கடல் நீர் குடி நீராக மாறும் அதிசயம் !!!
>> Wednesday, January 20, 2010
நமது அன்றாட வாழ்வில் நாம் தினம்தோரும் பயன்படுத்தும் தண்ணீரையே நம்மால் சுத்தமாக பார்த்துக்கொள்வதற்கு பல போராட்டங்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறோம் . ஆனால் ஒரு இயற்கையான நிகழ்வு கடல்நீரையே சுத்தம் செய்கிறது என்றால் சற்று வியப்பாககத்தான் உள்ளது .நம் அனைவருக்கும் இதுநாள் வரை கடல் நீர் என்றாலே உப்பு நீர்தான் என்று மட்டும்தான் அறிந்து இருக்கிறோம் . ஆனால் அந்த கடலிலும் நாம் தினம்தோரும் அருந்துவதுபோல் நீர் உள்ளது என்றால் நம்புவீர்களா ? கடல் நீரில் பொதுவாக உப்பின் அளவு மாறுப்படலாம் ஆனால் மொத்த நீரும் இயற்கையாக நல்ல நீராக மாறுவது என்பது ஒரு அதிசய நிகல்வுதான் . இந்த அதிசய நிகழ்விற்கு முக்கிய காரணம் ஒரு நதி.
ஒரு நதியின் நீர் பாய்ந்தா கடல் நல்ல நீராக மாறுகிறது என்பது அனைவருக்கும் ஏற்படும் சந்தேகம்தான் எனலாம் . ஆனால் இந்த நிகழ்வு உண்மையான ஒன்றுதான் என்று சொல்கிறது பல ஆய்வுகள் . அந்த நதிதான் அமேசான் நதி 6000 கி. மீ நீளம் விரிந்து பல அதிசயங்களையும் பல மர்மங்களையும் கொண்டு உலகத்தில் மிகப்பெரும் நதியாக ஓடிக்கொண்டிருக்கும் . இந்த நதியில் மட்டும்தான் உலகத்தில் நல்ல நீரில் ( fresh water ) மூன்றில் இரண்டு பங்கு நீர் ஓடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . இந்த நதி அட்லாண்டிக் கடலுக்குள் கலந்த பின்பும் இதன் தன்மை மாறாமல் 280 கி. மீ தொலைவிற்கு மொத்த கடல் நீரையும் தூய்மையான நீராக மாற்றிக்கொண்டு இருக்கிறதாம் .
.இந்த நதி அட்லாண்டிக் கடலுக்குள் 280 கி.மீ தொலைவைக் கடந்தபிறகுதான் உப்பு நீரிடம் போராடி தோற்றுப்போவதாக ஆய்வு கூறுகிறது .அமேசான் அமேஸ் என்றாலே ஆச்சர்யம் என்று அர்த்தம் . இப்பொழுதுதான் தெரிகிறது இந்த நதிக்கு அப்படி ஒரு பெயர் வைத்தது பொருத்தமான ஒன்றுதான். நீங்க என்ன சொல்றீங்க .? நண்பர்களே நீங்கள் எதை சொல்வதாக இருந்தாலும் உங்கள் கருத்துகளை இங்கு சொல்லலாம் .
20 comments:
பல அரிய தகவல்களை உள்ளடக்கியிருக்கின்றது தங்களுடைய பதிவுகள். இறைவன் நமக்கு வழங்கிய பல அற்புத பரிசுகளில் அமேசான் நதியும் ஒன்று. அதைப் பற்றிய தகவல்களை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.
வழக்கமாக உங்களுடைய சினிமா விமர்சனத்திற்கு வரும் பின்னூட்டங்களில் கால்வாசியளவு கூட நேற்றைய பதிவிற்கு வரவில்லை என்பது மனதிற்கு வருத்தமாக இருக்கின்றது. சமூக அக்கறையுடன் எழுதுவதை ஊக்குவிப்பது ஒவ்வொருவருடைய கடமை என்பதையும் இங்கிருக்கும் அனைத்து வாசகர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
நல்ல இடுகை.
வாழ்த்துகள்.
அன்பின் சங்கர்
ஷேக்தாவூத்தின் வருத்தம் எனக்கும் உண்டு. முதலில் தேவையில்லாத அனைத்து Gadget களை எடுத்து விடுங்கள். தமிழ்மணம், தமிலிஷ் ஆகியவற்றில் இணையுங்கள்.
நிறைய பேரை சென்றடையும்.
வாழ்த்துகள்.
அமேசான் நதி ..... அமேசிங்...(amazing)... நல்ல தகவல்...
photo also amazing... இந்த பதிவை பதித்த சங்கருக்கு நன்றி.
தகவலுக்கு நன்றி.. தேடல் தொடரட்டும் சங்கர்
இதுபோன்ற நிறைய பயன் உள்ள தகவல்களை எதிர்பார்க்கின்றேன்
அன்பின் சங்கர்
அரிய தகவல்கள் - படங்கள்
அமேசான் நதி கடல் நீரைச் சுத்தம் செய்கிறதா - நன்று நன்று
நல்ல இடுகை - நல்வாழ்த்துகள் சங்கர்
படங்கள் மிக அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் சங்கர்
அமேசான் நதி பற்றி அறிய தகவல்களை எங்களுக்கு தந்தமைக்கு நன்றி.
இன்னும் நிறைய எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கிறோம்.
இது எனக்கு புதிய தகவல்..இதை போல் நிறைய தகவல்களை தாருங்கள் அடுத்தடுத்த பதிவுகளில்..
படங்களின் அழகோ அழகு.
நல்லதொரு தேடல்.நிறைந்த தகவல்.நன்றி சங்கர்.
அமேசிங் நீயூஸ்தான்.. கடல் நீர் குடிநீராகுமா என ஏங்உம் காலமிது. இது வரை அறிந்திராத பல தகவல்கள் வழங்கிவரும் உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றீகளூம்
//
வழக்கமாக உங்களுடைய சினிமா விமர்சனத்திற்கு வரும் பின்னூட்டங்களில் கால்வாசியளவு கூட நேற்றைய பதிவிற்கு வரவில்லை //
இது என்னுடைய நீண்ட நாள் ஆதங்கம். அனால் உண்மையான சேவை செய்பவர்கள் பலனை எதிர்பார்ப்பதில்லை... நீங்க எழுதுங்க தல,,, நாங்க இருக்கோம்.
GUD POST, thanks for sharing a rare news. photos also so nice to see.
நல்ல தகவல் சங்கர். (ஆமா உங்க ப்லோக்கோட அப்டேட் எனக்கு கிடைப்பதில்லை, என்ன
காரணம், ஏழு மாதத்திற்கு முன்னர் இட்ட உங்கள் இடுகை மட்டுமே தெரிகிறது )
இதுபோன்ற நிறைய பயன் உள்ள தகவல்களை எதிர்பார்க்கின்றேன்
அன்பு நண்பருக்கு,
ஒரு திருத்தம்.. கடல்நீர் குடிநீராக மாறவில்லை. அமேசான் நதி கடலில் உட்புகும் வேகத்தில் பெரும் அளவிலான நன்னீர் உடனே உவர்நீராக மாறாமல் அவ்வளவு தூரம் வரை பாய்ந்து விடுகிறது. இது ஒரு சாதாரண நிகழ்வுதானே..படங்கள் அருமை.- நடராஜன், சிங்கப்பூர் -
நல்லத் தகவல்!!படங்களும் அருமையாக இருக்கு.வாழ்த்துக்கள் சங்கர்!!
very intresting
நல்ல இடுகை.
வாழ்த்துகள்.
நண்பர்கள் ,
பி.ஏ.ஷேக் தாவூத் !
Butterfly Surya !
ponnakk (விஜய் ) !
முகமது பாருக் !
ஜோதிஜி !
cheena (சீனா) !
அண்ணாமலையான் !
அபுல் பசர் !
வெற்றி !
ஹேமா !
புலவன் புலிகேசி !
ஜோதிஜி !
சினிமா புலவன் !
ஜெஸிலா !
தமிழ். சரவணன் !
புலவன் புலிகேசி !
பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி !
மதார் !
சைவகொத்துப்பரோட்டா !
P.Thilak !
Mrs.Menagasathia !
Masiad !
பேனாமுனை !
அனைவரும் எனது தளத்திற்கு வருகை தந்து சிறப்பான பல கருத்துக்களை பதிவுசெய்து சிறப்பித்தாமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !
என்னை இன்னும் பட்டை தீட்டிய உங்களின் ஊக்குவிப்பிர்கும் ,சிறந்த கருத்துகளுக்கும் நன்றிகள் பல
நண்பர்களே !
இது போன்ற சிறந்த கருத்துக்களை மறக்காமல் எனது ஒவ்வொரு பதிவுகளுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன் .
நீங்கள் எழுதும் பின்னூட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .
எப்பொழுதும் இணைந்திருங்கள். இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளில் நனைந்து மகிழ்ச்சிகளையும் , மனத்தின் தோன்றும் சிந்தனைகளையும் மறைவின்றி பரிமாறிக்கொள்வோம் .
குறை இருந்தால் என்னிடம் !
நிறை இருந்தால் நண்பர்களிடம் !
என்றும் உங்கள் அன்பிற்கினிய ,
பனித்துளி சங்கர்
Post a Comment