குழந்தைகள் பிறந்தால் 450 பெண் குழந்தைகள் கொல்லப்படுகின்றன; தலித் பெண்களில் எழுத்தறிவு பெற்றோர் வெறும் 7 % மட்டுமே; உலகம் முழுவதும் வீட்டிலிருக்கும் அதாவது சும்மா தமது வீட்டு வேலைகளை செய்யும் பெண்களின் பணியின் மதிப்பு அதாவது ஆண்டுக்கு 11 ட்ரில்லியன் டாலர்கள். இந்தப் புள்ளிவிவரங்கள் சொல்லும் செய்தி என்ன? நாம் பெண்கள் முன்னேற்றத்தில் நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது என்பதுதான்.

இன்று பெண்களின் நிலை
 பெண்கள் விஷயத்திலான பாகுபாடு குழந்தைப் பருவத்தில் தொடங்கி விடுகிறது. பள்ளி, உணவு, உடை, மருத்துவம் போன்ற விஷயங்களில் ஆண் குழந்தைகளுக்கு தரும் முக்கியத்துவம் பெண் குழந்தைக்கு இல்லை. வளர்ந்து விட்ட பிறகும், அவளது விருப்பத்திற்கு மதிப்பில்லை. அவளது உணர்வு, உள்ளம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் திருமணம் பேசப்படுகிறது. புகுந்த வீட்டில் பிரச்னை என்கிறபோது, ‘அட்ஜஸ்ட் பண்ணிப் போ’ என்ற அறிவுரை மட்டுமே தாய் வீட்டில் இருந்து கிடைக்கிறது. ‘கணவன் சாப்பாடு போடலியா? அட்ஜஸ்ட் பண்ணு, அடிக்கிறானா? அட்ஜஸ்ட் பண்ணு’... இப்படியே அமுக்கப்படுவதால், ‘எல்லாம் என் தலையெழுத்து’ என்று முடங்கிக் கொள்ளும் முடிவுக்கு வந்து விடுகின்றனர். இதெல்லாம் தலைவிதி அல்ல; அவளை பாதிக்கிற வன்முறை என்பதை என்றைக்கு உணரத் தொடங்குகிறாளோ அன்றைக்கு பெண்ணினத்திற்கு முழு விடியல் பிறக்கும் என்கிறார்.

47% பெண்களுக்கு கட்டாய கல்யாணம்

18 வயதுக்கு முன்பு பெண்களுக்குத் திருமணம் செய்வதை குழந்தைத் திருமணம் என்கிறது யுனிசெஃப் அமைப்பு. இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18, ஆண்களுக்கு 21. இதை மீறி சட்டப்படி சிறுவர்களாக உள்ளவர்களுக்கு, விருப்பத்துக்கு மாறாக கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. குடும்ப கவுரவத்துக்காகவும், குடும்பங்களின் ஒற்றுமைக்காகவும், வியாபார லாபங்களுக்காகவும் கட்டாயத் திருமணங்கள் நடக்கின்றன.

உலக அளவில் தெற்காசியப் பகுதியில்தான் அதிக அளவில் கட்டாயத் திருமணங்கள் நடக்கின்றன. கடந்த ஆண்டில் யுனிசெஃப் கணக்கெடுப்பின்படி, இந்தப் பகுதியில் 20&24 வயதுள்ள பெண்களில் 49 சதவீதம் பேருக்கு அவர்களின் 18 வயதுக்கு முன்பே திருமணம் நடந்துள்ளது. இந்தியாவில் இது 47 சதவீதம், அதுவும் கிராமப் பகுதிகளில் 56 சதவீதம்.

உலக அளவிலான கட்டாயத் திருமணங்களில், 40 சதவீதம் இந்தியாவில்தான் நடக்கின்றன. அதில் 10 சதவீத மணமகன்களுக்கு வயது ரொம்ப கம்மி.

இந்திய அளவில் 2005ல் 122 கட்டாயத் திருமணங்கள். 2006ல் 99, 2007ல் 96 பதிவாகியுள்ளன.

வரதட்சணை பலி உ.பி.யில் அதிகம்

புதிதாக திருமணமான பெண்களின் மரணங்களுக்கு, பெரும்பாலும் வரதட்சணை தான் காரணம். 97ம் ஆண்டில் 6,006 ஆக இருந்த வரதட்சணை சாவுகளின் எண்ணிக்கை, 2007ல் 8,093 ஆனது. கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் கொடுமை குறித்த வழக்குகள் 97ம் ஆண்டில் 36,592. இது 2007ல் 75,930 ஆக அதிகரித்தது.

நாட்டிலேயே அதிக அளவாக, உத்தரப்பிரதேசத்தில் 25.7 சதவீதம் வரதட்சணை மரணங்கள் நடப்பதாகவும், அதையடுத்து பீகாரில் 14.5 சதவீதம் நிகழ்வதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கலப்புத் திருமணம் - கவுரவக் கொலை

தனிப்பட்ட விருப்பத்தின்படி நண்பரையோ காதலரையோ கணவரையோ ஒரு பெண் தேடிக்கொள்ளும்போதும், குடும்பத்தினர் திணிக்கும் மாப்பிள்ளையை ஏற்க மறுக்கும்போதும், பெண்கள் மீது குடும்பத்தினர் தாக்குதலை நடத்துகிறார்கள். அது மரணத்தில் முடியும் எனத் தெரிந்தே நடத்தப்படுகிறது. வெறும் வறட்டு கவுரவத்துக்காக நிகழும் மரணங்கள்.

குடும்ப கவுரவத்தை மீறி, சாதி கடந்து திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் இந்த Ôகவுரவக் கொலை’க்கு இலக்கு ஆகியுள்ளனர். அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கம் நடத்திய ஒரு ஆய்வில், அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் மட்டும் நாட்டின் 10 சதவீத Ôகவுரவ கொலைÕகள் நிகழ்கின்றன என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் 60 சம்பவங்கள் நடந்துள்ளன.

பாலியல் பலாத்காரம் 733% அதிகரிப்பு

பாலியல் பலாத்காரம் அதிகரித்து வரும் குற்றம். பதிவான விவரங்களின்படி 1971ம் ஆண்டிலிருந்து 733 சதவீதம் அதிகரித்துள்ளது. 1997ல் 15,330 வழக்குகள். 2007ல் 20737 ஆக அதிகரித்தது. இதில் மத்திய பிரதேசத்திற்கு முதலிடம்.

இந்தியாவில் பாலியல் பலாத்காரக் குற்றவாளிகளில் 92.5 சதவீதம் பேர், பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தெரிந்த நபர்களாகவே இருக்கின்றனர். கொடுமைக்கு உள்ளாக்கப்படுவோரில் 9.5 சதவீதம் 15 வயதுக்கும் குறைவான சிறுமிகள். பாதிக்கப்பட்ட மற்றவர்களில் 15&18 வயதினர் 15.2 சதவீதம் பேர். இரண்டில் மூன்று பங்கினர் 18க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதினர் என்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

குற்றம் 2003 2004 2005 2006 2007
பாலியல் பலாத்காரம் 15847 18233 18359 19348 20737
கடத்தல் 13296 15578 15750 17414 20416
விபச்சாரத்திற்கு கடத்தல் 5510 5748 5908 4541 3568
வரதட்சணை பலி 6208 7026 6787 7618 8093
சித்ரவதை செய்தல் 50703 58121 58319 63128 75930
பாலியல் தொந்தரவு 32939 34567 34175 36617 38794
பாலியல் வன்முறை 12325 10001 9984 9966 10950
வரதட்சணை கொடுமை 2684 3592 3204 4504 5623
மொத்தம் 139512 152866 152486 166136 184051

தமிழகத்தில்...

குற்றம் 2007 2008 2009
பாலியல் பலாத்காரம் 523 573 596
வரதட்சணை பலி 208 207 194
பாலியல் தொல்லை 1558 1705 1242
பாலியல் வன்முறை 875 974 501
சித்ரவதை செய்தல் 1976 1648 1460
கடத்தல் 1097 1155 1133
வரதட்சணை கொடுமை 368 262 207

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் எண்ணிக்கை விவரம்:

2003 4952
2004 4833
 2005 5064
2006 3789
2007 6605
2008 6524
2009 5333

சாதி, இன, மத, மொழி ஒடுக்கு முறைகளை விடக் கொடியதும் அதிகம் பேரை பாதிப்பதும் இந்த பெண்களின் மீதான ஒடுக்குமுறை தான். மனிதர்கள் என்ற அளவில் சுய மரியாதை, சமூக மதிப்புடன் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு சுதந்திரம் பெற்று ஆண்களுக்கு நிகரான சம உரிமைகளுடன் சமமான வாழ்வு பெறும் போதுதான் மனித சமுதாயம் உயர்வடையும். இதற்கு உத்வேகமளிக்கக் கூடிய நாளாக சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ஆம் நாள் விளங்குகிறது.

“பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது” - தந்தை பெரியார் .

 அனைவருக்கும் என் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் !


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மனம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

திடீர் திருப்பம் உண்மை இல்லை நித்தியானந்தர் வீடியோ மூலம் விளக்கம் வெளியீடு !!!

உண்மை இல்லை என மறுக்கிறார் நித்தியானந்தர் ; ஆதரவு கதவும் திறக்கிறதாம்; வீடியோ மூலம் விளக்கம் வெளியீடு


தம் மீது வேண்டும் என்றே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நான் எந்த தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை. தவறான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆணித்தரமான ஆதாரங்களை திரட்டி வருகிறேன் என்றும் இதனை நான் மக்கள் முன் திறந்து வைக்கிறேன் என்றும் செக்ஸ் புகாரில் சிக்கிய நித்தியானந்தர் வீடியோ மூலம் செய்தி அனுப்பியுள்ளார். இவ்வளவு அவதூறு இருந்தும் இவருக்கு உலகம் முழுவதும் இருந்து பெரும் அளவில் ஆதரவு குவிந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நடிகை ரஞ்சிதாவுடன் இவர் இணைந்திருந்த காட்சிகள் டி.வி.,யில் ஒளிபரப்பான விஷயம் நாடு முழுவதும் உள்ள இவர்களது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர் எங்கே இருக்கிறார் என இரு மாநில போலீசார் இவரை >>>>

நித்யானந்ததுடன் பிரபல பாலிவுட் நடிகை வீடியோ காட்சி !!!


 1 .நித்யானந்ததுடன் பிரபல பாலிவுட் நடிகை வீடியோ காட்சி தற்போது இண்டெர்நெட்டில் வெளியிட இருப்பதாக தகவல்  !!!


2 .ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட்

கல்வி சேவைக்கு காலணி துடைக்கும் சமூக சேவகர் !!!

ஏழை மாணவர்களின் கல்வி சேவைக்காக காலணி துடைக்கும் சமூக சேவகரை பேரூராட்சி தலைவர், டி.எஸ்.பி., ஆகியோர் பாராட்டி கவுரவித்தனர். சென்னை பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். பட்டதாரியான இவர், இதே பகுதியில் அன்னை தெரசா மழலை பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். ஏழை மாணவர்களுக்கு சிறந்த கல்வி சேவையை வழங்கவேண்டும் என்ற உயரிய நோக்குடன் இக்கல்வி மையத்தை நடத்தி வருகிறார். >>>>

நித்யானந்தாவின் லீலைகள் நடிகைகள் பட்டியல் நீள்கிறது !!!

பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்த சாமியார் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொதிப்படைந்த பக்தர்கள், பல நகரங்களிலும் உள்ள அவரது ஆசிரமங்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பல இடங்களில் நித்யானந்தரின் உருவப் படங்களை செருப்பால் அடித்து கொளுத்தினர்.>>>>

பரபரப்பு மீண்டும் விமானம் மோதியது !!!

வானில் பறந்த 4 கிரண் ரக விமானங்கள் குட்டிகரணம் அடித்து சாகசம் செய்தன. அப்போது, அதில் ஒரு விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து
தலைகீழாக கீழே பாய்ந்தது. சாகச நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.விமானத்தை கட்டுப்படுத்த விமானியும், . >>>>



 




இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ....

நடிகை ரஞ்சிதாவுடன் காம லீலைகள் புதிய பூகம்பம் இன்னும் பல புகைப்படங்கள் சிக்கியது !!!

என்ன கொடுமை ஸார் இது ! .இப்பதாய்யா தெரியுது கடவுள் எதற்கு தலைமறைவாக இருக்கார் என்று !


இங்கே சொடக்கவும்


பிரபல நடிகையுடன் சுவாமி நித்தியானந்தா செக்ஸ் லீலை புகைப்படங்கள் !!!

என்ன கொடுமை ஸார் இது ! .இப்பதாய்யா தெரியுது கடவுள் எதற்கு தலைமறைவாக இருக்கார் என்று !
இங்கே சொடக்கவும்


நான் ரசித்த உண்டியல் பணம் !!!

தன் மகனை அழைத்த தந்தை, "நாம் இருவருமே இனிமேல் தவறு செய்யக் கூடாது. யார் எந்தத் தவறு செய்தாலும் அதற்கு அபராதமாக இந்த உண்டியலில் ஒரு ரூபாய் போட வேண்டும். அப்படிச் சேரும் தொகையைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட வேண்டும்" என்றார்.

மகனும் இதற்கு ஒப்புக் கொண்டான்.

அவரின் திட்டம் அப்படியே நடந்தது. திடீரென்று அவர் உடல்நிலை மோசம் ஆயிற்று. உண்டியலில் இருந்த பணத்தை எல்லாம் பிள்ளையார் கோயிலுக்குத் தந்துவிட்டு மருத்துவ மனைவில் சேர்ந்தார்.

மகனைப் பார்த்து, "நான் இல்லாத போதும் இந்தப் பழக்கத்தை விட்டு விடாதே. ஒரு தவறுக்கு ஒரு ரூபாய் உண்டியலில் போட்டுவிடு" என்றார்.

மருத்துவ மனையில் மூன்று மாதம் தங்கிய அவர் வீடு திரும்பினார். உண்டியலைத் திறந்து பார்த்தார். அதில் ஒரே ஒரு ரூபாய் தான் இருந்தது.

மகிழ்ச்சி அடைந்த அவர் தன் மகனை அழைத்தார்.

"இந்த மூன்று மாதத்தில் ஒரே ஒரு தவறு தான் செய்தாயா?" என்று கேட்டார்.

"இல்லை அப்பா! உண்டியலில் முந்நூறு ரூபாய் பணம் சேர்ந்தது" என்றான் அவன்.

"அந்தப் பணத்தைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட்டாயா?" என்று கேட்டார் அவர்.

"அப்பா! உண்டியலைத் திறந்து அந்தப் பணத்தை நானே எடுத்துக் கொண்டேன். அந்தத் தவறுக்காக நீங்கள் சொன்னபடி ஒரு ரூபாயை உண்டியலில் போட்டு விட்டேன்" என்றான் அந்த கெட்டிக்கார மகன்.


ஏலே மக்கா இப்படியெல்லாம் கோபத்தோட பார்க்கக்கூடாது . இப்ப யார் யாரெல்லாம்  உண்டியல் பணத்தை திருடுனீங்க. யார் யாரெல்லாம்  உண்டியலையே திருடுனீங்க என்று மறுமொழியில்  சொல்லிட்டு போங்கல .  .
 
ஏய் , ஏய் ,ஏய், ஏய் ராஸ்க்கல் என்ன இது சின்னபுள்ளத்தனமாவுல இருக்கு பதிவ படிச்சுட்டு ஓட்டு போடாம போனா எப்படி ஒழுங்கா இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் இல்லைனா அழுதுடுவேன் ஆமா ..........

சூரியன் யாருக்கு சொந்தம் !!!

பக்கம் பக்கமா எழுதினா யாரும் பார்க்காமலே போய்விடுகிறார்கள் .அதனால் இன்னைக்கு குட்டியா ஒரு பதிவு எழுதலாம் என்று தோன்றியது .அதற்குத்தான் இப்படி ஒரு பதிவு . பலருக்கு தெரிந்த சில நிகழ்வுகளும் , செய்திகளும் சிலருக்கு தெரிவதில்லை . இதைவிட சென்று அடைவதில்லை என்றுதான்  சொல்லவேண்டும் . சரி அதுபோல் நாமும் அப்படியே இருந்தால் எப்படி அதுதான் தெரிந்த விசயம் என்றாலும் மீண்டும் எழுதுவோம் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளக் கூடும் அல்லவா . இனி விசயத்திற்கு வருகிறேன் .
ஒரு பேருந்து நிறுத்தத்தின் அருகில் இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள் . நான் ஒருவேலையாக  அந்த சாலையை கடந்து போய்க்கொண்டிருந்தேன் . திடீர் என்று அவர்கள் இருவருக்கும் சண்டை வந்துவிட்டது . எனக்கு ஒரே குழப்பம் இப்பொழுதுதான் இருவரும் நன்றாக பேசிக்கொண்டிருந்தார்கள் . திடீர் என்று என்னாகி இருக்கும் என்று. சரி அவர்களிடமே கேட்டுவிடலாம் என்று இருவரையும் சமாதானப்படுத்தி கேட்டேன் என்ன விசயம் எதற்காக சண்டை அடித்துகொள்கிறீர்கள் என்று . அப்பறம்தான் விசயம் தெரிந்தது அவர்களின் சண்டைக்கு காரணம் சூரியன் யாருக்கு சொந்தமென்பதில் என்று . என்னடா சூரியனுக்கும் இவர்கள் சண்டைக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்க நினைப்பதுபோலவே நானும் அவர்களிடமே கேட்டேன் என்னவென்று . அதற்கு அதில் ஒருவன் சொன்னான் சூரியன் எங்க கன்னியாகுமரி கடலில் இருந்துதான் வருகிறது முதலில் நாங்கள்தான் பார்க்கிறோம் . அதனால் எங்களுக்குத்தான் முதல் சொந்தம் என்றான் . அப்பொழுதே எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது .அவசரப்பட்டு சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டோமோ என்று .சரி மாட்டியாது மாட்டிக்கொண்டோம் . அடுத்தவன் என்ன சொல்கிறான் என்று அதையும் கேட்டுவிடுவோம் என்று தோன்றியது . அவனிடம் கேட்டேன் அதர்க்கு அந்த அறிவாளி சூரியன் வருவதும் மறைவதும்தான் உங்க கன்னியாகுமரி கடலில் இருந்துதான் அது மறைந்ததற்கு பின்பு தினமும் இரவு எங்க ஊரில்தான் உறங்குகிறது .அதனால் எங்களுக்குத்தான் அதிக சொந்தம் என்றான் . அப்பொழுதே எனக்கு தோன்றிய சிறிய சந்தேகம் தெளிவாகிப்போனது .அப்பறம் அவனுங்க ரெண்டுபேரும் சேர்ந்து ஒரே நேரத்தில் என்னிடம் கேட்டார்கள் நீங்களே சொல்லுங்க ஸார் எனக்குத்தானே சொந்தம் என்று ??????????? . அப்பறம் என்னங்க எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்குறான்டா? இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிவிட்டு. வாட மாப்ள அடுத்த தெருவுக்கு போவோம் என்று போய்ட்டாங்க .அன்னைக்கு முடிவு பண்ணினேன் . சூரியன் என்ற வார்த்தையைக்கூட வாசிக்கக்கூடாது என்று . ஆனால் பாருங்க இப்ப அந்த சூரியன் பற்றியே பதிவு போடவேண்டிய நிலை வந்துவிட்டது .
நமது நாட்டில் சூரிய உதயத்தை முதலில் காண்பவர்கள் அருணாச்சலப்பிரதேச மக்கள் தான். நமது நாட்டின் கிழக்கு விளிம்பில் அமைந்துள்ள அருணாச்சலப் பிரதேசம், 97 டிகிரி தீர்க்க கோட்டில் அமைந்துள்ள மாநிலம் ஆகும். மேற்கு விளிம்பில் குஜராத் அமைந்துள்ளது. அதாவது 68 டிகிரி தீர்க்க கோட்டில் அமைந்துள்ளது.இந்த இரு மாநிலங்களுக்கு இடைப்பட்ட 29 தீர்க்க கோடுகளை கடக்க சூரியன் 1 மணி 56 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றது.

என்னைப்போல் நீங்க யாரும் மாட்டிக்கொள்ள கூடாது பாருங்க அதுக்குத்தான் இந்த தகவல் . சரி இனி உங்க கருத்துக்களை மறக்காமல் மறுமொழியில சொல்லலாம் .



யார் அங்கே! ராஸ்க்கல் என்ன இது சின்னபுள்ளத்தனமாவுல இருக்கு பதிவ படிச்சுட்டு ஓட்டு போடாம போனா எப்படி ஒழுங்கா இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் இல்லைனா அழுதுடுவேன் ஆமா ..........

தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் !!!

இன்றைய நிலையில் அறிவியலின் வளர்ச்சி ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சாதனைகளை சாதாரணமாக நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம் . இந்த அறிவியலின் அதிசயங்களையும் பிணுக்குத் தள்ளும் இயற்கையின் இயல்பான சில நிகழ்வுகளும் அவ்வப்பொழுது யாரும் எதிர்பாராமலே நடந்துவிடுகிறது . அந்த வகையில் ஒரு புதிய அதிசய நிகழ்வு விரைவில் வர இருக்கிறது இதுநாள் வரை தங்கம் , வைரம், வெ‌‌ள்‌ளி என்று பல நகைகளை நம்மை அழகுபபடுத்துவதற்காக பயன்படுத்தி வந்தோம் . ஆனால் இப்பொழுது அந்த அபரணங்களுக்கு விடுமுறைக்கொடுக்கும் தூரம் மிக அருகில் வந்துவிட்டது .

த‌ங்க‌‌ம், வெ‌‌ள்‌ளி, வைர நகைகளை இ‌னி மற‌ந்து விடு‌‌ங்க‌ள். விரைவில் வெளியாகவிருக்கும் பு‌‌திய வகை ஆபரண‌ங்க‌ள் உ‌ங்களை மேலு‌ம்
ஜொ‌லி‌க்க வை‌க்கும் அதிசய நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது . ஆம். தா‌ய்‌ப்பா‌லி‌‌ல் இரு‌ந்து நெக்லஸ், பிரேஸ்லெட் என்று 70 வகையான ஆபரணங்களை தயாரிக்க முடியும் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது .

ல‌ண்ட‌னி‌ல் உ‌ள்ள நகை தயா‌‌ரி‌க்கு‌ம் குழு ஒன்று, தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்களை தயாரிக்கும் வித்தைகளை செய்து காண்பித்துள்ளது.

இந்த சாதனையின் முதல் முதல் தயாரிப்பாக இ‌ந்தக் குழு 'பா‌ல் நெ‌க்ல‌ஸ்'-களை‌த் தயா‌ரி‌‌த்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளனர் . இதை அடுத்து அந்த குழுவின் அறிக்கையில் .

‌பிரே‌ஸ்ல‌ெ‌ட் மற்றும் 70 பிறவகை ஆபரணங்களையும் இ‌ந்த ஆ‌ண்டு இறு‌திக்குள் தயாரிக்க இரு‌ப்பதாக அக்குழுவினர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

தா‌ய்‌ப்பாலுடன் ‌‌வி‌னிகரைச் சேர்த்து (அ‌சி‌‌ட்டி‌க் அ‌மில‌ம்) ந‌ன்கு கொ‌‌தி‌க்க வை‌ப்பத‌ன் மூல‌ம் பா‌லி‌ல் உ‌ள்ள கே‌சி‌ன் புர‌த‌ம், இ‌ந்த கலவையை

‌பிளா‌ஸ்டி‌க் போ‌ன்று மா‌ற்றி விடுகிறது. ‌பி‌ன்ன‌ர் அதில் வண்ணம் பூசி (பெயிண்ட்) நாம் விரும்பும் வடிவில் அல்லது அச்சுகளில் ஊற்றி ஆபரணங்களாக மாற்றுகிறார்களாம்.

பிளாஸ்டிக் போன்ற தன்மை கொண்டிருப்பதால், அழ‌கிய வடி‌வி‌ல் நகைகளாக மா‌ற்‌றி விடுகிறார்களாம்.


தாய்ப்பாலை உபயோகித்து `குழந்தைகளின் தலை' போன்ற வடிவிலான நெக்லஸில் அணியக்கூடிய பதக்கம் (டாலர்) ஒன்றையும், தாய்ப்பாலுடன் உலோகத்தைச் சேர்த்து பிரேஸ்லெட் ஒன்றையும் பிரான்ஸ் நாட்டு நகை வடிவமைப்பாளர்கள் ஏற்கனவே உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இ‌துபோ‌ன்ற நகை வடிவமை‌ப்பை அவ‌ர்க‌ள் "பா‌ல் மு‌த்து‌" (milk pearl), எ‌ன்று கு‌றி‌ப்‌பிடு‌கி‌றார்கள். இந்த முறையில் உருவாக்கப்பட்ட ஆபரணங்களை செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் கண்காட்சியில் அவர்கள் வைக்க உள்ளார்களாம்.

என்றாலும், தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் உருவாக்கம், வர்த்தகரீதியில் இன்னமும் செயல்படுத்தப்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்று சொல்லலாம்.



ஒரு வழியா பதிவு போட்டாச்சு . ஏலே மக்கா அடுத்து நீங்கதான் . பதிவு பிடித்து இருந்தாலும் , இல்லாவிட்டாலும் உங்க கருத்துக்களை மறக்காமல் மறுமொழியில் சொல்லிட்டுப்போங்கல .


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

உலக அரங்கில் லஞ்சமாய் இந்தியா !!!

சாதனைகள் பல செய்தும் இன்னும் உலக அரங்கில் சரிந்த நிலையில் நம் நாடு ஏன் இருக்கிறது என்று எப்பொழுதாவது நாம் சிந்தித்தது உண்டா . நமது வேலைகளை நாம் பார்ப்பதற்கே நேரம் இல்லை நமக்கு எதற்கு இந்த தேவையற்ற வேலை என்று பலரும் சலித்துகொள்வதும் உண்டு . ஆனால் இந்த சரிவுக்கு முக்கிய காரணம் நாம்தான் . என்னடா இவன் இப்படி ஒரு குண்டை தூக்கிப்போடுகிறானே என்று என்ன வேண்டாம் .இதுதான் உண்மை .
அணுகுண்டு வைத்திருக்கிறோம், ஆஸ்கர் விருது பெற்றுள்ளோம், ஆண்டுக்கு ஏழெட்டு சதவீத பொருளாதார வளர்ச்சி காண்கிறோம், ஐந்து வருடத்துக்கு ஒரு தடவை தேர்தல் நடத்தி அதிசயிக்க வைக்கிறோம்.. ஆனாலும் ‘இந்தியா லஞ்ச ஊழலில் திளைக்கும் நாடு என்றுதான் உலகமும் பார்க்கிறது. இந்த அவமானம் நம்மை விட்டு போவேனா என்கிறது. உலக அளவில் 180 நாடுகளில் நடத்திய ஆய்வில் இந்தியா 84வது இடத்தில் இருக்கிறதாம். ஓட்டப் பந்தயத்தில் அத்தனாவது இடத்தில் வந்தால் வேடிக்கை பார்க்கக்கூட எவரும் மிச்சமிருக்க மாட்டார்கள்.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த ஆய்வை நடத்துகிறது. சென்ற ஆண்டு நமக்கு 85ம் இடம். அதற்கு முன்னால் 72. நாடாளுமன்ற வாக்கெடுப்பில் கத்தை கத்தையாக கரன்சி நோட்டுகள் கைமாறிய விவகாரத்தால் தடாலென்று 13 படி சறுக்கினோம். அரசு துறைகளில் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வேலைகள் எப்படி முடித்துக் கொடுக்கப்படுகிறது என்பதை அளவுகோலாக வைத்து ஆய்வு நடத்தப்படுகிறது. அதில் மொத்தம் 13 குறியீடுகள். அதிகாரிகளின் நேர்மை ஒரு குறியீடு. லஞ்சம் வாங்காமல் வேலையை முடித்து தருவதாக ஆய்வில் பங்கேற்ற அனைவரும் தெரிவித்தால் முழு மதிப்பெண் போடப்படும். இந்த விஷயத்தில் இந்தியா பெற்றுள்ளது 10க்கு 3.4 மட்டுமே. பக்கத்தில் உள்ள குட்டி நாடு பூடான் 5 மார்க் வாங்கியுள்ளது. தனியார் துறை ஊழல்கள் இந்த கணக்கில் வராது. உலகிலேயே லஞ்சம் குறைந்த நாடு நியூசிலாந்து. அடுத்து டென்மார்க், அப்புறம் சிங்கப்பூர். இம்மூன்றும் 9க்கு மேல் பெற்றுள்ளன. இந்தியாவில் லஞ்சம் தலைவிரித்து ஆடும் துறைகளில் முதன்மையானது காவல் துறை.
லஞ்சம் குறைந்தது பள்ளிக் கல்வித் துறை. ஊழல் மிகுந்த மாநிலம் என்ற பெருமையை பெறுவது பீகார். அடுத்து வருவது காஷ்மீர், மத்திய பிரதேசம். அரசுப் பணிகளை கணினி மயமாக்கியதால் லஞ்சம் பெரிய அளவில் குறைந்துவிடவில்லை என்று அகமதாபாத் IIM நடத்திய ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. ஏனென்றால் அந்த கணினிகளை கையாள்வது மனிதர்கள். அவர்களுக்கு பதில் ரோபோக்களை நியமித்து அரசு எந்திரத்தை உண்மையிலேயே எந்திரமாக்கினால் இந்தியாவும் அதிக மதிப்பெண் பெற வாய்ப்பு இருக்கிறது..

நமது உரிமைகளையே பெறுவதற்கு லஞ்சம் கொடுக்கும் அளவில் ஒரு நாடு சீரழிந்திருந்தால் அப்போது நம் உரிமையைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுப்பது சில வேளை நிர்ப்பந்தமாகி விடுகிறது. இது போன்ற நிலையை அடைவோர் தங்களின் உரிமையைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்தால் அது மன்னிக்கப்படும்.

நமது முன்னால் குடியரசு தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் ஒரு முறை மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நடந்த உரையாடல் நினைவிற்கு வருகிறது
அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளில் ஒரு அறிவியல் புரட்சி ஏற்படும். அப்போது பயோ டெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி, நானோ டெக்னாலஜி ஆகியவை சேர்ந்து ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்தக் காலத்தில் லஞ்சம், பெருமளவு பெருகி விட்டது. எந்த அளவுக்கு எனில் சில ஊழியர்களுக்கு அவர்களுடைய ஊதியத்தை விடக் கூடுதல் வருமானமாக லஞ்சம் ஆகிவிட்டது. அதுமட்டுமல்ல பல கம்பெனிகளுடைய வரவு, செலவு கணக்கு (பட்ஜெட்)களில் பல்வேறு (மறைமுகமான) பெயர்களில் லஞ்சம் கொடுக்கல், வாங்கல்கள் பதிவு செய்யப்படுகிறது. பெரும்பாலான கொடுக்கல், வாங்கல்கள் எப்படி மாறி விட்டன என்றால் அவை ஆரம்பமாவதும் லஞ்சம் மூலமாகத்தான் முடிவதும் லஞ்சம் மூலமாகத்தான். அதனால் ஏழைகள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகின்றனர். இதனால் (மனிதர்களிடம் ஒப்படைக்கப்பட்ட) பல்வேறு பொறுப்புகள் பாழாகி விட்டன. தொழிலாளிகள் கெட்டுப் போவதற்கும் அதனால் முதலாளிகள் நஷ்டம் அடைவதற்கும் இதுதான் காரணம். அது மட்டுமல்ல லஞ்சம் கொடுப்பவருக்குத் தான் வேலை சிறப்பாக முடித்துக் கொடுக்கப்படுகிறது. எவர் லஞ்சம் கொடுக்கவில்லையோ அவருடைய வேலை சிறப்பாக முடித்துக் கொடுக்கப்படுவதில்லை. அல்லது அவருடைய வேலை தாமதப்படுத்தப்படுகிறது.

நமது நாட்டை லஞ்சம் இல்லாத நாடாக உருவாக்க முடியும். நமது நாட்டில் 100 கோடி பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 20 கோடி வீட்டில் இருப்பார்கள். அப்படி என்றால் ஒரு வீட்டில் 5 பேர் இருப்பார்கள். அனைத்து வீட்டிலும் லஞ்சம் வாங்குபவர்கள் இருக்க முடியாது. 50 சதவீதம் அதாவது 10 கோடி வீட்டில் லஞ்சம் வாங்கும் தாயோ அல்லது தந்தையோ அல்லது வீட்டில் உள்ள யாராவது ஒருவர் ஊழலில் மாட்டிக் கொண்டு இருப்பார்கள்.
துரதிர்ஷ்டவசமாக அப்படிப்பட்டவர்கள் உங்கள் வீட்டில் இருந்தால் தாய் அல்லது தந்தையிடம் லஞ்சம் வாங்காதீர்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? (மாணவர்கள் முடியும் என்றனர்). முடியும். வெரிகுட்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை பார்த்து கேட்கிறேன். நீங்கள் நல்லவராக இருப்பீர்கள். துரதிர்ஷ்டவசமாக உங்களது குழந்தை வந்து அப்பா லஞ்சம் வாங்காதீர்கள் என்று சொன்னால் நீங்கள் கேட்பீர்களா? (கூட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் கேட்போம் என்றனர்) கேட்பீர்கள். அப்படியானால் இன்னும் 5 ஆண்டுகளில் லஞ்சம் இல்லாத இந்தியா மலரும்.

ஒவ்வொரு குடிமகனும் லட்சிய சிகரத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளோடு இருக்க வேண்டும். பள்ளிப்படிப்பு படிக்கும் மாணவர்களாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்க வேண்டும்.

வந்திருக்கும் மாணவர்களில் எத்தனை பேர் அரசியல் தலைவர்களாக வர விரும்புகிறீர்கள்? கையை உயர்த்துங்கள். (7 மாணவ- மாணவிகள் கையை உயர்த்தினர்) உயர்த்தியவர்களில் 3 பேர் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். ஏன் அரசியல் தலைவராக ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? என்று அவர் கேட்டார்.

அதற்கு பதில் அளித்த மாணவிகளில் ஒருவர், "குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்க முடியாமல் கஷ்டப்படும் சிறுவர்களை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அரசியல் தலைவராக ஆகவேண்டும் என்று விரும்புவதாக'' பதில் அளித்தார்.

அந்த மாணவியை பார்த்து உனக்கு 100 மார்க் என்று ஜனாதிபதி அப்துல் கலாம் கூறி பாராட்டு தெரிவித்தார்.

எப்பொழுதோ பார்த்த இந்தியன் படத்தில் சொல்லும் ஒரு கருத்து இப்பொழுது எனக்கு ஞாபகம் வருகிறது . வெளி  நாடுகளில் நான் லஞ்சம் யாரும் வாங்கவில்லை என்று சொல்லவில்லை . வாங்குகிறார்கள் . அவர்கள் எல்லோரும் தங்கள் பணியை மீருவதற்கு லஞ்சம் வாங்குகிறார்கள் . ஆனால் நமோ நமது பணிகளை செய்வதற்கு லஞ்சம் வாங்குக்கிறோம் .இதுதான் நூற்றுக்கு நூறு உண்மை .அதனால்தான் இன்னும் அடிப்படை தேவைகளுக்குக் கூட கை ஏந்தும் நிலை நமது நாட்டில் . இந்த நிலை இன்னும் நீடித்தால் உலக அரங்கில் நமது நாடு மக்கள் தொகையில் முதல் இடம் பிடிக்கிறதோ இல்லையோ அதற்கு முன்பாக லஞ்சத்தில் முதல் இடம் பிடித்துவிடும் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்றாகிப்போகலாம் .

ஒரு வழியா பதிவு போட்டாச்சு . ஏலே மக்கா அடுத்து நீங்கதான் . பதிவு பிடித்து இருந்தாலும் , இல்லாவிட்டாலும் உங்க கருத்துக்களை மறக்காமல் மறுமொழியில் சொல்லிட்டுப்போங்கல .

இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........
 
 
 


சின்ன பய சின்ன பொன்ன காதலிச்சா !!!


  சில மாதங்களுக்கு முன்பு நண்பர் அறிவுமதி எழுதிய காதலை பற்றிய சில விசயங்கள் என்னை மிகவும் கவர்ந்தது சரி அதைப் பற்றி நானும் ஒரு பதிவு எழுத வேண்டும் என்று வெகு நாட்களாக ஆசைதான் இதோ ஒரு கவிதையுடன் தொடங்குகிறேன் . ஏலே இதை கவிதை என்று நாங்க சொல்லணும் என்று சொல்றது நல்லாவே கேக்குது மக்கா பிடித்து இருந்தாலும் இல்லாட்டியும் எப்பவும் வழக்கமா பண்றது போல உங்க விருப்பத்திற்கு உங்க கோபத்தை மறுமொழியில காட்டலாம்கோ .

மீண்டும் ஒரு ரோஜாவை
கொல்ல விருப்பம் இல்லை
.ஒவ்வொரு வருடமும் உனக்காக
எழுதி எழுதி கொடுக்காமல் மறைத்த
கடிதத்தில் உள்ள வார்த்தைகளுக்கு எல்லாம்
கண்டிப்பாக வயதாகி இருக்கக்கூடும் .

உனக்கா என்று சொல்லி சொல்லி
வாங்கிய ரோஜா பூக்களின் மரணத்திற்கு
எல்லாம் நம்
காதலும் ஒரு காரணம்தான் .

நேற்று
உன் அனுமதி இன்றி காதலித்தேன் ஆனந்தம்.
ஆனால்
இன்றும் உன் அனுமதி இன்றியே காதலிக்கிறேன்
சற்று வருத்தம் .
நாளையும் உன் அனுமதி இன்றியே காதலிப்பேனோ ?
சற்று பயம் .
நாளை மறுநாள் உன் அனுமதி பெற முயற்சித்து
நீ மறுத்துவிட்டால் இதைவிட வேதனை
வேறு ஒன்றும் இல்லை .
உன் அனுமதி இன்றியே காதலித்துக்கொண்டிருக்கிறேன்
உன் அனுமதி பெற முயற்சித்து தோற்றவானாய்

இனியும் அந்த அவல நிலை வேண்டாம் .
இதோ இன்று காதலர் தினம்
என் அன்னைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை .
பாதி தூக்கம் தொலைத்து
பாதி ஏக்கம் நிரப்பி
பாதி பல் துளக்கி
பாதி குளித்தும் குளிக்காமல்
 பாதி உணவு உண்டும் உண்ணாமல்
பாதி தலை வாரியும் வாராமல்
பாதி ஆடை அணிந்தும் அணியாமல்
பாதி புத்தகம் எடுத்தும் எடுக்காமல்
இப்படி அவசர அவசரமாக கிளம்பிக்கொண்டு இருக்கிறேன்
பேருந்து நிறுத்துமிடம் நோக்கி .

அன்னை சொன்னாள்
இன்னும் உன் பேருந்து வர நேரம் உள்ளது .
எதற்கு இவளவு அவசரம் என்று !
எப்படி சொல்வேன் ? அவள் வந்து வெகுநேரமாகிவிட்டதை
அன்னையாகிய உன்னிடம்
.காதல் – கொடுப்பதன்று. எடுப்பதன்று. ஈர்த்துக் கவிழ்ப்பதன்று. மடக்குதல் அன்று. மடங்குதல் அன்று. எதிர்பார்த்த வெறியில்… எதிர்பாராத சொடுக்கில் கிடத்துதல் அன்று. இரக்கத்தில் கசிந்து இருளில் தேங்குதல் அன்று.

என் பேனாவிலும்
மை உண்டு
நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…
நீ இன்னும்
எழுதிக் கொண்டிருக்கிறாய்.

தேடல்கள்… தம் காத்திருத்தலின் தற்செயல் நிமிடத்தில் திகைத்துச் சந்தித்து… உள்திரும்பித் திருப்தியுறுவது. இரு ஞாபகங்கள் விரும்பி, ஒற்றை மறதிக்குள் அமிழ்வது.

அதை அறிய மனசு பூத்திருக்க வேண்டும். நிலா… மொட்டின் மீது வழிந்து விடுகிறது. பூதான் விந்துவாய் வாங்கிக் கொள்கிறது. காதலை வாங்கிக் கொள்ள எத்தனை பேருக்கு வாய்க்கிறது? காதலால் வாழ்ந்துகொள்ள எத்தனை பேருக்கு நேர்மை இருக்கிறது?

அது ஆணுக்கும் பெண்ணுக்குமாக நிகழ்வதா? ஆணுக்குள் இருக்கிற பெண்ணுக்கும் பெண்ணுக்குள் இருக்கிற ஆணுக்குமாக… எதிரெதிர் கண்ணாடிக்குள் நீளும் தொடர் பதிவுகளாய் நிகழ்வது.

அஃறிணையில் உயிரோட்டமாக இருக்கிற அது… உயர்திணையில் வெறும் உடலோட்டமாகி விடுகிறது. கற்பிதங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிற சமூக விலங்குகளுக்குக் கூண்டின் கூரைதானே வானம்! வானமற்றுப் போன வாழ்வில் சிறகுகளின் பாடல்கள் ஏது?

இந்தப் பிறவியில் சேர முடியாவிட்டால் என்ன… அடுத்தப் பிறவியில் சேர்ந்து வாழ்வோம் என்பதுவும்…உடல்களால் இணையாவிட்டால் என்ன… உயிர்களால் இணைந்து வாழ்வோம் என்பதுவும் ஏமாற்று. பொய்!

அது உடல் கடந்து நடப்பதா? உடல்களால் நடப்பது. சம அதிர்வுகளாலான மின்சேர்க்கை அது.
உடல்தொட்டதும் காதலை இழந்துவிடுகிறவர்கள் அதிகம். காதலைத் தொட்டு உடலை அடைபவர்கள் குறைவு – மிக மிக குறைவு.

ஸ்பரிசமும்…புணர்தலும் காதலின் நெருங்கிய மொழிகள். அவற்றைப் பேசாதே எனச் சொல்லும் தத்துவங்கள் யாவும் பொய் பேசும். வாழ்வின் வழிகள் முறித்துக் குளிர்காய்கிற எந்தச் சடங்கும் காதலைச் சிதைக்கும். பொருந்த நெருங்கும் முழுமைக்குள் சந்தேகங்கள் திணித்துச் சிரமம் செய்யும்.

அதனால்தான்… அடிமைச் சமூக அமைப்பில் வரலாற்று வழிநெடுக வாழ்ந்து பழகிவிட்ட நமக்கு, வாழ்க்கை மட்டுமல்லாது காதலும் போராட்டமாகிவிட்டது. அடுத்தவர்களிடமிருக்கிற நம்மை மீட்பதும்…நமக்குள் இருக்கிற அடுத்தவர்களை வெளியேற்றுவதுமான சிக்கல்கள் நிறைந்த போராட்டமிது!

இத்தகைய நெருடல்கள் நிறைந்த வாழ்வில்… காதலைச் சந்தித்ததாக யாரேனும் கூறினால் நம்ப மாட்டேன்! காதலிகளைச் சந்தித்திருக்கலாம். காதலன்களைச் சந்தித்திருக்கலாம். காதலை மட்டும் சந்தித்திருக்கவே முடியாது!

சூழ்ந்தார் துயரங்களை வீழ்த்தி எழாத எவருக்குள்ளும் காதல் எழாது – எழ முடியாது. காதலைப் போல ஒன்று எழலாம். அதுவே காதல் ஆகாது.

காதலென்பது என்ன… இழந்துவிட்டு வருந்துவதா? பிரிந்துகொண்டு அழுவதா? இல்லை…இல்லை.. ‘காதல்… காதல்… காதல்… காதல் போயின் சாதல்… சாதல்… சாதல்…’ சொன்ன பாரதியின் காதல் என்ன ஆனது? அவனது தொகுப்பில் பதினாறு விருத்தங்கள் ஆனது. ஆனாலும் சொல்கிறேன்…அவனது பிள்ளைக் காதல்தான் அவனைப் பிரபஞ்ச காதலனாக்கியது. அந்தத் தனிமனிதனை அதுதான் சமூக மனிதனாக்கியது. அதுதான் அவனிலிருஎந்து எழுந்து இன்னும் நித்திய நெருப்பாக நின்று எரிகிறது. அவனது போராட்ட உணர்வுக்குள் ஒன்பது வயதுச் சிறுமி ஒருத்தி ஊடுருவியிருக்கிறாள் என்கிற உண்மையை உணர்ந்தவர்களுக்குத் தான் தெரியும் – காதலின் பெருமை!

என்னை
எல்லோருக்கும்
பிடித்திருக்கிறது.
அவனையும்
எல்லோருக்கும்
பிடித்திருக்கிறது.
எங்களைத்தான்
யாருக்குமே
பிடிக்கவில்லை

மற்றபடி இங்கே காதல் கடிதங்கள் எழுதிக் கொள்பவர்களையும்… பரிசுப் பொருட்களை மற்றிக் கொள்பவர்களையும்.. எச்சில் இனிப்புகளை ருசிபார்ப்பவர்களையுமா காதலர்கள் என்கிறீர்கள்?

ஸ்கூட்டரில் அணைத்துப் போவதையும்… திரையரங்குகளில் உரசிப் படம் பார்ப்பதையும்…கடற்கரை இருளில் மடியில் படுத்துக் கிடப்பதையும் காதல் என்று நம்பச் சொல்கிறீர்கள்?

காதலின் எல்லை திருமணம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளவும் உரத்துச் சொல்லவும் இங்கே எத்தனை பேருக்குத் தெம்பு இருக்கிறது? தம் காதலை வெற்றி கொள்ளவும் தம் பிள்ளைகளின் காதலுக்கு வரவேற்புச் சொல்லவும் இங்கே எத்தனை பேருக்குப் பக்குவம் இருக்கிறது?

அதற்குக் காரணம் அவர்களல்ல; நீங்களுமல்ல. நானுமல்ல. குற்றமற்ற விலங்குகளை நமக்குள் நாமே வளர்த்துப் பழக நாட்கள் இன்னும் நமக்கு அமையவில்லை. நமது மனம் என்பது தொலைதூரத் தலைமுறைகளைத் தாண்டிய வேட்டைக் கால வாழ்வியற் கருத்துருவாக்கங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கற்பிக்கப்பட்ட மனோபாவங்களுக்குள் வாழப்பழகிவிட்டதனாலேயேயே, காதல் செய்தலும் மிகப்பெரிய சமூக குற்றமென நமக்குள்ளாகவே ஒருவன் எழுந்து நம்மை எச்சரிக்கிறான்.

காதல் குற்றமா? சமூக குற்றமா? நமக்குள் இருக்கிற புற மிருகங்களையும் அக மிருகங்களையும் உசுப்பிவிட்டு கடித்துக் குதற்ச்சொல்லி ரத்தம் ரசிப்பவனே அப்படிச் சொல்வான். சமூகச் சூழல்களின் சிலந்தி இழைகளிலிருந்து விடுபட்டு… வாழ்வின் இயல்புத் தளத்தில் இயற்கையின் இயக்கமாகிவிடச் சம்மதிக்கிற எவனும், அதனை அப்படி சொல்ல சம்மதிக்க மாட்டான்!

நாம் பிளந்து கிடக்கும் பிரபஞ்ச பிசிறுகள். காதலில் இணைகிற ஆணும் பெண்ணும் பிரபஞ்ச இயக்கத்தின் ஆணி வேருக்குள் நெகிழ்ந்து இறங்குகிறார்கள். அது இருவரின் முழுமையடைதல் இல்லை. முழுமைக்கான அடுக்குகளின் ஒழுங்கமைவில் அது ஒரு பகுதி.

இருட்டிக் கொண்டு வருகிற ஏதோ ஒரு மழைக்காலத்தில்… பாறையின் மீது வந்து ஒரு பெண் படுக்கிறாள் என்பது…அந்தப் பாறையிலிருந்து என்றோ தெறித்துச் சிதறிய ஒரு பகுதி மீண்டும் வந்து அதே இடத்தில் பொருந்துவதாக அர்த்தம். அந்தப் பெண்மீது அவலது அந்தக் கணத்தின் முழுச்சம்மதத்தில்…அவளது ஆண் கவிழ்ந்து இயங்கப் போகிறான் என்கிறபோது அவர்கலள் மட்டுமல்ல… அவர்களைச் சுமந்துள்ள பாறையும் சூழ்ந்துள்ள செடிகளூம்…செடிகளில் அமர்ந்துள்ள வண்ணத்துப் பூச்சிகளும் கூட அவர்களோடு சேர்ந்து இயங்கப் போகின்றன என்று அர்த்தம். காதலின் மையத்தில் குனிந்து முகம் பார்க்கிற எவரும் உலகச் சுழற்சியின் ஏதோ ஓர் ஒழுங்கின்மையைச் சரிசெய்கிறவர்களாகவே இருப்பார்கள்.

மேல் இமைகளில்
நீ இருக்கிறாய்.
கீழ் இமைகளில்
நான் இருக்கிறேன்.
இந்தக் கண்கள் கொஞ்சம்
உறங்கி விட்டாலென்ன?

வாழ்வின் இடையில் வந்து இடையில் போய்விடுகிற தற்காலிக அதிர்வு அல்ல அது. ஆயுளைக் கடந்தும் உடல்மாறிக்கொள்கிற நிரந்தர அதிர்வு.

காமத்துக்கான முன் ஒத்திகையாக அதனைக் கருதுகிறவர்களூக்கே அது தற்காலிகம். உடல்களால் காமம் பேசிமுடித்த திருப்தியில் உயிர்களால் காதல் பேச முடிகிறவர்களூக்கு மட்டுமே அது நிரந்தரம். அப்படிப் பேசிப் பழகப் பயிற்சி வேண்டும்.

எவரும் எவருக்கும் நன்றி சொல்ல நினைக்காத தருணங்களால் பேச வேண்டும், அதனை. உதடுகளின் மெல்லிய அதிர்வுகள் சாட்சியாக… ஈரத்தில் நனைந்த விழிகள் சாட்சியாக… அக்குளில் பூக்கும் வியர்வையின் வாசம் சாட்சியாக…ஏன் கூச்சங்கழிந்த நிர்வாணம் சாட்சியாக… இழையும் பெருமூச்சுக்களால் பேச வேண்டும் அதனை. பேசப் பேசப் பேசத் தெவிட்டாத பேச்சு அது. பேசியிருக்கீர்களா நீங்கள்?

நான் பேசியிருக்கிறேன். ஆணாக இருந்தல்ல. பெண்ணாக இருந்துதான் பேசியிருக்கிறேன். என்ன சிரிக்கிறீர்கள்? பெண்ணாகித்தான் பேசமுடியும். அதனை!

பெண்ணாகத் தெரியாத எந்த ஆணுக்கும் காதலின் தரிசனம் வாய்க்குமென்று நான் நம்பவில்லை. ஆயிரம் பெண்களுக்குரிய தாய்மையைத் தன் இதயத்துக்குள் ஏற்றுக்கொள்கிற ஆண்தான், ஒரு பெண்ணின் இதயத்துக்குள் இடம்பெறுகிற அருகதையுள்ளவனாகிறான்.

இருவராய் இணைந்து இருக்கையில் கூடத் தனிமையாய் இருக்கிற சுந்தந்திர சுகத்தை ஒரு பெண்ணுக்கு எவன் தருகிறானோ, அவண்தான் ஆண் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறான்!

அழகியக் கூண்டு செய்து… அதற்குள் அடக்கி வைத்து… ‘இது என் பறவை.. இது எனக்கு… எனக்கு மட்டுமே’ என்று எந்தப் பெண்ணையும் சொல்ல எந்த ஆணும் வெட்கப் படவேண்டும். விரும்பி வந்து ஒரு பறவை எவ்விதம் அமர்ந்ததோ அவ்விதமே விரும்பியவண்ணம் அது பறந்து செல்லுதலுக்கும் சிரமமற்றபடி கிளையாக இருக்கச் சம்மதித்தலே அணுக்கு அழகு.

உரிமை கொண்டாடுதல் அன்று உரிமை தருதலே காதல். தருதல் என்ற சொல்லுக்குள்ளும் ஓர் ஆதிக்கத்தனம் தெரிகிறதே! தருவதற்கு ஆண் யார்? தருதலும் பெறுதலுமற்ற கருனைப் பெருவெளியில் சிறகுச் சிக்கலின்றிப் பறத்தலே காதல்!

முழுவிடுதலையைச் சுவாசித்துப் பூப்பதுதான் காதல். எந்தச் சிறைக்குள்ளும்… எந்த விலங்குக்குள்ளும்… அடைபட்டு கட்டுப்பட்டு இருக்க சம்மதிக்காது அது.

என்னைச் செதுக்கியது பெண்மை. என்னில் சிற்பமானது காதல். எனக்குள் எல்லாமும் அதுதான். எல்லாமும் கற்றுத் தந்ததும் அதுதான்!

பூவைப் பறித்துவிடாமல் அதன் செடியிலேயே பார்த்து ரசிக்க… கைகளின் முடிப்பிசிறுகளில் சிக்கி நகரும் எறும்பை நசுக்கிவிடாமல் மெல்ல எடுத்து ஊதிவிட…அசையும் ஊதுவத்திப் புகையில் இசை கேட்க… பயணங்களூடே உடைக்கப்படும் பாறைகள் பார்த்து அழ… இறந்து கிடக்கும் வண்ணத்துப் பூசியை எடுத்துப் போய் அடக்கம் செய்ய… போக்குவரத்து மிகுந்த சாலையில் கிடந்து நசுங்கும் ஏதோ ஒரு குழந்தையின் ஒற்றைச் செருப்பைத் தவித்து எடுத்து ஓரமாய் வைக்க… அதுதான்… ஆம் … அதுதான் எனக்குக் கற்றுத் தந்தது. காதல் கற்றுத் தரும். காதல் எல்லாம் தரும். காதலியுங்கள். புரிந்துகொள்வதை அதிகம் பேசலாம். உணர்ந்து கொள்வதை?

அணுஅணுவாய்
சாவதற்கு
வாழ்வதற்கு
முடிவெடுத்துவிட்ட பிறகு
காதல்
சரியான வழிதான்.

ஏலே மக்கா என்ன ஒன்னும் புரியலையோ ? ஏலே இது காதாலிச்சா தாம்லா புரியும் .சும்மா நூலு விட்ட இது புரியாதுல .

இப்ப பாருங்க நம்ம வாத்தியாரு சொல்லித் தந்தத சொன்ன புரியுதானு பாருங்க இதுவும் புரியலைன அதற்கு நான் ஒன்றும் பண்ண இயலாது சாமியோ !
நீங்க சொல்லவேண்டியதை மறக்காமல் மறுமொழியில் சொல்லுங்க .

சம்பரதாயம் சட்டை பிடித்தாலும்
உறவுகள் உயிர் பிழிந்தாலும்
விழித்து பார்க்கையில் உன் தெருக்கள்
களவு போயிருந்தாலும்
ஒரே ஆணியில் இருவரும் சிக்கன
சிலுவையில் அறயபட்டாலும்
நீ நேசிக்கும் அவனோ அவளோ
உன்னை நீசிக்க மறந்தாலும்
காதலித்து பார்
சொர்க்கம் நரகம் இரண்டில்
ஒன்றே இங்கேயே நிச்சயம்
காதலித்து பார்


அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள் !



இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........






அறிவுக்கு விருந்து !!!

இன்னைக்கு என்ன எழுதலாம் எப்ப பார்த்தாலும் ஒரே கதையும் , கவிதையும் , கட்டுரையுமா எழுதி எழுதி நிரப்பியாகிவிட்டது . சரி இன்னைக்கு ஏதாவது சில அறிய நிகழ்வுகளைப் பற்றி எழுதி அறிவுக்கு விருந்து என்று சொல்லி அனைவரையும் அசத்திட வேண்டியதுதான் . அறிவுக்கு விருந்தா அது எங்கடா உன்னிடம் இருக்குனு நீங்க சொல்றது எனக்கு கேக்குது மக்கா . பதிவுனு சொல்லி மொக்க போடுறதும் . மொக்கைனு சொல்லி பதிவு போடுறதும் இப்ப சகசம்தானங்க .எது எப்படியோ இது அப்படி இல்லை எப்படினு கேக்குறீங்களா அது அப்படிதாங்க . சரி வாங்க விசயத்திற்கு வருவோம் .


507 காரட் எடையுள்ள உலகிலேயே பெரிய வைரம் , தென்னாப்பிரிக்க வைரச் சுரங்கத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது .


செல்போனில் சிம் கார்டு பிளாஸ்டிக் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம் . ஆனால் , அதுவல்ல . தாவரங்களிலிருந்து கிடைக்கும் செலுலோஸ் என்பதிலிருந்து தயாரிக்கப்படுகிறது சிம்கார்டு .


உயிர் என்றால் என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு , அமெரிக்கத் தொலைக்காட்சியில் ஒருவர் வேடிக்கையாக அது காமத்தால் தொற்றிக்கொண்ட நோய் ( ' life is a sexually transmitted disease ' ) என்றார் .


வேகமாகப் போக விரும்பினால் , தனியாகப் பயணம் செய் . தொலை தூரம் போக விரும்பினால் துணையுடன் பயணம் செய் ' என்பது ஆப்பிரிக்காவில் பிரபலமாகச் சொல்லப்படும் வாக்கியம் .


எந்த விளையாட்டுக்கும் இல்லாத தனிச்சிறப்பு படகுப் போட்டிக்கு உண்டு . பின்பக்கமாகத் திரும்பி


வெற்றிக்கோட்டைத் தொடும் ஒரே விளையாட்டு இது மட்டும்தான் .


சங்கரா பரணம் ராகத்தில் , ' ஜனகணமன ' பாடலுக்கு இசை அமைத்தவர் நேதாஜியின் படையில் பணியாற்றிய கேப்டன் ராக்சிங்


மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறந்த கானகப் பகுதிக்கு ' மௌனப் பள்ளத்தாக்கு ' என்று பெயர் .


மனைவி விருப்பம் இல்லாத நேரத்தில் கட்டாயப் படுத்தி உறவுகொள்வது ( மேரிட்டல் ரேப் ) , மனைவியைக் கணவனும் அவனது உற்றாரும் கொடுமைப்படுத்துவது ( டொமஸ்டிக் வயலென்ஸ்.) எனப்படும் .


பறவைகளுக்கு ( வாத்து , அன்னம் , நெருப்புக் கோழி தவிர்த்து ) ஆண்குறி கிடையாது . க்ளோயேகா ( cloaca ) என்கிற ' சமச்சீர் பகுதி ' யினால் தேய்த்துக்கொள்ள வேண்டியதுதான்


இரவில் தூங்கும்போது படுக்கையில் சிறு நீர் கழிக்கும் பழக்கத்தை ஆங்கிலத்தில் Nocturnal Enuresis என்று குறிப்பிடுவோம் . இந்தப் பழக்கத்துக்குப் பெண் குழந்தைகளைவிட அதிகம் ஆளாவது ஆண் குழந்தைகள்தான்


எல்லா வகை ரத்தத்துடனும் சேரும் ரத்த வகை ' ஓ ' பாஸிட்டிவ் .

நட்சத்திரங்களின் இடத்தை வைத்தே பழங்காலங்களில் திசைகளை கண்டுபிடிப்பார்கள் . சந்திராயன் விண்கலத்தில் அதை போன்ற ஒரு செயலையே ' ஸ்டார் சென்சார் ' செய்து வந்தது . நட்சத்திர கூட்டங்களை நோக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்த சென்சார்கள் . அதை வைத்தே விண்கலம் நோக்கியிருக்கும் திசை , நிலவின் தளத்தில் இருந்து விண்கலம் உள்ள உயரம் , விண்கலம் நிலை நிறுத்தப்பட்டுள்ள கோணம் போன்ற தகவல்களை துல்லியமாக கணித்து தரும் .

" ஐன்ஸ்டீன் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது ...."
" ' ரிலேட்டிவிட்டி தியரி ' என்று சொல்வேன் என்று நினைத்தீர்களா ? அதுதான் இல்லை . காந்தியின் பெயர்தான் ஞாபகத்துக்கு வருகிறது . காந்தியைப் பற்றி ஐன்ஸ்டீன் சொன்ன புகழ்பெற்ற ஸ்டேட்மென்ட் இது :


' இன்னும் 50 ஆண்டுகள் கழித்து ரத்தமும் சதையும் கொண்ட இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் ! ".


பொதுவாகவே நல்ல பெட்ரோலானது எங்கு சிந்தினாலும் சிறிது நேரத்தில் சிந்திய சுவடு தெரியாமல் மாயமாகி விடும் . கலப்பட பெட்ரோல் மட்டுமே சிந்திய இடத்தில் சிறிய வரைபடம் போன்று அதன் எல்லைக் கோட்டை விட்டுச் செல்லும் .


நமது உள்ளங்கையில் ஒரு சதுர அங்குலத்திற்கு 3000 வியர்வைச் சுரப்பிகள் உள்ளனவாம் .


அறிஞர் ' வால் ' என்பவர் பல ஆய்வுகளை மேற்கொண்டு , பாம்புக்கு கேட்கும் திறன் இல்லை , செவி இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளார் .


பாம்பைக் கண்டால் பயப்படுவதற்கு அறிவியல் பெயர் ஒபிடி போபியா .


'வெள்ளெழுத்து ' என்ற குறைபாடு 40 வயதானால் கட்டாயம் எல்லோருக்கும் வரும் . இது ஒரு நோய் அல்ல . முதுமை தொடக்கத்தின் அடையாளம் . இதை ' சாளேஸ்வரம் ' என்றும் அழைப்பர் .


ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 113 டன் எடையுள்ள மழை நீர் பொழிவதையே ஓர் அங்குலம் என்பர் . .


குழந்தை பிறக்கும் போது அதன் இதயம் ஒரு நிமிடத்திற்கு 140 முறை துடிக்கும் . முயலின் இதயம் ஒரு நிமிடத்திற்கு 150 முறையும் , குதிரையின் இதயம் 38 முறையும் , சுண்டெலியின் இதயம் 200 முறையும் , நாயின் இதயம் 118 முறையும் , ஆட்டின் இதயம் 60- லிருந்து 78 முறையும் , யானையின் இதயம் 48 முறையும் துடிக்குமாம் .


அப்பாடா ஒரு வழியாக பதிவு போட்டாச்சு .அப்றம் என்ன மக்கா அதுதான் விருந்து முடிந்துவிட்டததுல இனி அப்படியே வரிசையா வந்து மொய் எழுதிட்டு போங்க . நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன் . மக்கா இனி நீங்க சொல்லவேண்டியதை சொல்லலாம் .



இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

நீங்கள் இதயம் உள்ளவரா ? இதோ நிரூபிக்க ஒரு அறிய வாய்ப்பு !!!

அனைத்து வலை உலக நண்பர்களுக்கும் எனது வணக்கம் . நேற்று இரவு எப்பொழுதும்போல் நண்பர்களின் பதிவுகளை வாசித்துகொண்டிருந்தேன் . அப்பொழுது நண்பர் Butterfly சூரியா அவர்களின் புதிய பதிவான '' மைத்ரிக்கு உதவுங்கள்'' என்ற ஒரு அறிவிப்பு பதிவை வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது . என்னடா தலைப்பே சற்று வித்தியாசமாக உள்ளதே என்ற ஆவலுடன் வலைக்குள் நுழைந்தேன் . மொத்த பதிவையும் வாசித்து முடித்த பிறகு உணர்ந்தேன் கடவுள் மனித உருவங்களில் இருக்கிறார் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்றுதான் என்று . நல்ல மனநிலையும் அனைத்து சிறப்புக்களை கொண்ட ஒரு குழந்தையை நாம் சிறந்த முறையில் பாதுகாத்து , கல்வி கற்பித்து , அவர்களை பராமரிப்பது என்பதே சற்று கடினமான விசயமாக இருக்கும் இன்றைய சூழ்நிலையில் . மன வளர்ச்சியில் குன்றிய 300 குழந்தைகளை சிறப்பாக பேணி பாதுகாத்து வளர்த்து வருகிறார்கள் என்றால் சற்று வியப்பிற்குறிய நிகழ்வுதான் .

'' உள்ளம் நல்ல இருந்தா ஊனம் ஒன்றும் குறையில்லே
உள்ளம் ஊனப் பட்டா உடம்பிருந்தும் பயனில்லை. ''


என்ற கவிஞர் வைரமுத்துவின் வரிகள் இன்று ஞாபகத்திற்கு வருகிறது .


நேற்று பக்கம் பக்கமாக எழுதிய பதிவுகள் இன்று ஞாபகத்தில் இல்லை. ஆனால் எங்கயோ ஊமையாக முடங்கிக் கிடக்கும் பல மன நலம் குன்றிய குழந்தைகளின் திறமைகளுக்கு உயிருட்டும் வகையில் அமையும் இதுபோன்ற சிறந்த பதிவுகள் என்றும் ஞாபகத்தில் இருக்கும் என்ற நம்பிக்கையில் நண்பர் அவர்களின் Butterfly சூரியா அவர்களின் '' மைத்ரிக்கு உதவுங்கள் '' என்ற அதே பதிவை எந்த மாற்றமும் செய்யாமல் இங்கு தந்து இருக்கிறேன் . நண்பர்களே நீங்களும் வாசித்து விட்டு உங்களால் இயன்ற உதவிகளை வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் .


நம் நாட்டில் ஏறக்குறைய 3 கோடி மக்கள் மனவளர்ச்சி குன்றியோர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இவர்களுள் ஐந்து சதவிகிதத்தினர்தான் தேவையான கல்வி, பயிற்ச்சி மற்றும் வசதிகள் பெற்றிருப்பதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

பயன் வேண்டுவோருக்கும் பயன் பெறுவோருக்கும் இடையே உள்ள இவ்வளவு பெரிய இடைவெளியை சிறிதேனும் குறைக்கும் நோக்கத்துடன் மனவள்ர்ச்சி குன்றியோரின் பெற்றோர்களால் 1994ல் சென்னையில் துவங்கப்பட்ட சேவை நிறுவனம் தான் “மைத்ரி”

மூன்றே குழந்தைகளுடன் துவங்கப்பட்ட மையம் இன்று 300 குழந்தைகளை பயிற்றுவிக்கும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. சென்னையில் பெரம்பூர், தாம்பரம், மேற்கு மாம்பலம், கொளத்தூர், கே.கே. நகர், உள்ளகரம் ஆகிய 6 இடங்களில் 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடனும் திறன் ஊக்க வல்லுநர்களுடனும் {Occupational & Physico Therapists} பணி புரிகிறார்கள்.

மனவள்ர்ச்சி குன்றியிருந்தாலும் இவர்களிடம் உள்ள சில திறமைகளை கண்டெடுத்து, வளர்த்து அவர்கள் தங்களுக்கும் பிறர்க்கும் பயனுள்ள வாழ்க்கை வாழ வழிகாட்டும் மைத்ரி, நலன் விரும்பும் பெற்றொரும், நல்மனமுள்ள பல்ரின் ஆதரவோடு தற்போது வளர்ந்து வருகிறது.

வளர்ச்சியடைந்த அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அரசு பள்ளிகளிலேயே இம்மாதிரி சிறப்புக் குழந்தைகளின் கல்விக்கும் இடம் ஒதுக்கி உதவுகிறார்கள். நம் நாட்டில் இது போன்ற சமூக நிறுவனங்களால் மட்டுமே செய்ய இயலுகிறது. இதற்கு தேவையான உதவிகளுக்கும் சமூகத்திடம்தான் பெற்று செயல்படவும் முடிகிறது.

இலாப நோக்கில்லாமல் அன்பளிப்புகளால் மட்டுமே நடக்கும் நிறுவனம் என்பதை கடந்த சில மாதங்களாக நானும் இணைந்து பணியாற்றுவதால் நன்கறிவேன். இந்நிறுவனத்தின் கூட்டங்களில் கலந்து கொண்டு என்னால் இயன்ற சிறு உதவிகளையும் செய்து வருகிறேன். அதனால் வலைப்பூவிலும் அதிகம் நேரம் ஒதுக்க முடியவில்லை.

இன்னும் பல பள்ளிகளை தொடங்கவும் இருக்கும் பள்ளிகளை மேம்படுத்தவும் இவர்கள் ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.
சென்னை நேரு உள்விளையாட்டஙகில் (பிப் - 28 ஞாயிறு மாலை 6.05 pm) நடைபெற இருக்கும் இக்கலை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்குவதன் மூலம் நீங்களும் ஒரு சிறு பங்களிப்பை செய்ய முடியும்.

ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக்கவும்.

நிதியுதவி செய்ய விரும்பும் வெளியூர் / வெளிநாடு நண்பர்கள் இங்கே செலுத்தலாம்.

இன்றைய சமுதாய ஓட்டத்தில் இது போன்ற பணிகளி நம்மால் முழு நேரமும் ஈடுபட முடியுமாதென்பது ஒப்பு கொள்ள வேண்டியதே எனினும் இதை முழுமூச்சுடன் முனையும் இவர்களுக்கு தோள் கொடுக்கவும் இயன்ற உதவியை செய்யவும் வாருங்கள் என சக பதிவர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடனும் உரிமையுடனும் வேண்டுகிறேன்.

இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........


*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP