திருப்பம் !!!!
>> Thursday, July 16, 2009
கண்கள் மோதியதால் காயம் கண்டது என் நெஞ்சம்
காதல் என உரைத்தது உலகம் நம்பவில்லை நான் சென்றேன் மருத்துவனிடம் சோதனைகள் நிகழ்ந்தபின்
சொன்னான் அவன்காயம் இல்லையடா !
மடையா !
காணவில்லை இதயம் என்று கலங்கினேன் நான் !
மெல்ல மீண்டேன் நினைவை சென்றேன் அவளிடம்
'கொடு என் இதயத்தை' என்றேன் !
மறுத்தாள் அவள் . பின் 'மறு நாள் வா' என்றாள்!சென்றேன் மறுநாள் !கொடுத்தாள் !
ஆனால் அது என்னுடையது அல்ல !
வினவினேன் அவளிடம் !
மெலிதாய் சிரித்தாள் !
பின் பதிலுரைத்தாள் !
'அது என்னுடையது 'என !
0 comments:
Post a Comment