முதல் காதல் !!!!
>> Wednesday, July 15, 2009
அன்று எனது முதல் நாள் கல்லுரி என்பதால் வழக்கத்துக்கு மாறாக கோவிலுக்கு சென்று வேகமாக நான் கல்லுரிஐ அடைந்தேன் .
கனவுகள் மட்டுமே காணும் ஒரு சராசரி தமிழனான என் வாழ்கையில், மறக்க முடியாத நாள் இதுதான் தமிழ் என்னில் ஆதிக்கம் செய்ததையும் மீறி சற்று தயக்கத்துடன் என்னைபற்றி நான் அங்கிலத்தில் சொல்லி அமர்ந்தேன்.
ஓடையில் ஓடிய நீர் கல்லில் குதித்து எழுந்த சத்தம் போல ,ஒரு மெல்லிய சிரிப்பை கேட்டு சட்டடென்று பின் திரும்பினேன்.
ஒரு மின்னலை பார்த்த உணர்வு எனக்கு , எனினும் இம்முறை என் கண்களை துடைத்துக்கொன்று அந்த மின்னலை எதிர்கொள்ள ஆயத்தமானேன்.
அப்போது , ஒரு அழகிய தேவதை ........!
என்னை பார்த்தும் சற்று புருவத்தை உயர்த்தி பார்த்து திரும்பி கொண்டாள் பிரமித்து போன நான், நினைத்துக்கொன்டேன்
"இவள் என்ன ரோஜாதோட்டத்து கொள்ளைகாரியா ...?
இத்தனை அழகையும் இவளே எடுத்துக்கொண்டாள் மீண்டும் பார்க்க துடித்த என் மனதை சற்று கண்டித்து ,அன்று மாலை அவளை பார்காமலே வீடு திரும்பினேன் .
எதையோ இழந்த உணர்வு ,என் கையில் தவறுதலாக எடுத்து வந்த என் நண்பனின் புத்தகம் வேறு , மீண்டும் யோசித்தேன் ,
ஆம் ..!
அன்று என் இதயத்தை நான் தொலைத்து விட்டதாகவே உணர்ந்தேன் என்னுள் ஒழிந்த்திரிந்த லட்சிய கனவுகள் சற்று என் நினைவுக்குள் வந்து என்னை எச்சரிக்கை செய்து மறைந்தது.
நான் கண்டிப்புடன் என் இதயத்திடம் ஒரு பொய் சொன்னேன்"
நான் அவளை காதலிக்கவில்லை என்று"சற்று ஏளனமாகவே சிரித்துகொண்டது என் மனசாட்சி ????????????
0 comments:
Post a Comment