>

Archives

1990 ஆம் ஆண்டில் தமிழ்சினிமா – ஒரு பார்வை !!!

>> Wednesday, September 9, 2009

1990 ஆம் ஆண்டில் பல இயக்குநர்கள் அறிமுகமானார்கள். அடுத்த 10 ஆண்டுகளில் பல வணிகரீதியான வெற்றிப் படங்களை அவர்கள் தொடர்ந்து கொடுத்தார்கள். அதில் சிலர் இன்னும் மார்க்கெட்டில் உள்ளார்கள்.

புலன் விசாரனை – ஆர் கே செல்வமணி

கேளடி கண்மணி – வசந்த்

பாலம் – கார்வண்ணன்

புதுவசந்தம் – விக்ரமன்

நீங்களும் ஹீரோதான் – வி சேகர்

வைகாசி பொறந்தாச்சு – ராதா மோகன்

புரியாத புதிர் – கே எஸ் ரவிகுமார்

பட்டணந்தான் போகலாமடி – கோலப்பன்

இணைந்த கைகள் – என் கே விஸ்வனாதன்

இதுதவிர இந்த ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

குழந்தை நட்சத்திரமாக பேபி ஷாமிலி அஞ்சலி படத்தின் மூலம் அறிமுகமானார். பின் அவர் நடித்து வெற்றி பெற்ற துர்கா படத்தின் மூலம் தமிழ், தெலுங்கின் முண்ணனி குழந்தை நட்சத்திரமாக மாறினார்.

அஞ்சலி படத்தில் மணிரத்னம் தன் ஆஸ்தான கேமராமேன் பி சி ஸ்ரீராமுக்கு பதிலாக மது அம்பாட்டை பயன்படுத்தினார்.

ராமநாராயணனின் ஆடிவெள்ளி படம் பெரிய வெற்றியைப் பெற்றது. பின் அது பல மொழிகளில் தயாரிக்கப்பட்டு சென்ற இடமெல்லாம் சிறப்பு பெற்றது. ஒரியா, போஜ்பூரி, பெங்காலி ஆகிய மொழிப் படங்களையும் இயக்கிய தமிழ் இயக்குனர் என்னும் பெயரை அவருக்கு பெற்றுத்தந்தது.

கிழக்கு வாசல் படத்தின் மூலம் கார்த்திக் தனது பிலிம் பேர் ஹாட்டிரிக்கை சாதித்தார். (88- அக்னி நட்சத்திரம், 89 – வருஷம் 16).

பா ம க நிறுவனர் ராமதாஸ் முதன் முறையாக பாலம் படத்தில் நடித்தார். (டி வி பேட்டியில் கருத்து சொல்பவராக.) பின் இந்தப் படத்தின் இயக்குநர் கார்வண்ணனின் அடுத்த படமான புதிய காற்றில் ஒரு சிறு வேடத்திலும் நடித்தார். பாலம் திரைப்படத்தில் இந்திய ஹாக்கி அணி தனது கடைசி ஒலிம்பிக் பதக்கத்தை பெற்ற போது காப்டனாக இருந்த வி பாஸ்கரன் வில்லனாக நடித்தார்.

எம் ஜி யார் முதல்வராகும் முன் நடித்து, பாதியில் நின்று போன அண்ணா நீ என் தெய்வம் படத்தின் காட்சிகளை எடுத்து, அதற்கேற்றார் போல் திரைக்கதை அமைத்து, பாக்யராஜ் இயக்கிய அவசர போலிஸ் 100 திரைப்படம் வெளியானது. பொன் வைக்கும் இடத்தில் பூ வைத்து எடுத்திருக்கிறோம் என்ற விளம்பரத்துடன் வெளியான இந்த படத்திற்க்கு, பூ அளவிலேயே மக்கள் ஆதரவு தந்தனர்.

இந்த ஆண்டு சரத்குமார் தயாரிப்பில், கலைவாணன் கண்ணதாசன் இயக்கத்தில் வெளியான மிஸ்டர் கார்த்திக் படத்தில் சரத் சிறுவேடத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த ஆண்டு வெளியான புலன் விசாரணை படம் தான் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

அன்பாலயா பிரபாகரன் தயாரிப்பில், ராதா பாரதி இயக்கத்தில் வெளியான வைகாசி பொறந்தாச்சு பெரும் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் அறிமுகமான பிரசாந்துக்கு 50,000 ரூபாய் சம்பளம் அளிக்கப்பட்டது. ஒரு புதுமுகத்துக்கு (ஆண்) அந்த அளவு சம்பளம் கொடுக்கப்பட்டது அதுவே முதல் முறை. இந்தப் பட பாடல்களின் வெற்றி மூலமாகவே தேவாவுக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடம் கிடைத்தது.

இரட்டை வேட காட்சிகள் எடுக்க வேண்டுமா? கூப்பிடு என் கே வியை என்பார்கள். அந்த அளவுக்கு இருவேட ட்ரிக் ஷாட்கள் எடுப்பதில் புகழ்பெற்ற என் கே விஸ்வனாதன் இயக்கிய முதல் படம் இணைந்த கைகள். ஆபாவாணன் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் தோல்வி அடைந்தாலும், அடுத்து என் கே வி இயக்கிய பெரிய வீட்டுப் பண்ணக்காரன் வெற்றியைப் பெற்றது.

அபூர்வ சகோதரர்கள் படத்தில் வசனகர்த்தா கிரேஸி மோகன் அதிகம் கவனிக்கப் படவில்லை. குள்ள அப்புவின் விஸ்வரூபம் அப்பட டெக்னீஷியன்கள் அனைவரையும் மறைத்துவிட்டது. ஆனால் இந்த ஆண்டு வெளியான மைக்கேல் மதன காம ராஜன் திரைப்படத்தில் அவர் வசனம் பெருமளவு கவனிக்கப் பட்டது. பின் வெளியான கமலின் நகைச்சுவைப் படங்களுக்கு முன்னோடியகவும் அமைந்தது.

ஜெயபாரதி இயக்கத்தில் டெல்லி கணேஷ் நடித்த உச்சி வெயில் இந்த ஆண்டு வெளிவந்து விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது.

கிராமிய கதைகளையும், நகர கதைகளையும் இயக்கி வந்த பாரதிராஜா முதன் முறையாக சென்னை நகர சேரி வாழ்க்கையையும், அரசியல்வாததிகளின் வஞ்சகத்தையும் காட்டிய படம். இதில் பாபு, ரமா ஆகியோர் அறிமுகமானர்கள். தென்னவன் அரசியல்வாதி வேடத்தில் அறிமுகமானார். இவர் நீண்ட இடைவேளைக்குப் பின் ஜெமினி படத்தில் நடித்தார்.

ஒரே படத்தில் இரண்டு படம் என்ற பாலசந்தரின் முயற்சி ஒரு வீடு இரு வாசல் திரைப்படம். இடைவேளைக்கு முன் ஒரு படமும், பின்னர் ஒரு படமும். ஆனால் இரண்டிலும் பெண்ணுரிமை குறித்தான கருத்துக்கள் இடம் பெற்றிருந்தன. சினிமா துணை நடிகர்களின் வாழ்க்கையை நன்கு சித்தரித்த படங்களில் இதுவும் ஒன்று.

பாக்யராஜின் உதவியாளராக இருந்த வி சேகர், அவரிடம் இருந்து பிரிந்து, தற்போதயை தமிழக உணவுத்துறை அமைச்சராக இருக்கும் எ வ வேலுவின் துணையுடன் இயக்கிய படம் நீங்களும் ஹீரோதான். எ வ வேலு அப்போது திரை வட்டாரத்தில் தண்டாரம் பட்டு வேலு என அறியப்பட்டவர். இந்தப் படம் நிஜ திரையுலகை காட்டியதால் தோல்வியடைந்தது. பின் வி சேகர் பல லோ பட்ஜெட் படங்களை இயக்கி புகழ் பெற்றார். அவரது படங்களைப் பார்த்தோ என்னவோ அவருக்கு இயக்குநர் சங்க பொருளாலர் பதவியும் கிடைத்தது. சென்ற தேர்தலில் அவர் சுயேச்சையாக நின்ற ஆர் சுந்தர்ராஜனிடம் தோற்றுப் போனார்.

நிலா பெண்ணே படத்தின் மூலம் திவ்யபாரதி நாயகியாக இங்கு அறிமுகமானார். பின் பல இந்திப் படங்களில் நடித்து அகால மரணாமடைந்தார்.




0 comments:

தரம்

1990 ஆம் ஆண்டில் தமிழ்சினிமா – ஒரு பார்வை !!!

1990 ஆம் ஆண்டில் பல இயக்குநர்கள் அறிமுகமானார்கள். அடுத்த 10 ஆண்டுகளில் பல வணிகரீதியான வெற்றிப் படங்களை அவர்கள் தொடர்ந்து கொடுத்தார்கள். அதில் சிலர் இன்னும் மார்க்கெட்டில் உள்ளார்கள்.

புலன் விசாரனை – ஆர் கே செல்வமணி

கேளடி கண்மணி – வசந்த்

பாலம் – கார்வண்ணன்

புதுவசந்தம் – விக்ரமன்

நீங்களும் ஹீரோதான் – வி சேகர்

வைகாசி பொறந்தாச்சு – ராதா மோகன்

புரியாத புதிர் – கே எஸ் ரவிகுமார்

பட்டணந்தான் போகலாமடி – கோலப்பன்

இணைந்த கைகள் – என் கே விஸ்வனாதன்

இதுதவிர இந்த ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

குழந்தை நட்சத்திரமாக பேபி ஷாமிலி அஞ்சலி படத்தின் மூலம் அறிமுகமானார். பின் அவர் நடித்து வெற்றி பெற்ற துர்கா படத்தின் மூலம் தமிழ், தெலுங்கின் முண்ணனி குழந்தை நட்சத்திரமாக மாறினார்.

அஞ்சலி படத்தில் மணிரத்னம் தன் ஆஸ்தான கேமராமேன் பி சி ஸ்ரீராமுக்கு பதிலாக மது அம்பாட்டை பயன்படுத்தினார்.

ராமநாராயணனின் ஆடிவெள்ளி படம் பெரிய வெற்றியைப் பெற்றது. பின் அது பல மொழிகளில் தயாரிக்கப்பட்டு சென்ற இடமெல்லாம் சிறப்பு பெற்றது. ஒரியா, போஜ்பூரி, பெங்காலி ஆகிய மொழிப் படங்களையும் இயக்கிய தமிழ் இயக்குனர் என்னும் பெயரை அவருக்கு பெற்றுத்தந்தது.

கிழக்கு வாசல் படத்தின் மூலம் கார்த்திக் தனது பிலிம் பேர் ஹாட்டிரிக்கை சாதித்தார். (88- அக்னி நட்சத்திரம், 89 – வருஷம் 16).

பா ம க நிறுவனர் ராமதாஸ் முதன் முறையாக பாலம் படத்தில் நடித்தார். (டி வி பேட்டியில் கருத்து சொல்பவராக.) பின் இந்தப் படத்தின் இயக்குநர் கார்வண்ணனின் அடுத்த படமான புதிய காற்றில் ஒரு சிறு வேடத்திலும் நடித்தார். பாலம் திரைப்படத்தில் இந்திய ஹாக்கி அணி தனது கடைசி ஒலிம்பிக் பதக்கத்தை பெற்ற போது காப்டனாக இருந்த வி பாஸ்கரன் வில்லனாக நடித்தார்.

எம் ஜி யார் முதல்வராகும் முன் நடித்து, பாதியில் நின்று போன அண்ணா நீ என் தெய்வம் படத்தின் காட்சிகளை எடுத்து, அதற்கேற்றார் போல் திரைக்கதை அமைத்து, பாக்யராஜ் இயக்கிய அவசர போலிஸ் 100 திரைப்படம் வெளியானது. பொன் வைக்கும் இடத்தில் பூ வைத்து எடுத்திருக்கிறோம் என்ற விளம்பரத்துடன் வெளியான இந்த படத்திற்க்கு, பூ அளவிலேயே மக்கள் ஆதரவு தந்தனர்.

இந்த ஆண்டு சரத்குமார் தயாரிப்பில், கலைவாணன் கண்ணதாசன் இயக்கத்தில் வெளியான மிஸ்டர் கார்த்திக் படத்தில் சரத் சிறுவேடத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த ஆண்டு வெளியான புலன் விசாரணை படம் தான் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

அன்பாலயா பிரபாகரன் தயாரிப்பில், ராதா பாரதி இயக்கத்தில் வெளியான வைகாசி பொறந்தாச்சு பெரும் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் அறிமுகமான பிரசாந்துக்கு 50,000 ரூபாய் சம்பளம் அளிக்கப்பட்டது. ஒரு புதுமுகத்துக்கு (ஆண்) அந்த அளவு சம்பளம் கொடுக்கப்பட்டது அதுவே முதல் முறை. இந்தப் பட பாடல்களின் வெற்றி மூலமாகவே தேவாவுக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடம் கிடைத்தது.

இரட்டை வேட காட்சிகள் எடுக்க வேண்டுமா? கூப்பிடு என் கே வியை என்பார்கள். அந்த அளவுக்கு இருவேட ட்ரிக் ஷாட்கள் எடுப்பதில் புகழ்பெற்ற என் கே விஸ்வனாதன் இயக்கிய முதல் படம் இணைந்த கைகள். ஆபாவாணன் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் தோல்வி அடைந்தாலும், அடுத்து என் கே வி இயக்கிய பெரிய வீட்டுப் பண்ணக்காரன் வெற்றியைப் பெற்றது.

அபூர்வ சகோதரர்கள் படத்தில் வசனகர்த்தா கிரேஸி மோகன் அதிகம் கவனிக்கப் படவில்லை. குள்ள அப்புவின் விஸ்வரூபம் அப்பட டெக்னீஷியன்கள் அனைவரையும் மறைத்துவிட்டது. ஆனால் இந்த ஆண்டு வெளியான மைக்கேல் மதன காம ராஜன் திரைப்படத்தில் அவர் வசனம் பெருமளவு கவனிக்கப் பட்டது. பின் வெளியான கமலின் நகைச்சுவைப் படங்களுக்கு முன்னோடியகவும் அமைந்தது.

ஜெயபாரதி இயக்கத்தில் டெல்லி கணேஷ் நடித்த உச்சி வெயில் இந்த ஆண்டு வெளிவந்து விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது.

கிராமிய கதைகளையும், நகர கதைகளையும் இயக்கி வந்த பாரதிராஜா முதன் முறையாக சென்னை நகர சேரி வாழ்க்கையையும், அரசியல்வாததிகளின் வஞ்சகத்தையும் காட்டிய படம். இதில் பாபு, ரமா ஆகியோர் அறிமுகமானர்கள். தென்னவன் அரசியல்வாதி வேடத்தில் அறிமுகமானார். இவர் நீண்ட இடைவேளைக்குப் பின் ஜெமினி படத்தில் நடித்தார்.

ஒரே படத்தில் இரண்டு படம் என்ற பாலசந்தரின் முயற்சி ஒரு வீடு இரு வாசல் திரைப்படம். இடைவேளைக்கு முன் ஒரு படமும், பின்னர் ஒரு படமும். ஆனால் இரண்டிலும் பெண்ணுரிமை குறித்தான கருத்துக்கள் இடம் பெற்றிருந்தன. சினிமா துணை நடிகர்களின் வாழ்க்கையை நன்கு சித்தரித்த படங்களில் இதுவும் ஒன்று.

பாக்யராஜின் உதவியாளராக இருந்த வி சேகர், அவரிடம் இருந்து பிரிந்து, தற்போதயை தமிழக உணவுத்துறை அமைச்சராக இருக்கும் எ வ வேலுவின் துணையுடன் இயக்கிய படம் நீங்களும் ஹீரோதான். எ வ வேலு அப்போது திரை வட்டாரத்தில் தண்டாரம் பட்டு வேலு என அறியப்பட்டவர். இந்தப் படம் நிஜ திரையுலகை காட்டியதால் தோல்வியடைந்தது. பின் வி சேகர் பல லோ பட்ஜெட் படங்களை இயக்கி புகழ் பெற்றார். அவரது படங்களைப் பார்த்தோ என்னவோ அவருக்கு இயக்குநர் சங்க பொருளாலர் பதவியும் கிடைத்தது. சென்ற தேர்தலில் அவர் சுயேச்சையாக நின்ற ஆர் சுந்தர்ராஜனிடம் தோற்றுப் போனார்.

நிலா பெண்ணே படத்தின் மூலம் திவ்யபாரதி நாயகியாக இங்கு அறிமுகமானார். பின் பல இந்திப் படங்களில் நடித்து அகால மரணாமடைந்தார்.



0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP