>

Archives

நான் ரசித்த உண்டியல் பணம் !!!

>> Sunday, February 28, 2010

தன் மகனை அழைத்த தந்தை, "நாம் இருவருமே இனிமேல் தவறு செய்யக் கூடாது. யார் எந்தத் தவறு செய்தாலும் அதற்கு அபராதமாக இந்த உண்டியலில் ஒரு ரூபாய் போட வேண்டும். அப்படிச் சேரும் தொகையைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட வேண்டும்" என்றார்.

மகனும் இதற்கு ஒப்புக் கொண்டான்.


அவரின் திட்டம் அப்படியே நடந்தது. திடீரென்று அவர் உடல்நிலை மோசம் ஆயிற்று. உண்டியலில் இருந்த பணத்தை எல்லாம் பிள்ளையார் கோயிலுக்குத் தந்துவிட்டு மருத்துவ மனைவில் சேர்ந்தார்.

மகனைப் பார்த்து, "நான் இல்லாத போதும் இந்தப் பழக்கத்தை விட்டு விடாதே. ஒரு தவறுக்கு ஒரு ரூபாய் உண்டியலில் போட்டுவிடு" என்றார்.

மருத்துவ மனையில் மூன்று மாதம் தங்கிய அவர் வீடு திரும்பினார். உண்டியலைத் திறந்து பார்த்தார். அதில் ஒரே ஒரு ரூபாய் தான் இருந்தது.

மகிழ்ச்சி அடைந்த அவர் தன் மகனை அழைத்தார்.

"இந்த மூன்று மாதத்தில் ஒரே ஒரு தவறு தான் செய்தாயா?" என்று கேட்டார்.

"இல்லை அப்பா! உண்டியலில் முந்நூறு ரூபாய் பணம் சேர்ந்தது" என்றான் அவன்.

"அந்தப் பணத்தைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட்டாயா?" என்று கேட்டார் அவர்.

"அப்பா! உண்டியலைத் திறந்து அந்தப் பணத்தை நானே எடுத்துக் கொண்டேன். அந்தத் தவறுக்காக நீங்கள் சொன்னபடி ஒரு ரூபாயை உண்டியலில் போட்டு விட்டேன்" என்றான் அந்த கெட்டிக்கார மகன்.


ஏலே மக்கா இப்படியெல்லாம் கோபத்தோட பார்க்கக்கூடாது . இப்ப யார் யாரெல்லாம்  உண்டியல் பணத்தை திருடுனீங்க. யார் யாரெல்லாம்  உண்டியலையே திருடுனீங்க என்று மறுமொழியில்  சொல்லிட்டு போங்கல .  .
 
ஏய் , ஏய் ,ஏய், ஏய் ராஸ்க்கல் என்ன இது சின்னபுள்ளத்தனமாவுல இருக்கு பதிவ படிச்சுட்டு ஓட்டு போடாம போனா எப்படி ஒழுங்கா இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் இல்லைனா அழுதுடுவேன் ஆமா ..........

Read more...

சூரியன் யாருக்கு சொந்தம் !!!

>> Wednesday, February 24, 2010

பக்கம் பக்கமா எழுதினா யாரும் பார்க்காமலே போய்விடுகிறார்கள் .அதனால் இன்னைக்கு குட்டியா ஒரு பதிவு எழுதலாம் என்று தோன்றியது .அதற்குத்தான் இப்படி ஒரு பதிவு . பலருக்கு தெரிந்த சில நிகழ்வுகளும் , செய்திகளும் சிலருக்கு தெரிவதில்லை . இதைவிட சென்று அடைவதில்லை என்றுதான்  சொல்லவேண்டும் . சரி அதுபோல் நாமும் அப்படியே இருந்தால் எப்படி அதுதான் தெரிந்த விசயம் என்றாலும் மீண்டும் எழுதுவோம் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளக் கூடும் அல்லவா . இனி விசயத்திற்கு வருகிறேன் .
ஒரு பேருந்து நிறுத்தத்தின் அருகில் இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள் . நான் ஒருவேலையாக  அந்த சாலையை கடந்து போய்க்கொண்டிருந்தேன் . திடீர் என்று அவர்கள் இருவருக்கும் சண்டை வந்துவிட்டது . எனக்கு ஒரே குழப்பம் இப்பொழுதுதான் இருவரும் நன்றாக பேசிக்கொண்டிருந்தார்கள் . திடீர் என்று என்னாகி இருக்கும் என்று. சரி அவர்களிடமே கேட்டுவிடலாம் என்று இருவரையும் சமாதானப்படுத்தி கேட்டேன் என்ன விசயம் எதற்காக சண்டை அடித்துகொள்கிறீர்கள் என்று . அப்பறம்தான் விசயம் தெரிந்தது அவர்களின் சண்டைக்கு காரணம் சூரியன் யாருக்கு சொந்தமென்பதில் என்று . என்னடா சூரியனுக்கும் இவர்கள் சண்டைக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்க நினைப்பதுபோலவே நானும் அவர்களிடமே கேட்டேன் என்னவென்று . அதற்கு அதில் ஒருவன் சொன்னான் சூரியன் எங்க கன்னியாகுமரி கடலில் இருந்துதான் வருகிறது முதலில் நாங்கள்தான் பார்க்கிறோம் . அதனால் எங்களுக்குத்தான் முதல் சொந்தம் என்றான் . அப்பொழுதே எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது .அவசரப்பட்டு சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டோமோ என்று .சரி மாட்டியாது மாட்டிக்கொண்டோம் . அடுத்தவன் என்ன சொல்கிறான் என்று அதையும் கேட்டுவிடுவோம் என்று தோன்றியது . அவனிடம் கேட்டேன் அதர்க்கு அந்த அறிவாளி சூரியன் வருவதும் மறைவதும்தான் உங்க கன்னியாகுமரி கடலில் இருந்துதான் அது மறைந்ததற்கு பின்பு தினமும் இரவு எங்க ஊரில்தான் உறங்குகிறது .அதனால் எங்களுக்குத்தான் அதிக சொந்தம் என்றான் . அப்பொழுதே எனக்கு தோன்றிய சிறிய சந்தேகம் தெளிவாகிப்போனது .அப்பறம் அவனுங்க ரெண்டுபேரும் சேர்ந்து ஒரே நேரத்தில் என்னிடம் கேட்டார்கள் நீங்களே சொல்லுங்க ஸார் எனக்குத்தானே சொந்தம் என்று ??????????? . அப்பறம் என்னங்க எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்குறான்டா? இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிவிட்டு. வாட மாப்ள அடுத்த தெருவுக்கு போவோம் என்று போய்ட்டாங்க .அன்னைக்கு முடிவு பண்ணினேன் . சூரியன் என்ற வார்த்தையைக்கூட வாசிக்கக்கூடாது என்று . ஆனால் பாருங்க இப்ப அந்த சூரியன் பற்றியே பதிவு போடவேண்டிய நிலை வந்துவிட்டது .
நமது நாட்டில் சூரிய உதயத்தை முதலில் காண்பவர்கள் அருணாச்சலப்பிரதேச மக்கள் தான். நமது நாட்டின் கிழக்கு விளிம்பில் அமைந்துள்ள அருணாச்சலப் பிரதேசம், 97 டிகிரி தீர்க்க கோட்டில் அமைந்துள்ள மாநிலம் ஆகும். மேற்கு விளிம்பில் குஜராத் அமைந்துள்ளது. அதாவது 68 டிகிரி தீர்க்க கோட்டில் அமைந்துள்ளது.இந்த இரு மாநிலங்களுக்கு இடைப்பட்ட 29 தீர்க்க கோடுகளை கடக்க சூரியன் 1 மணி 56 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றது.

என்னைப்போல் நீங்க யாரும் மாட்டிக்கொள்ள கூடாது பாருங்க அதுக்குத்தான் இந்த தகவல் . சரி இனி உங்க கருத்துக்களை மறக்காமல் மறுமொழியில சொல்லலாம் .



யார் அங்கே! ராஸ்க்கல் என்ன இது சின்னபுள்ளத்தனமாவுல இருக்கு பதிவ படிச்சுட்டு ஓட்டு போடாம போனா எப்படி ஒழுங்கா இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் இல்லைனா அழுதுடுவேன் ஆமா ..........

Read more...

தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் !!!

>> Sunday, February 21, 2010

இன்றைய நிலையில் அறிவியலின் வளர்ச்சி ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சாதனைகளை சாதாரணமாக நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம் . இந்த அறிவியலின் அதிசயங்களையும் பிணுக்குத் தள்ளும் இயற்கையின் இயல்பான சில நிகழ்வுகளும் அவ்வப்பொழுது யாரும் எதிர்பாராமலே நடந்துவிடுகிறது . அந்த வகையில் ஒரு புதிய அதிசய நிகழ்வு விரைவில் வர இருக்கிறது இதுநாள் வரை தங்கம் , வைரம், வெ‌‌ள்‌ளி என்று பல நகைகளை நம்மை அழகுபபடுத்துவதற்காக பயன்படுத்தி வந்தோம் . ஆனால் இப்பொழுது அந்த அபரணங்களுக்கு விடுமுறைக்கொடுக்கும் தூரம் மிக அருகில் வந்துவிட்டது .

த‌ங்க‌‌ம், வெ‌‌ள்‌ளி, வைர நகைகளை இ‌னி மற‌ந்து விடு‌‌ங்க‌ள். விரைவில் வெளியாகவிருக்கும் பு‌‌திய வகை ஆபரண‌ங்க‌ள் உ‌ங்களை மேலு‌ம்

ஜொ‌லி‌க்க வை‌க்கும் அதிசய நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது . ஆம். தா‌ய்‌ப்பா‌லி‌‌ல் இரு‌ந்து நெக்லஸ், பிரேஸ்லெட் என்று 70 வகையான ஆபரணங்களை தயாரிக்க முடியும் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது .

ல‌ண்ட‌னி‌ல் உ‌ள்ள நகை தயா‌‌ரி‌க்கு‌ம் குழு ஒன்று, தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்களை தயாரிக்கும் வித்தைகளை செய்து காண்பித்துள்ளது.

இந்த சாதனையின் முதல் முதல் தயாரிப்பாக இ‌ந்தக் குழு 'பா‌ல் நெ‌க்ல‌ஸ்'-களை‌த் தயா‌ரி‌‌த்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளனர் . இதை அடுத்து அந்த குழுவின் அறிக்கையில் .

‌பிரே‌ஸ்ல‌ெ‌ட் மற்றும் 70 பிறவகை ஆபரணங்களையும் இ‌ந்த ஆ‌ண்டு இறு‌திக்குள் தயாரிக்க இரு‌ப்பதாக அக்குழுவினர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

தா‌ய்‌ப்பாலுடன் ‌‌வி‌னிகரைச் சேர்த்து (அ‌சி‌‌ட்டி‌க் அ‌மில‌ம்) ந‌ன்கு கொ‌‌தி‌க்க வை‌ப்பத‌ன் மூல‌ம் பா‌லி‌ல் உ‌ள்ள கே‌சி‌ன் புர‌த‌ம், இ‌ந்த கலவையை

‌பிளா‌ஸ்டி‌க் போ‌ன்று மா‌ற்றி விடுகிறது. ‌பி‌ன்ன‌ர் அதில் வண்ணம் பூசி (பெயிண்ட்) நாம் விரும்பும் வடிவில் அல்லது அச்சுகளில் ஊற்றி ஆபரணங்களாக மாற்றுகிறார்களாம்.

பிளாஸ்டிக் போன்ற தன்மை கொண்டிருப்பதால், அழ‌கிய வடி‌வி‌ல் நகைகளாக மா‌ற்‌றி விடுகிறார்களாம்.


தாய்ப்பாலை உபயோகித்து `குழந்தைகளின் தலை' போன்ற வடிவிலான நெக்லஸில் அணியக்கூடிய பதக்கம் (டாலர்) ஒன்றையும், தாய்ப்பாலுடன் உலோகத்தைச் சேர்த்து பிரேஸ்லெட் ஒன்றையும் பிரான்ஸ் நாட்டு நகை வடிவமைப்பாளர்கள் ஏற்கனவே உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இ‌துபோ‌ன்ற நகை வடிவமை‌ப்பை அவ‌ர்க‌ள் "பா‌ல் மு‌த்து‌" (milk pearl), எ‌ன்று கு‌றி‌ப்‌பிடு‌கி‌றார்கள். இந்த முறையில் உருவாக்கப்பட்ட ஆபரணங்களை செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் கண்காட்சியில் அவர்கள் வைக்க உள்ளார்களாம்.

என்றாலும், தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் உருவாக்கம், வர்த்தகரீதியில் இன்னமும் செயல்படுத்தப்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்று சொல்லலாம்.



ஒரு வழியா பதிவு போட்டாச்சு . ஏலே மக்கா அடுத்து நீங்கதான் . பதிவு பிடித்து இருந்தாலும் , இல்லாவிட்டாலும் உங்க கருத்துக்களை மறக்காமல் மறுமொழியில் சொல்லிட்டுப்போங்கல .


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

Read more...

உலக அரங்கில் லஞ்சமாய் இந்தியா !!!

>> Wednesday, February 17, 2010

சாதனைகள் பல செய்தும் இன்னும் உலக அரங்கில் சரிந்த நிலையில் நம் நாடு ஏன் இருக்கிறது என்று எப்பொழுதாவது நாம் சிந்தித்தது உண்டா . நமது வேலைகளை நாம் பார்ப்பதற்கே நேரம் இல்லை நமக்கு எதற்கு இந்த தேவையற்ற வேலை என்று பலரும் சலித்துகொள்வதும் உண்டு . ஆனால் இந்த சரிவுக்கு முக்கிய காரணம் நாம்தான் . என்னடா இவன் இப்படி ஒரு குண்டை தூக்கிப்போடுகிறானே என்று என்ன வேண்டாம் .இதுதான் உண்மை .
அணுகுண்டு வைத்திருக்கிறோம், ஆஸ்கர் விருது பெற்றுள்ளோம், ஆண்டுக்கு ஏழெட்டு சதவீத பொருளாதார வளர்ச்சி காண்கிறோம், ஐந்து வருடத்துக்கு ஒரு தடவை தேர்தல் நடத்தி அதிசயிக்க வைக்கிறோம்.. ஆனாலும் ‘இந்தியா லஞ்ச ஊழலில் திளைக்கும் நாடு என்றுதான் உலகமும் பார்க்கிறது. இந்த அவமானம் நம்மை விட்டு போவேனா என்கிறது. உலக அளவில் 180 நாடுகளில் நடத்திய ஆய்வில் இந்தியா 84வது இடத்தில் இருக்கிறதாம். ஓட்டப் பந்தயத்தில் அத்தனாவது இடத்தில் வந்தால் வேடிக்கை பார்க்கக்கூட எவரும் மிச்சமிருக்க மாட்டார்கள்.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த ஆய்வை நடத்துகிறது. சென்ற ஆண்டு நமக்கு 85ம் இடம். அதற்கு முன்னால் 72. நாடாளுமன்ற வாக்கெடுப்பில் கத்தை கத்தையாக கரன்சி நோட்டுகள் கைமாறிய விவகாரத்தால் தடாலென்று 13 படி சறுக்கினோம். அரசு துறைகளில் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வேலைகள் எப்படி முடித்துக் கொடுக்கப்படுகிறது என்பதை அளவுகோலாக வைத்து ஆய்வு நடத்தப்படுகிறது. அதில் மொத்தம் 13 குறியீடுகள். அதிகாரிகளின் நேர்மை ஒரு குறியீடு. லஞ்சம் வாங்காமல் வேலையை முடித்து தருவதாக ஆய்வில் பங்கேற்ற அனைவரும் தெரிவித்தால் முழு மதிப்பெண் போடப்படும். இந்த விஷயத்தில் இந்தியா பெற்றுள்ளது 10க்கு 3.4 மட்டுமே. பக்கத்தில் உள்ள குட்டி நாடு பூடான் 5 மார்க் வாங்கியுள்ளது. தனியார் துறை ஊழல்கள் இந்த கணக்கில் வராது. உலகிலேயே லஞ்சம் குறைந்த நாடு நியூசிலாந்து. அடுத்து டென்மார்க், அப்புறம் சிங்கப்பூர். இம்மூன்றும் 9க்கு மேல் பெற்றுள்ளன. இந்தியாவில் லஞ்சம் தலைவிரித்து ஆடும் துறைகளில் முதன்மையானது காவல் துறை.
லஞ்சம் குறைந்தது பள்ளிக் கல்வித் துறை. ஊழல் மிகுந்த மாநிலம் என்ற பெருமையை பெறுவது பீகார். அடுத்து வருவது காஷ்மீர், மத்திய பிரதேசம். அரசுப் பணிகளை கணினி மயமாக்கியதால் லஞ்சம் பெரிய அளவில் குறைந்துவிடவில்லை என்று அகமதாபாத் IIM நடத்திய ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. ஏனென்றால் அந்த கணினிகளை கையாள்வது மனிதர்கள். அவர்களுக்கு பதில் ரோபோக்களை நியமித்து அரசு எந்திரத்தை உண்மையிலேயே எந்திரமாக்கினால் இந்தியாவும் அதிக மதிப்பெண் பெற வாய்ப்பு இருக்கிறது..

நமது உரிமைகளையே பெறுவதற்கு லஞ்சம் கொடுக்கும் அளவில் ஒரு நாடு சீரழிந்திருந்தால் அப்போது நம் உரிமையைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுப்பது சில வேளை நிர்ப்பந்தமாகி விடுகிறது. இது போன்ற நிலையை அடைவோர் தங்களின் உரிமையைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்தால் அது மன்னிக்கப்படும்.

நமது முன்னால் குடியரசு தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் ஒரு முறை மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நடந்த உரையாடல் நினைவிற்கு வருகிறது
அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளில் ஒரு அறிவியல் புரட்சி ஏற்படும். அப்போது பயோ டெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி, நானோ டெக்னாலஜி ஆகியவை சேர்ந்து ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்தக் காலத்தில் லஞ்சம், பெருமளவு பெருகி விட்டது. எந்த அளவுக்கு எனில் சில ஊழியர்களுக்கு அவர்களுடைய ஊதியத்தை விடக் கூடுதல் வருமானமாக லஞ்சம் ஆகிவிட்டது. அதுமட்டுமல்ல பல கம்பெனிகளுடைய வரவு, செலவு கணக்கு (பட்ஜெட்)களில் பல்வேறு (மறைமுகமான) பெயர்களில் லஞ்சம் கொடுக்கல், வாங்கல்கள் பதிவு செய்யப்படுகிறது. பெரும்பாலான கொடுக்கல், வாங்கல்கள் எப்படி மாறி விட்டன என்றால் அவை ஆரம்பமாவதும் லஞ்சம் மூலமாகத்தான் முடிவதும் லஞ்சம் மூலமாகத்தான். அதனால் ஏழைகள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகின்றனர். இதனால் (மனிதர்களிடம் ஒப்படைக்கப்பட்ட) பல்வேறு பொறுப்புகள் பாழாகி விட்டன. தொழிலாளிகள் கெட்டுப் போவதற்கும் அதனால் முதலாளிகள் நஷ்டம் அடைவதற்கும் இதுதான் காரணம். அது மட்டுமல்ல லஞ்சம் கொடுப்பவருக்குத் தான் வேலை சிறப்பாக முடித்துக் கொடுக்கப்படுகிறது. எவர் லஞ்சம் கொடுக்கவில்லையோ அவருடைய வேலை சிறப்பாக முடித்துக் கொடுக்கப்படுவதில்லை. அல்லது அவருடைய வேலை தாமதப்படுத்தப்படுகிறது.

நமது நாட்டை லஞ்சம் இல்லாத நாடாக உருவாக்க முடியும். நமது நாட்டில் 100 கோடி பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 20 கோடி வீட்டில் இருப்பார்கள். அப்படி என்றால் ஒரு வீட்டில் 5 பேர் இருப்பார்கள். அனைத்து வீட்டிலும் லஞ்சம் வாங்குபவர்கள் இருக்க முடியாது. 50 சதவீதம் அதாவது 10 கோடி வீட்டில் லஞ்சம் வாங்கும் தாயோ அல்லது தந்தையோ அல்லது வீட்டில் உள்ள யாராவது ஒருவர் ஊழலில் மாட்டிக் கொண்டு இருப்பார்கள்.
துரதிர்ஷ்டவசமாக அப்படிப்பட்டவர்கள் உங்கள் வீட்டில் இருந்தால் தாய் அல்லது தந்தையிடம் லஞ்சம் வாங்காதீர்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? (மாணவர்கள் முடியும் என்றனர்). முடியும். வெரிகுட்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை பார்த்து கேட்கிறேன். நீங்கள் நல்லவராக இருப்பீர்கள். துரதிர்ஷ்டவசமாக உங்களது குழந்தை வந்து அப்பா லஞ்சம் வாங்காதீர்கள் என்று சொன்னால் நீங்கள் கேட்பீர்களா? (கூட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் கேட்போம் என்றனர்) கேட்பீர்கள். அப்படியானால் இன்னும் 5 ஆண்டுகளில் லஞ்சம் இல்லாத இந்தியா மலரும்.

ஒவ்வொரு குடிமகனும் லட்சிய சிகரத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளோடு இருக்க வேண்டும். பள்ளிப்படிப்பு படிக்கும் மாணவர்களாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்க வேண்டும்.

வந்திருக்கும் மாணவர்களில் எத்தனை பேர் அரசியல் தலைவர்களாக வர விரும்புகிறீர்கள்? கையை உயர்த்துங்கள். (7 மாணவ- மாணவிகள் கையை உயர்த்தினர்) உயர்த்தியவர்களில் 3 பேர் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். ஏன் அரசியல் தலைவராக ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? என்று அவர் கேட்டார்.

அதற்கு பதில் அளித்த மாணவிகளில் ஒருவர், "குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்க முடியாமல் கஷ்டப்படும் சிறுவர்களை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அரசியல் தலைவராக ஆகவேண்டும் என்று விரும்புவதாக'' பதில் அளித்தார்.

அந்த மாணவியை பார்த்து உனக்கு 100 மார்க் என்று ஜனாதிபதி அப்துல் கலாம் கூறி பாராட்டு தெரிவித்தார்.

எப்பொழுதோ பார்த்த இந்தியன் படத்தில் சொல்லும் ஒரு கருத்து இப்பொழுது எனக்கு ஞாபகம் வருகிறது . வெளி  நாடுகளில் நான் லஞ்சம் யாரும் வாங்கவில்லை என்று சொல்லவில்லை . வாங்குகிறார்கள் . அவர்கள் எல்லோரும் தங்கள் பணியை மீருவதற்கு லஞ்சம் வாங்குகிறார்கள் . ஆனால் நமோ நமது பணிகளை செய்வதற்கு லஞ்சம் வாங்குக்கிறோம் .இதுதான் நூற்றுக்கு நூறு உண்மை .அதனால்தான் இன்னும் அடிப்படை தேவைகளுக்குக் கூட கை ஏந்தும் நிலை நமது நாட்டில் . இந்த நிலை இன்னும் நீடித்தால் உலக அரங்கில் நமது நாடு மக்கள் தொகையில் முதல் இடம் பிடிக்கிறதோ இல்லையோ அதற்கு முன்பாக லஞ்சத்தில் முதல் இடம் பிடித்துவிடும் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்றாகிப்போகலாம் .

ஒரு வழியா பதிவு போட்டாச்சு . ஏலே மக்கா அடுத்து நீங்கதான் . பதிவு பிடித்து இருந்தாலும் , இல்லாவிட்டாலும் உங்க கருத்துக்களை மறக்காமல் மறுமொழியில் சொல்லிட்டுப்போங்கல .

இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........
 
 
 

Read more...

சின்ன பய சின்ன பொன்ன காதலிச்சா !!!

>> Saturday, February 13, 2010


  சில மாதங்களுக்கு முன்பு நண்பர் அறிவுமதி எழுதிய காதலை பற்றிய சில விசயங்கள் என்னை மிகவும் கவர்ந்தது சரி அதைப் பற்றி நானும் ஒரு பதிவு எழுத வேண்டும் என்று வெகு நாட்களாக ஆசைதான் இதோ ஒரு கவிதையுடன் தொடங்குகிறேன் . ஏலே இதை கவிதை என்று நாங்க சொல்லணும் என்று சொல்றது நல்லாவே கேக்குது மக்கா பிடித்து இருந்தாலும் இல்லாட்டியும் எப்பவும் வழக்கமா பண்றது போல உங்க விருப்பத்திற்கு உங்க கோபத்தை மறுமொழியில காட்டலாம்கோ .

மீண்டும் ஒரு ரோஜாவை
கொல்ல விருப்பம் இல்லை
.ஒவ்வொரு வருடமும் உனக்காக
எழுதி எழுதி கொடுக்காமல் மறைத்த
கடிதத்தில் உள்ள வார்த்தைகளுக்கு எல்லாம்
கண்டிப்பாக வயதாகி இருக்கக்கூடும் .

உனக்கா என்று சொல்லி சொல்லி
வாங்கிய ரோஜா பூக்களின் மரணத்திற்கு
எல்லாம் நம்
காதலும் ஒரு காரணம்தான் .

நேற்று
உன் அனுமதி இன்றி காதலித்தேன் ஆனந்தம்.
ஆனால்
இன்றும் உன் அனுமதி இன்றியே காதலிக்கிறேன்
சற்று வருத்தம் .
நாளையும் உன் அனுமதி இன்றியே காதலிப்பேனோ ?
சற்று பயம் .
நாளை மறுநாள் உன் அனுமதி பெற முயற்சித்து
நீ மறுத்துவிட்டால் இதைவிட வேதனை
வேறு ஒன்றும் இல்லை .
உன் அனுமதி இன்றியே காதலித்துக்கொண்டிருக்கிறேன்
உன் அனுமதி பெற முயற்சித்து தோற்றவானாய்

இனியும் அந்த அவல நிலை வேண்டாம் .
இதோ இன்று காதலர் தினம்
என் அன்னைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை .
பாதி தூக்கம் தொலைத்து
பாதி ஏக்கம் நிரப்பி
பாதி பல் துளக்கி
பாதி குளித்தும் குளிக்காமல்
 பாதி உணவு உண்டும் உண்ணாமல்
பாதி தலை வாரியும் வாராமல்
பாதி ஆடை அணிந்தும் அணியாமல்
பாதி புத்தகம் எடுத்தும் எடுக்காமல்
இப்படி அவசர அவசரமாக கிளம்பிக்கொண்டு இருக்கிறேன்
பேருந்து நிறுத்துமிடம் நோக்கி .

அன்னை சொன்னாள்
இன்னும் உன் பேருந்து வர நேரம் உள்ளது .
எதற்கு இவளவு அவசரம் என்று !
எப்படி சொல்வேன் ? அவள் வந்து வெகுநேரமாகிவிட்டதை
அன்னையாகிய உன்னிடம்
.காதல் – கொடுப்பதன்று. எடுப்பதன்று. ஈர்த்துக் கவிழ்ப்பதன்று. மடக்குதல் அன்று. மடங்குதல் அன்று. எதிர்பார்த்த வெறியில்… எதிர்பாராத சொடுக்கில் கிடத்துதல் அன்று. இரக்கத்தில் கசிந்து இருளில் தேங்குதல் அன்று.

என் பேனாவிலும்
மை உண்டு
நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…
நீ இன்னும்
எழுதிக் கொண்டிருக்கிறாய்.

தேடல்கள்… தம் காத்திருத்தலின் தற்செயல் நிமிடத்தில் திகைத்துச் சந்தித்து… உள்திரும்பித் திருப்தியுறுவது. இரு ஞாபகங்கள் விரும்பி, ஒற்றை மறதிக்குள் அமிழ்வது.

அதை அறிய மனசு பூத்திருக்க வேண்டும். நிலா… மொட்டின் மீது வழிந்து விடுகிறது. பூதான் விந்துவாய் வாங்கிக் கொள்கிறது. காதலை வாங்கிக் கொள்ள எத்தனை பேருக்கு வாய்க்கிறது? காதலால் வாழ்ந்துகொள்ள எத்தனை பேருக்கு நேர்மை இருக்கிறது?

அது ஆணுக்கும் பெண்ணுக்குமாக நிகழ்வதா? ஆணுக்குள் இருக்கிற பெண்ணுக்கும் பெண்ணுக்குள் இருக்கிற ஆணுக்குமாக… எதிரெதிர் கண்ணாடிக்குள் நீளும் தொடர் பதிவுகளாய் நிகழ்வது.

அஃறிணையில் உயிரோட்டமாக இருக்கிற அது… உயர்திணையில் வெறும் உடலோட்டமாகி விடுகிறது. கற்பிதங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிற சமூக விலங்குகளுக்குக் கூண்டின் கூரைதானே வானம்! வானமற்றுப் போன வாழ்வில் சிறகுகளின் பாடல்கள் ஏது?

இந்தப் பிறவியில் சேர முடியாவிட்டால் என்ன… அடுத்தப் பிறவியில் சேர்ந்து வாழ்வோம் என்பதுவும்…உடல்களால் இணையாவிட்டால் என்ன… உயிர்களால் இணைந்து வாழ்வோம் என்பதுவும் ஏமாற்று. பொய்!

அது உடல் கடந்து நடப்பதா? உடல்களால் நடப்பது. சம அதிர்வுகளாலான மின்சேர்க்கை அது.
உடல்தொட்டதும் காதலை இழந்துவிடுகிறவர்கள் அதிகம். காதலைத் தொட்டு உடலை அடைபவர்கள் குறைவு – மிக மிக குறைவு.

ஸ்பரிசமும்…புணர்தலும் காதலின் நெருங்கிய மொழிகள். அவற்றைப் பேசாதே எனச் சொல்லும் தத்துவங்கள் யாவும் பொய் பேசும். வாழ்வின் வழிகள் முறித்துக் குளிர்காய்கிற எந்தச் சடங்கும் காதலைச் சிதைக்கும். பொருந்த நெருங்கும் முழுமைக்குள் சந்தேகங்கள் திணித்துச் சிரமம் செய்யும்.

அதனால்தான்… அடிமைச் சமூக அமைப்பில் வரலாற்று வழிநெடுக வாழ்ந்து பழகிவிட்ட நமக்கு, வாழ்க்கை மட்டுமல்லாது காதலும் போராட்டமாகிவிட்டது. அடுத்தவர்களிடமிருக்கிற நம்மை மீட்பதும்…நமக்குள் இருக்கிற அடுத்தவர்களை வெளியேற்றுவதுமான சிக்கல்கள் நிறைந்த போராட்டமிது!

இத்தகைய நெருடல்கள் நிறைந்த வாழ்வில்… காதலைச் சந்தித்ததாக யாரேனும் கூறினால் நம்ப மாட்டேன்! காதலிகளைச் சந்தித்திருக்கலாம். காதலன்களைச் சந்தித்திருக்கலாம். காதலை மட்டும் சந்தித்திருக்கவே முடியாது!

சூழ்ந்தார் துயரங்களை வீழ்த்தி எழாத எவருக்குள்ளும் காதல் எழாது – எழ முடியாது. காதலைப் போல ஒன்று எழலாம். அதுவே காதல் ஆகாது.

காதலென்பது என்ன… இழந்துவிட்டு வருந்துவதா? பிரிந்துகொண்டு அழுவதா? இல்லை…இல்லை.. ‘காதல்… காதல்… காதல்… காதல் போயின் சாதல்… சாதல்… சாதல்…’ சொன்ன பாரதியின் காதல் என்ன ஆனது? அவனது தொகுப்பில் பதினாறு விருத்தங்கள் ஆனது. ஆனாலும் சொல்கிறேன்…அவனது பிள்ளைக் காதல்தான் அவனைப் பிரபஞ்ச காதலனாக்கியது. அந்தத் தனிமனிதனை அதுதான் சமூக மனிதனாக்கியது. அதுதான் அவனிலிருஎந்து எழுந்து இன்னும் நித்திய நெருப்பாக நின்று எரிகிறது. அவனது போராட்ட உணர்வுக்குள் ஒன்பது வயதுச் சிறுமி ஒருத்தி ஊடுருவியிருக்கிறாள் என்கிற உண்மையை உணர்ந்தவர்களுக்குத் தான் தெரியும் – காதலின் பெருமை!

என்னை
எல்லோருக்கும்
பிடித்திருக்கிறது.
அவனையும்
எல்லோருக்கும்
பிடித்திருக்கிறது.
எங்களைத்தான்
யாருக்குமே
பிடிக்கவில்லை

மற்றபடி இங்கே காதல் கடிதங்கள் எழுதிக் கொள்பவர்களையும்… பரிசுப் பொருட்களை மற்றிக் கொள்பவர்களையும்.. எச்சில் இனிப்புகளை ருசிபார்ப்பவர்களையுமா காதலர்கள் என்கிறீர்கள்?

ஸ்கூட்டரில் அணைத்துப் போவதையும்… திரையரங்குகளில் உரசிப் படம் பார்ப்பதையும்…கடற்கரை இருளில் மடியில் படுத்துக் கிடப்பதையும் காதல் என்று நம்பச் சொல்கிறீர்கள்?

காதலின் எல்லை திருமணம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளவும் உரத்துச் சொல்லவும் இங்கே எத்தனை பேருக்குத் தெம்பு இருக்கிறது? தம் காதலை வெற்றி கொள்ளவும் தம் பிள்ளைகளின் காதலுக்கு வரவேற்புச் சொல்லவும் இங்கே எத்தனை பேருக்குப் பக்குவம் இருக்கிறது?

அதற்குக் காரணம் அவர்களல்ல; நீங்களுமல்ல. நானுமல்ல. குற்றமற்ற விலங்குகளை நமக்குள் நாமே வளர்த்துப் பழக நாட்கள் இன்னும் நமக்கு அமையவில்லை. நமது மனம் என்பது தொலைதூரத் தலைமுறைகளைத் தாண்டிய வேட்டைக் கால வாழ்வியற் கருத்துருவாக்கங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கற்பிக்கப்பட்ட மனோபாவங்களுக்குள் வாழப்பழகிவிட்டதனாலேயேயே, காதல் செய்தலும் மிகப்பெரிய சமூக குற்றமென நமக்குள்ளாகவே ஒருவன் எழுந்து நம்மை எச்சரிக்கிறான்.

காதல் குற்றமா? சமூக குற்றமா? நமக்குள் இருக்கிற புற மிருகங்களையும் அக மிருகங்களையும் உசுப்பிவிட்டு கடித்துக் குதற்ச்சொல்லி ரத்தம் ரசிப்பவனே அப்படிச் சொல்வான். சமூகச் சூழல்களின் சிலந்தி இழைகளிலிருந்து விடுபட்டு… வாழ்வின் இயல்புத் தளத்தில் இயற்கையின் இயக்கமாகிவிடச் சம்மதிக்கிற எவனும், அதனை அப்படி சொல்ல சம்மதிக்க மாட்டான்!

நாம் பிளந்து கிடக்கும் பிரபஞ்ச பிசிறுகள். காதலில் இணைகிற ஆணும் பெண்ணும் பிரபஞ்ச இயக்கத்தின் ஆணி வேருக்குள் நெகிழ்ந்து இறங்குகிறார்கள். அது இருவரின் முழுமையடைதல் இல்லை. முழுமைக்கான அடுக்குகளின் ஒழுங்கமைவில் அது ஒரு பகுதி.

இருட்டிக் கொண்டு வருகிற ஏதோ ஒரு மழைக்காலத்தில்… பாறையின் மீது வந்து ஒரு பெண் படுக்கிறாள் என்பது…அந்தப் பாறையிலிருந்து என்றோ தெறித்துச் சிதறிய ஒரு பகுதி மீண்டும் வந்து அதே இடத்தில் பொருந்துவதாக அர்த்தம். அந்தப் பெண்மீது அவலது அந்தக் கணத்தின் முழுச்சம்மதத்தில்…அவளது ஆண் கவிழ்ந்து இயங்கப் போகிறான் என்கிறபோது அவர்கலள் மட்டுமல்ல… அவர்களைச் சுமந்துள்ள பாறையும் சூழ்ந்துள்ள செடிகளூம்…செடிகளில் அமர்ந்துள்ள வண்ணத்துப் பூச்சிகளும் கூட அவர்களோடு சேர்ந்து இயங்கப் போகின்றன என்று அர்த்தம். காதலின் மையத்தில் குனிந்து முகம் பார்க்கிற எவரும் உலகச் சுழற்சியின் ஏதோ ஓர் ஒழுங்கின்மையைச் சரிசெய்கிறவர்களாகவே இருப்பார்கள்.

மேல் இமைகளில்
நீ இருக்கிறாய்.
கீழ் இமைகளில்
நான் இருக்கிறேன்.
இந்தக் கண்கள் கொஞ்சம்
உறங்கி விட்டாலென்ன?

வாழ்வின் இடையில் வந்து இடையில் போய்விடுகிற தற்காலிக அதிர்வு அல்ல அது. ஆயுளைக் கடந்தும் உடல்மாறிக்கொள்கிற நிரந்தர அதிர்வு.

காமத்துக்கான முன் ஒத்திகையாக அதனைக் கருதுகிறவர்களூக்கே அது தற்காலிகம். உடல்களால் காமம் பேசிமுடித்த திருப்தியில் உயிர்களால் காதல் பேச முடிகிறவர்களூக்கு மட்டுமே அது நிரந்தரம். அப்படிப் பேசிப் பழகப் பயிற்சி வேண்டும்.

எவரும் எவருக்கும் நன்றி சொல்ல நினைக்காத தருணங்களால் பேச வேண்டும், அதனை. உதடுகளின் மெல்லிய அதிர்வுகள் சாட்சியாக… ஈரத்தில் நனைந்த விழிகள் சாட்சியாக… அக்குளில் பூக்கும் வியர்வையின் வாசம் சாட்சியாக…ஏன் கூச்சங்கழிந்த நிர்வாணம் சாட்சியாக… இழையும் பெருமூச்சுக்களால் பேச வேண்டும் அதனை. பேசப் பேசப் பேசத் தெவிட்டாத பேச்சு அது. பேசியிருக்கீர்களா நீங்கள்?

நான் பேசியிருக்கிறேன். ஆணாக இருந்தல்ல. பெண்ணாக இருந்துதான் பேசியிருக்கிறேன். என்ன சிரிக்கிறீர்கள்? பெண்ணாகித்தான் பேசமுடியும். அதனை!

பெண்ணாகத் தெரியாத எந்த ஆணுக்கும் காதலின் தரிசனம் வாய்க்குமென்று நான் நம்பவில்லை. ஆயிரம் பெண்களுக்குரிய தாய்மையைத் தன் இதயத்துக்குள் ஏற்றுக்கொள்கிற ஆண்தான், ஒரு பெண்ணின் இதயத்துக்குள் இடம்பெறுகிற அருகதையுள்ளவனாகிறான்.

இருவராய் இணைந்து இருக்கையில் கூடத் தனிமையாய் இருக்கிற சுந்தந்திர சுகத்தை ஒரு பெண்ணுக்கு எவன் தருகிறானோ, அவண்தான் ஆண் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறான்!

அழகியக் கூண்டு செய்து… அதற்குள் அடக்கி வைத்து… ‘இது என் பறவை.. இது எனக்கு… எனக்கு மட்டுமே’ என்று எந்தப் பெண்ணையும் சொல்ல எந்த ஆணும் வெட்கப் படவேண்டும். விரும்பி வந்து ஒரு பறவை எவ்விதம் அமர்ந்ததோ அவ்விதமே விரும்பியவண்ணம் அது பறந்து செல்லுதலுக்கும் சிரமமற்றபடி கிளையாக இருக்கச் சம்மதித்தலே அணுக்கு அழகு.

உரிமை கொண்டாடுதல் அன்று உரிமை தருதலே காதல். தருதல் என்ற சொல்லுக்குள்ளும் ஓர் ஆதிக்கத்தனம் தெரிகிறதே! தருவதற்கு ஆண் யார்? தருதலும் பெறுதலுமற்ற கருனைப் பெருவெளியில் சிறகுச் சிக்கலின்றிப் பறத்தலே காதல்!

முழுவிடுதலையைச் சுவாசித்துப் பூப்பதுதான் காதல். எந்தச் சிறைக்குள்ளும்… எந்த விலங்குக்குள்ளும்… அடைபட்டு கட்டுப்பட்டு இருக்க சம்மதிக்காது அது.

என்னைச் செதுக்கியது பெண்மை. என்னில் சிற்பமானது காதல். எனக்குள் எல்லாமும் அதுதான். எல்லாமும் கற்றுத் தந்ததும் அதுதான்!

பூவைப் பறித்துவிடாமல் அதன் செடியிலேயே பார்த்து ரசிக்க… கைகளின் முடிப்பிசிறுகளில் சிக்கி நகரும் எறும்பை நசுக்கிவிடாமல் மெல்ல எடுத்து ஊதிவிட…அசையும் ஊதுவத்திப் புகையில் இசை கேட்க… பயணங்களூடே உடைக்கப்படும் பாறைகள் பார்த்து அழ… இறந்து கிடக்கும் வண்ணத்துப் பூசியை எடுத்துப் போய் அடக்கம் செய்ய… போக்குவரத்து மிகுந்த சாலையில் கிடந்து நசுங்கும் ஏதோ ஒரு குழந்தையின் ஒற்றைச் செருப்பைத் தவித்து எடுத்து ஓரமாய் வைக்க… அதுதான்… ஆம் … அதுதான் எனக்குக் கற்றுத் தந்தது. காதல் கற்றுத் தரும். காதல் எல்லாம் தரும். காதலியுங்கள். புரிந்துகொள்வதை அதிகம் பேசலாம். உணர்ந்து கொள்வதை?

அணுஅணுவாய்
சாவதற்கு
வாழ்வதற்கு
முடிவெடுத்துவிட்ட பிறகு
காதல்
சரியான வழிதான்.

ஏலே மக்கா என்ன ஒன்னும் புரியலையோ ? ஏலே இது காதாலிச்சா தாம்லா புரியும் .சும்மா நூலு விட்ட இது புரியாதுல .

இப்ப பாருங்க நம்ம வாத்தியாரு சொல்லித் தந்தத சொன்ன புரியுதானு பாருங்க இதுவும் புரியலைன அதற்கு நான் ஒன்றும் பண்ண இயலாது சாமியோ !
நீங்க சொல்லவேண்டியதை மறக்காமல் மறுமொழியில் சொல்லுங்க .

சம்பரதாயம் சட்டை பிடித்தாலும்
உறவுகள் உயிர் பிழிந்தாலும்
விழித்து பார்க்கையில் உன் தெருக்கள்
களவு போயிருந்தாலும்
ஒரே ஆணியில் இருவரும் சிக்கன
சிலுவையில் அறயபட்டாலும்
நீ நேசிக்கும் அவனோ அவளோ
உன்னை நீசிக்க மறந்தாலும்
காதலித்து பார்
சொர்க்கம் நரகம் இரண்டில்
ஒன்றே இங்கேயே நிச்சயம்
காதலித்து பார்


அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள் !



இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........





Read more...

அறிவுக்கு விருந்து !!!

>> Tuesday, February 9, 2010

இன்னைக்கு என்ன எழுதலாம் எப்ப பார்த்தாலும் ஒரே கதையும் , கவிதையும் , கட்டுரையுமா எழுதி எழுதி நிரப்பியாகிவிட்டது . சரி இன்னைக்கு ஏதாவது சில அறிய நிகழ்வுகளைப் பற்றி எழுதி அறிவுக்கு விருந்து என்று சொல்லி அனைவரையும் அசத்திட வேண்டியதுதான் . அறிவுக்கு விருந்தா அது எங்கடா உன்னிடம் இருக்குனு நீங்க சொல்றது எனக்கு கேக்குது மக்கா . பதிவுனு சொல்லி மொக்க போடுறதும் . மொக்கைனு சொல்லி பதிவு போடுறதும் இப்ப சகசம்தானங்க .எது எப்படியோ இது அப்படி இல்லை எப்படினு கேக்குறீங்களா அது அப்படிதாங்க . சரி வாங்க விசயத்திற்கு வருவோம் .


507 காரட் எடையுள்ள உலகிலேயே பெரிய வைரம் , தென்னாப்பிரிக்க வைரச் சுரங்கத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது .


செல்போனில் சிம் கார்டு பிளாஸ்டிக் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம் . ஆனால் , அதுவல்ல . தாவரங்களிலிருந்து கிடைக்கும் செலுலோஸ் என்பதிலிருந்து தயாரிக்கப்படுகிறது சிம்கார்டு .


உயிர் என்றால் என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு , அமெரிக்கத் தொலைக்காட்சியில் ஒருவர் வேடிக்கையாக அது காமத்தால் தொற்றிக்கொண்ட நோய் ( ' life is a sexually transmitted disease ' ) என்றார் .


வேகமாகப் போக விரும்பினால் , தனியாகப் பயணம் செய் . தொலை தூரம் போக விரும்பினால் துணையுடன் பயணம் செய் ' என்பது ஆப்பிரிக்காவில் பிரபலமாகச் சொல்லப்படும் வாக்கியம் .


எந்த விளையாட்டுக்கும் இல்லாத தனிச்சிறப்பு படகுப் போட்டிக்கு உண்டு . பின்பக்கமாகத் திரும்பி


வெற்றிக்கோட்டைத் தொடும் ஒரே விளையாட்டு இது மட்டும்தான் .


சங்கரா பரணம் ராகத்தில் , ' ஜனகணமன ' பாடலுக்கு இசை அமைத்தவர் நேதாஜியின் படையில் பணியாற்றிய கேப்டன் ராக்சிங்


மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறந்த கானகப் பகுதிக்கு ' மௌனப் பள்ளத்தாக்கு ' என்று பெயர் .


மனைவி விருப்பம் இல்லாத நேரத்தில் கட்டாயப் படுத்தி உறவுகொள்வது ( மேரிட்டல் ரேப் ) , மனைவியைக் கணவனும் அவனது உற்றாரும் கொடுமைப்படுத்துவது ( டொமஸ்டிக் வயலென்ஸ்.) எனப்படும் .


பறவைகளுக்கு ( வாத்து , அன்னம் , நெருப்புக் கோழி தவிர்த்து ) ஆண்குறி கிடையாது . க்ளோயேகா ( cloaca ) என்கிற ' சமச்சீர் பகுதி ' யினால் தேய்த்துக்கொள்ள வேண்டியதுதான்


இரவில் தூங்கும்போது படுக்கையில் சிறு நீர் கழிக்கும் பழக்கத்தை ஆங்கிலத்தில் Nocturnal Enuresis என்று குறிப்பிடுவோம் . இந்தப் பழக்கத்துக்குப் பெண் குழந்தைகளைவிட அதிகம் ஆளாவது ஆண் குழந்தைகள்தான்


எல்லா வகை ரத்தத்துடனும் சேரும் ரத்த வகை ' ஓ ' பாஸிட்டிவ் .

நட்சத்திரங்களின் இடத்தை வைத்தே பழங்காலங்களில் திசைகளை கண்டுபிடிப்பார்கள் . சந்திராயன் விண்கலத்தில் அதை போன்ற ஒரு செயலையே ' ஸ்டார் சென்சார் ' செய்து வந்தது . நட்சத்திர கூட்டங்களை நோக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்த சென்சார்கள் . அதை வைத்தே விண்கலம் நோக்கியிருக்கும் திசை , நிலவின் தளத்தில் இருந்து விண்கலம் உள்ள உயரம் , விண்கலம் நிலை நிறுத்தப்பட்டுள்ள கோணம் போன்ற தகவல்களை துல்லியமாக கணித்து தரும் .

" ஐன்ஸ்டீன் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது ...."
" ' ரிலேட்டிவிட்டி தியரி ' என்று சொல்வேன் என்று நினைத்தீர்களா ? அதுதான் இல்லை . காந்தியின் பெயர்தான் ஞாபகத்துக்கு வருகிறது . காந்தியைப் பற்றி ஐன்ஸ்டீன் சொன்ன புகழ்பெற்ற ஸ்டேட்மென்ட் இது :


' இன்னும் 50 ஆண்டுகள் கழித்து ரத்தமும் சதையும் கொண்ட இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் ! ".


பொதுவாகவே நல்ல பெட்ரோலானது எங்கு சிந்தினாலும் சிறிது நேரத்தில் சிந்திய சுவடு தெரியாமல் மாயமாகி விடும் . கலப்பட பெட்ரோல் மட்டுமே சிந்திய இடத்தில் சிறிய வரைபடம் போன்று அதன் எல்லைக் கோட்டை விட்டுச் செல்லும் .


நமது உள்ளங்கையில் ஒரு சதுர அங்குலத்திற்கு 3000 வியர்வைச் சுரப்பிகள் உள்ளனவாம் .


அறிஞர் ' வால் ' என்பவர் பல ஆய்வுகளை மேற்கொண்டு , பாம்புக்கு கேட்கும் திறன் இல்லை , செவி இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளார் .


பாம்பைக் கண்டால் பயப்படுவதற்கு அறிவியல் பெயர் ஒபிடி போபியா .


'வெள்ளெழுத்து ' என்ற குறைபாடு 40 வயதானால் கட்டாயம் எல்லோருக்கும் வரும் . இது ஒரு நோய் அல்ல . முதுமை தொடக்கத்தின் அடையாளம் . இதை ' சாளேஸ்வரம் ' என்றும் அழைப்பர் .


ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 113 டன் எடையுள்ள மழை நீர் பொழிவதையே ஓர் அங்குலம் என்பர் . .


குழந்தை பிறக்கும் போது அதன் இதயம் ஒரு நிமிடத்திற்கு 140 முறை துடிக்கும் . முயலின் இதயம் ஒரு நிமிடத்திற்கு 150 முறையும் , குதிரையின் இதயம் 38 முறையும் , சுண்டெலியின் இதயம் 200 முறையும் , நாயின் இதயம் 118 முறையும் , ஆட்டின் இதயம் 60- லிருந்து 78 முறையும் , யானையின் இதயம் 48 முறையும் துடிக்குமாம் .


அப்பாடா ஒரு வழியாக பதிவு போட்டாச்சு .அப்றம் என்ன மக்கா அதுதான் விருந்து முடிந்துவிட்டததுல இனி அப்படியே வரிசையா வந்து மொய் எழுதிட்டு போங்க . நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன் . மக்கா இனி நீங்க சொல்லவேண்டியதை சொல்லலாம் .



இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

Read more...

நீங்கள் இதயம் உள்ளவரா ? இதோ நிரூபிக்க ஒரு அறிய வாய்ப்பு !!!

>> Monday, February 8, 2010

அனைத்து வலை உலக நண்பர்களுக்கும் எனது வணக்கம் . நேற்று இரவு எப்பொழுதும்போல் நண்பர்களின் பதிவுகளை வாசித்துகொண்டிருந்தேன் . அப்பொழுது நண்பர் Butterfly சூரியா அவர்களின் புதிய பதிவான '' மைத்ரிக்கு உதவுங்கள்'' என்ற ஒரு அறிவிப்பு பதிவை வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது . என்னடா தலைப்பே சற்று வித்தியாசமாக உள்ளதே என்ற ஆவலுடன் வலைக்குள் நுழைந்தேன் . மொத்த பதிவையும் வாசித்து முடித்த பிறகு உணர்ந்தேன் கடவுள் மனித உருவங்களில் இருக்கிறார் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்றுதான் என்று . நல்ல மனநிலையும் அனைத்து சிறப்புக்களை கொண்ட ஒரு குழந்தையை நாம் சிறந்த முறையில் பாதுகாத்து , கல்வி கற்பித்து , அவர்களை பராமரிப்பது என்பதே சற்று கடினமான விசயமாக இருக்கும் இன்றைய சூழ்நிலையில் . மன வளர்ச்சியில் குன்றிய 300 குழந்தைகளை சிறப்பாக பேணி பாதுகாத்து வளர்த்து வருகிறார்கள் என்றால் சற்று வியப்பிற்குறிய நிகழ்வுதான் .

'' உள்ளம் நல்ல இருந்தா ஊனம் ஒன்றும் குறையில்லே
உள்ளம் ஊனப் பட்டா உடம்பிருந்தும் பயனில்லை. ''


என்ற கவிஞர் வைரமுத்துவின் வரிகள் இன்று ஞாபகத்திற்கு வருகிறது .


நேற்று பக்கம் பக்கமாக எழுதிய பதிவுகள் இன்று ஞாபகத்தில் இல்லை. ஆனால் எங்கயோ ஊமையாக முடங்கிக் கிடக்கும் பல மன நலம் குன்றிய குழந்தைகளின் திறமைகளுக்கு உயிருட்டும் வகையில் அமையும் இதுபோன்ற சிறந்த பதிவுகள் என்றும் ஞாபகத்தில் இருக்கும் என்ற நம்பிக்கையில் நண்பர் அவர்களின் Butterfly சூரியா அவர்களின் '' மைத்ரிக்கு உதவுங்கள் '' என்ற அதே பதிவை எந்த மாற்றமும் செய்யாமல் இங்கு தந்து இருக்கிறேன் . நண்பர்களே நீங்களும் வாசித்து விட்டு உங்களால் இயன்ற உதவிகளை வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் .


நம் நாட்டில் ஏறக்குறைய 3 கோடி மக்கள் மனவளர்ச்சி குன்றியோர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இவர்களுள் ஐந்து சதவிகிதத்தினர்தான் தேவையான கல்வி, பயிற்ச்சி மற்றும் வசதிகள் பெற்றிருப்பதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

பயன் வேண்டுவோருக்கும் பயன் பெறுவோருக்கும் இடையே உள்ள இவ்வளவு பெரிய இடைவெளியை சிறிதேனும் குறைக்கும் நோக்கத்துடன் மனவள்ர்ச்சி குன்றியோரின் பெற்றோர்களால் 1994ல் சென்னையில் துவங்கப்பட்ட சேவை நிறுவனம் தான் “மைத்ரி”

மூன்றே குழந்தைகளுடன் துவங்கப்பட்ட மையம் இன்று 300 குழந்தைகளை பயிற்றுவிக்கும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. சென்னையில் பெரம்பூர், தாம்பரம், மேற்கு மாம்பலம், கொளத்தூர், கே.கே. நகர், உள்ளகரம் ஆகிய 6 இடங்களில் 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடனும் திறன் ஊக்க வல்லுநர்களுடனும் {Occupational & Physico Therapists} பணி புரிகிறார்கள்.

மனவள்ர்ச்சி குன்றியிருந்தாலும் இவர்களிடம் உள்ள சில திறமைகளை கண்டெடுத்து, வளர்த்து அவர்கள் தங்களுக்கும் பிறர்க்கும் பயனுள்ள வாழ்க்கை வாழ வழிகாட்டும் மைத்ரி, நலன் விரும்பும் பெற்றொரும், நல்மனமுள்ள பல்ரின் ஆதரவோடு தற்போது வளர்ந்து வருகிறது.

வளர்ச்சியடைந்த அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அரசு பள்ளிகளிலேயே இம்மாதிரி சிறப்புக் குழந்தைகளின் கல்விக்கும் இடம் ஒதுக்கி உதவுகிறார்கள். நம் நாட்டில் இது போன்ற சமூக நிறுவனங்களால் மட்டுமே செய்ய இயலுகிறது. இதற்கு தேவையான உதவிகளுக்கும் சமூகத்திடம்தான் பெற்று செயல்படவும் முடிகிறது.

இலாப நோக்கில்லாமல் அன்பளிப்புகளால் மட்டுமே நடக்கும் நிறுவனம் என்பதை கடந்த சில மாதங்களாக நானும் இணைந்து பணியாற்றுவதால் நன்கறிவேன். இந்நிறுவனத்தின் கூட்டங்களில் கலந்து கொண்டு என்னால் இயன்ற சிறு உதவிகளையும் செய்து வருகிறேன். அதனால் வலைப்பூவிலும் அதிகம் நேரம் ஒதுக்க முடியவில்லை.

இன்னும் பல பள்ளிகளை தொடங்கவும் இருக்கும் பள்ளிகளை மேம்படுத்தவும் இவர்கள் ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.
சென்னை நேரு உள்விளையாட்டஙகில் (பிப் - 28 ஞாயிறு மாலை 6.05 pm) நடைபெற இருக்கும் இக்கலை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்குவதன் மூலம் நீங்களும் ஒரு சிறு பங்களிப்பை செய்ய முடியும்.

ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக்கவும்.

நிதியுதவி செய்ய விரும்பும் வெளியூர் / வெளிநாடு நண்பர்கள் இங்கே செலுத்தலாம்.

இன்றைய சமுதாய ஓட்டத்தில் இது போன்ற பணிகளி நம்மால் முழு நேரமும் ஈடுபட முடியுமாதென்பது ஒப்பு கொள்ள வேண்டியதே எனினும் இதை முழுமூச்சுடன் முனையும் இவர்களுக்கு தோள் கொடுக்கவும் இயன்ற உதவியை செய்யவும் வாருங்கள் என சக பதிவர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடனும் உரிமையுடனும் வேண்டுகிறேன்.

இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

Read more...

தெரிந்தே இறக்கிறது தாய்மொழி !!!

>> Saturday, February 6, 2010

மொழி என்ற ஒன்று மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் நாம் அனைவரும் பேசும் திறன் இருந்தும் ஊமைகலாகத்தான் இந்த உலகத்தில் உலாவிக்கொண்டு இருந்திருக்கக்கூடும் . ஆனால் இன்றைய நிலையில் உலகத்தில் அங்கரிக்கப்பட்டும் , அங்கரிக்கப்படாமலும் எத்தனையோ மொழிகள் அவர் அவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் பேச்சு வழக்கில் நடைபோட்டுக்கொண்டு இருக்கின்றன . நாம் ஆயிரம் மொழிகள் பேசினாலும் பல வேறுபட்டு நாகரிகங்களை கொண்டு வாழ்ந்து வந்தாலும் . நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் இந்தியர்கள் என்றே ஒரு உணர்வுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது மட்டும் யாராலும் மறுக்க இயலாத ஒரு உண்மை . இதைத்தான் அன்றே அழகாக பேசும் மொழி பதினெட்டுடையாள், ஆயின் சிந்தை ஒன்றுடையாள்’ என்று பாரத மாதாவைப் பற்றிப் மகாகவி பாரதியார் பாடியதற்கும் இதுதான் அர்த்தம் !

 ஒரு மொழி என்பது, தொடர்பாடலுக்குப் பயன்படுகின்ற ஒரு முறைமை ஆகும். இது ஒரு தொகுதிக் குறியீடுகளையும், அவற்றை முறையாகக் கையாளுவதற்கான விதிமுறைகளையும் கொண்டுள்ளது.



மனிதருடைய மொழிகளில், ஒலியும், கைச்சைகைகளும், குறியீடுகளாகப் பயன்படுகின்றன. இவ்வாறான ஒலிகளை எழுத்து வடிவமாக மாற்றமுடியும். ஆனால் சைகைகளை அவ்வாறு மாற்ற முடியாது. மனிதருடைய மொழிகளில் இக்குறியீடுகள் சொற்கள் என்றும், அவற்றைக் கையாள்வதற்கான விதிகள் இலக்கணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

"மொழி ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி எனக்கூறுவது முழுமையாகக் கூறப்படாத ஒரு விளக்கமாகும். மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, குமுகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்கநெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படை விளக்கமாகவும் உள்முகச் செய்திகளாகவும் கொண்டிலங்குகிறது."


மனித மொழியானது இயற்கையான மொழியாகும் (natural language).மொழியினை கற்க முற்படும் அறிவியலுக்கு மொழியியல் (linguistics)எனப்படும். மொழியின் வளர்ச்சிப்பாதையாக பேச்சு, எழுத்து, புரிதல், மற்றும் விளக்கம் எனும் படிகளைக்கொண்டது.


மொழியானது பிறப்பு, இறப்பு, வளர்ச்சி, இடம்பெயர்தல், மற்றும் காலத்திற்கேற்ற மாற்றம் என பண்முகம் கொண்டதாக உள்ளது. எந்த ஒரு மொழி மாற்றத்திற்கோ அல்லது மேன்மையுறதலுக்கோ இடங்கொடாமல் இருக்கிறதோ அம்மொழி இறநதமொழி (Dead language) எனப்படும். மாறாக எந்ந ஒரு மொழி தொடர்ந்து காலத்திற்கேற்றாற்போல் தனக்குள் மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறதோ அம்மொழி வாழும் மொழியாக (Living language) கருதப்படும்.

அகா-போ (Aka-Bo) அல்லது போ (Bo) எனப்படுவது அந்தமான் தீவுகளில், குறிப்பாக வடக்குப் பகுதியில் பேசப்பாட்டு வந்த ஒரு பழமையான மொழி

இந்தியாவின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான போ மொழி பேசிய கடைசி நபர் அந்தமான் தீவுகளில் தனது 85வது வயதில் இறந்துள்ளதாக பிரபல மொழியியல் நிபுணர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்து இருக்கிறார் .


போ மொழி உலகின் மிகப் பழமையான மொழி என்பதால் போவா சர் (Boa Sr) என்ற பெண்ணின் இறப்பு ஒரு குறிப்பிடத்தக்கதாகும். இவரின் இறப்பு மூலம் போ மொழி உலகின் பழமையான மொழி முற்றாக அழிந்து விட்டதாகக் கருத முடியும் என பேராசிரியர் அன்வித்தா அபி தெரிவித்து இருக்கிறார்.


பல ஆயிரம் ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த ஒரு மொழி நேற்றோடு அழிந்து விட்டது. ‘போ’ என்ற அந்த மொழியை பேசத் தெரிந்த ஒரே ஒருவரும் நேற்று இறந்தார். அவரோடு அந்த மொழியும் இறந்துவிட்டது. இதுபோல் உலகம் முழுவதும் மாதத்துக்கு ஒரு மொழி அழிந்து வருகிறது.


பிரிட்டிஷ் படைகள் 1858ல் அந்தமானை தங்கள் பிடியில் கொண்டுவந்தபோது, போ மொழி பேசும் பழங்குடி மக்கள் ஐயாயிரம் பேர் இருந்தனர். 150 ஆண்டுகளில் அத்தனை பேரும் மடிந்து, அவர்களோடு ஒரு புராதனமான மொழியும் போய் சேர்ந்துவிட்டது. கடைசி ஆள்தான் போ சீனியர். அந¢த பெண்மணிக்கு வயது 84. போர்ட் பிளேரில் வசித்தார். சுனாமி வந்தபோது, மரத்தில் ஏறி தப்பித்தாராம் போ. அப்போதுகூட கலங்கவில்லை. அவரோடு போ மொழியில் பேச துணைக்கு இருந்த ஒரு பெண் கடந்த ஆண்டு இறந்தபோது அழுதாராம்.


தெரிந்த மொழியில் பேச ஆளில்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை என்பது வெளி இடங்களில் வசிப்பவர்கள், வேலை பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும்.


கிரேட் அந்தமானீஸ் டிரைபல் என இந்த பழங்குடி மக்களை குறிப்பிடுவார்கள். 65 ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த பழங்குடி இனம் அது. 550 தீவுகள் அந்தமானில் இருந்தாலும் 40 தீவுகளில்தான் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.


"போவாவின் பெற்றோர் இற்றந்த பின்னர் இவரே அம்மொழியின் கடைசிப் பேச்சாலலராக 30 முதல் 40 ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறார்" .


இப்பெண்மணி பொதுவாகத் தனிமையிலேயே வாழ்ந்து வந்தவரென்றும், ஏனைய மக்களுடன் கதைப்பதற்கு இவர் அந்தமானிய இந்தி மொழியைக் கற்க வேண்டியிருந்ததென்றும் அவர் தெரிவித்து இருக்கிறார் .


கடைசி மூன்று மாதங்களில் இரண்டு மொழிகள் அந்தமான் தீவுகளில் அழிந்திருக்கின்றன என்பது மிகவும் வேதனை தரக்கூடிய ஒரு செய்தியாக உள்ளது


உலகம் முழுவதும் இந்த நிலைமைதான். பரவி வரும் பெரிய மொழிகள் பலரது தாய்
மொழியை மெல்ல மெல்ல அழித்து வருவதற்கு பல உதாரணங்கள் கூறலாம். மும்பையில் குடியேறும் தமிழன் மராத்தியில் பேச கற்றுக் கொள்கிறான். டெல்லிக்கு பிழைக்கச் செல்லும் தமிழனுக்கு இந்தி தேவையாகிறது. அவனே அமெரிக்காவில் செட்டிலானால் ஆங்கிலம்தான் எல்லாமே. இவர்களின் அடுத்த தலைமுறை தமிழில் எழுதுவதையும் பேசுவதையும் மறக்கின்றன.

சொந்த மண்ணிலேயே வாழ்ந்தாலும் தாய்
மொழியில் பேசி, எழுதி, படிக்கும் பழக்கம்
எத்தனை பேருக்கு இருக்கிறது என்று கணக்கெடுத்தால் அதிர்ச்சிதான் மிஞ்சும். மொழியோடு ஒரு இனத்தின் கலை கலாசாரம் பண்பாடு பாரம்பரியம் வரலாறு எல்லாமே மறைவது வேதனையான எதார்த்தம்.


எங்கோ தானே தமிழர்கள் இறக்கிறார்கள் நமக்கு என்ன என்று இருந்தது போல் இந்த விசயத்திலும் நமது அரசு இருக்குமெயானால் . விரைவில் தமிழ் மொழியும் இன்னும் சில காலங்களில் இதுபோன்ற நிலையை எட்டிப் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . நமது நாட்டில் மொழி சம்மந்தப்பட்ட துறைகளில் பணியாற்றுபபவர்கள் இதுபோன்ற நிகழ்வுகளை சற்று கூர்ந்து கவனித்து பணியாற்றினால் நலமே !. இன்னும் மொழி சம்பந்தப்பட்ட விழிப்புணர்வுகளை மக்களிடையே அதிக்கப்படுத்தும் விதமாக பல குழுக்களை அமைத்து நமது அரசு நேரடியாக கண்கானித்து வந்தால் தமிழ் மொழி இன்னும் செழிப்புடன் திகழ்வதற்கு வாய்ப்பாக அமையும் .


வந்தபின் யோசிப்பதை விட வருமுன் காத்திருப்போம் !
நாம் தாய்மொழிக்கு மேலும் வாழு சேர்திருப்போம் !.



இந்த பதிவை வாசித்துக்கொண்டு இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் . நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னூட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னூட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .



இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

Read more...

சிசேரியன் பிரசவத்தால் சீரழியும் பெண்கள் சில அதிர்ச்சித் தகவல்கள் !!!

>> Thursday, February 4, 2010

நீண்ட நாட்களாக எழுத நினைத்து, சோம்பேறித்தனத்தினால் இதுவரை எழுதாமல் இருக்கும் இருந்த பதிவுகளில் இதுவும் ஒன்று.
 
இந்த உலகத்தில் மிகவும் புனிதமான ஒரு இடம் உள்ளது என்றால் அது தாயின் கருவரை என்றுதான் நான் சொல்வேன் . ஆனால் அந்த புனிதத் தளத்திலும் இன்றய நிலையில் இயற்கைக்கு மாறாக பல கலவரங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன . இந்த உலகத்தை கடவுள் படைத்தாரா என்பது எனக்கு தெரியாது ஆனால் என்னை என் தாய்தான் படைத்தாள் என்பதை நான் நான்கு அறிவேன் . நம்புகிறேன் கடவுள் இருக்கிறது ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொரு அன்னையின் உருவதிலும் , பிறருக்கு உதவும் மனம் கொண்ட நல்ல மனிதர்கள் உருவதிலும் , சரி இனி நம்ம விசயத்திற்கு வருவோம் .
 
விஞ்ஞானம் இவ்வளவு வளர்ந்த பின்னும் நமக்கு கர்ப்ப காலம் பற்றிய முழுமையான அறிவு இல்ல .
இயற்கையான முறையில் கரு உருவாகி ஆரோக்கியமாக வளர்ந்து பிரசவ நேரத்தில் ஏற்படும் ஒரு சில பிரச்சினைகளினால் சிசேரியன் செய்யப்பட்டு குழந்தை பிரசவிக்கும் நிலை தற்போது அதிகரித்துள்ளது.
இதற்கு தா‌யி‌ன் சில பல உடல் அமைப்புகள்தான் காரணமாகின்றன.
 
ஒரு கர்ப்பிணியை, எல்லா பரிசோதனைகளும் செய்து அவருக்கு சுகப் பிரசவம் ஆகும் என்று மருத்துவர்கள் தீர்மானித்து பிரசவ அறைக்கு கொண்டு சென்று கடைசி நேரத்தில் கூட சிசேரியனுக்கு பரிந்துரை செய்யும் நிலை உள்ளது.
 
(இவை அனை‌த்து‌ம் இய‌ற்கையாக ‌சிசே‌ரிய‌ன் செ‌ய்யு‌ம் ‌நிலையை‌ப் ப‌ற்‌றிய ‌விஷய‌ங்க‌ள் ம‌ட்டுமே. பண‌ம் ப‌றி‌ப்பத‌ற்காக த‌னியா‌ர் மரு‌த்துவமனைக‌ளி‌ல் செ‌ய்ய‌ப்படு‌ம்‌ ‌சிசே‌ரிய‌ன்க‌ள் அ‌ல்ல. தனியார் மருத்துவமனைகளில் சுகப்பிரசவம் என்பது ஆச்சரியமான நிகழ்ச்சிதான்.)
 
புகழ் பெற்ற ரோமாபுரி தளபதி ஜூலியஸ் சீஸர் , இவர்தான் உலகத்திலே முதல் முதலில் வயிற்றை கிழித்து எடுக்கப் பட்டக் முதல் குழந்தை !
எனவே , அவரது பெயரையே இம்முறைக்கு வைத்துவிட்டார்களாம் ! ஒரு விஷயம் தெரியுமா ? சிசேரியனில் பிறக்கும் குழந்தை நார்மல் பிரசவத்தில் பிறக்கும் குழந்தையைக் காட்டிலும் , புத்திசாலியாக இருக்கிறதாம் ! அதேநேரம் , நார்மல் முறையில் பிறக்கும் குழந்தை தனது தாய் - தந்தையிடம் காட்டும் அன்பு பரிவு பாசத்தைவிட சிசேரியனில் பிறக்கும் குழந்தை குறைவாகவே தனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறது என்று சொல்கிறது ஆய்வுகள்.
 
உலகம் முழுதும், குறிப்பாக வளரும் நாடுகளில், சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்து வருகின்றன. உலக சுகாதார நிறுவனம் எந்த ஒரு நாட்டிலும், எக்காரணத்தைக் கொண்டும், சிசேரியன் பிரசவங்கள் 15 விழுக்காட்டிற்குமேல் இருக்கக்கூடாது என்று சொல்கிறது. ஆயினும் இந்தியா, சீனா ,பிரேசில் போன்ற நாடுகளில் இது உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடும் அளவைவிட ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
இதற்கான முதன்மையான காரணியாக பலரும்,
படித்தவர்கள் முதல் படிக்காத பாமரன் வரை, கருதுவது மருத்துவர்களின் பணம் கொள்ளையடிக்கும் ஆசைதான் என்பது. இது பெரிதும் உண்மைதான் என்றாலும் மேலும் பல காரணங்களும் , குற்றச்சாட்டுகளும் நம் மீதுதான் உள்ளது என்று சொல்லவேண்டும் ..
 
பொதுவாக சிசேரியன் பிரசவங்கள் மகப்பேறு காலத்தில் தாய், சிசு ஆகிய இருவரின் மரணத்தைத் தவிர்ப்பதற்காகவே (Perinatal death) மேற்கொள்ளப்படவேண்டும். ஆனால் மிக அதிக சிசேரியன் பிரசவங்கள் நடைபெறும் நாடுகளில் இன்னமும் மகப்பேறு காலத் தாய், சிசு மரணங்கள் அதிகமாகவேயுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்துள்ள அளவிற்கு மகப்பேறு கால தாய், சிசு மரணங்கள் குறையவில்லை என்பதுதான் உண்மை. அப்படியானால் சிசேரியன் பிரசவங்கள் தேவையற்றமுறையில் செய்யப்படுகிறதா என்ற இயல்பான அய்யத்தை இப்புள்ளி விபரம் எழுப்புகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டில் சென்னை மருத்துவக் கல்லூரியின் உலக பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் சென்னையின் தனியார் மருத்துவ மனைகளில், அரசு மருத்துவமனைகளைவிட நான்கு மடங்கு சிசேரியன் பிரசவங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவந்தது. இது மருத்துவர்களின் பணம் பண்ணும் ஆசை என்ற வாதத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக உள்ளது. அதேபோல் உலக அளவில் நடத்திய வேறு ஒரு ஆய்வில் சென்னை சென்னை உள்ள நடுத்தர, உயர் நடுத்தரக் குடும்பங்களில் சிசேரியன் பிரசவங்கள் அதிகமாக நடைபெறுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின
 
இதற்கு மருத்துவர்களை குறை சொல்வதில் பயன் இல்லை. பிரசவ வலி வரும்போதுதான், வலியின் தன்மையிலோ, குழந்தையின் தலை திரும்புவதிலோ, கருப்பை வாய் திருப்பதிலோ, குழந்தையின் நாடித்துடிப்பிலோ மாற்றங்கள் ஏற்பட்டு, குழந்தை, கர்ப்பப்பையின் பாதை வழியாக பயணப்படுவது தடைபடும் என்று மருத்துவர்கள் உணர்வார்கள்.
 
இவை அனைத்தும், அந்த கணம், பிரசவ வலி கண்டபின்புதான் கவனிக்க முடியுமேத் தவிர முன் கூட்டியே கணிக்கக் கூட முடியாது.
எனவேதான் பல சமயங்களில் பிரசவ வலி கண்ட பின்பு சுகப் பிரசவத்திற்கு கொண்டு செல்லப்படும் பெண்களுக்கு சிசேரியன் செய்ய நேரிடுகிறது.
 
அமெரிக்க அரசின் யுத்தவெறி எல்லையில் வந்து நின்று ரத்தப் பற்களால் சிரித்தபோது ஈராக் கர்ப்பிணி பெண்கள் அவசரமாக மருத்துவமனைகளுக்கு விரைந்து சிசேரியன் செய்து குறைமாதத்திலேயே குழந்தை பெற்றுக் கொண்டார்கள். யுத்தம் தொடங்கிவிட்டால் அப்புறம் மருத்துவ மின்சார வசதிகள் இருக்காது. 2000ம் ஆண்டு முடிந்து புதிய மில்லனியம் பிறந்தபோது தனது குழந்தையும் அந்த நேரத்தில் பிறக்கவேண்டும் என்று உலகம் முழுக்க சிசேரியன் செய்துகொண்டவர்கள் ஏராளம். ஆனால் நாமோ யுத்தமின்றி மில்லனியம் இன்றி வெளிநாடுகளின் சிசேரியன் விகிதத்தை வேகமாக எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறோம் .

சில ஆராய்ச்சிகள் இன்றைய நடுத்தரவர்க்கத் தாய்மார்கள் தாங்களாகவே முன்வந்து சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என்ற   உண்மையையும்  வெளிக்கொணர்ந்திருக்கின்றன.

இதற்கு முதன்மையான காரணம் பிரசவ வலியின் வேதனையை அவர்களால் தாங்கமுடியாததுதான் என்றாலும், சில தாய்மார்கள் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தனது அந்தஸ்த்திற்கான ஒரு குறியீடாகக் கொள்வதாகச் சில ஆய்வுகள் சற்று திடுக்கிட வைக்கின்றன. (அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுக் கொள்வதைப் பெருமையாக சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்).தொண்டு என்று இருந்த மருத்தவம் தொழில் என்று மாறியதால் வந்த பணத்தாசை ஒருபக்கம் .
 
இன்னொரு முக்கியமான விசயம் ஜோசியம் என்ற மூடநம்பிக்கையினால் விளைவது. சில குடும்பங்கள் தங்கள் ஜோசியர்களிடம் ஆலோசனை கேட்டு சிசேரியன் மூலம் இன்ன நேரத்தில் குழந்தை பிறந்தால் நல்லது என நினைத்து மகப்பேறு மருத்துவர்களிடம் சிசேரியன் பிரசவம்தான் செய்யவேண்டும் என்று வலியுறுத்துவதும் நடைபெறுவதுமுண்டு.
இதுபோன்று இன்னும் எத்தனையோ படித்த குடும்பத்தில் உள்ளவர்கள் இன்னும் மூடநம்பிக்கையில் நாகரிகம் என்ற பெயரில் தெரிந்தே இதுபோன்ற ஆபத்துக்களை தங்களுக்கு தாங்களே ஏற்படுத்திக் கொள்கிறார்கள் . நண்பர்களே ஒருவேளை உங்களிலோ அல்லது உங்களுக்கு தெரிந்த யாரேனும் இதுபோன்ற எண்ணங்களில் இருந்தாலோ அல்லது கேட்க நேர்ந்தாலோ உடனே இன்றே அவற்றை அடியுடன் நிறுத்திவிடுங்கள் . அறிவியல் வளர வளர அன்றாட வாழ்க்கைமுறை மாறுது . இன்றைய அறிவியல் வளர்ச்சி நமது வாழும் நாட்களை அதிகரிக்கப் போவதாக எண்ணி அதில் சிக்கி சீரழிந்து விட வேண்டாம் . அறிவியல் வளர்ச்சிகளை நம்மால் இயலாத செயல்களை செய்வதற்கு பயன்படுத்துங்கள் . நம்மால் இயன்ற செயல்களை அழிக்கும் வகையில் அவை அமையவேண்டாம் . அப்படி ஒருவேளை அமைந்தால் அப்பொழுது இந்த உலகத்தில் மனிதர்களாகிய நாம் முழுவதும் அழிந்து நாம் உருவாக்கிய அறிவியல் வளர்ச்சிகள் மட்டுமே மீதம் இருக்கக்கூடும் இந்த உலகத்தில். சற்று சிந்தித்து செயல்படுங்கள் . இனியாவது நாம் வாழப்போகும் இந்த சிறிது காலத்தை இயற்கையுடன் இணைந்து இனிமையாக வாழுங்கள் . இயந்திரங்களுடன் சேர்ந்து இழந்துவிட வேண்டாம் .
 
இந்த பதிவை வாசித்துக்கொண்டு இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் . நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னூட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னூட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .

இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மனம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........
 

Read more...

நடிகை ரம்பா டும் டும் டும் அதுதாங்க திருமணம்

>> Wednesday, February 3, 2010

நண்பர்களே இதற்கான பதிவை வாசிக்க இங்கு சொடக்கவும் . >>>>


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மனம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........




Read more...

நடிகை ராம்பா திருமணம் விரவில் நிச்சயதார்த்த புகைப்படங்கள் உள்ளே !!!

>> Tuesday, February 2, 2010

நண்பர்களே இதற்கான பதிவை வாசிக்க இங்கு சொடக்கவும் . >>>>


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மனம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

Read more...

கல்வி கட்டணம் செலுத்த கற்பு ஏலம் !!!

>> Monday, February 1, 2010

கலி காலம் என்பது மிகச் சரியாகத்தான் இருக்கிறது என்பார்கள் இதைப் படிப்போர். மேட்டர் நமக்கு ரொம்ப ஹாட் ஆக தெரிந்தாலும், மேற்கத்திய நாடுகளுக்கு இது சர்வ சாதாரணமான சமாச்சாராம்தான்.கடைகளை ஏலம் விடுவார்கள், வீட்டை ஏலம் விடுவார்கள், ஏன் காந்தி போட்டிருந்த செருப்பைக் கூட சமீபத்தில் ஏலம் விட்டனர். ஆனால் கற்பை ஏலம் விடுவார்களா.. விட்டிருக்கிறார்
கல்லூரி கட்டணம் செலுத்த பணம் இல்லாத ஆஸ்திரேலியாயைச் சேர்ந்த 19 வயது இளம் பெண், தனது கற்பை ஏலம் விட முன்வந்துள்ளார்.

இதுகுறித்து ஐநீடு டாட் கோ டாட் என்இசட் என்ற இணையதளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கல்லூரி கட்டணத்தை செலுத்த பணம் இல்லாததால் என் கன்னித் தன்மையை விற்க முடிவு செய்துள்ளேன். ஏலத்தில் அதிகபட்ச தொகை வழங்க முன்வருபவருடன் பாதுகாப்புடன் செக்ஸ் வைத்துக் கொள்ள தயாராக இருக்கிறேன். இதுவரை யாருடனும் செக்ஸ் வைத்துக் கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளதாக சிட்னி மார்னிங் ஹெரால்டு இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நான் என்னத்தச் சொல்ல... ?? நீங்களே சொல்லுங்க  பின்னூட்டத்தில .இதைப் பற்றியக் கருத்துக்களை.இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மனம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........



Read more...

அதிசயம் சில நிமிடம் பேசினால் பல கோடி பணம் !!!!

‘பேசுவது நாக்கின் வேலை; கேட்பது காதின் வேலை. பேசுவது வெளிப்படுத்துவது; கேட்பது உள்வாங்குவது.
வியாபார மொழியில் சொல்வ தென்றால் பேசுவது விற்று முதல்; கேட்பது கொள்முதல்.
விற்றால்தான் லாபம் கிடைக்கும்; வாங்கினால்தான் விற்பதற்கு சரக்கு இருக்கும்.
விற்பது நல்லதா? வாங்குவது நல்லதா? என்று கேட்டால், விற்க வேண்டிய இடத்தில் விற்பதும், வாங்க வேண்டிய இடத்தில் வாங்குவதும் நம் பொறுப்பு. இப்படி எப்பொழுதோ எங்கோ படித்த ஞாபகம் .
பேச்சாற்றல் நம்மிடம் உள்ள அற்புதச் சக்தி. இதை எத்தனை பேர் முறையாகக் கையாளுகிறார்கள் என்பது இறைவனுக்கே வெளிச்சம். எல்லோரும் நன்கு பேசக் கற்றிருக்கிறார்கள். ஆனால் பேச்சைப் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறார்கள்? உணர்ச்சி மற்றும் தகவல்களை வெளிப்படுத்துவதற்காக இறைவன் அளித்த பேச்சாற்றலைப் பலரும் தவறாகவே பயன்படுத்துகின்றனர். மிகச் சிலரே பயனுள்ள சொற்களை அளந்து பேசுகிறார்கள்.

எதைப் பேச வேண்டும். எப்படிப் பேச வேண்டும், யாரிடம் யாருக்காகப் பேசுகிறோம்? எவ்வளவு பேச வேண்டும். எங்கு எப்போது பேச வேண்டும் என்பன போன்ற நெறிமுறைகளை உணர்ந்து பேசுபவர்களைக் காண்பது அரிதாகிவிட்டது.

எப்படிப் பேச வேண்டும்? என்பது குறித்து நம் பெரியோர்கள் நிறைய பேசியிருக்கிறார்கள். வாக்கை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தவே இனியவை கூறல், வாய்மை, புறங்கூறாமை பயனில சொல்லாமை சொல்வன்மை என்று பல அதிகாரங்களை இயற்றியிருக்கிறார் வள்ளுவர்.

பயனற்ற சொற்களைப் பேசுவதால் நேரமும் ஆற்றலும் விணாகிறது. நம்மில் பலர் ஒன்று தற்பெருமை பேசுகிறார்கள். இல்லையெனில், மூன்றாம் நபரைப் பற்றி புறங்கூறிப் பேசுகிறார்கள். ஓயாது பேசுபவனின் மனம் சமுத்திரத்தின் மேற்பரப்பு போன்று அலைபாயும் அவனது சொற்களில் பேரிரைச்சலே எஞ்சியிருக்கும். சிறிது காலத்துக்குப் பிறகு அவன் சொற்களுக்கு அடிமையாகி விடுகிறான். அவனுக்கும் அமைதிக்கும் வெகுதூரம். எதிரில் ஆள் இல்லாத பட்சத்தில் பரபரவென்று செல்போனை உயிர்ப்பித்து வம்பு பேசத் துவங்கிவிடுவான்.

இப்படிப்பட்டவர்கள் கேட்டு, கவனித்து உள்வாங்கும் ஆற்றலை இழந்து விடுகிறார்கள். ஆன்மிகச் சொற்பொழிவுக்குச் சென்றாலும் அங்கே பேசப்படுவதை ஒரு மணி நேரம் கூட இவர்களால் செவிமடுக்க முடியாது. கேட்கத் துவங்கிய 2வது நிமிடமே இவர்களின் உள்ளம் பேசுபவரை எடைபோடும். இதனால் கேட்பதும் சிந்திப்பதும் அறுபடுகிறது. ஆனால் சொற்களைக் கையாளத் தெரிந்த மனிதன் கெட்டிக்காரன். அறிவாளி. அவன் சொற்களைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கிறான். அவன் உள்ளம் அமைதியில் நிலைத்திருக்கும். அவனால் பிறர் சொல்வதை பொறுமையாக செவிமடுக்க முடியும்.

எமது சாஸ்திரங்கள் உண்மையே பேச வேண்டும் என்பதுடன், அதனை இதமாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. உண்மை பேசுகிறேன் என அடுத்தவர் மனம் புண்படும்படி பேசுதலும் தவறு. பிறரை துன்புறுத்தாத வாய்மையும் இனிமையும் நலனும் உடைய சொற்களைப் பேசுதல் வாக்கினால் செய்யும் தவம் என்கிறார் கிருஷ்ணர்.

எனது வாக்கு தேன் போன்று இருக்கட்டும் என்றொரு பிரார்த்தனை வேதத்தில் உண்டு. யாகாவாராயினும் நா காக்க என்று நாவடக்கத்தை வலியுறுத்துகிறார் வள்ளுவர். உண்மை பேசு இனிமையாகப் பேசு உண்மையாயினும் நலம் தராதவற்றைப் பேசாதே என்கிறார் மனு நீதிச் சோழன்.
ஆம் பயனுள்ள சொற்களையே இடம் பொருள் ஏவல் அறிந்து தகுந்த காலத்தில் பேச வேண்டும்.

ஆனால் சாப்பிடாமல் கூட இரண்டு நாள் இருந்து விடலாம். பேசாமல் எப்படி இருப்பது என்று கேட்பவர்களும் உண்டு. இவர்கள் தங்கள் இயல்பை மாற்றிக் கொள்ள வேண்டும். தனக்கும் பிறருக்கும் பயன்படாத கடுமையான புறங்கூறும் பொய்யான சொற்களை அறவே தவிர்க்க வேண்டும்.

நமது எண்ணம், சொல், செயல் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் இருப்பதற்கு ஆர்ஜபம் என்று பெயர், இதனை எவர் ஒருவர் 12 வருடங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்களோ அவர்கள் சொல்வதெல்லாம் சத்தியமாகும் என்கிறது சாஸ்திரம். எனவேதான் மகான்களது வாக்கு பொய்ப்பதில்லை.
உள்ளத்தில் உண்மையுண்டானால் வாக்கினில் ஒளியுண்டாகும் என்றார் மகாகவி பாரதியார்.

பலருக்கு இங்கிதம் தெரிவதில்லை. என் சுபாவமே அப்படித்தான். மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டேன். பட்டென்று பேசிவிடுவேன் என்று சொல்பவர்களைப் பா ர்க்கலாம். ஆனால் இவர்களிடம் வேறு எவரேனும் இங்கிதமின்றிப் பேசிவிட்டால் அதை ஏற்க முடியாமல் தவிப்பதையும் காண முடியும்.

ஆறுதல் சொல்ல வேண்டிய நேரத்தில் உணர்ச்சிகளைக் கொட்டி சூழலை மேலும் மோசமாக்கும் சொற்களை எந்தவித விழிப்பு உணர்வும் இன்றி கொட்டிவிடுவார்கள் பலர். இது தவறு. சொல்ல வேண்டியதை சுருக்கமாகச் சொல்லப் பழக வேண்டும். அனுமனை சொல்லின் செல்வர் என்கிறோம். அவர் இங்கிதம் அறிந்தவராக, சரியான நேரத்தில் சீதாவிடம் சென்று சரியான சொற்களைக் கூறி தன்னை அறிமுகம் செய்து பேசியதையும், திரும்ப வந்து ஸ்ரீராமனிடம் செய்தி கூறிய பாங்கையும் ரசித்தால் மட்டும் போதாது. எப்படிப் பேச வேண்டும் என்பதை அனுமான் மூலம் கற்றுக்கொள்ளவும் வேண்டும்.

சொற்களால் வாழ வைக்கவும் முடியும். சாகடிக்கவும் முடியும். நாம் பேசிய சொற்கள் நமக்கு எஜமானர்கள். பேசாத சொற்களுக்கு நாம் எஜமானன் என்பார்கள். ஆயுதங்களைவிட மிக வேகமாகச் சென்று ஒருவரின் உள்ளத்தைக் குத்திக் கிழிக்க வல்லவை சொற்கள். ஆத்திரத்திலும் அவசரத்திலும் அள்ளி இறைக்கும் சொற்கள் கேட்பவரின் உயிரைக் குடிக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே சொற்களுக்குள் மாட்டிக் கொள்ளாமல் சொற்களை ஆளும் கலையை அறிய வேண்டும். வாரம் ஒரு முறையோ அல்லது ஒரு நாளில் சில மணி நேரமோ மெளனம் பழக வேண்டும். சொற்களின் மதிப்பை அறிய வேண்டும்.

“சொல்லும் பொருளும் அற்றுச் சும்மா
இருப்பதற்கே
அல்லும் பகலும் எனக்கு ஆசை
பராபரமே''

என்கிறார் தாயுமானவர். பேச்சைக் குறைப்பதே யோகத்தின் முதல் படி என்கிறார் பதஞ்சலி மகரிஷி. பேச்சைக் குறைத்தால்தான் மனதை உள்முகமாகத் திருப்ப முடியும். சொற்களை அலட்சியமாகப் பயன்படுத்தும் மனிதன் வாழ்க்கையின் இலட்சியத்தை மறந்து விடுகிறான். சுற்றியுள்ள மனிதர்களை இயற்கையை இறைவனை தன்னை உற்று நோக்கத் தவறி விடுகிறான். வாழ்க்கையில் சாதிக்க நினைப்பவன் பேச்சைக் குறைப்பான். கவனத்தை செயலில் காட்டுவான்.

எதிரில் உள்ளவரை பேசவிடாமல் குறுக்கிடுவது அவரின் உடல் மொழியையும் முகாபாவத்தையும் கண்டு கொள்ளலாமல் பேசிக் கொண்டே செல்வது ஆகியன அநாகரிகத்தின் உச்சம் என்பதை அறிய வேண்டும்.

பெரியோர்கள் பிறரது குணங்களையே பேசுவர். குற்றங்களைப் பெரிதாகச் சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள். வீண் பேச்சுகளால் நமது நேரம் மட்டுமல்ல அருகில் இருப்பவர் நேரமும் வீணாகும். குறைவாகப் பேசி நிறையக் கேட்க வேண்டும் என்பதற்காகவே ஒரு வாயையும் இரண்டு காதுகளையும் கொடுத்திருக்கிறார் இறைவன்.

'' திறனறிந்து சொல்லுக சொல்லை
அறனும்
பொருளும் அதினினூங்கு இல் ''

சொல்லின் திறத்தை அறிந்து சொல்லும் சொல் வன்மையைவிட அறமும் பொருளும் ஒருவருக்கு வேறு இல்லை என்கிறார் திருவள்ளுவர்.

ஒருவர் எத்தனையோ மணி நேரம் பேசினாலும் கூறிவிட முடியாத விஷயத்தை வேறு ஒருவர் சில சொற்களில் கூறிவிடுவார்.

பெரியோரிடம் நன்கு கற்றறிந்து, கற்றதை உள்வாங்கி, ஆழ் மனதில் இருத்தி சிந்தித்துத் தெளிந்தவர்களின் சொற்கள் கேட்பவர் உள்ளத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் முத்து உதிர்வது போல ஓரிரு வார்த்தைகளை அவர்கள் உதிர்த்தாலும், அதனால் மிகுந்த நன்மை விளையும். எனவேதான் மகான்கள் ஓரிரு வார்த்தைகள் பேசினாலும் அதன் மூலம் அபரிமிதமான மன அமைதியை நம்மால் உணர முடிகிறது.

அன்பு கலந்த வஞ்சனை அற்ற மெய்ப்பொருளை அறிந்தவர்களது சொற்கள் இனிமையானவை. இதையே செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் என்று குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். தூய்மையும் அமைதியும் நிறைந்த உள்ளத்திலிருந்து ஆற்றல் மிகுந்த சொற்கள் பிறக்கின்றன என்றார் விவேகானந்தர்.

மன அமைதியைக் குலைப்பதும் தற்காலிக இன்பம் தருவதும் பண்பற்ற, பயனற்றதுமான சொற்களைப் பேசுபவர்கள் எங்கும் எப்போதும் கிடைப்பார்கள். ஆனால் அந்த தருணத்தில் துன்பத்தைத் தருவதாக இருந்தாலும் நிலையான இன்பம் தரும் சொற்களை அன்பு கலந்த கண்டிப்புடன் சொல்பவர்கள் கிடைப்பது அரிது. ஆன்மிக வாழ்வின் குறிக்கோளை அடைய விரும்புபவர்கள். ஆரம்பத்தில் துன்பம் தந்தாலும் காலப்போக்கில் இன்பம் தரும் பயனுள்ள சொற்களைப் பேசுபவருடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர்கள் ஒரு சாரார். ஆனால், அவர்களது பேச்சு சிந்தனையைத் தூண்டுவதாக அமையுமா என்று பார்க்க வேண்டும். சிலர், சிந்தனையைத் தூண்டுமாறு பேசுவார்கள். ஆனால் சிரிக்க வைக்க மாட்டார்கள். இன்னும் சிலர், உயர்ந்த சிந்தனையை எந்தவித இறுக்கமும் இன்றி நகைச்சுவையுடன் வழங்குவார்கள். இதைப் பகுத்தறிந்து ஒவ்வொருவரும் தன்னைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தன்னிடம் பேசுபவர் எந்த நோக்கத்துடன் பேசுகிறார் என்பதை அறிந்து அவரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

இனிக்க இனிக்கப் பேசினாலும், பயனற்ற, பண்பற்ற கருத்துகளை ஏற்கக்கூடாது. கடுமையாகச் சொன்னாலும் பண்பை வளர்க்கும் பயனுள்ள கருத்துகளை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும்.

சரி என்னடா இவன் தலைப்பில் ஒன்றை வைத்து ஏதேதோ சொல்கிறானே என்று எண்ணுகிறீர்களா ?. சரி இனி விசயத்திற்கு வருவோம். நாம் எழுத்தின் மூலமாக பணம் சம்பாதித்தவர்களை பார்த்து இருக்கிறோம் . சிலரின் எழுத்துகளில் அடிமையாகி அது என்ன விலை என்றாலும் வாங்கி படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் எழுதும் தலை சிறந்த எழுத்தாளர்களும் இருக்கின்றார்கள் .

ஆனால் பேச்சால் இதுவரை நமக்கு தெரிந்த அளவில் பிறரை கவரும் வகையில் பேசும் திறன் வாய்ந்த மனிதர்கள் இருக்கிறார்கள் அதில் ஒரு சிலர் மேடை பேச்சாளர்கள் . நாம் அனைவரும் சாதாரணமாக பேசுவாதுபோல் பலரால் மேடைகளில் சென்று பேசுவது என்பது இயலாத ஒன்று . ஆனால் சிலர் எப்பொழுதும் எதுவுமே பேசமாட்டார்கள், பார்ப்பதற்கு இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல் மிகவும் அமைதியாக சாதாரணமாக இருப்பார்கள் ?ஆனால் மேடைகளில் அவர்கள் பேச ஆரம்பித்தால் மடை திறந்தாற்போல் இருக்கும் .

சிலர் தேர்தல் நேரத்தில் பேசுவதற்கு என்றே தாயார் நிலையில் வைத்திருப்பார்கள் . அதுதான் நமக்கெத் தெரியுமே அவர்கள் எப்படி பேசுவார்கள் என்று . சில விழாக்களில் சிறப்பு பேச்சாளர் என்று சிலர் இருப்பார்கள் இப்படி பேச்சிலும் புகழ்பெற்ற எத்தனையோ மனிதர்களை நாம் பார்த்து இருக்கிறோம் . ஆனால் இவர்களில் யாரும் பேச்சால் சம்பாதித்து இருக்கிறார்களா என்று பார்த்தால் ஆனவருக்கும் தெரிந்த ஒரே பதில் யாரும் இல்லை என்பதுதான் வரும் . ஆனால் பேச்சால் உலகிலயெ அதிகம் பணம் ஒருத்தர் சம்பாதித்துக்கொண்டு இருக்கிறார் என்றால் நீங்கள் நம்புவீர்களா ? . நம்பித்தான் ஆகவேண்டும் .

பிரிட்டனின் முன்னாள் பிரதமரான டோனி பிளேர் ஒரு நிமிடச் சொற்பொழிவுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டணமாகப் பெறுகிறார்.

லான்ஸ்டவுண் பார்ட்னர்ஸ் என்ற லண்டன் ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவன ஊழியர்கள் மத்தியில் பேசுவதற்காக இந்தக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாம்.

இந்தக் கட்டணம் உண்மைதானா என்ற கேள்விக்கு டோனியின் பேச்சாளர் பதில் கூறவில்லை. ஆனால் உலக அளவில் சிறந்த சொற்பொழிவாளராக டோனி திகழ்கிறார் என பெரும் சொற்பொழிவே நிகழ்த்திவிட்டார். அவரது கட்டுரைகளுக்காக அவது புத்தகத்தை வெளியிடும் நிறுவனம் 46 லட்சம் பவுண்டுகள் தந்துள்ளது என்றார்.

அமெரிக்க வங்கி ஜேபி மார்கன் மற்றும் ஜூரிச் பைனான்சியல் சர்வீசஸ் எனும் இரண்டு நிறுவனங்களுக்கு ஆலோசகராக டோனி இருக்கிறார். ஜேபி மார்கன் ஆண்டுக்கு 20 லட்சம் பவுண்டுகள் வழங்குகிறது. ஜூரிச் பைனான்சியல் சர்வீசஸ் 5 லட்சம் பவுண்டு வழங்குகிறது. இதைத் தவிர அவருக்கு ஆண்டுக்கு 63,000 பவுண்டுகள் ஓய்வூதியமும் கிடைக்கிறது.

ஸ்பெயின் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் நிகழ்த்திய 90 நிமிட சொற்பொழிவுக்காக 1,80,000 பவுண்டுகள் அவருக்கு கிடைத்துள்ளது என்று அவர் கூறினார்.

பிரதமர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு இதுவரை ஒரு கோடி பவுண்டுகள் டோனி பிளேர் சம்பாதித்திருக்கிறார் என கணக்கிட்டுள்ளனர்.

என்ன நண்பர்களே இப்பொழுதாவது நம்புகிறீர்களா நான் சொன்னது உண்மைதான் என்று . அதுதான் பேச்சு திறமைக்கு எவளவு மதிப்புனு தெரிந்துவிட்டது அல்லவா இனி உங்களில் யார் யாருக்கு ஒரு நிமிடம் பேசுவதற்கு எவளவு கட்டணம் வேண்டும் என்று அப்படியா ஒரு கோர்வையா பின்னூட்டத்தில எழுதுங்க .தேவைப்பட்டால் உங்களுக்கு அழைப்பிதழ் விரைவில் அனுப்பப்படும் .


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மனம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

Read more...

தரம்

நான் ரசித்த உண்டியல் பணம் !!!

தன் மகனை அழைத்த தந்தை, "நாம் இருவருமே இனிமேல் தவறு செய்யக் கூடாது. யார் எந்தத் தவறு செய்தாலும் அதற்கு அபராதமாக இந்த உண்டியலில் ஒரு ரூபாய் போட வேண்டும். அப்படிச் சேரும் தொகையைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட வேண்டும்" என்றார்.

மகனும் இதற்கு ஒப்புக் கொண்டான்.

அவரின் திட்டம் அப்படியே நடந்தது. திடீரென்று அவர் உடல்நிலை மோசம் ஆயிற்று. உண்டியலில் இருந்த பணத்தை எல்லாம் பிள்ளையார் கோயிலுக்குத் தந்துவிட்டு மருத்துவ மனைவில் சேர்ந்தார்.

மகனைப் பார்த்து, "நான் இல்லாத போதும் இந்தப் பழக்கத்தை விட்டு விடாதே. ஒரு தவறுக்கு ஒரு ரூபாய் உண்டியலில் போட்டுவிடு" என்றார்.

மருத்துவ மனையில் மூன்று மாதம் தங்கிய அவர் வீடு திரும்பினார். உண்டியலைத் திறந்து பார்த்தார். அதில் ஒரே ஒரு ரூபாய் தான் இருந்தது.

மகிழ்ச்சி அடைந்த அவர் தன் மகனை அழைத்தார்.

"இந்த மூன்று மாதத்தில் ஒரே ஒரு தவறு தான் செய்தாயா?" என்று கேட்டார்.

"இல்லை அப்பா! உண்டியலில் முந்நூறு ரூபாய் பணம் சேர்ந்தது" என்றான் அவன்.

"அந்தப் பணத்தைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட்டாயா?" என்று கேட்டார் அவர்.

"அப்பா! உண்டியலைத் திறந்து அந்தப் பணத்தை நானே எடுத்துக் கொண்டேன். அந்தத் தவறுக்காக நீங்கள் சொன்னபடி ஒரு ரூபாயை உண்டியலில் போட்டு விட்டேன்" என்றான் அந்த கெட்டிக்கார மகன்.


ஏலே மக்கா இப்படியெல்லாம் கோபத்தோட பார்க்கக்கூடாது . இப்ப யார் யாரெல்லாம்  உண்டியல் பணத்தை திருடுனீங்க. யார் யாரெல்லாம்  உண்டியலையே திருடுனீங்க என்று மறுமொழியில்  சொல்லிட்டு போங்கல .  .
 
ஏய் , ஏய் ,ஏய், ஏய் ராஸ்க்கல் என்ன இது சின்னபுள்ளத்தனமாவுல இருக்கு பதிவ படிச்சுட்டு ஓட்டு போடாம போனா எப்படி ஒழுங்கா இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் இல்லைனா அழுதுடுவேன் ஆமா ..........

சூரியன் யாருக்கு சொந்தம் !!!

பக்கம் பக்கமா எழுதினா யாரும் பார்க்காமலே போய்விடுகிறார்கள் .அதனால் இன்னைக்கு குட்டியா ஒரு பதிவு எழுதலாம் என்று தோன்றியது .அதற்குத்தான் இப்படி ஒரு பதிவு . பலருக்கு தெரிந்த சில நிகழ்வுகளும் , செய்திகளும் சிலருக்கு தெரிவதில்லை . இதைவிட சென்று அடைவதில்லை என்றுதான்  சொல்லவேண்டும் . சரி அதுபோல் நாமும் அப்படியே இருந்தால் எப்படி அதுதான் தெரிந்த விசயம் என்றாலும் மீண்டும் எழுதுவோம் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளக் கூடும் அல்லவா . இனி விசயத்திற்கு வருகிறேன் .
ஒரு பேருந்து நிறுத்தத்தின் அருகில் இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள் . நான் ஒருவேலையாக  அந்த சாலையை கடந்து போய்க்கொண்டிருந்தேன் . திடீர் என்று அவர்கள் இருவருக்கும் சண்டை வந்துவிட்டது . எனக்கு ஒரே குழப்பம் இப்பொழுதுதான் இருவரும் நன்றாக பேசிக்கொண்டிருந்தார்கள் . திடீர் என்று என்னாகி இருக்கும் என்று. சரி அவர்களிடமே கேட்டுவிடலாம் என்று இருவரையும் சமாதானப்படுத்தி கேட்டேன் என்ன விசயம் எதற்காக சண்டை அடித்துகொள்கிறீர்கள் என்று . அப்பறம்தான் விசயம் தெரிந்தது அவர்களின் சண்டைக்கு காரணம் சூரியன் யாருக்கு சொந்தமென்பதில் என்று . என்னடா சூரியனுக்கும் இவர்கள் சண்டைக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்க நினைப்பதுபோலவே நானும் அவர்களிடமே கேட்டேன் என்னவென்று . அதற்கு அதில் ஒருவன் சொன்னான் சூரியன் எங்க கன்னியாகுமரி கடலில் இருந்துதான் வருகிறது முதலில் நாங்கள்தான் பார்க்கிறோம் . அதனால் எங்களுக்குத்தான் முதல் சொந்தம் என்றான் . அப்பொழுதே எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது .அவசரப்பட்டு சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டோமோ என்று .சரி மாட்டியாது மாட்டிக்கொண்டோம் . அடுத்தவன் என்ன சொல்கிறான் என்று அதையும் கேட்டுவிடுவோம் என்று தோன்றியது . அவனிடம் கேட்டேன் அதர்க்கு அந்த அறிவாளி சூரியன் வருவதும் மறைவதும்தான் உங்க கன்னியாகுமரி கடலில் இருந்துதான் அது மறைந்ததற்கு பின்பு தினமும் இரவு எங்க ஊரில்தான் உறங்குகிறது .அதனால் எங்களுக்குத்தான் அதிக சொந்தம் என்றான் . அப்பொழுதே எனக்கு தோன்றிய சிறிய சந்தேகம் தெளிவாகிப்போனது .அப்பறம் அவனுங்க ரெண்டுபேரும் சேர்ந்து ஒரே நேரத்தில் என்னிடம் கேட்டார்கள் நீங்களே சொல்லுங்க ஸார் எனக்குத்தானே சொந்தம் என்று ??????????? . அப்பறம் என்னங்க எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்குறான்டா? இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிவிட்டு. வாட மாப்ள அடுத்த தெருவுக்கு போவோம் என்று போய்ட்டாங்க .அன்னைக்கு முடிவு பண்ணினேன் . சூரியன் என்ற வார்த்தையைக்கூட வாசிக்கக்கூடாது என்று . ஆனால் பாருங்க இப்ப அந்த சூரியன் பற்றியே பதிவு போடவேண்டிய நிலை வந்துவிட்டது .
நமது நாட்டில் சூரிய உதயத்தை முதலில் காண்பவர்கள் அருணாச்சலப்பிரதேச மக்கள் தான். நமது நாட்டின் கிழக்கு விளிம்பில் அமைந்துள்ள அருணாச்சலப் பிரதேசம், 97 டிகிரி தீர்க்க கோட்டில் அமைந்துள்ள மாநிலம் ஆகும். மேற்கு விளிம்பில் குஜராத் அமைந்துள்ளது. அதாவது 68 டிகிரி தீர்க்க கோட்டில் அமைந்துள்ளது.இந்த இரு மாநிலங்களுக்கு இடைப்பட்ட 29 தீர்க்க கோடுகளை கடக்க சூரியன் 1 மணி 56 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றது.

என்னைப்போல் நீங்க யாரும் மாட்டிக்கொள்ள கூடாது பாருங்க அதுக்குத்தான் இந்த தகவல் . சரி இனி உங்க கருத்துக்களை மறக்காமல் மறுமொழியில சொல்லலாம் .



யார் அங்கே! ராஸ்க்கல் என்ன இது சின்னபுள்ளத்தனமாவுல இருக்கு பதிவ படிச்சுட்டு ஓட்டு போடாம போனா எப்படி ஒழுங்கா இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் இல்லைனா அழுதுடுவேன் ஆமா ..........

தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் !!!

இன்றைய நிலையில் அறிவியலின் வளர்ச்சி ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சாதனைகளை சாதாரணமாக நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம் . இந்த அறிவியலின் அதிசயங்களையும் பிணுக்குத் தள்ளும் இயற்கையின் இயல்பான சில நிகழ்வுகளும் அவ்வப்பொழுது யாரும் எதிர்பாராமலே நடந்துவிடுகிறது . அந்த வகையில் ஒரு புதிய அதிசய நிகழ்வு விரைவில் வர இருக்கிறது இதுநாள் வரை தங்கம் , வைரம், வெ‌‌ள்‌ளி என்று பல நகைகளை நம்மை அழகுபபடுத்துவதற்காக பயன்படுத்தி வந்தோம் . ஆனால் இப்பொழுது அந்த அபரணங்களுக்கு விடுமுறைக்கொடுக்கும் தூரம் மிக அருகில் வந்துவிட்டது .

த‌ங்க‌‌ம், வெ‌‌ள்‌ளி, வைர நகைகளை இ‌னி மற‌ந்து விடு‌‌ங்க‌ள். விரைவில் வெளியாகவிருக்கும் பு‌‌திய வகை ஆபரண‌ங்க‌ள் உ‌ங்களை மேலு‌ம்
ஜொ‌லி‌க்க வை‌க்கும் அதிசய நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது . ஆம். தா‌ய்‌ப்பா‌லி‌‌ல் இரு‌ந்து நெக்லஸ், பிரேஸ்லெட் என்று 70 வகையான ஆபரணங்களை தயாரிக்க முடியும் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது .

ல‌ண்ட‌னி‌ல் உ‌ள்ள நகை தயா‌‌ரி‌க்கு‌ம் குழு ஒன்று, தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்களை தயாரிக்கும் வித்தைகளை செய்து காண்பித்துள்ளது.

இந்த சாதனையின் முதல் முதல் தயாரிப்பாக இ‌ந்தக் குழு 'பா‌ல் நெ‌க்ல‌ஸ்'-களை‌த் தயா‌ரி‌‌த்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளனர் . இதை அடுத்து அந்த குழுவின் அறிக்கையில் .

‌பிரே‌ஸ்ல‌ெ‌ட் மற்றும் 70 பிறவகை ஆபரணங்களையும் இ‌ந்த ஆ‌ண்டு இறு‌திக்குள் தயாரிக்க இரு‌ப்பதாக அக்குழுவினர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

தா‌ய்‌ப்பாலுடன் ‌‌வி‌னிகரைச் சேர்த்து (அ‌சி‌‌ட்டி‌க் அ‌மில‌ம்) ந‌ன்கு கொ‌‌தி‌க்க வை‌ப்பத‌ன் மூல‌ம் பா‌லி‌ல் உ‌ள்ள கே‌சி‌ன் புர‌த‌ம், இ‌ந்த கலவையை

‌பிளா‌ஸ்டி‌க் போ‌ன்று மா‌ற்றி விடுகிறது. ‌பி‌ன்ன‌ர் அதில் வண்ணம் பூசி (பெயிண்ட்) நாம் விரும்பும் வடிவில் அல்லது அச்சுகளில் ஊற்றி ஆபரணங்களாக மாற்றுகிறார்களாம்.

பிளாஸ்டிக் போன்ற தன்மை கொண்டிருப்பதால், அழ‌கிய வடி‌வி‌ல் நகைகளாக மா‌ற்‌றி விடுகிறார்களாம்.


தாய்ப்பாலை உபயோகித்து `குழந்தைகளின் தலை' போன்ற வடிவிலான நெக்லஸில் அணியக்கூடிய பதக்கம் (டாலர்) ஒன்றையும், தாய்ப்பாலுடன் உலோகத்தைச் சேர்த்து பிரேஸ்லெட் ஒன்றையும் பிரான்ஸ் நாட்டு நகை வடிவமைப்பாளர்கள் ஏற்கனவே உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இ‌துபோ‌ன்ற நகை வடிவமை‌ப்பை அவ‌ர்க‌ள் "பா‌ல் மு‌த்து‌" (milk pearl), எ‌ன்று கு‌றி‌ப்‌பிடு‌கி‌றார்கள். இந்த முறையில் உருவாக்கப்பட்ட ஆபரணங்களை செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் கண்காட்சியில் அவர்கள் வைக்க உள்ளார்களாம்.

என்றாலும், தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் உருவாக்கம், வர்த்தகரீதியில் இன்னமும் செயல்படுத்தப்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்று சொல்லலாம்.



ஒரு வழியா பதிவு போட்டாச்சு . ஏலே மக்கா அடுத்து நீங்கதான் . பதிவு பிடித்து இருந்தாலும் , இல்லாவிட்டாலும் உங்க கருத்துக்களை மறக்காமல் மறுமொழியில் சொல்லிட்டுப்போங்கல .


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

உலக அரங்கில் லஞ்சமாய் இந்தியா !!!

சாதனைகள் பல செய்தும் இன்னும் உலக அரங்கில் சரிந்த நிலையில் நம் நாடு ஏன் இருக்கிறது என்று எப்பொழுதாவது நாம் சிந்தித்தது உண்டா . நமது வேலைகளை நாம் பார்ப்பதற்கே நேரம் இல்லை நமக்கு எதற்கு இந்த தேவையற்ற வேலை என்று பலரும் சலித்துகொள்வதும் உண்டு . ஆனால் இந்த சரிவுக்கு முக்கிய காரணம் நாம்தான் . என்னடா இவன் இப்படி ஒரு குண்டை தூக்கிப்போடுகிறானே என்று என்ன வேண்டாம் .இதுதான் உண்மை .
அணுகுண்டு வைத்திருக்கிறோம், ஆஸ்கர் விருது பெற்றுள்ளோம், ஆண்டுக்கு ஏழெட்டு சதவீத பொருளாதார வளர்ச்சி காண்கிறோம், ஐந்து வருடத்துக்கு ஒரு தடவை தேர்தல் நடத்தி அதிசயிக்க வைக்கிறோம்.. ஆனாலும் ‘இந்தியா லஞ்ச ஊழலில் திளைக்கும் நாடு என்றுதான் உலகமும் பார்க்கிறது. இந்த அவமானம் நம்மை விட்டு போவேனா என்கிறது. உலக அளவில் 180 நாடுகளில் நடத்திய ஆய்வில் இந்தியா 84வது இடத்தில் இருக்கிறதாம். ஓட்டப் பந்தயத்தில் அத்தனாவது இடத்தில் வந்தால் வேடிக்கை பார்க்கக்கூட எவரும் மிச்சமிருக்க மாட்டார்கள்.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த ஆய்வை நடத்துகிறது. சென்ற ஆண்டு நமக்கு 85ம் இடம். அதற்கு முன்னால் 72. நாடாளுமன்ற வாக்கெடுப்பில் கத்தை கத்தையாக கரன்சி நோட்டுகள் கைமாறிய விவகாரத்தால் தடாலென்று 13 படி சறுக்கினோம். அரசு துறைகளில் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வேலைகள் எப்படி முடித்துக் கொடுக்கப்படுகிறது என்பதை அளவுகோலாக வைத்து ஆய்வு நடத்தப்படுகிறது. அதில் மொத்தம் 13 குறியீடுகள். அதிகாரிகளின் நேர்மை ஒரு குறியீடு. லஞ்சம் வாங்காமல் வேலையை முடித்து தருவதாக ஆய்வில் பங்கேற்ற அனைவரும் தெரிவித்தால் முழு மதிப்பெண் போடப்படும். இந்த விஷயத்தில் இந்தியா பெற்றுள்ளது 10க்கு 3.4 மட்டுமே. பக்கத்தில் உள்ள குட்டி நாடு பூடான் 5 மார்க் வாங்கியுள்ளது. தனியார் துறை ஊழல்கள் இந்த கணக்கில் வராது. உலகிலேயே லஞ்சம் குறைந்த நாடு நியூசிலாந்து. அடுத்து டென்மார்க், அப்புறம் சிங்கப்பூர். இம்மூன்றும் 9க்கு மேல் பெற்றுள்ளன. இந்தியாவில் லஞ்சம் தலைவிரித்து ஆடும் துறைகளில் முதன்மையானது காவல் துறை.
லஞ்சம் குறைந்தது பள்ளிக் கல்வித் துறை. ஊழல் மிகுந்த மாநிலம் என்ற பெருமையை பெறுவது பீகார். அடுத்து வருவது காஷ்மீர், மத்திய பிரதேசம். அரசுப் பணிகளை கணினி மயமாக்கியதால் லஞ்சம் பெரிய அளவில் குறைந்துவிடவில்லை என்று அகமதாபாத் IIM நடத்திய ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. ஏனென்றால் அந்த கணினிகளை கையாள்வது மனிதர்கள். அவர்களுக்கு பதில் ரோபோக்களை நியமித்து அரசு எந்திரத்தை உண்மையிலேயே எந்திரமாக்கினால் இந்தியாவும் அதிக மதிப்பெண் பெற வாய்ப்பு இருக்கிறது..

நமது உரிமைகளையே பெறுவதற்கு லஞ்சம் கொடுக்கும் அளவில் ஒரு நாடு சீரழிந்திருந்தால் அப்போது நம் உரிமையைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுப்பது சில வேளை நிர்ப்பந்தமாகி விடுகிறது. இது போன்ற நிலையை அடைவோர் தங்களின் உரிமையைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்தால் அது மன்னிக்கப்படும்.

நமது முன்னால் குடியரசு தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் ஒரு முறை மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நடந்த உரையாடல் நினைவிற்கு வருகிறது
அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளில் ஒரு அறிவியல் புரட்சி ஏற்படும். அப்போது பயோ டெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி, நானோ டெக்னாலஜி ஆகியவை சேர்ந்து ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்தக் காலத்தில் லஞ்சம், பெருமளவு பெருகி விட்டது. எந்த அளவுக்கு எனில் சில ஊழியர்களுக்கு அவர்களுடைய ஊதியத்தை விடக் கூடுதல் வருமானமாக லஞ்சம் ஆகிவிட்டது. அதுமட்டுமல்ல பல கம்பெனிகளுடைய வரவு, செலவு கணக்கு (பட்ஜெட்)களில் பல்வேறு (மறைமுகமான) பெயர்களில் லஞ்சம் கொடுக்கல், வாங்கல்கள் பதிவு செய்யப்படுகிறது. பெரும்பாலான கொடுக்கல், வாங்கல்கள் எப்படி மாறி விட்டன என்றால் அவை ஆரம்பமாவதும் லஞ்சம் மூலமாகத்தான் முடிவதும் லஞ்சம் மூலமாகத்தான். அதனால் ஏழைகள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகின்றனர். இதனால் (மனிதர்களிடம் ஒப்படைக்கப்பட்ட) பல்வேறு பொறுப்புகள் பாழாகி விட்டன. தொழிலாளிகள் கெட்டுப் போவதற்கும் அதனால் முதலாளிகள் நஷ்டம் அடைவதற்கும் இதுதான் காரணம். அது மட்டுமல்ல லஞ்சம் கொடுப்பவருக்குத் தான் வேலை சிறப்பாக முடித்துக் கொடுக்கப்படுகிறது. எவர் லஞ்சம் கொடுக்கவில்லையோ அவருடைய வேலை சிறப்பாக முடித்துக் கொடுக்கப்படுவதில்லை. அல்லது அவருடைய வேலை தாமதப்படுத்தப்படுகிறது.

நமது நாட்டை லஞ்சம் இல்லாத நாடாக உருவாக்க முடியும். நமது நாட்டில் 100 கோடி பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 20 கோடி வீட்டில் இருப்பார்கள். அப்படி என்றால் ஒரு வீட்டில் 5 பேர் இருப்பார்கள். அனைத்து வீட்டிலும் லஞ்சம் வாங்குபவர்கள் இருக்க முடியாது. 50 சதவீதம் அதாவது 10 கோடி வீட்டில் லஞ்சம் வாங்கும் தாயோ அல்லது தந்தையோ அல்லது வீட்டில் உள்ள யாராவது ஒருவர் ஊழலில் மாட்டிக் கொண்டு இருப்பார்கள்.
துரதிர்ஷ்டவசமாக அப்படிப்பட்டவர்கள் உங்கள் வீட்டில் இருந்தால் தாய் அல்லது தந்தையிடம் லஞ்சம் வாங்காதீர்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? (மாணவர்கள் முடியும் என்றனர்). முடியும். வெரிகுட்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை பார்த்து கேட்கிறேன். நீங்கள் நல்லவராக இருப்பீர்கள். துரதிர்ஷ்டவசமாக உங்களது குழந்தை வந்து அப்பா லஞ்சம் வாங்காதீர்கள் என்று சொன்னால் நீங்கள் கேட்பீர்களா? (கூட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் கேட்போம் என்றனர்) கேட்பீர்கள். அப்படியானால் இன்னும் 5 ஆண்டுகளில் லஞ்சம் இல்லாத இந்தியா மலரும்.

ஒவ்வொரு குடிமகனும் லட்சிய சிகரத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளோடு இருக்க வேண்டும். பள்ளிப்படிப்பு படிக்கும் மாணவர்களாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்க வேண்டும்.

வந்திருக்கும் மாணவர்களில் எத்தனை பேர் அரசியல் தலைவர்களாக வர விரும்புகிறீர்கள்? கையை உயர்த்துங்கள். (7 மாணவ- மாணவிகள் கையை உயர்த்தினர்) உயர்த்தியவர்களில் 3 பேர் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். ஏன் அரசியல் தலைவராக ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? என்று அவர் கேட்டார்.

அதற்கு பதில் அளித்த மாணவிகளில் ஒருவர், "குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்க முடியாமல் கஷ்டப்படும் சிறுவர்களை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அரசியல் தலைவராக ஆகவேண்டும் என்று விரும்புவதாக'' பதில் அளித்தார்.

அந்த மாணவியை பார்த்து உனக்கு 100 மார்க் என்று ஜனாதிபதி அப்துல் கலாம் கூறி பாராட்டு தெரிவித்தார்.

எப்பொழுதோ பார்த்த இந்தியன் படத்தில் சொல்லும் ஒரு கருத்து இப்பொழுது எனக்கு ஞாபகம் வருகிறது . வெளி  நாடுகளில் நான் லஞ்சம் யாரும் வாங்கவில்லை என்று சொல்லவில்லை . வாங்குகிறார்கள் . அவர்கள் எல்லோரும் தங்கள் பணியை மீருவதற்கு லஞ்சம் வாங்குகிறார்கள் . ஆனால் நமோ நமது பணிகளை செய்வதற்கு லஞ்சம் வாங்குக்கிறோம் .இதுதான் நூற்றுக்கு நூறு உண்மை .அதனால்தான் இன்னும் அடிப்படை தேவைகளுக்குக் கூட கை ஏந்தும் நிலை நமது நாட்டில் . இந்த நிலை இன்னும் நீடித்தால் உலக அரங்கில் நமது நாடு மக்கள் தொகையில் முதல் இடம் பிடிக்கிறதோ இல்லையோ அதற்கு முன்பாக லஞ்சத்தில் முதல் இடம் பிடித்துவிடும் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்றாகிப்போகலாம் .

ஒரு வழியா பதிவு போட்டாச்சு . ஏலே மக்கா அடுத்து நீங்கதான் . பதிவு பிடித்து இருந்தாலும் , இல்லாவிட்டாலும் உங்க கருத்துக்களை மறக்காமல் மறுமொழியில் சொல்லிட்டுப்போங்கல .

இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........
 
 
 


சின்ன பய சின்ன பொன்ன காதலிச்சா !!!


  சில மாதங்களுக்கு முன்பு நண்பர் அறிவுமதி எழுதிய காதலை பற்றிய சில விசயங்கள் என்னை மிகவும் கவர்ந்தது சரி அதைப் பற்றி நானும் ஒரு பதிவு எழுத வேண்டும் என்று வெகு நாட்களாக ஆசைதான் இதோ ஒரு கவிதையுடன் தொடங்குகிறேன் . ஏலே இதை கவிதை என்று நாங்க சொல்லணும் என்று சொல்றது நல்லாவே கேக்குது மக்கா பிடித்து இருந்தாலும் இல்லாட்டியும் எப்பவும் வழக்கமா பண்றது போல உங்க விருப்பத்திற்கு உங்க கோபத்தை மறுமொழியில காட்டலாம்கோ .

மீண்டும் ஒரு ரோஜாவை
கொல்ல விருப்பம் இல்லை
.ஒவ்வொரு வருடமும் உனக்காக
எழுதி எழுதி கொடுக்காமல் மறைத்த
கடிதத்தில் உள்ள வார்த்தைகளுக்கு எல்லாம்
கண்டிப்பாக வயதாகி இருக்கக்கூடும் .

உனக்கா என்று சொல்லி சொல்லி
வாங்கிய ரோஜா பூக்களின் மரணத்திற்கு
எல்லாம் நம்
காதலும் ஒரு காரணம்தான் .

நேற்று
உன் அனுமதி இன்றி காதலித்தேன் ஆனந்தம்.
ஆனால்
இன்றும் உன் அனுமதி இன்றியே காதலிக்கிறேன்
சற்று வருத்தம் .
நாளையும் உன் அனுமதி இன்றியே காதலிப்பேனோ ?
சற்று பயம் .
நாளை மறுநாள் உன் அனுமதி பெற முயற்சித்து
நீ மறுத்துவிட்டால் இதைவிட வேதனை
வேறு ஒன்றும் இல்லை .
உன் அனுமதி இன்றியே காதலித்துக்கொண்டிருக்கிறேன்
உன் அனுமதி பெற முயற்சித்து தோற்றவானாய்

இனியும் அந்த அவல நிலை வேண்டாம் .
இதோ இன்று காதலர் தினம்
என் அன்னைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை .
பாதி தூக்கம் தொலைத்து
பாதி ஏக்கம் நிரப்பி
பாதி பல் துளக்கி
பாதி குளித்தும் குளிக்காமல்
 பாதி உணவு உண்டும் உண்ணாமல்
பாதி தலை வாரியும் வாராமல்
பாதி ஆடை அணிந்தும் அணியாமல்
பாதி புத்தகம் எடுத்தும் எடுக்காமல்
இப்படி அவசர அவசரமாக கிளம்பிக்கொண்டு இருக்கிறேன்
பேருந்து நிறுத்துமிடம் நோக்கி .

அன்னை சொன்னாள்
இன்னும் உன் பேருந்து வர நேரம் உள்ளது .
எதற்கு இவளவு அவசரம் என்று !
எப்படி சொல்வேன் ? அவள் வந்து வெகுநேரமாகிவிட்டதை
அன்னையாகிய உன்னிடம்
.காதல் – கொடுப்பதன்று. எடுப்பதன்று. ஈர்த்துக் கவிழ்ப்பதன்று. மடக்குதல் அன்று. மடங்குதல் அன்று. எதிர்பார்த்த வெறியில்… எதிர்பாராத சொடுக்கில் கிடத்துதல் அன்று. இரக்கத்தில் கசிந்து இருளில் தேங்குதல் அன்று.

என் பேனாவிலும்
மை உண்டு
நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…
நீ இன்னும்
எழுதிக் கொண்டிருக்கிறாய்.

தேடல்கள்… தம் காத்திருத்தலின் தற்செயல் நிமிடத்தில் திகைத்துச் சந்தித்து… உள்திரும்பித் திருப்தியுறுவது. இரு ஞாபகங்கள் விரும்பி, ஒற்றை மறதிக்குள் அமிழ்வது.

அதை அறிய மனசு பூத்திருக்க வேண்டும். நிலா… மொட்டின் மீது வழிந்து விடுகிறது. பூதான் விந்துவாய் வாங்கிக் கொள்கிறது. காதலை வாங்கிக் கொள்ள எத்தனை பேருக்கு வாய்க்கிறது? காதலால் வாழ்ந்துகொள்ள எத்தனை பேருக்கு நேர்மை இருக்கிறது?

அது ஆணுக்கும் பெண்ணுக்குமாக நிகழ்வதா? ஆணுக்குள் இருக்கிற பெண்ணுக்கும் பெண்ணுக்குள் இருக்கிற ஆணுக்குமாக… எதிரெதிர் கண்ணாடிக்குள் நீளும் தொடர் பதிவுகளாய் நிகழ்வது.

அஃறிணையில் உயிரோட்டமாக இருக்கிற அது… உயர்திணையில் வெறும் உடலோட்டமாகி விடுகிறது. கற்பிதங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிற சமூக விலங்குகளுக்குக் கூண்டின் கூரைதானே வானம்! வானமற்றுப் போன வாழ்வில் சிறகுகளின் பாடல்கள் ஏது?

இந்தப் பிறவியில் சேர முடியாவிட்டால் என்ன… அடுத்தப் பிறவியில் சேர்ந்து வாழ்வோம் என்பதுவும்…உடல்களால் இணையாவிட்டால் என்ன… உயிர்களால் இணைந்து வாழ்வோம் என்பதுவும் ஏமாற்று. பொய்!

அது உடல் கடந்து நடப்பதா? உடல்களால் நடப்பது. சம அதிர்வுகளாலான மின்சேர்க்கை அது.
உடல்தொட்டதும் காதலை இழந்துவிடுகிறவர்கள் அதிகம். காதலைத் தொட்டு உடலை அடைபவர்கள் குறைவு – மிக மிக குறைவு.

ஸ்பரிசமும்…புணர்தலும் காதலின் நெருங்கிய மொழிகள். அவற்றைப் பேசாதே எனச் சொல்லும் தத்துவங்கள் யாவும் பொய் பேசும். வாழ்வின் வழிகள் முறித்துக் குளிர்காய்கிற எந்தச் சடங்கும் காதலைச் சிதைக்கும். பொருந்த நெருங்கும் முழுமைக்குள் சந்தேகங்கள் திணித்துச் சிரமம் செய்யும்.

அதனால்தான்… அடிமைச் சமூக அமைப்பில் வரலாற்று வழிநெடுக வாழ்ந்து பழகிவிட்ட நமக்கு, வாழ்க்கை மட்டுமல்லாது காதலும் போராட்டமாகிவிட்டது. அடுத்தவர்களிடமிருக்கிற நம்மை மீட்பதும்…நமக்குள் இருக்கிற அடுத்தவர்களை வெளியேற்றுவதுமான சிக்கல்கள் நிறைந்த போராட்டமிது!

இத்தகைய நெருடல்கள் நிறைந்த வாழ்வில்… காதலைச் சந்தித்ததாக யாரேனும் கூறினால் நம்ப மாட்டேன்! காதலிகளைச் சந்தித்திருக்கலாம். காதலன்களைச் சந்தித்திருக்கலாம். காதலை மட்டும் சந்தித்திருக்கவே முடியாது!

சூழ்ந்தார் துயரங்களை வீழ்த்தி எழாத எவருக்குள்ளும் காதல் எழாது – எழ முடியாது. காதலைப் போல ஒன்று எழலாம். அதுவே காதல் ஆகாது.

காதலென்பது என்ன… இழந்துவிட்டு வருந்துவதா? பிரிந்துகொண்டு அழுவதா? இல்லை…இல்லை.. ‘காதல்… காதல்… காதல்… காதல் போயின் சாதல்… சாதல்… சாதல்…’ சொன்ன பாரதியின் காதல் என்ன ஆனது? அவனது தொகுப்பில் பதினாறு விருத்தங்கள் ஆனது. ஆனாலும் சொல்கிறேன்…அவனது பிள்ளைக் காதல்தான் அவனைப் பிரபஞ்ச காதலனாக்கியது. அந்தத் தனிமனிதனை அதுதான் சமூக மனிதனாக்கியது. அதுதான் அவனிலிருஎந்து எழுந்து இன்னும் நித்திய நெருப்பாக நின்று எரிகிறது. அவனது போராட்ட உணர்வுக்குள் ஒன்பது வயதுச் சிறுமி ஒருத்தி ஊடுருவியிருக்கிறாள் என்கிற உண்மையை உணர்ந்தவர்களுக்குத் தான் தெரியும் – காதலின் பெருமை!

என்னை
எல்லோருக்கும்
பிடித்திருக்கிறது.
அவனையும்
எல்லோருக்கும்
பிடித்திருக்கிறது.
எங்களைத்தான்
யாருக்குமே
பிடிக்கவில்லை

மற்றபடி இங்கே காதல் கடிதங்கள் எழுதிக் கொள்பவர்களையும்… பரிசுப் பொருட்களை மற்றிக் கொள்பவர்களையும்.. எச்சில் இனிப்புகளை ருசிபார்ப்பவர்களையுமா காதலர்கள் என்கிறீர்கள்?

ஸ்கூட்டரில் அணைத்துப் போவதையும்… திரையரங்குகளில் உரசிப் படம் பார்ப்பதையும்…கடற்கரை இருளில் மடியில் படுத்துக் கிடப்பதையும் காதல் என்று நம்பச் சொல்கிறீர்கள்?

காதலின் எல்லை திருமணம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளவும் உரத்துச் சொல்லவும் இங்கே எத்தனை பேருக்குத் தெம்பு இருக்கிறது? தம் காதலை வெற்றி கொள்ளவும் தம் பிள்ளைகளின் காதலுக்கு வரவேற்புச் சொல்லவும் இங்கே எத்தனை பேருக்குப் பக்குவம் இருக்கிறது?

அதற்குக் காரணம் அவர்களல்ல; நீங்களுமல்ல. நானுமல்ல. குற்றமற்ற விலங்குகளை நமக்குள் நாமே வளர்த்துப் பழக நாட்கள் இன்னும் நமக்கு அமையவில்லை. நமது மனம் என்பது தொலைதூரத் தலைமுறைகளைத் தாண்டிய வேட்டைக் கால வாழ்வியற் கருத்துருவாக்கங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கற்பிக்கப்பட்ட மனோபாவங்களுக்குள் வாழப்பழகிவிட்டதனாலேயேயே, காதல் செய்தலும் மிகப்பெரிய சமூக குற்றமென நமக்குள்ளாகவே ஒருவன் எழுந்து நம்மை எச்சரிக்கிறான்.

காதல் குற்றமா? சமூக குற்றமா? நமக்குள் இருக்கிற புற மிருகங்களையும் அக மிருகங்களையும் உசுப்பிவிட்டு கடித்துக் குதற்ச்சொல்லி ரத்தம் ரசிப்பவனே அப்படிச் சொல்வான். சமூகச் சூழல்களின் சிலந்தி இழைகளிலிருந்து விடுபட்டு… வாழ்வின் இயல்புத் தளத்தில் இயற்கையின் இயக்கமாகிவிடச் சம்மதிக்கிற எவனும், அதனை அப்படி சொல்ல சம்மதிக்க மாட்டான்!

நாம் பிளந்து கிடக்கும் பிரபஞ்ச பிசிறுகள். காதலில் இணைகிற ஆணும் பெண்ணும் பிரபஞ்ச இயக்கத்தின் ஆணி வேருக்குள் நெகிழ்ந்து இறங்குகிறார்கள். அது இருவரின் முழுமையடைதல் இல்லை. முழுமைக்கான அடுக்குகளின் ஒழுங்கமைவில் அது ஒரு பகுதி.

இருட்டிக் கொண்டு வருகிற ஏதோ ஒரு மழைக்காலத்தில்… பாறையின் மீது வந்து ஒரு பெண் படுக்கிறாள் என்பது…அந்தப் பாறையிலிருந்து என்றோ தெறித்துச் சிதறிய ஒரு பகுதி மீண்டும் வந்து அதே இடத்தில் பொருந்துவதாக அர்த்தம். அந்தப் பெண்மீது அவலது அந்தக் கணத்தின் முழுச்சம்மதத்தில்…அவளது ஆண் கவிழ்ந்து இயங்கப் போகிறான் என்கிறபோது அவர்கலள் மட்டுமல்ல… அவர்களைச் சுமந்துள்ள பாறையும் சூழ்ந்துள்ள செடிகளூம்…செடிகளில் அமர்ந்துள்ள வண்ணத்துப் பூச்சிகளும் கூட அவர்களோடு சேர்ந்து இயங்கப் போகின்றன என்று அர்த்தம். காதலின் மையத்தில் குனிந்து முகம் பார்க்கிற எவரும் உலகச் சுழற்சியின் ஏதோ ஓர் ஒழுங்கின்மையைச் சரிசெய்கிறவர்களாகவே இருப்பார்கள்.

மேல் இமைகளில்
நீ இருக்கிறாய்.
கீழ் இமைகளில்
நான் இருக்கிறேன்.
இந்தக் கண்கள் கொஞ்சம்
உறங்கி விட்டாலென்ன?

வாழ்வின் இடையில் வந்து இடையில் போய்விடுகிற தற்காலிக அதிர்வு அல்ல அது. ஆயுளைக் கடந்தும் உடல்மாறிக்கொள்கிற நிரந்தர அதிர்வு.

காமத்துக்கான முன் ஒத்திகையாக அதனைக் கருதுகிறவர்களூக்கே அது தற்காலிகம். உடல்களால் காமம் பேசிமுடித்த திருப்தியில் உயிர்களால் காதல் பேச முடிகிறவர்களூக்கு மட்டுமே அது நிரந்தரம். அப்படிப் பேசிப் பழகப் பயிற்சி வேண்டும்.

எவரும் எவருக்கும் நன்றி சொல்ல நினைக்காத தருணங்களால் பேச வேண்டும், அதனை. உதடுகளின் மெல்லிய அதிர்வுகள் சாட்சியாக… ஈரத்தில் நனைந்த விழிகள் சாட்சியாக… அக்குளில் பூக்கும் வியர்வையின் வாசம் சாட்சியாக…ஏன் கூச்சங்கழிந்த நிர்வாணம் சாட்சியாக… இழையும் பெருமூச்சுக்களால் பேச வேண்டும் அதனை. பேசப் பேசப் பேசத் தெவிட்டாத பேச்சு அது. பேசியிருக்கீர்களா நீங்கள்?

நான் பேசியிருக்கிறேன். ஆணாக இருந்தல்ல. பெண்ணாக இருந்துதான் பேசியிருக்கிறேன். என்ன சிரிக்கிறீர்கள்? பெண்ணாகித்தான் பேசமுடியும். அதனை!

பெண்ணாகத் தெரியாத எந்த ஆணுக்கும் காதலின் தரிசனம் வாய்க்குமென்று நான் நம்பவில்லை. ஆயிரம் பெண்களுக்குரிய தாய்மையைத் தன் இதயத்துக்குள் ஏற்றுக்கொள்கிற ஆண்தான், ஒரு பெண்ணின் இதயத்துக்குள் இடம்பெறுகிற அருகதையுள்ளவனாகிறான்.

இருவராய் இணைந்து இருக்கையில் கூடத் தனிமையாய் இருக்கிற சுந்தந்திர சுகத்தை ஒரு பெண்ணுக்கு எவன் தருகிறானோ, அவண்தான் ஆண் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறான்!

அழகியக் கூண்டு செய்து… அதற்குள் அடக்கி வைத்து… ‘இது என் பறவை.. இது எனக்கு… எனக்கு மட்டுமே’ என்று எந்தப் பெண்ணையும் சொல்ல எந்த ஆணும் வெட்கப் படவேண்டும். விரும்பி வந்து ஒரு பறவை எவ்விதம் அமர்ந்ததோ அவ்விதமே விரும்பியவண்ணம் அது பறந்து செல்லுதலுக்கும் சிரமமற்றபடி கிளையாக இருக்கச் சம்மதித்தலே அணுக்கு அழகு.

உரிமை கொண்டாடுதல் அன்று உரிமை தருதலே காதல். தருதல் என்ற சொல்லுக்குள்ளும் ஓர் ஆதிக்கத்தனம் தெரிகிறதே! தருவதற்கு ஆண் யார்? தருதலும் பெறுதலுமற்ற கருனைப் பெருவெளியில் சிறகுச் சிக்கலின்றிப் பறத்தலே காதல்!

முழுவிடுதலையைச் சுவாசித்துப் பூப்பதுதான் காதல். எந்தச் சிறைக்குள்ளும்… எந்த விலங்குக்குள்ளும்… அடைபட்டு கட்டுப்பட்டு இருக்க சம்மதிக்காது அது.

என்னைச் செதுக்கியது பெண்மை. என்னில் சிற்பமானது காதல். எனக்குள் எல்லாமும் அதுதான். எல்லாமும் கற்றுத் தந்ததும் அதுதான்!

பூவைப் பறித்துவிடாமல் அதன் செடியிலேயே பார்த்து ரசிக்க… கைகளின் முடிப்பிசிறுகளில் சிக்கி நகரும் எறும்பை நசுக்கிவிடாமல் மெல்ல எடுத்து ஊதிவிட…அசையும் ஊதுவத்திப் புகையில் இசை கேட்க… பயணங்களூடே உடைக்கப்படும் பாறைகள் பார்த்து அழ… இறந்து கிடக்கும் வண்ணத்துப் பூசியை எடுத்துப் போய் அடக்கம் செய்ய… போக்குவரத்து மிகுந்த சாலையில் கிடந்து நசுங்கும் ஏதோ ஒரு குழந்தையின் ஒற்றைச் செருப்பைத் தவித்து எடுத்து ஓரமாய் வைக்க… அதுதான்… ஆம் … அதுதான் எனக்குக் கற்றுத் தந்தது. காதல் கற்றுத் தரும். காதல் எல்லாம் தரும். காதலியுங்கள். புரிந்துகொள்வதை அதிகம் பேசலாம். உணர்ந்து கொள்வதை?

அணுஅணுவாய்
சாவதற்கு
வாழ்வதற்கு
முடிவெடுத்துவிட்ட பிறகு
காதல்
சரியான வழிதான்.

ஏலே மக்கா என்ன ஒன்னும் புரியலையோ ? ஏலே இது காதாலிச்சா தாம்லா புரியும் .சும்மா நூலு விட்ட இது புரியாதுல .

இப்ப பாருங்க நம்ம வாத்தியாரு சொல்லித் தந்தத சொன்ன புரியுதானு பாருங்க இதுவும் புரியலைன அதற்கு நான் ஒன்றும் பண்ண இயலாது சாமியோ !
நீங்க சொல்லவேண்டியதை மறக்காமல் மறுமொழியில் சொல்லுங்க .

சம்பரதாயம் சட்டை பிடித்தாலும்
உறவுகள் உயிர் பிழிந்தாலும்
விழித்து பார்க்கையில் உன் தெருக்கள்
களவு போயிருந்தாலும்
ஒரே ஆணியில் இருவரும் சிக்கன
சிலுவையில் அறயபட்டாலும்
நீ நேசிக்கும் அவனோ அவளோ
உன்னை நீசிக்க மறந்தாலும்
காதலித்து பார்
சொர்க்கம் நரகம் இரண்டில்
ஒன்றே இங்கேயே நிச்சயம்
காதலித்து பார்


அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள் !



இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........






அறிவுக்கு விருந்து !!!

இன்னைக்கு என்ன எழுதலாம் எப்ப பார்த்தாலும் ஒரே கதையும் , கவிதையும் , கட்டுரையுமா எழுதி எழுதி நிரப்பியாகிவிட்டது . சரி இன்னைக்கு ஏதாவது சில அறிய நிகழ்வுகளைப் பற்றி எழுதி அறிவுக்கு விருந்து என்று சொல்லி அனைவரையும் அசத்திட வேண்டியதுதான் . அறிவுக்கு விருந்தா அது எங்கடா உன்னிடம் இருக்குனு நீங்க சொல்றது எனக்கு கேக்குது மக்கா . பதிவுனு சொல்லி மொக்க போடுறதும் . மொக்கைனு சொல்லி பதிவு போடுறதும் இப்ப சகசம்தானங்க .எது எப்படியோ இது அப்படி இல்லை எப்படினு கேக்குறீங்களா அது அப்படிதாங்க . சரி வாங்க விசயத்திற்கு வருவோம் .


507 காரட் எடையுள்ள உலகிலேயே பெரிய வைரம் , தென்னாப்பிரிக்க வைரச் சுரங்கத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது .


செல்போனில் சிம் கார்டு பிளாஸ்டிக் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம் . ஆனால் , அதுவல்ல . தாவரங்களிலிருந்து கிடைக்கும் செலுலோஸ் என்பதிலிருந்து தயாரிக்கப்படுகிறது சிம்கார்டு .


உயிர் என்றால் என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு , அமெரிக்கத் தொலைக்காட்சியில் ஒருவர் வேடிக்கையாக அது காமத்தால் தொற்றிக்கொண்ட நோய் ( ' life is a sexually transmitted disease ' ) என்றார் .


வேகமாகப் போக விரும்பினால் , தனியாகப் பயணம் செய் . தொலை தூரம் போக விரும்பினால் துணையுடன் பயணம் செய் ' என்பது ஆப்பிரிக்காவில் பிரபலமாகச் சொல்லப்படும் வாக்கியம் .


எந்த விளையாட்டுக்கும் இல்லாத தனிச்சிறப்பு படகுப் போட்டிக்கு உண்டு . பின்பக்கமாகத் திரும்பி


வெற்றிக்கோட்டைத் தொடும் ஒரே விளையாட்டு இது மட்டும்தான் .


சங்கரா பரணம் ராகத்தில் , ' ஜனகணமன ' பாடலுக்கு இசை அமைத்தவர் நேதாஜியின் படையில் பணியாற்றிய கேப்டன் ராக்சிங்


மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறந்த கானகப் பகுதிக்கு ' மௌனப் பள்ளத்தாக்கு ' என்று பெயர் .


மனைவி விருப்பம் இல்லாத நேரத்தில் கட்டாயப் படுத்தி உறவுகொள்வது ( மேரிட்டல் ரேப் ) , மனைவியைக் கணவனும் அவனது உற்றாரும் கொடுமைப்படுத்துவது ( டொமஸ்டிக் வயலென்ஸ்.) எனப்படும் .


பறவைகளுக்கு ( வாத்து , அன்னம் , நெருப்புக் கோழி தவிர்த்து ) ஆண்குறி கிடையாது . க்ளோயேகா ( cloaca ) என்கிற ' சமச்சீர் பகுதி ' யினால் தேய்த்துக்கொள்ள வேண்டியதுதான்


இரவில் தூங்கும்போது படுக்கையில் சிறு நீர் கழிக்கும் பழக்கத்தை ஆங்கிலத்தில் Nocturnal Enuresis என்று குறிப்பிடுவோம் . இந்தப் பழக்கத்துக்குப் பெண் குழந்தைகளைவிட அதிகம் ஆளாவது ஆண் குழந்தைகள்தான்


எல்லா வகை ரத்தத்துடனும் சேரும் ரத்த வகை ' ஓ ' பாஸிட்டிவ் .

நட்சத்திரங்களின் இடத்தை வைத்தே பழங்காலங்களில் திசைகளை கண்டுபிடிப்பார்கள் . சந்திராயன் விண்கலத்தில் அதை போன்ற ஒரு செயலையே ' ஸ்டார் சென்சார் ' செய்து வந்தது . நட்சத்திர கூட்டங்களை நோக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்த சென்சார்கள் . அதை வைத்தே விண்கலம் நோக்கியிருக்கும் திசை , நிலவின் தளத்தில் இருந்து விண்கலம் உள்ள உயரம் , விண்கலம் நிலை நிறுத்தப்பட்டுள்ள கோணம் போன்ற தகவல்களை துல்லியமாக கணித்து தரும் .

" ஐன்ஸ்டீன் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது ...."
" ' ரிலேட்டிவிட்டி தியரி ' என்று சொல்வேன் என்று நினைத்தீர்களா ? அதுதான் இல்லை . காந்தியின் பெயர்தான் ஞாபகத்துக்கு வருகிறது . காந்தியைப் பற்றி ஐன்ஸ்டீன் சொன்ன புகழ்பெற்ற ஸ்டேட்மென்ட் இது :


' இன்னும் 50 ஆண்டுகள் கழித்து ரத்தமும் சதையும் கொண்ட இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் ! ".


பொதுவாகவே நல்ல பெட்ரோலானது எங்கு சிந்தினாலும் சிறிது நேரத்தில் சிந்திய சுவடு தெரியாமல் மாயமாகி விடும் . கலப்பட பெட்ரோல் மட்டுமே சிந்திய இடத்தில் சிறிய வரைபடம் போன்று அதன் எல்லைக் கோட்டை விட்டுச் செல்லும் .


நமது உள்ளங்கையில் ஒரு சதுர அங்குலத்திற்கு 3000 வியர்வைச் சுரப்பிகள் உள்ளனவாம் .


அறிஞர் ' வால் ' என்பவர் பல ஆய்வுகளை மேற்கொண்டு , பாம்புக்கு கேட்கும் திறன் இல்லை , செவி இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளார் .


பாம்பைக் கண்டால் பயப்படுவதற்கு அறிவியல் பெயர் ஒபிடி போபியா .


'வெள்ளெழுத்து ' என்ற குறைபாடு 40 வயதானால் கட்டாயம் எல்லோருக்கும் வரும் . இது ஒரு நோய் அல்ல . முதுமை தொடக்கத்தின் அடையாளம் . இதை ' சாளேஸ்வரம் ' என்றும் அழைப்பர் .


ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 113 டன் எடையுள்ள மழை நீர் பொழிவதையே ஓர் அங்குலம் என்பர் . .


குழந்தை பிறக்கும் போது அதன் இதயம் ஒரு நிமிடத்திற்கு 140 முறை துடிக்கும் . முயலின் இதயம் ஒரு நிமிடத்திற்கு 150 முறையும் , குதிரையின் இதயம் 38 முறையும் , சுண்டெலியின் இதயம் 200 முறையும் , நாயின் இதயம் 118 முறையும் , ஆட்டின் இதயம் 60- லிருந்து 78 முறையும் , யானையின் இதயம் 48 முறையும் துடிக்குமாம் .


அப்பாடா ஒரு வழியாக பதிவு போட்டாச்சு .அப்றம் என்ன மக்கா அதுதான் விருந்து முடிந்துவிட்டததுல இனி அப்படியே வரிசையா வந்து மொய் எழுதிட்டு போங்க . நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன் . மக்கா இனி நீங்க சொல்லவேண்டியதை சொல்லலாம் .



இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

நீங்கள் இதயம் உள்ளவரா ? இதோ நிரூபிக்க ஒரு அறிய வாய்ப்பு !!!

அனைத்து வலை உலக நண்பர்களுக்கும் எனது வணக்கம் . நேற்று இரவு எப்பொழுதும்போல் நண்பர்களின் பதிவுகளை வாசித்துகொண்டிருந்தேன் . அப்பொழுது நண்பர் Butterfly சூரியா அவர்களின் புதிய பதிவான '' மைத்ரிக்கு உதவுங்கள்'' என்ற ஒரு அறிவிப்பு பதிவை வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது . என்னடா தலைப்பே சற்று வித்தியாசமாக உள்ளதே என்ற ஆவலுடன் வலைக்குள் நுழைந்தேன் . மொத்த பதிவையும் வாசித்து முடித்த பிறகு உணர்ந்தேன் கடவுள் மனித உருவங்களில் இருக்கிறார் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்றுதான் என்று . நல்ல மனநிலையும் அனைத்து சிறப்புக்களை கொண்ட ஒரு குழந்தையை நாம் சிறந்த முறையில் பாதுகாத்து , கல்வி கற்பித்து , அவர்களை பராமரிப்பது என்பதே சற்று கடினமான விசயமாக இருக்கும் இன்றைய சூழ்நிலையில் . மன வளர்ச்சியில் குன்றிய 300 குழந்தைகளை சிறப்பாக பேணி பாதுகாத்து வளர்த்து வருகிறார்கள் என்றால் சற்று வியப்பிற்குறிய நிகழ்வுதான் .

'' உள்ளம் நல்ல இருந்தா ஊனம் ஒன்றும் குறையில்லே
உள்ளம் ஊனப் பட்டா உடம்பிருந்தும் பயனில்லை. ''


என்ற கவிஞர் வைரமுத்துவின் வரிகள் இன்று ஞாபகத்திற்கு வருகிறது .


நேற்று பக்கம் பக்கமாக எழுதிய பதிவுகள் இன்று ஞாபகத்தில் இல்லை. ஆனால் எங்கயோ ஊமையாக முடங்கிக் கிடக்கும் பல மன நலம் குன்றிய குழந்தைகளின் திறமைகளுக்கு உயிருட்டும் வகையில் அமையும் இதுபோன்ற சிறந்த பதிவுகள் என்றும் ஞாபகத்தில் இருக்கும் என்ற நம்பிக்கையில் நண்பர் அவர்களின் Butterfly சூரியா அவர்களின் '' மைத்ரிக்கு உதவுங்கள் '' என்ற அதே பதிவை எந்த மாற்றமும் செய்யாமல் இங்கு தந்து இருக்கிறேன் . நண்பர்களே நீங்களும் வாசித்து விட்டு உங்களால் இயன்ற உதவிகளை வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் .


நம் நாட்டில் ஏறக்குறைய 3 கோடி மக்கள் மனவளர்ச்சி குன்றியோர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இவர்களுள் ஐந்து சதவிகிதத்தினர்தான் தேவையான கல்வி, பயிற்ச்சி மற்றும் வசதிகள் பெற்றிருப்பதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

பயன் வேண்டுவோருக்கும் பயன் பெறுவோருக்கும் இடையே உள்ள இவ்வளவு பெரிய இடைவெளியை சிறிதேனும் குறைக்கும் நோக்கத்துடன் மனவள்ர்ச்சி குன்றியோரின் பெற்றோர்களால் 1994ல் சென்னையில் துவங்கப்பட்ட சேவை நிறுவனம் தான் “மைத்ரி”

மூன்றே குழந்தைகளுடன் துவங்கப்பட்ட மையம் இன்று 300 குழந்தைகளை பயிற்றுவிக்கும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. சென்னையில் பெரம்பூர், தாம்பரம், மேற்கு மாம்பலம், கொளத்தூர், கே.கே. நகர், உள்ளகரம் ஆகிய 6 இடங்களில் 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடனும் திறன் ஊக்க வல்லுநர்களுடனும் {Occupational & Physico Therapists} பணி புரிகிறார்கள்.

மனவள்ர்ச்சி குன்றியிருந்தாலும் இவர்களிடம் உள்ள சில திறமைகளை கண்டெடுத்து, வளர்த்து அவர்கள் தங்களுக்கும் பிறர்க்கும் பயனுள்ள வாழ்க்கை வாழ வழிகாட்டும் மைத்ரி, நலன் விரும்பும் பெற்றொரும், நல்மனமுள்ள பல்ரின் ஆதரவோடு தற்போது வளர்ந்து வருகிறது.

வளர்ச்சியடைந்த அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அரசு பள்ளிகளிலேயே இம்மாதிரி சிறப்புக் குழந்தைகளின் கல்விக்கும் இடம் ஒதுக்கி உதவுகிறார்கள். நம் நாட்டில் இது போன்ற சமூக நிறுவனங்களால் மட்டுமே செய்ய இயலுகிறது. இதற்கு தேவையான உதவிகளுக்கும் சமூகத்திடம்தான் பெற்று செயல்படவும் முடிகிறது.

இலாப நோக்கில்லாமல் அன்பளிப்புகளால் மட்டுமே நடக்கும் நிறுவனம் என்பதை கடந்த சில மாதங்களாக நானும் இணைந்து பணியாற்றுவதால் நன்கறிவேன். இந்நிறுவனத்தின் கூட்டங்களில் கலந்து கொண்டு என்னால் இயன்ற சிறு உதவிகளையும் செய்து வருகிறேன். அதனால் வலைப்பூவிலும் அதிகம் நேரம் ஒதுக்க முடியவில்லை.

இன்னும் பல பள்ளிகளை தொடங்கவும் இருக்கும் பள்ளிகளை மேம்படுத்தவும் இவர்கள் ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.
சென்னை நேரு உள்விளையாட்டஙகில் (பிப் - 28 ஞாயிறு மாலை 6.05 pm) நடைபெற இருக்கும் இக்கலை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்குவதன் மூலம் நீங்களும் ஒரு சிறு பங்களிப்பை செய்ய முடியும்.

ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக்கவும்.

நிதியுதவி செய்ய விரும்பும் வெளியூர் / வெளிநாடு நண்பர்கள் இங்கே செலுத்தலாம்.

இன்றைய சமுதாய ஓட்டத்தில் இது போன்ற பணிகளி நம்மால் முழு நேரமும் ஈடுபட முடியுமாதென்பது ஒப்பு கொள்ள வேண்டியதே எனினும் இதை முழுமூச்சுடன் முனையும் இவர்களுக்கு தோள் கொடுக்கவும் இயன்ற உதவியை செய்யவும் வாருங்கள் என சக பதிவர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடனும் உரிமையுடனும் வேண்டுகிறேன்.

இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........


தெரிந்தே இறக்கிறது தாய்மொழி !!!

மொழி என்ற ஒன்று மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் நாம் அனைவரும் பேசும் திறன் இருந்தும் ஊமைகலாகத்தான் இந்த உலகத்தில் உலாவிக்கொண்டு இருந்திருக்கக்கூடும் . ஆனால் இன்றைய நிலையில் உலகத்தில் அங்கரிக்கப்பட்டும் , அங்கரிக்கப்படாமலும் எத்தனையோ மொழிகள் அவர் அவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் பேச்சு வழக்கில் நடைபோட்டுக்கொண்டு இருக்கின்றன . நாம் ஆயிரம் மொழிகள் பேசினாலும் பல வேறுபட்டு நாகரிகங்களை கொண்டு வாழ்ந்து வந்தாலும் . நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் இந்தியர்கள் என்றே ஒரு உணர்வுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது மட்டும் யாராலும் மறுக்க இயலாத ஒரு உண்மை . இதைத்தான் அன்றே அழகாக பேசும் மொழி பதினெட்டுடையாள், ஆயின் சிந்தை ஒன்றுடையாள்’ என்று பாரத மாதாவைப் பற்றிப் மகாகவி பாரதியார் பாடியதற்கும் இதுதான் அர்த்தம் !

 ஒரு மொழி என்பது, தொடர்பாடலுக்குப் பயன்படுகின்ற ஒரு முறைமை ஆகும். இது ஒரு தொகுதிக் குறியீடுகளையும், அவற்றை முறையாகக் கையாளுவதற்கான விதிமுறைகளையும் கொண்டுள்ளது.



மனிதருடைய மொழிகளில், ஒலியும், கைச்சைகைகளும், குறியீடுகளாகப் பயன்படுகின்றன. இவ்வாறான ஒலிகளை எழுத்து வடிவமாக மாற்றமுடியும். ஆனால் சைகைகளை அவ்வாறு மாற்ற முடியாது. மனிதருடைய மொழிகளில் இக்குறியீடுகள் சொற்கள் என்றும், அவற்றைக் கையாள்வதற்கான விதிகள் இலக்கணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

"மொழி ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி எனக்கூறுவது முழுமையாகக் கூறப்படாத ஒரு விளக்கமாகும். மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, குமுகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்கநெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படை விளக்கமாகவும் உள்முகச் செய்திகளாகவும் கொண்டிலங்குகிறது."


மனித மொழியானது இயற்கையான மொழியாகும் (natural language).மொழியினை கற்க முற்படும் அறிவியலுக்கு மொழியியல் (linguistics)எனப்படும். மொழியின் வளர்ச்சிப்பாதையாக பேச்சு, எழுத்து, புரிதல், மற்றும் விளக்கம் எனும் படிகளைக்கொண்டது.


மொழியானது பிறப்பு, இறப்பு, வளர்ச்சி, இடம்பெயர்தல், மற்றும் காலத்திற்கேற்ற மாற்றம் என பண்முகம் கொண்டதாக உள்ளது. எந்த ஒரு மொழி மாற்றத்திற்கோ அல்லது மேன்மையுறதலுக்கோ இடங்கொடாமல் இருக்கிறதோ அம்மொழி இறநதமொழி (Dead language) எனப்படும். மாறாக எந்ந ஒரு மொழி தொடர்ந்து காலத்திற்கேற்றாற்போல் தனக்குள் மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறதோ அம்மொழி வாழும் மொழியாக (Living language) கருதப்படும்.

அகா-போ (Aka-Bo) அல்லது போ (Bo) எனப்படுவது அந்தமான் தீவுகளில், குறிப்பாக வடக்குப் பகுதியில் பேசப்பாட்டு வந்த ஒரு பழமையான மொழி

இந்தியாவின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான போ மொழி பேசிய கடைசி நபர் அந்தமான் தீவுகளில் தனது 85வது வயதில் இறந்துள்ளதாக பிரபல மொழியியல் நிபுணர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்து இருக்கிறார் .


போ மொழி உலகின் மிகப் பழமையான மொழி என்பதால் போவா சர் (Boa Sr) என்ற பெண்ணின் இறப்பு ஒரு குறிப்பிடத்தக்கதாகும். இவரின் இறப்பு மூலம் போ மொழி உலகின் பழமையான மொழி முற்றாக அழிந்து விட்டதாகக் கருத முடியும் என பேராசிரியர் அன்வித்தா அபி தெரிவித்து இருக்கிறார்.


பல ஆயிரம் ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த ஒரு மொழி நேற்றோடு அழிந்து விட்டது. ‘போ’ என்ற அந்த மொழியை பேசத் தெரிந்த ஒரே ஒருவரும் நேற்று இறந்தார். அவரோடு அந்த மொழியும் இறந்துவிட்டது. இதுபோல் உலகம் முழுவதும் மாதத்துக்கு ஒரு மொழி அழிந்து வருகிறது.


பிரிட்டிஷ் படைகள் 1858ல் அந்தமானை தங்கள் பிடியில் கொண்டுவந்தபோது, போ மொழி பேசும் பழங்குடி மக்கள் ஐயாயிரம் பேர் இருந்தனர். 150 ஆண்டுகளில் அத்தனை பேரும் மடிந்து, அவர்களோடு ஒரு புராதனமான மொழியும் போய் சேர்ந்துவிட்டது. கடைசி ஆள்தான் போ சீனியர். அந¢த பெண்மணிக்கு வயது 84. போர்ட் பிளேரில் வசித்தார். சுனாமி வந்தபோது, மரத்தில் ஏறி தப்பித்தாராம் போ. அப்போதுகூட கலங்கவில்லை. அவரோடு போ மொழியில் பேச துணைக்கு இருந்த ஒரு பெண் கடந்த ஆண்டு இறந்தபோது அழுதாராம்.


தெரிந்த மொழியில் பேச ஆளில்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை என்பது வெளி இடங்களில் வசிப்பவர்கள், வேலை பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும்.


கிரேட் அந்தமானீஸ் டிரைபல் என இந்த பழங்குடி மக்களை குறிப்பிடுவார்கள். 65 ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த பழங்குடி இனம் அது. 550 தீவுகள் அந்தமானில் இருந்தாலும் 40 தீவுகளில்தான் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.


"போவாவின் பெற்றோர் இற்றந்த பின்னர் இவரே அம்மொழியின் கடைசிப் பேச்சாலலராக 30 முதல் 40 ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறார்" .


இப்பெண்மணி பொதுவாகத் தனிமையிலேயே வாழ்ந்து வந்தவரென்றும், ஏனைய மக்களுடன் கதைப்பதற்கு இவர் அந்தமானிய இந்தி மொழியைக் கற்க வேண்டியிருந்ததென்றும் அவர் தெரிவித்து இருக்கிறார் .


கடைசி மூன்று மாதங்களில் இரண்டு மொழிகள் அந்தமான் தீவுகளில் அழிந்திருக்கின்றன என்பது மிகவும் வேதனை தரக்கூடிய ஒரு செய்தியாக உள்ளது


உலகம் முழுவதும் இந்த நிலைமைதான். பரவி வரும் பெரிய மொழிகள் பலரது தாய்
மொழியை மெல்ல மெல்ல அழித்து வருவதற்கு பல உதாரணங்கள் கூறலாம். மும்பையில் குடியேறும் தமிழன் மராத்தியில் பேச கற்றுக் கொள்கிறான். டெல்லிக்கு பிழைக்கச் செல்லும் தமிழனுக்கு இந்தி தேவையாகிறது. அவனே அமெரிக்காவில் செட்டிலானால் ஆங்கிலம்தான் எல்லாமே. இவர்களின் அடுத்த தலைமுறை தமிழில் எழுதுவதையும் பேசுவதையும் மறக்கின்றன.

சொந்த மண்ணிலேயே வாழ்ந்தாலும் தாய்
மொழியில் பேசி, எழுதி, படிக்கும் பழக்கம்
எத்தனை பேருக்கு இருக்கிறது என்று கணக்கெடுத்தால் அதிர்ச்சிதான் மிஞ்சும். மொழியோடு ஒரு இனத்தின் கலை கலாசாரம் பண்பாடு பாரம்பரியம் வரலாறு எல்லாமே மறைவது வேதனையான எதார்த்தம்.


எங்கோ தானே தமிழர்கள் இறக்கிறார்கள் நமக்கு என்ன என்று இருந்தது போல் இந்த விசயத்திலும் நமது அரசு இருக்குமெயானால் . விரைவில் தமிழ் மொழியும் இன்னும் சில காலங்களில் இதுபோன்ற நிலையை எட்டிப் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . நமது நாட்டில் மொழி சம்மந்தப்பட்ட துறைகளில் பணியாற்றுபபவர்கள் இதுபோன்ற நிகழ்வுகளை சற்று கூர்ந்து கவனித்து பணியாற்றினால் நலமே !. இன்னும் மொழி சம்பந்தப்பட்ட விழிப்புணர்வுகளை மக்களிடையே அதிக்கப்படுத்தும் விதமாக பல குழுக்களை அமைத்து நமது அரசு நேரடியாக கண்கானித்து வந்தால் தமிழ் மொழி இன்னும் செழிப்புடன் திகழ்வதற்கு வாய்ப்பாக அமையும் .


வந்தபின் யோசிப்பதை விட வருமுன் காத்திருப்போம் !
நாம் தாய்மொழிக்கு மேலும் வாழு சேர்திருப்போம் !.



இந்த பதிவை வாசித்துக்கொண்டு இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் . நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னூட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னூட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .



இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........


சிசேரியன் பிரசவத்தால் சீரழியும் பெண்கள் சில அதிர்ச்சித் தகவல்கள் !!!

நீண்ட நாட்களாக எழுத நினைத்து, சோம்பேறித்தனத்தினால் இதுவரை எழுதாமல் இருக்கும் இருந்த பதிவுகளில் இதுவும் ஒன்று.
 
இந்த உலகத்தில் மிகவும் புனிதமான ஒரு இடம் உள்ளது என்றால் அது தாயின் கருவரை என்றுதான் நான் சொல்வேன் . ஆனால் அந்த புனிதத் தளத்திலும் இன்றய நிலையில் இயற்கைக்கு மாறாக பல கலவரங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன . இந்த உலகத்தை கடவுள் படைத்தாரா என்பது எனக்கு தெரியாது ஆனால் என்னை என் தாய்தான் படைத்தாள் என்பதை நான் நான்கு அறிவேன் . நம்புகிறேன் கடவுள் இருக்கிறது ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொரு அன்னையின் உருவதிலும் , பிறருக்கு உதவும் மனம் கொண்ட நல்ல மனிதர்கள் உருவதிலும் , சரி இனி நம்ம விசயத்திற்கு வருவோம் .
 
விஞ்ஞானம் இவ்வளவு வளர்ந்த பின்னும் நமக்கு கர்ப்ப காலம் பற்றிய முழுமையான அறிவு இல்ல .
இயற்கையான முறையில் கரு உருவாகி ஆரோக்கியமாக வளர்ந்து பிரசவ நேரத்தில் ஏற்படும் ஒரு சில பிரச்சினைகளினால் சிசேரியன் செய்யப்பட்டு குழந்தை பிரசவிக்கும் நிலை தற்போது அதிகரித்துள்ளது.
இதற்கு தா‌யி‌ன் சில பல உடல் அமைப்புகள்தான் காரணமாகின்றன.
 
ஒரு கர்ப்பிணியை, எல்லா பரிசோதனைகளும் செய்து அவருக்கு சுகப் பிரசவம் ஆகும் என்று மருத்துவர்கள் தீர்மானித்து பிரசவ அறைக்கு கொண்டு சென்று கடைசி நேரத்தில் கூட சிசேரியனுக்கு பரிந்துரை செய்யும் நிலை உள்ளது.
 
(இவை அனை‌த்து‌ம் இய‌ற்கையாக ‌சிசே‌ரிய‌ன் செ‌ய்யு‌ம் ‌நிலையை‌ப் ப‌ற்‌றிய ‌விஷய‌ங்க‌ள் ம‌ட்டுமே. பண‌ம் ப‌றி‌ப்பத‌ற்காக த‌னியா‌ர் மரு‌த்துவமனைக‌ளி‌ல் செ‌ய்ய‌ப்படு‌ம்‌ ‌சிசே‌ரிய‌ன்க‌ள் அ‌ல்ல. தனியார் மருத்துவமனைகளில் சுகப்பிரசவம் என்பது ஆச்சரியமான நிகழ்ச்சிதான்.)
 
புகழ் பெற்ற ரோமாபுரி தளபதி ஜூலியஸ் சீஸர் , இவர்தான் உலகத்திலே முதல் முதலில் வயிற்றை கிழித்து எடுக்கப் பட்டக் முதல் குழந்தை !
எனவே , அவரது பெயரையே இம்முறைக்கு வைத்துவிட்டார்களாம் ! ஒரு விஷயம் தெரியுமா ? சிசேரியனில் பிறக்கும் குழந்தை நார்மல் பிரசவத்தில் பிறக்கும் குழந்தையைக் காட்டிலும் , புத்திசாலியாக இருக்கிறதாம் ! அதேநேரம் , நார்மல் முறையில் பிறக்கும் குழந்தை தனது தாய் - தந்தையிடம் காட்டும் அன்பு பரிவு பாசத்தைவிட சிசேரியனில் பிறக்கும் குழந்தை குறைவாகவே தனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறது என்று சொல்கிறது ஆய்வுகள்.
 
உலகம் முழுதும், குறிப்பாக வளரும் நாடுகளில், சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்து வருகின்றன. உலக சுகாதார நிறுவனம் எந்த ஒரு நாட்டிலும், எக்காரணத்தைக் கொண்டும், சிசேரியன் பிரசவங்கள் 15 விழுக்காட்டிற்குமேல் இருக்கக்கூடாது என்று சொல்கிறது. ஆயினும் இந்தியா, சீனா ,பிரேசில் போன்ற நாடுகளில் இது உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடும் அளவைவிட ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
இதற்கான முதன்மையான காரணியாக பலரும்,
படித்தவர்கள் முதல் படிக்காத பாமரன் வரை, கருதுவது மருத்துவர்களின் பணம் கொள்ளையடிக்கும் ஆசைதான் என்பது. இது பெரிதும் உண்மைதான் என்றாலும் மேலும் பல காரணங்களும் , குற்றச்சாட்டுகளும் நம் மீதுதான் உள்ளது என்று சொல்லவேண்டும் ..
 
பொதுவாக சிசேரியன் பிரசவங்கள் மகப்பேறு காலத்தில் தாய், சிசு ஆகிய இருவரின் மரணத்தைத் தவிர்ப்பதற்காகவே (Perinatal death) மேற்கொள்ளப்படவேண்டும். ஆனால் மிக அதிக சிசேரியன் பிரசவங்கள் நடைபெறும் நாடுகளில் இன்னமும் மகப்பேறு காலத் தாய், சிசு மரணங்கள் அதிகமாகவேயுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்துள்ள அளவிற்கு மகப்பேறு கால தாய், சிசு மரணங்கள் குறையவில்லை என்பதுதான் உண்மை. அப்படியானால் சிசேரியன் பிரசவங்கள் தேவையற்றமுறையில் செய்யப்படுகிறதா என்ற இயல்பான அய்யத்தை இப்புள்ளி விபரம் எழுப்புகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டில் சென்னை மருத்துவக் கல்லூரியின் உலக பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் சென்னையின் தனியார் மருத்துவ மனைகளில், அரசு மருத்துவமனைகளைவிட நான்கு மடங்கு சிசேரியன் பிரசவங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவந்தது. இது மருத்துவர்களின் பணம் பண்ணும் ஆசை என்ற வாதத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக உள்ளது. அதேபோல் உலக அளவில் நடத்திய வேறு ஒரு ஆய்வில் சென்னை சென்னை உள்ள நடுத்தர, உயர் நடுத்தரக் குடும்பங்களில் சிசேரியன் பிரசவங்கள் அதிகமாக நடைபெறுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின
 
இதற்கு மருத்துவர்களை குறை சொல்வதில் பயன் இல்லை. பிரசவ வலி வரும்போதுதான், வலியின் தன்மையிலோ, குழந்தையின் தலை திரும்புவதிலோ, கருப்பை வாய் திருப்பதிலோ, குழந்தையின் நாடித்துடிப்பிலோ மாற்றங்கள் ஏற்பட்டு, குழந்தை, கர்ப்பப்பையின் பாதை வழியாக பயணப்படுவது தடைபடும் என்று மருத்துவர்கள் உணர்வார்கள்.
 
இவை அனைத்தும், அந்த கணம், பிரசவ வலி கண்டபின்புதான் கவனிக்க முடியுமேத் தவிர முன் கூட்டியே கணிக்கக் கூட முடியாது.
எனவேதான் பல சமயங்களில் பிரசவ வலி கண்ட பின்பு சுகப் பிரசவத்திற்கு கொண்டு செல்லப்படும் பெண்களுக்கு சிசேரியன் செய்ய நேரிடுகிறது.
 
அமெரிக்க அரசின் யுத்தவெறி எல்லையில் வந்து நின்று ரத்தப் பற்களால் சிரித்தபோது ஈராக் கர்ப்பிணி பெண்கள் அவசரமாக மருத்துவமனைகளுக்கு விரைந்து சிசேரியன் செய்து குறைமாதத்திலேயே குழந்தை பெற்றுக் கொண்டார்கள். யுத்தம் தொடங்கிவிட்டால் அப்புறம் மருத்துவ மின்சார வசதிகள் இருக்காது. 2000ம் ஆண்டு முடிந்து புதிய மில்லனியம் பிறந்தபோது தனது குழந்தையும் அந்த நேரத்தில் பிறக்கவேண்டும் என்று உலகம் முழுக்க சிசேரியன் செய்துகொண்டவர்கள் ஏராளம். ஆனால் நாமோ யுத்தமின்றி மில்லனியம் இன்றி வெளிநாடுகளின் சிசேரியன் விகிதத்தை வேகமாக எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறோம் .

சில ஆராய்ச்சிகள் இன்றைய நடுத்தரவர்க்கத் தாய்மார்கள் தாங்களாகவே முன்வந்து சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என்ற   உண்மையையும்  வெளிக்கொணர்ந்திருக்கின்றன.

இதற்கு முதன்மையான காரணம் பிரசவ வலியின் வேதனையை அவர்களால் தாங்கமுடியாததுதான் என்றாலும், சில தாய்மார்கள் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தனது அந்தஸ்த்திற்கான ஒரு குறியீடாகக் கொள்வதாகச் சில ஆய்வுகள் சற்று திடுக்கிட வைக்கின்றன. (அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுக் கொள்வதைப் பெருமையாக சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்).தொண்டு என்று இருந்த மருத்தவம் தொழில் என்று மாறியதால் வந்த பணத்தாசை ஒருபக்கம் .
 
இன்னொரு முக்கியமான விசயம் ஜோசியம் என்ற மூடநம்பிக்கையினால் விளைவது. சில குடும்பங்கள் தங்கள் ஜோசியர்களிடம் ஆலோசனை கேட்டு சிசேரியன் மூலம் இன்ன நேரத்தில் குழந்தை பிறந்தால் நல்லது என நினைத்து மகப்பேறு மருத்துவர்களிடம் சிசேரியன் பிரசவம்தான் செய்யவேண்டும் என்று வலியுறுத்துவதும் நடைபெறுவதுமுண்டு.
இதுபோன்று இன்னும் எத்தனையோ படித்த குடும்பத்தில் உள்ளவர்கள் இன்னும் மூடநம்பிக்கையில் நாகரிகம் என்ற பெயரில் தெரிந்தே இதுபோன்ற ஆபத்துக்களை தங்களுக்கு தாங்களே ஏற்படுத்திக் கொள்கிறார்கள் . நண்பர்களே ஒருவேளை உங்களிலோ அல்லது உங்களுக்கு தெரிந்த யாரேனும் இதுபோன்ற எண்ணங்களில் இருந்தாலோ அல்லது கேட்க நேர்ந்தாலோ உடனே இன்றே அவற்றை அடியுடன் நிறுத்திவிடுங்கள் . அறிவியல் வளர வளர அன்றாட வாழ்க்கைமுறை மாறுது . இன்றைய அறிவியல் வளர்ச்சி நமது வாழும் நாட்களை அதிகரிக்கப் போவதாக எண்ணி அதில் சிக்கி சீரழிந்து விட வேண்டாம் . அறிவியல் வளர்ச்சிகளை நம்மால் இயலாத செயல்களை செய்வதற்கு பயன்படுத்துங்கள் . நம்மால் இயன்ற செயல்களை அழிக்கும் வகையில் அவை அமையவேண்டாம் . அப்படி ஒருவேளை அமைந்தால் அப்பொழுது இந்த உலகத்தில் மனிதர்களாகிய நாம் முழுவதும் அழிந்து நாம் உருவாக்கிய அறிவியல் வளர்ச்சிகள் மட்டுமே மீதம் இருக்கக்கூடும் இந்த உலகத்தில். சற்று சிந்தித்து செயல்படுங்கள் . இனியாவது நாம் வாழப்போகும் இந்த சிறிது காலத்தை இயற்கையுடன் இணைந்து இனிமையாக வாழுங்கள் . இயந்திரங்களுடன் சேர்ந்து இழந்துவிட வேண்டாம் .
 
இந்த பதிவை வாசித்துக்கொண்டு இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் . நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னூட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னூட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .

இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மனம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........
 

நடிகை ரம்பா டும் டும் டும் அதுதாங்க திருமணம்

நண்பர்களே இதற்கான பதிவை வாசிக்க இங்கு சொடக்கவும் . >>>>


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மனம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........





நடிகை ராம்பா திருமணம் விரவில் நிச்சயதார்த்த புகைப்படங்கள் உள்ளே !!!

நண்பர்களே இதற்கான பதிவை வாசிக்க இங்கு சொடக்கவும் . >>>>


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மனம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

கல்வி கட்டணம் செலுத்த கற்பு ஏலம் !!!

கலி காலம் என்பது மிகச் சரியாகத்தான் இருக்கிறது என்பார்கள் இதைப் படிப்போர். மேட்டர் நமக்கு ரொம்ப ஹாட் ஆக தெரிந்தாலும், மேற்கத்திய நாடுகளுக்கு இது சர்வ சாதாரணமான சமாச்சாராம்தான்.கடைகளை ஏலம் விடுவார்கள், வீட்டை ஏலம் விடுவார்கள், ஏன் காந்தி போட்டிருந்த செருப்பைக் கூட சமீபத்தில் ஏலம் விட்டனர். ஆனால் கற்பை ஏலம் விடுவார்களா.. விட்டிருக்கிறார்
கல்லூரி கட்டணம் செலுத்த பணம் இல்லாத ஆஸ்திரேலியாயைச் சேர்ந்த 19 வயது இளம் பெண், தனது கற்பை ஏலம் விட முன்வந்துள்ளார்.

இதுகுறித்து ஐநீடு டாட் கோ டாட் என்இசட் என்ற இணையதளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கல்லூரி கட்டணத்தை செலுத்த பணம் இல்லாததால் என் கன்னித் தன்மையை விற்க முடிவு செய்துள்ளேன். ஏலத்தில் அதிகபட்ச தொகை வழங்க முன்வருபவருடன் பாதுகாப்புடன் செக்ஸ் வைத்துக் கொள்ள தயாராக இருக்கிறேன். இதுவரை யாருடனும் செக்ஸ் வைத்துக் கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளதாக சிட்னி மார்னிங் ஹெரால்டு இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நான் என்னத்தச் சொல்ல... ?? நீங்களே சொல்லுங்க  பின்னூட்டத்தில .இதைப் பற்றியக் கருத்துக்களை.இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மனம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........




அதிசயம் சில நிமிடம் பேசினால் பல கோடி பணம் !!!!

‘பேசுவது நாக்கின் வேலை; கேட்பது காதின் வேலை. பேசுவது வெளிப்படுத்துவது; கேட்பது உள்வாங்குவது.
வியாபார மொழியில் சொல்வ தென்றால் பேசுவது விற்று முதல்; கேட்பது கொள்முதல்.
விற்றால்தான் லாபம் கிடைக்கும்; வாங்கினால்தான் விற்பதற்கு சரக்கு இருக்கும்.
விற்பது நல்லதா? வாங்குவது நல்லதா? என்று கேட்டால், விற்க வேண்டிய இடத்தில் விற்பதும், வாங்க வேண்டிய இடத்தில் வாங்குவதும் நம் பொறுப்பு. இப்படி எப்பொழுதோ எங்கோ படித்த ஞாபகம் .
பேச்சாற்றல் நம்மிடம் உள்ள அற்புதச் சக்தி. இதை எத்தனை பேர் முறையாகக் கையாளுகிறார்கள் என்பது இறைவனுக்கே வெளிச்சம். எல்லோரும் நன்கு பேசக் கற்றிருக்கிறார்கள். ஆனால் பேச்சைப் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறார்கள்? உணர்ச்சி மற்றும் தகவல்களை வெளிப்படுத்துவதற்காக இறைவன் அளித்த பேச்சாற்றலைப் பலரும் தவறாகவே பயன்படுத்துகின்றனர். மிகச் சிலரே பயனுள்ள சொற்களை அளந்து பேசுகிறார்கள்.

எதைப் பேச வேண்டும். எப்படிப் பேச வேண்டும், யாரிடம் யாருக்காகப் பேசுகிறோம்? எவ்வளவு பேச வேண்டும். எங்கு எப்போது பேச வேண்டும் என்பன போன்ற நெறிமுறைகளை உணர்ந்து பேசுபவர்களைக் காண்பது அரிதாகிவிட்டது.

எப்படிப் பேச வேண்டும்? என்பது குறித்து நம் பெரியோர்கள் நிறைய பேசியிருக்கிறார்கள். வாக்கை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தவே இனியவை கூறல், வாய்மை, புறங்கூறாமை பயனில சொல்லாமை சொல்வன்மை என்று பல அதிகாரங்களை இயற்றியிருக்கிறார் வள்ளுவர்.

பயனற்ற சொற்களைப் பேசுவதால் நேரமும் ஆற்றலும் விணாகிறது. நம்மில் பலர் ஒன்று தற்பெருமை பேசுகிறார்கள். இல்லையெனில், மூன்றாம் நபரைப் பற்றி புறங்கூறிப் பேசுகிறார்கள். ஓயாது பேசுபவனின் மனம் சமுத்திரத்தின் மேற்பரப்பு போன்று அலைபாயும் அவனது சொற்களில் பேரிரைச்சலே எஞ்சியிருக்கும். சிறிது காலத்துக்குப் பிறகு அவன் சொற்களுக்கு அடிமையாகி விடுகிறான். அவனுக்கும் அமைதிக்கும் வெகுதூரம். எதிரில் ஆள் இல்லாத பட்சத்தில் பரபரவென்று செல்போனை உயிர்ப்பித்து வம்பு பேசத் துவங்கிவிடுவான்.

இப்படிப்பட்டவர்கள் கேட்டு, கவனித்து உள்வாங்கும் ஆற்றலை இழந்து விடுகிறார்கள். ஆன்மிகச் சொற்பொழிவுக்குச் சென்றாலும் அங்கே பேசப்படுவதை ஒரு மணி நேரம் கூட இவர்களால் செவிமடுக்க முடியாது. கேட்கத் துவங்கிய 2வது நிமிடமே இவர்களின் உள்ளம் பேசுபவரை எடைபோடும். இதனால் கேட்பதும் சிந்திப்பதும் அறுபடுகிறது. ஆனால் சொற்களைக் கையாளத் தெரிந்த மனிதன் கெட்டிக்காரன். அறிவாளி. அவன் சொற்களைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கிறான். அவன் உள்ளம் அமைதியில் நிலைத்திருக்கும். அவனால் பிறர் சொல்வதை பொறுமையாக செவிமடுக்க முடியும்.

எமது சாஸ்திரங்கள் உண்மையே பேச வேண்டும் என்பதுடன், அதனை இதமாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. உண்மை பேசுகிறேன் என அடுத்தவர் மனம் புண்படும்படி பேசுதலும் தவறு. பிறரை துன்புறுத்தாத வாய்மையும் இனிமையும் நலனும் உடைய சொற்களைப் பேசுதல் வாக்கினால் செய்யும் தவம் என்கிறார் கிருஷ்ணர்.

எனது வாக்கு தேன் போன்று இருக்கட்டும் என்றொரு பிரார்த்தனை வேதத்தில் உண்டு. யாகாவாராயினும் நா காக்க என்று நாவடக்கத்தை வலியுறுத்துகிறார் வள்ளுவர். உண்மை பேசு இனிமையாகப் பேசு உண்மையாயினும் நலம் தராதவற்றைப் பேசாதே என்கிறார் மனு நீதிச் சோழன்.
ஆம் பயனுள்ள சொற்களையே இடம் பொருள் ஏவல் அறிந்து தகுந்த காலத்தில் பேச வேண்டும்.

ஆனால் சாப்பிடாமல் கூட இரண்டு நாள் இருந்து விடலாம். பேசாமல் எப்படி இருப்பது என்று கேட்பவர்களும் உண்டு. இவர்கள் தங்கள் இயல்பை மாற்றிக் கொள்ள வேண்டும். தனக்கும் பிறருக்கும் பயன்படாத கடுமையான புறங்கூறும் பொய்யான சொற்களை அறவே தவிர்க்க வேண்டும்.

நமது எண்ணம், சொல், செயல் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் இருப்பதற்கு ஆர்ஜபம் என்று பெயர், இதனை எவர் ஒருவர் 12 வருடங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்களோ அவர்கள் சொல்வதெல்லாம் சத்தியமாகும் என்கிறது சாஸ்திரம். எனவேதான் மகான்களது வாக்கு பொய்ப்பதில்லை.
உள்ளத்தில் உண்மையுண்டானால் வாக்கினில் ஒளியுண்டாகும் என்றார் மகாகவி பாரதியார்.

பலருக்கு இங்கிதம் தெரிவதில்லை. என் சுபாவமே அப்படித்தான். மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டேன். பட்டென்று பேசிவிடுவேன் என்று சொல்பவர்களைப் பா ர்க்கலாம். ஆனால் இவர்களிடம் வேறு எவரேனும் இங்கிதமின்றிப் பேசிவிட்டால் அதை ஏற்க முடியாமல் தவிப்பதையும் காண முடியும்.

ஆறுதல் சொல்ல வேண்டிய நேரத்தில் உணர்ச்சிகளைக் கொட்டி சூழலை மேலும் மோசமாக்கும் சொற்களை எந்தவித விழிப்பு உணர்வும் இன்றி கொட்டிவிடுவார்கள் பலர். இது தவறு. சொல்ல வேண்டியதை சுருக்கமாகச் சொல்லப் பழக வேண்டும். அனுமனை சொல்லின் செல்வர் என்கிறோம். அவர் இங்கிதம் அறிந்தவராக, சரியான நேரத்தில் சீதாவிடம் சென்று சரியான சொற்களைக் கூறி தன்னை அறிமுகம் செய்து பேசியதையும், திரும்ப வந்து ஸ்ரீராமனிடம் செய்தி கூறிய பாங்கையும் ரசித்தால் மட்டும் போதாது. எப்படிப் பேச வேண்டும் என்பதை அனுமான் மூலம் கற்றுக்கொள்ளவும் வேண்டும்.

சொற்களால் வாழ வைக்கவும் முடியும். சாகடிக்கவும் முடியும். நாம் பேசிய சொற்கள் நமக்கு எஜமானர்கள். பேசாத சொற்களுக்கு நாம் எஜமானன் என்பார்கள். ஆயுதங்களைவிட மிக வேகமாகச் சென்று ஒருவரின் உள்ளத்தைக் குத்திக் கிழிக்க வல்லவை சொற்கள். ஆத்திரத்திலும் அவசரத்திலும் அள்ளி இறைக்கும் சொற்கள் கேட்பவரின் உயிரைக் குடிக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே சொற்களுக்குள் மாட்டிக் கொள்ளாமல் சொற்களை ஆளும் கலையை அறிய வேண்டும். வாரம் ஒரு முறையோ அல்லது ஒரு நாளில் சில மணி நேரமோ மெளனம் பழக வேண்டும். சொற்களின் மதிப்பை அறிய வேண்டும்.

“சொல்லும் பொருளும் அற்றுச் சும்மா
இருப்பதற்கே
அல்லும் பகலும் எனக்கு ஆசை
பராபரமே''

என்கிறார் தாயுமானவர். பேச்சைக் குறைப்பதே யோகத்தின் முதல் படி என்கிறார் பதஞ்சலி மகரிஷி. பேச்சைக் குறைத்தால்தான் மனதை உள்முகமாகத் திருப்ப முடியும். சொற்களை அலட்சியமாகப் பயன்படுத்தும் மனிதன் வாழ்க்கையின் இலட்சியத்தை மறந்து விடுகிறான். சுற்றியுள்ள மனிதர்களை இயற்கையை இறைவனை தன்னை உற்று நோக்கத் தவறி விடுகிறான். வாழ்க்கையில் சாதிக்க நினைப்பவன் பேச்சைக் குறைப்பான். கவனத்தை செயலில் காட்டுவான்.

எதிரில் உள்ளவரை பேசவிடாமல் குறுக்கிடுவது அவரின் உடல் மொழியையும் முகாபாவத்தையும் கண்டு கொள்ளலாமல் பேசிக் கொண்டே செல்வது ஆகியன அநாகரிகத்தின் உச்சம் என்பதை அறிய வேண்டும்.

பெரியோர்கள் பிறரது குணங்களையே பேசுவர். குற்றங்களைப் பெரிதாகச் சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள். வீண் பேச்சுகளால் நமது நேரம் மட்டுமல்ல அருகில் இருப்பவர் நேரமும் வீணாகும். குறைவாகப் பேசி நிறையக் கேட்க வேண்டும் என்பதற்காகவே ஒரு வாயையும் இரண்டு காதுகளையும் கொடுத்திருக்கிறார் இறைவன்.

'' திறனறிந்து சொல்லுக சொல்லை
அறனும்
பொருளும் அதினினூங்கு இல் ''

சொல்லின் திறத்தை அறிந்து சொல்லும் சொல் வன்மையைவிட அறமும் பொருளும் ஒருவருக்கு வேறு இல்லை என்கிறார் திருவள்ளுவர்.

ஒருவர் எத்தனையோ மணி நேரம் பேசினாலும் கூறிவிட முடியாத விஷயத்தை வேறு ஒருவர் சில சொற்களில் கூறிவிடுவார்.

பெரியோரிடம் நன்கு கற்றறிந்து, கற்றதை உள்வாங்கி, ஆழ் மனதில் இருத்தி சிந்தித்துத் தெளிந்தவர்களின் சொற்கள் கேட்பவர் உள்ளத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் முத்து உதிர்வது போல ஓரிரு வார்த்தைகளை அவர்கள் உதிர்த்தாலும், அதனால் மிகுந்த நன்மை விளையும். எனவேதான் மகான்கள் ஓரிரு வார்த்தைகள் பேசினாலும் அதன் மூலம் அபரிமிதமான மன அமைதியை நம்மால் உணர முடிகிறது.

அன்பு கலந்த வஞ்சனை அற்ற மெய்ப்பொருளை அறிந்தவர்களது சொற்கள் இனிமையானவை. இதையே செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் என்று குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். தூய்மையும் அமைதியும் நிறைந்த உள்ளத்திலிருந்து ஆற்றல் மிகுந்த சொற்கள் பிறக்கின்றன என்றார் விவேகானந்தர்.

மன அமைதியைக் குலைப்பதும் தற்காலிக இன்பம் தருவதும் பண்பற்ற, பயனற்றதுமான சொற்களைப் பேசுபவர்கள் எங்கும் எப்போதும் கிடைப்பார்கள். ஆனால் அந்த தருணத்தில் துன்பத்தைத் தருவதாக இருந்தாலும் நிலையான இன்பம் தரும் சொற்களை அன்பு கலந்த கண்டிப்புடன் சொல்பவர்கள் கிடைப்பது அரிது. ஆன்மிக வாழ்வின் குறிக்கோளை அடைய விரும்புபவர்கள். ஆரம்பத்தில் துன்பம் தந்தாலும் காலப்போக்கில் இன்பம் தரும் பயனுள்ள சொற்களைப் பேசுபவருடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர்கள் ஒரு சாரார். ஆனால், அவர்களது பேச்சு சிந்தனையைத் தூண்டுவதாக அமையுமா என்று பார்க்க வேண்டும். சிலர், சிந்தனையைத் தூண்டுமாறு பேசுவார்கள். ஆனால் சிரிக்க வைக்க மாட்டார்கள். இன்னும் சிலர், உயர்ந்த சிந்தனையை எந்தவித இறுக்கமும் இன்றி நகைச்சுவையுடன் வழங்குவார்கள். இதைப் பகுத்தறிந்து ஒவ்வொருவரும் தன்னைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தன்னிடம் பேசுபவர் எந்த நோக்கத்துடன் பேசுகிறார் என்பதை அறிந்து அவரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

இனிக்க இனிக்கப் பேசினாலும், பயனற்ற, பண்பற்ற கருத்துகளை ஏற்கக்கூடாது. கடுமையாகச் சொன்னாலும் பண்பை வளர்க்கும் பயனுள்ள கருத்துகளை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும்.

சரி என்னடா இவன் தலைப்பில் ஒன்றை வைத்து ஏதேதோ சொல்கிறானே என்று எண்ணுகிறீர்களா ?. சரி இனி விசயத்திற்கு வருவோம். நாம் எழுத்தின் மூலமாக பணம் சம்பாதித்தவர்களை பார்த்து இருக்கிறோம் . சிலரின் எழுத்துகளில் அடிமையாகி அது என்ன விலை என்றாலும் வாங்கி படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் எழுதும் தலை சிறந்த எழுத்தாளர்களும் இருக்கின்றார்கள் .

ஆனால் பேச்சால் இதுவரை நமக்கு தெரிந்த அளவில் பிறரை கவரும் வகையில் பேசும் திறன் வாய்ந்த மனிதர்கள் இருக்கிறார்கள் அதில் ஒரு சிலர் மேடை பேச்சாளர்கள் . நாம் அனைவரும் சாதாரணமாக பேசுவாதுபோல் பலரால் மேடைகளில் சென்று பேசுவது என்பது இயலாத ஒன்று . ஆனால் சிலர் எப்பொழுதும் எதுவுமே பேசமாட்டார்கள், பார்ப்பதற்கு இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல் மிகவும் அமைதியாக சாதாரணமாக இருப்பார்கள் ?ஆனால் மேடைகளில் அவர்கள் பேச ஆரம்பித்தால் மடை திறந்தாற்போல் இருக்கும் .

சிலர் தேர்தல் நேரத்தில் பேசுவதற்கு என்றே தாயார் நிலையில் வைத்திருப்பார்கள் . அதுதான் நமக்கெத் தெரியுமே அவர்கள் எப்படி பேசுவார்கள் என்று . சில விழாக்களில் சிறப்பு பேச்சாளர் என்று சிலர் இருப்பார்கள் இப்படி பேச்சிலும் புகழ்பெற்ற எத்தனையோ மனிதர்களை நாம் பார்த்து இருக்கிறோம் . ஆனால் இவர்களில் யாரும் பேச்சால் சம்பாதித்து இருக்கிறார்களா என்று பார்த்தால் ஆனவருக்கும் தெரிந்த ஒரே பதில் யாரும் இல்லை என்பதுதான் வரும் . ஆனால் பேச்சால் உலகிலயெ அதிகம் பணம் ஒருத்தர் சம்பாதித்துக்கொண்டு இருக்கிறார் என்றால் நீங்கள் நம்புவீர்களா ? . நம்பித்தான் ஆகவேண்டும் .

பிரிட்டனின் முன்னாள் பிரதமரான டோனி பிளேர் ஒரு நிமிடச் சொற்பொழிவுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டணமாகப் பெறுகிறார்.

லான்ஸ்டவுண் பார்ட்னர்ஸ் என்ற லண்டன் ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவன ஊழியர்கள் மத்தியில் பேசுவதற்காக இந்தக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாம்.

இந்தக் கட்டணம் உண்மைதானா என்ற கேள்விக்கு டோனியின் பேச்சாளர் பதில் கூறவில்லை. ஆனால் உலக அளவில் சிறந்த சொற்பொழிவாளராக டோனி திகழ்கிறார் என பெரும் சொற்பொழிவே நிகழ்த்திவிட்டார். அவரது கட்டுரைகளுக்காக அவது புத்தகத்தை வெளியிடும் நிறுவனம் 46 லட்சம் பவுண்டுகள் தந்துள்ளது என்றார்.

அமெரிக்க வங்கி ஜேபி மார்கன் மற்றும் ஜூரிச் பைனான்சியல் சர்வீசஸ் எனும் இரண்டு நிறுவனங்களுக்கு ஆலோசகராக டோனி இருக்கிறார். ஜேபி மார்கன் ஆண்டுக்கு 20 லட்சம் பவுண்டுகள் வழங்குகிறது. ஜூரிச் பைனான்சியல் சர்வீசஸ் 5 லட்சம் பவுண்டு வழங்குகிறது. இதைத் தவிர அவருக்கு ஆண்டுக்கு 63,000 பவுண்டுகள் ஓய்வூதியமும் கிடைக்கிறது.

ஸ்பெயின் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் நிகழ்த்திய 90 நிமிட சொற்பொழிவுக்காக 1,80,000 பவுண்டுகள் அவருக்கு கிடைத்துள்ளது என்று அவர் கூறினார்.

பிரதமர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு இதுவரை ஒரு கோடி பவுண்டுகள் டோனி பிளேர் சம்பாதித்திருக்கிறார் என கணக்கிட்டுள்ளனர்.

என்ன நண்பர்களே இப்பொழுதாவது நம்புகிறீர்களா நான் சொன்னது உண்மைதான் என்று . அதுதான் பேச்சு திறமைக்கு எவளவு மதிப்புனு தெரிந்துவிட்டது அல்லவா இனி உங்களில் யார் யாருக்கு ஒரு நிமிடம் பேசுவதற்கு எவளவு கட்டணம் வேண்டும் என்று அப்படியா ஒரு கோர்வையா பின்னூட்டத்தில எழுதுங்க .தேவைப்பட்டால் உங்களுக்கு அழைப்பிதழ் விரைவில் அனுப்பப்படும் .


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மனம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP