>

Archives

எழில் கோபுரம் மனோரா !!!

>> Wednesday, September 23, 2009


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா சேதுபாவாசத்திரம் , ராஜாமடம் அருகே சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சியில் வங்கக் கடலோரம் , தென்னை மரங்கள் சூழ அமைந்துள்ளது மனோரா என்ற எழில் கோபுரம் .




வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நினைவுச் சின்னமாக அகழி கோட்டை , தங்கும் அறைகள் , 9 அடுக்குகள் கொண்ட கலங்கரை விளக்க கோபுரம் போல் விளங்கும் இந்த மனோராவை தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி கட்டினார் . உலக நாடுகளில் காலனி ஆதிக்கத்தை நிறுவ ஆங்கிலேயர்களும் , பிரெஞ்சுக்காரர்களும் , ஏனைய மேலை நாட்டினரும் போரிட்டு கொண்டிருந்த நாளில் ஆங்கிலேயர் ஆட்சி கீழ் தம் அரசை நடத்த வேண்டிய சூழலில் சரபோஜி மன்னர் இருந்தார் . இந்நிலையில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வந்த பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் போனபார்ட் 1813-ம் ஆண்டு லிப்சிக் என்ற இடத்தில் நடந்த போரில் தோல்வியடைந்தார் . பின்னர் 2 வது முறையாக 1815-ம் ஆண்டு வாட்டர்லூ போரிலும் தோல்வியடைந்தார் . நெப்போலியனின் லிப்சிக் போர் தோல்வி , ஆங்கிலேயர்களின் நண்பராகத் திகழ்ந்த தஞ்சை சரபோஜி மன்னர் இந்த மனோரா கோட்டையை ஒரு ஆண்டிற்குள் கட்டி முடித்தார் .ஆங்கிலேயர்களின் வெற்றிக்கு நிரந்தர நினைவுச் சின்னமாக்கினார் . மனோரா கோட்டையில் தமிழ் , தெலுங்கு , மராட்டி , உருது , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 5 கல்வெட்டுக்கள் உள்ளன .


தமிழ் கல்வெட்டு : இங்கிலீசு சாதியார் தங்கள் ஆயுதங்களினால் அடைந்த செய சந்தோஷங்களையும் , போன பாற்தேயின் தாழ்த்தப்படுதலையும் நினைவு கூறத்தக்கதாக இங்கிலீசு துறைத்தனத்தின் சினேகிதரும் படைத் துணைவருமாகிய தஞ்சாவூர் சீர்மை மகாராஜா சத்திரபதி சரபோஜி மகாராஜா இந்த உப்பரிகையை 1814 கட்டி வைத்தனர் என்று கூறப்படுகிறது .


மனோரா கோட்டையில் 3 வாயில்கள் உள்ளன . முதல் 2 வாயில்கள் சிறிய அளவில் உள்ள கதவுகளைக் கொண்டது . இரண்டாம் முகப்பு வாயில் அகழிப் பாதையை தாண்டியுள்ளது . இரண்டாம் வாயில் தூண்களும் கல்லால் கட்டப்பட்டவை . இக்கோட்டையில் பழ்ங்கால் மரபின்படி வாயிற்காப்போன் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன . இவ்வாயில் தூண்களின் ஒருபுறம் ஆங்கில கம்பெனியரின் சின்னம் பொறிக்கப்பட்டு இருப்பதால் , இக்கோட்டை ஆங்கிலேயரின் அதிகாரத்தில் இருந்துள்ளது என தெரிய வருகிறது .


மனோராவின் மையத்தில் கட்டப்பட்ட உப்பரிகை என்ற நிலை மாடம் அருங்கோண வடிவத்தில் கட்டப்பட்ட 9 அடுக்குகளை கொண்டது .


சுமார் 75 அடி உயரமுள்ள மேல் மாடி திறந்த வெளியாக காட்சியளிக்கிறது . மராட்டியரின் ஆட்சிக் காலத்தில் மனோரா சிறப்புற்று துறைமுகப் பட்டினமாகவும் விளங்கியுள்ளது .


மனோரா என்னும் நினைவுச் சின்னம் தமிழகத்தின் தொழில்நுட்பம் , ஆங்கிலேயரின் கலை வடிவம் ஆகிய இரண்டும் இணைந்துள்ளது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர் .


பெயர் பெற்ற மனோராவை அரசு தஞ்சை மாவட்டத்தில் ஒரு சுற்றுலா தலமாக ஆக்கியுள்ளது .


இப்பகுதியில் கலங்கரைவிளக்கம் இல்லாததால் கடலுக்குள் செல்லும் மீனவர்கள் கரை திரும்ப வழி தெரியாமல் திசைமாறி சென்று விடுகின்றனர் . இந்த பிரச்சனைக்குத்தீர்வு காண மீனவர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது . இதன்பேரில் , மல்லிப்பட்டினத்தை அடுத்துள்ள மனோரா அருகில் கலங்கரைவிளக்கம் அமைக்கப்பட்டு வருகிறது . இந்த கலங்கரைவிளக்கம் மனோராவின் உயரமான 75 அடியைவிட இரு மடங்கு அதிகம் உள்ளதால் , 20 மைல் தூரம் வரை கலங்கரைவிளக்கம் தெரியும் . மேலும் இது ' சிலி பாம் டெக்னாலஜி ' முறையில் கட்டப்பட்டு வருகிறது .



0 comments:

தரம்

எழில் கோபுரம் மனோரா !!!


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா சேதுபாவாசத்திரம் , ராஜாமடம் அருகே சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சியில் வங்கக் கடலோரம் , தென்னை மரங்கள் சூழ அமைந்துள்ளது மனோரா என்ற எழில் கோபுரம் .



வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நினைவுச் சின்னமாக அகழி கோட்டை , தங்கும் அறைகள் , 9 அடுக்குகள் கொண்ட கலங்கரை விளக்க கோபுரம் போல் விளங்கும் இந்த மனோராவை தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி கட்டினார் . உலக நாடுகளில் காலனி ஆதிக்கத்தை நிறுவ ஆங்கிலேயர்களும் , பிரெஞ்சுக்காரர்களும் , ஏனைய மேலை நாட்டினரும் போரிட்டு கொண்டிருந்த நாளில் ஆங்கிலேயர் ஆட்சி கீழ் தம் அரசை நடத்த வேண்டிய சூழலில் சரபோஜி மன்னர் இருந்தார் . இந்நிலையில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வந்த பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் போனபார்ட் 1813-ம் ஆண்டு லிப்சிக் என்ற இடத்தில் நடந்த போரில் தோல்வியடைந்தார் . பின்னர் 2 வது முறையாக 1815-ம் ஆண்டு வாட்டர்லூ போரிலும் தோல்வியடைந்தார் . நெப்போலியனின் லிப்சிக் போர் தோல்வி , ஆங்கிலேயர்களின் நண்பராகத் திகழ்ந்த தஞ்சை சரபோஜி மன்னர் இந்த மனோரா கோட்டையை ஒரு ஆண்டிற்குள் கட்டி முடித்தார் .ஆங்கிலேயர்களின் வெற்றிக்கு நிரந்தர நினைவுச் சின்னமாக்கினார் . மனோரா கோட்டையில் தமிழ் , தெலுங்கு , மராட்டி , உருது , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 5 கல்வெட்டுக்கள் உள்ளன .


தமிழ் கல்வெட்டு : இங்கிலீசு சாதியார் தங்கள் ஆயுதங்களினால் அடைந்த செய சந்தோஷங்களையும் , போன பாற்தேயின் தாழ்த்தப்படுதலையும் நினைவு கூறத்தக்கதாக இங்கிலீசு துறைத்தனத்தின் சினேகிதரும் படைத் துணைவருமாகிய தஞ்சாவூர் சீர்மை மகாராஜா சத்திரபதி சரபோஜி மகாராஜா இந்த உப்பரிகையை 1814 கட்டி வைத்தனர் என்று கூறப்படுகிறது .


மனோரா கோட்டையில் 3 வாயில்கள் உள்ளன . முதல் 2 வாயில்கள் சிறிய அளவில் உள்ள கதவுகளைக் கொண்டது . இரண்டாம் முகப்பு வாயில் அகழிப் பாதையை தாண்டியுள்ளது . இரண்டாம் வாயில் தூண்களும் கல்லால் கட்டப்பட்டவை . இக்கோட்டையில் பழ்ங்கால் மரபின்படி வாயிற்காப்போன் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன . இவ்வாயில் தூண்களின் ஒருபுறம் ஆங்கில கம்பெனியரின் சின்னம் பொறிக்கப்பட்டு இருப்பதால் , இக்கோட்டை ஆங்கிலேயரின் அதிகாரத்தில் இருந்துள்ளது என தெரிய வருகிறது .


மனோராவின் மையத்தில் கட்டப்பட்ட உப்பரிகை என்ற நிலை மாடம் அருங்கோண வடிவத்தில் கட்டப்பட்ட 9 அடுக்குகளை கொண்டது .


சுமார் 75 அடி உயரமுள்ள மேல் மாடி திறந்த வெளியாக காட்சியளிக்கிறது . மராட்டியரின் ஆட்சிக் காலத்தில் மனோரா சிறப்புற்று துறைமுகப் பட்டினமாகவும் விளங்கியுள்ளது .


மனோரா என்னும் நினைவுச் சின்னம் தமிழகத்தின் தொழில்நுட்பம் , ஆங்கிலேயரின் கலை வடிவம் ஆகிய இரண்டும் இணைந்துள்ளது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர் .


பெயர் பெற்ற மனோராவை அரசு தஞ்சை மாவட்டத்தில் ஒரு சுற்றுலா தலமாக ஆக்கியுள்ளது .


இப்பகுதியில் கலங்கரைவிளக்கம் இல்லாததால் கடலுக்குள் செல்லும் மீனவர்கள் கரை திரும்ப வழி தெரியாமல் திசைமாறி சென்று விடுகின்றனர் . இந்த பிரச்சனைக்குத்தீர்வு காண மீனவர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது . இதன்பேரில் , மல்லிப்பட்டினத்தை அடுத்துள்ள மனோரா அருகில் கலங்கரைவிளக்கம் அமைக்கப்பட்டு வருகிறது . இந்த கலங்கரைவிளக்கம் மனோராவின் உயரமான 75 அடியைவிட இரு மடங்கு அதிகம் உள்ளதால் , 20 மைல் தூரம் வரை கலங்கரைவிளக்கம் தெரியும் . மேலும் இது ' சிலி பாம் டெக்னாலஜி ' முறையில் கட்டப்பட்டு வருகிறது .


0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP