>

Archives

பருத்தி விதை !!!

>> Monday, September 14, 2009

பருத்தி விதையும், தேங்காய் புண்ணாக்கும் மாட்டு தீவனமாய் ஊரில் பார்த்ததுண்டு. டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த எ அன்ட் எம் கல்லூரியை சேர்ந்த கீர்த்தி ரத்தோர் தலைமையிலான ஆராய்ச்சி குழு இதை மனிதருக்கும் உணவாய் மாற்றும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். பருத்திக் கொட்டை புரதசத்து அதிகமுள்ளது. ஆனால் பருத்தி விதையில் உள்ள காஸிபோல் என்னும் நச்சு பொருள் இரத்ததில் உள்ள பொட்டாசியம் அளவை குறைக்கும், இதன் விளைவாய் கிட்னி பாதிக்கப்படும். ஆகவே இப்போதுள்ள நிலையில் பருத்தி விதை மனித உணவாக பயன்படுத்துதல் சரி வராது.

ரத்தோரின் ஆய்வுக் குழு புதிய ஜீன் மட்டுறுத்தும் முறையின் மூலம் பருத்தி விதையில் உள்ள காஸிபோலை அப்புற படுத்துகின்றனர். ஓரு மில்லிகிராம் பருத்தி விதையில் 10 மைக்ரோ கிராம் அளவிலான காஸிபோல் உள்ளது. அதை 0.1 மைக்ரோ கிராமாக குறைத்துள்ளனர். ஐநாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு 0.6 மைக்ரோ கிராம் அளவிருந்தால் மனித உடல் நல பாதிப்பு கட்டுப்படுத்தபடும் என்று அறிவித்துள்ளது. அதோனோடு ஓப்பிடுகையில் 0.1 மைக்ரோகிராம் உள்ள பருத்தி விதை நல்ல உணவாக உலவ வாய்ப்புள்ளது.

ஆரோக்கியமான உணவுகளையும், உடல் இளைக்க வைக்க வைக்கும் உணவு முறைகளையும் தேடி செல்லும் மேற்குலகம் அதிக புரதம் உள்ள பருத்தி விதையையும் அரவணைக்கலாம். இப்போதைக்கு ஆய்வு சாலையில் உள்ள இந்த முயற்சி சந்தை மயமாகிறதா என பார்க்கலாம்.

எந்த அப்பாவாது நீ பருத்திக் கொட்டை திங்கதான் லாயக்கு என திட்டினால் நல்ல உடல்நலத்தை பார்க்க சொல்கிறார் என மகிழலாம்.




0 comments:

தரம்

பருத்தி விதை !!!

பருத்தி விதையும், தேங்காய் புண்ணாக்கும் மாட்டு தீவனமாய் ஊரில் பார்த்ததுண்டு. டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த எ அன்ட் எம் கல்லூரியை சேர்ந்த கீர்த்தி ரத்தோர் தலைமையிலான ஆராய்ச்சி குழு இதை மனிதருக்கும் உணவாய் மாற்றும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். பருத்திக் கொட்டை புரதசத்து அதிகமுள்ளது. ஆனால் பருத்தி விதையில் உள்ள காஸிபோல் என்னும் நச்சு பொருள் இரத்ததில் உள்ள பொட்டாசியம் அளவை குறைக்கும், இதன் விளைவாய் கிட்னி பாதிக்கப்படும். ஆகவே இப்போதுள்ள நிலையில் பருத்தி விதை மனித உணவாக பயன்படுத்துதல் சரி வராது.

ரத்தோரின் ஆய்வுக் குழு புதிய ஜீன் மட்டுறுத்தும் முறையின் மூலம் பருத்தி விதையில் உள்ள காஸிபோலை அப்புற படுத்துகின்றனர். ஓரு மில்லிகிராம் பருத்தி விதையில் 10 மைக்ரோ கிராம் அளவிலான காஸிபோல் உள்ளது. அதை 0.1 மைக்ரோ கிராமாக குறைத்துள்ளனர். ஐநாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு 0.6 மைக்ரோ கிராம் அளவிருந்தால் மனித உடல் நல பாதிப்பு கட்டுப்படுத்தபடும் என்று அறிவித்துள்ளது. அதோனோடு ஓப்பிடுகையில் 0.1 மைக்ரோகிராம் உள்ள பருத்தி விதை நல்ல உணவாக உலவ வாய்ப்புள்ளது.

ஆரோக்கியமான உணவுகளையும், உடல் இளைக்க வைக்க வைக்கும் உணவு முறைகளையும் தேடி செல்லும் மேற்குலகம் அதிக புரதம் உள்ள பருத்தி விதையையும் அரவணைக்கலாம். இப்போதைக்கு ஆய்வு சாலையில் உள்ள இந்த முயற்சி சந்தை மயமாகிறதா என பார்க்கலாம்.

எந்த அப்பாவாது நீ பருத்திக் கொட்டை திங்கதான் லாயக்கு என திட்டினால் நல்ல உடல்நலத்தை பார்க்க சொல்கிறார் என மகிழலாம்.



0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP